இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Thursday, August 11, 2016

இளம் தொழிலதிபர்

கனவுகள் சுமக்கும் கண்களும் லட்சியங்கள் சுமக்கும் மனதுமாக துடிப்புடன் இருக்கிறார் கிருத்திகா. இளம் தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் வலம் வருகிற இன்ஜினியர். ப்ரின்ட் லே’ என்கிற பெயரில் இவர் நடத்துகிற நிறுவனம் நம்மூருக்குப் புதிதான 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டது. பெண்களுக்குப் பொருந்தா துறையாகப் பார்க்கப்படுகிற டெக்னாலஜியில் அசத்திக் கொண்டிருக்கிறார் கிருத்திகா!

2015லதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வெளியில வந்தேன். படிப்பை முடிக்கிறதுக்கு முன்னாடியே கேம்பஸ் இன்டர்வியூவுல செலக்ட் ஆகி, ஒரு பெரிய கம்பெனியில நல்ல வேலை கிடைச்சது. ஆனாலும், ‘வேணாம்’னு சொல்லிட்டேன். காரணம் என் கனவு... யெஸ்... எனக்கு ரொம்ப சின்ன வயசுலேருந்தே தொழிலதிபராகணும்கிறது ஆசை. வேலை கிடைச்சப்ப, `இது மாதிரி யாராவது பைத்தியக்காரத்தனம் பண்ணுவாங்களா? கிடைச்ச வேலையை விட்டுடாதே... 

இந்த வயசுல பிசினஸ் எல்லாம் சரியா வராது’னு நிறைய பேர் நிறைய அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா, என் கனவு அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலை. ரெண்டாவது வருஷம் இன்ஜினியரிங் படிக்கிறபோது நானும் என் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து இன்டர்நேஷனல் ரோபோடிக்ஸ் போட்டியில கலந்துக்கிட்டோம். அதுல மனுஷனை மாதிரியே இயங்கக்கூடிய ஒரு ரோபோவை டிசைன் பண்ண யோசிச்சோம். அப்பதான் முதன் முதலா 3டி பிரின்ட்டிங் பத்திக் கேள்விப்பட்டோம். அதுலேருந்து அதைப் பத்தித் தேடித் தேடி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். 

படிப்பை முடிச்சிட்டு வௌியில வந்ததும் நான் பண்ணப் போற பிசினஸ் 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டதா இருக்கணும்னு அப்பவே தீர்மானம் பண்ணிட்டேன்...’’ என்கிறவர், தன்னுடன் இன்ஜினியரிங் முடித்த சக மாணவர் வைத்யநாதனின்  துணையுடன் பிசினஸை ஆரம்பித்து நடத்துகிறார்.

நம்ம நாட்டுக்கு 3டி பிரின்ட்டிங் புதுசு. வெளிநாடுகள்ல 3டி பிரின்ட்டிங் இல்லாத துறையே இல்லை. மண்டையோட்டை ரீப்ளேஸ் பண்ற அறுவை சிகிச்சைக்கும், எலிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கும் மருத்துவத் துறையில 3டி பிரின்ட்டிங் டெக்னாலஜியை யூஸ் பண்ணி இருக்காங்க. இன்னும் டிரெஸ் டிசைனிங், ஷூ டிசைனிங், பைக், கார் டிசைனிங்னு தினசரி நாம பயன்படுத்தற எல்லா தயாரிப்புகள்லயும் 3டி பிரின்ட்டிங் வந்தாச்சு.

இந்த முறையில பிளாஸ்டிக், மெட்டல், மரம்னு எதுல வேணாலும் ரொம்பவும் நுணுக்கமான, சிக்கலான முப்பரிமாணப் பொருட்களை அடுக்கு, அடுக்கா பிரின்ட் பண்ணி உருவாக்கலாம். கொஞ்சம் எளிமையா சொன்னா எல்லாருக்கும் புரியும். ஒருத்தங்க தன் வீட்டு அலமாரியில அழகான ரோஜா பொம்மையை வச்சிருந்ததாகவும் திடீர்னு அது உடைஞ்சு போனதாகவும் கற்பனை பண்ணிக்கோங்க. அதே மாதிரி ரோஜா பொம்மையைத் தேடிப் பிடிச்சு வாங்கறது கஷ்டம்னு வச்சுப்போம். 3டி பிரின்ட்டிங் முறையில அதே கலர்ல, அதே டிசைன்ல ரோஜா பொம்மையை உருவாக்க முடியும். 

