பட்சியே!!!
உன்னை காணும் வரையில்
என்னை தீண்டியதில்லை
காதல்...
நீ ஜோடியாய்
ஒய்யாரமாய் மரத்தடியில்
காதல் மொழி பேசுகையில்
கனக்கிறது என் மனம்
காதலை எண்ணி...
பட்சியே!!
உனக்களித்த சிறகுகளை
எனக்கும் அளித்திருந்தால்
பகமை இல்லாத
இடம் தேடி
பறந்தே போய் இருப்பேன்
காதல் கிளி அவளுடன்...
அன்பில் இணைந்து
பாசத்தில் பிணைந்து
கனவுகள் வளர்ந்து
தினம் தினம்
எண்ணங்களை கவியாக்கி
காதல் ராகம் பாடுகிறேன்
அவள் நினைவால்...
பட்சியே! அறிவாயா?
காதலின் இனிமைக்குள்
ஒளித்திருக்கும்
ரணங்களின் கொடுமையை..
நித்தம் நித்தம்
பித்து பிடிக்க வைக்கும்
அவள் நினைவுகள்
செத்தும் பிழைக்கிறேன்
காதல் புரியும்
தர்ம கொலைகளில் இருந்து..
0 comments:
Post a Comment