இந்த மாதிரி எதை வேணாலும் டிசைன் பண்ணிக்கலாம். ஃபிலமென்ட் ரோல்னு ஒயர் மாதிரியான ஒரு மெட்டீரியல் இருக்கும். அதை 3டி பிரின்ட்டிங் மெஷினுக்குள்ள வச்சா, உருகி, திரவ நிலைக்கு மாறும். அது லேயர் லேயரா நமக்குத் தேவையான பொருளோட டிசைனை இழைச்சு, இறுதி வடிவத்துக்குக் கொண்டு வரும்...’’ - விஞ்ஞான ரீதியாக 3டி பிரின்ட்டிங் தொழில்நுட்பத்தை விளக்குகிறார் கிருத்திகா. 

3டி பிரின்ட்டிங் முறையில மொபைல் கேஸ், லேப்டாப் கவர், கீ செயின், காபி மக், சாப்பிடற தட்டு, டைல்ஸ்... இப்படி எதுல வேணாலும் நமக்கு விருப்பமான உருவங்களை பதிச்சுக்கலாம். ஃபேவரைட் சினிமா நட்சத்திரங்கள், ஸ்போர்ட்ஸ் ஆட்கள், குடும்ப உறுப்பினர்கள்னு மனசுக்குப் பிடிச்சவங்க போட்டோவை பிரின்ட் பண்ணிக்கிறதுக்கும் இளைஞர்கள் மத்தியில பயங்கர வரவேற்பு இருக்கு...’’ என்கிற  கிருத்திகா, அடுத்தகட்டமாக தொழில் நிறுவனங்களுக்கான பொருட்களை ஆர்டர் எடுத்து 3டி முறையில் பிரின்ட் செய்து கொடுக்கும் பெரிய பொறுப்பையும் கைப்பற்றியிருக்கிறார்!

டிசைனிங் ஸ்டேஜ்லயே தவறு களை சரி செய்யவும், டிசைனை இம்ப்ரூவ் பண்ணவும் 3டி பிரின்ட்டிங் முறையில வாய்ப்புகள் அதிகம். செலவும் கம்மி...’’ என்கிறவர், இன்னொரு பக்கம் ரோபோடிக்ஸ் பயிற்சி  வகுப்புகள் எடுப்பதில் பயங்கர பிசி! வயசு வாரியா இந்தப் பயிற்சி வகுப்புகளை சொல்லித் தரேன். 5 வயசுக் குழந்தைக்கு பேட்டரியால ஒரு காரை ஓட்ட வைக்கக் கத்துக் கொடுக்கிறது மூலமா, அது எப்படி இயங்குதுனு யோசிக்க வைக்க முடியும். வரையற ரோபோ, பூச்சி ரோபோ, டூத் பிரஷ் ரோபோ எல்லாம் குழந்தைகளுக்கானது. 

அடுத்த லெவல்ல ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்களுக்கு விஞ்ஞானப்பூர்வமான ரோபோடிக்ஸ் வகுப்புகள் மூலமா, படிக்கிற பாடங்களை இன்னும் சுலபமா புரிஞ்சுக்கற மாதிரியான பயிற்சிகள் கொடுக்கறேன். மூணாவது காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்கானது. இனிமே வரப் போற காலத்துல ரோபோக்களோட பயன்பாடு அதிகமா இருக்கப் போகுது. ரோபோ டிசைன் பண்ண லட்சக்கணக்குல செலவாகும்னு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. 

அப்படியெல்லாம் இல்லை. சரியான பயிற்சியும் பிளானிங்கும் இருந்தா அதிக செலவில்லாம ரோபோவை டிசைன் பண்ணிடலாம். வெளிநாடுகள்ல வீட்டு வேலைகளுக்கான ரோபோக்கள் வந்தாச்சு. சமைக்கிறது, வீட்டை சுத்தப்படுத்தறதுக்கெல்லாம் அங்கே ரோபோ இருக்கு. நம்மூர்லயும் அது மாதிரி நிறைய ரோபோக்கள் வரணும். நானும் என் பிசினஸ் பார்ட்னர் வைத்யநாதனும் ரெண்டு ரோபோக்களுக்கான ஐடியாக்களை பிளான் பண்ணிட்டிருக்கோம். ஒண்ணு... ஹோட்டல்கள்ல சாப்பாடு பரிமாறும் ரோபோ. ரெண்டு கை, ரெண்டு கால்கள் இருந்தாதான் ரோபோனு நினைக்காதீங்க. ஒரு டிராலி மாதிரி இருந்தாலே போதும். ஒவ்வொரு டேபிளுக்கும் அதுவா போய் ஆர்டர் எடுத்து சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும். 

ஆட்கள் இல்லாத டேபிள்ல லைட், ஃபேன் ஓடிக்கிட்டிருந்தா தானா ஆஃப் பண்ணி, மின்சாரத்தை மிச்சப்படுத்தும். இன்னொண்ணு மனித வடிவ ரோபோ. நாம பேசறதைப் புரிஞ்சுக்கிட்டு சொல்ற வேலையைச் செய்யும். இந்த ரெண்டு கனவு புராஜெக்ட்டுகளையும் சீக்கிரமே முடிச்சிட்டு, அந்த சாதனை சந்தோஷத்தோட சீக்கிரமே மறுபடி சந்திப்போம்...’’  3டி புன்னகையுடன் வழியனுப்புகிறார் கிருத்திகா.
நன்றி குங்குமம் தோழி


படங்கள்: ஆர்.கோபால்

பூந்தொட்டிகள் மற்றும் தொங்கும் பூந்தொட்டிகள்

பூக்கள் மலரும் இடங்களில் நம்பிக்கையும் மலரும்...’ என்கிறதொரு பொன்மொழி. பூக்கள் சூழ்ந்த வாழ்க்கை ரசனையானது. அழகானது. ஆரோக்கியமானது. பூக்கள் பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? அதேபோலத்தான் பூந்தோட்டம் பிடிக்காதவர்களையும் பார்க்க முடியாது. மனிதர்கள் வாழும் இடங்களே சுருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், பூக்கள் வளர்ப்பதும், பூந்தோட்டம் அமைப்பதும் எப்படி சாத்தியம் என்கிறீர்களா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

இருக்கும் இடத்துக்குள் பூக்கள் வளர்க்கும் தொழில்நுட்பங்களைப் பார்ப்பதற்கு முன், பூந்தொட்டிகள் அமைக்கிற கலாசாரம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்வோமா? வாடகை வீட்டில் வசிக்கிறோம்... அங்கேயே நிரந்தரமாகத் தங்கும் பகுதி என்பது சாத்தியமில்லை. வேறு வீடுக்கு மாற வேண்டியிருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் செடிகளே வளர்க்க ஆசைப்படக்கூடாதா என்ன? நம்முடைய குழந்தைகளை வளர்க்கிறோம். 

எப்போதும் நம்முடனேயே வைத்துக் கொள்கிறோம். போகிற இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறோம்... அதுபோலத்தான் நாம் வளர்க்கும் செடிகளையும் எங்கே போனாலும் நம்முடனேயே எடுத்துச் செல்லலாம் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்த பூந்தொட்டிகள். இன்னொரு காரணம் இடப்பற்றாக்குறை. இன்று மண் என்பதையே பார்க்க முடியாத அளவுக்கு எங்கெங்கு பார்த்தாலும் சிமென்ட் போடப்பட்ட பகுதிகள்தான். 

அந்தப் பகுதிகளை அழகுப்படுத்தவும் பூந்தொட்டிகளை வைக்கிறோம். பூந்தொட்டிகளில் மண் நிரப்புவதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். பூந்தொட்டிகளை எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்போம். வீட்டின் வராண்டா பகுதியில் அதாவது, வீட்டையும் தோட்டத்தையும் இணைக்கிற பகுதிகளில் பூந்தொட்டிகளை வைக்கலாம். வீட்டினுள்ளும் வைக்கலாம். இரண்டு அறைகளைப் பிரிப்பதற்கும் பூந்தொட்டிகளைப் பயன்படுத்தலாம். 

உதாரணத்துக்கு மணிபிளான்ட் செடியை ட்ரெல்லி அல்லது lattice என்கிற வேலி போன்ற அமைப்புடன் வைக்கலாம். அல்லது சின்ன செங்கல்கட்டு போல அமைத்து அதில் மண்ணை நிரப்பி அதற்கு மேல் செடிகளை வைக்கலாம். இரண்டு அறைகளைப் பிரிக்க room divider ஆகவும் இவற்றைப் பயன்படுத்தலாம். வீட்டுக்குள் ஆங்காங்கே செடிகளை வைக்கும்போது வீட்டுக்கும் உயிரோட்டம் வரும். வீட்டினுள் டேபிளின் மேல் செடிகளை வைக்கலாம். வீட்டின் முன் வைக்கலாம். மொட்டை மாடியில் வைக்கலாம். 

வீட்டிலேயே ஏதோ ஒரு பார்ட்டி நடத்துகிறீர்கள் என்றாலும், இந்தத் தொட்டிகளை அழகாக அடுக்கி வைத்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பவும் அவற்றை அவற்றின் இடங்களுக்கே எடுத்துச் சென்று விடலாம். பூந்தொட்டிகளிலேயே இன்னொரு வகை தொங்கும் தொட்டிகள். தொட்டிகளை ஏன் தொங்க விட வேண்டும்? 2 மாடிக் கட்டிட வீடு என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாடியிலும் தொங்கும் தொட்டிகளை அமைத்தால் அந்த உயரத்தை இணைக்கும்படியான ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். 

ஆகாயத்திலிருந்து தொங்குகிற மாதிரியும், செடிகள் தழைத்துக் கீழே தொங்குவதும் ரம்மியமான காட்சியாக இருக்கும். மண் தொட்டியா, சிமென்ட் தொட்டியா என்பது அடுத்த கேள்வியாக இருக்கும். மண் தொட்டியே சிறந்தது. அதில் பல வடிவங்களை வாங்கிக் கொள்ளுங்கள். சிமென்ட் தொட்டிகள் நீண்ட காலம் உழைப்பவை. ஆனால், அவற்றில் சூடு அதிகமிருக்கும். எடை அதிகமானவையாக இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், சிமென்ட் தொட்டிகளுக்கு நீங்கள் என்னதான் டெரகோட்டா பெயின்ட் அடித்தாலும் மண் தொட்டிகளுக்கே உரித்தான அந்தப் பாரம்பரியம் வராது. 

செடிகள் வளர்ப்பது என்பதே நல்ல விஷயம். அப்படி இருக்கும்போது, மண் தொட்டிகளை வாங்கி வைப்பதன் மூலம் நமது பாரம்பரிய தொழில் அழியாமல் பாதுகாக்கவும் மறைமுகமாக உதவுகிறோம். மண் தொட்டிகளில் சின்னது முதல் பிரமாண்டமானது வரை பல அளவுகள் உள்ளன. மண் தொட்டிகளுக்கும் சிமென்ட் தொட்டிகளுக்கும் இடையில் டெரகோட்டாவில் பிளாஸ்டிக் தொட்டிகளும் கிடைக்கின்றன. சிலர் அவற்றையும் உபயோகிப்பதுண்டு. இவை தவிர water saving pots என்றும் கிடைக்கின்றன. இது இரண்டு வகைகளில் பயன்
படும். வெளியூருக்குச் செல்லும்போது தண்ணீர் ஊற்றி வைத்தால் மண்ணே தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளும். 

இன்னொன்று இந்தத் தொட்டிகளை டேபிள் போன்ற இடங்களில் வைத்தாலும் தண்ணீர் வெளியே கசியாது. மேல் பகுதிக்கு ஈரப்பதம் வராது. கொசு வருமோ என்கிற பயமும் இருக்காது. இந்தத் தொட்டிகளில் ஓவல், சதுரம், வட்டம் எனப் பல வடிவங்கள் கிடைக்கின்றன. இவற்றை போன்சாய்க்கும் நாம் பயன்படுத்தலாம். இவற்றில் அடுத்த தரம் எனப் பார்த்தால் செராமிக் தொட்டிகள். அவற்றுக்கும் தனி அழகு உண்டு. இப்படி அவரவர் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப தொட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்தத் தொட்டியானாலும் தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக கீழே இறங்கி வருகிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும்.

சரி... இவற்றில் என்ன மாதிரியான செடிகளை வைக்கலாம்?
பூச்செடிகள் வைக்கலாம்... மூலிகைச் செடிகள் வைக்கலாம். அழகுக்கான ஃபோலியேஜ் செடிகள் வைக்கலாம். பழ மரங்களைக்கூட தொட்டிகளில் வைக்க முடியும். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பதே ஒரு கலை. ஒரு தொட்டியில் ஃ வடிவத்தில் 3 செடிகளை வைத்து பிறகு அவற்றை ஷேப் செய்து அழகுப்படுத்தலாம். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பது பராமரிப்புக்கும் எளிதானது. ஒரு பெரிய தோட்டத்தைப் பராமரிப்பதற்கும் சில தொட்டிகளை வைத்துப் பராமரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அந்தந்த செடிகளுக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

இதையே வணிக ரீதியாக எப்படிச் செய்யலாம்?
50 தொட்டிகள் வைப்பது வரை அதைப் பொழுதுபோக்காகப் பார்க்கலாம். அதைத் தாண்டும் போது சமாளிப்பதும் பராமரிப்பதும் சற்றே சிரமமாகும். அந்த மாதிரி நேரத்தில் அழகான செடிகளை தொட்டிகளில் வளர்த்து வாடகைக்கு விடலாம். பெரிய பெரிய விழாக்கள் நடைபெறும் இடங்களில் பூக்கள் வைப்பது போல தொட்டிகளில் செடிகளும் வைப்பார்கள். அந்த நேரத்துக்கு அந்தச் சூழலை பசுமையாக்கித் தருவதே இவற்றின் வேலை.

தொங்கும் தொட்டிகளில் கீழே தழைத்து வருகிற மாதிரியான சின்ன கொடிகள், ஆஸ்பராகஸ், பைலியா போன்ற வகைகளை வைக்கலாம். பார்க்க அழகாக இருக்கும். பூந்தொட்டிகளை வைப்பதற்கென்றே இப்போது ஸ்டாண்டுகள் வந்திருக்கின்றன. இரும்பில் இருக்கும். வட்டவடிவத்தில் வைக்கலாம். செங்குத்தாக வைக்கலாம். ஒரே ஸ்டாண்டில் நான்கைந்து தொட்டிகளைக்கூட வைக்கலாம். இவற்றை நமது கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். ஒரு பார்ட்டி நடக்கிறது... தொட்டிகளை நடுவில் வைக்கலாமா? சுற்றி வைக்கலாமா? டேபிள் மீது வைக்கலாமா? இதையெல்லாம் அவரவர் கற்பனைத் திறனைப் பொருத்தது.

தொட்டிகளின் தரம் இன்னும் சில நாட்கள் நீடிக்க வேண்டும் என நினைத்தால் நாம் வாங்கி வரும் மண் தொட்டிகளில் ரெட் ஆக்சைடு அடித்து வைக்கலாம். தொட்டிகளைக் கீழே வைக்கும் போது தண்ணீர் தேங்காமலிருக்க Drain cells என்பவை கிடைக்கின்றன. அவற்றின் மேல் தொட்டிகளை வைத்தால் தண்ணீர் தேங்காது. தரை கெடாது. அல்லது அடியில் ஒரு தட்டு வைத்து அதன் மேல் தொட்டிகளை வைக்கலாம். ஆனால், அப்படி வைக்கிற போது அதில் தேங்குகிற தண்ணீரை முறையாக சுத்தம் செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அதுவே கொசுக்கள் விருத்தியாகக் காரணமாகி விடும்.

பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் சில முறைகள் உள்ளன. 12 இன்ச் தொட்டி என்றால் 250 மி.லி. தண்ணீர் அல்லது ஜூஸ் பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாட்டிலில் பின் வைத்து மெல்லிய துளைகள் போட்டு, தண்ணீரை நிரப்பி வையுங்கள். அதன் வழியே தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் 2-3 நாட்களுக்குக்கூட தண்ணீர் விடாமல் செடிகளைப் பராமரிக்க முடியும். மாடியில் வைப்பதற்கேற்ப எடை குறைவான மண் நிரப்புவது எப்படி என்றும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். அவற்றையும் இந்த விஷயத்தில் பின்பற்றலாம். 

பூந்தொட்டிகளை வளர்ப்பது என்பது மிக முக்கியமான ஒரு பொழுதுபோக்கு. குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் அருமையான பொழுதுபோக்கு. கனத்த விவசாய வேலைகள் இதில் கிடையாது. ஆனாலும், விவசாயத்தில் உள்ள பல நுட்பங்களும் இதில் இருக்கும். தினம் அரை மணி நேரம் இவற்றுக்காக செலவிட்டால் மனம் அமைதியாகும். உடற்பயிற்சியாகவும் அமையும்!

பூச்செடிகள் வைக்கலாம்... மூலிகைச் செடிகள் வைக்கலாம். அழகுக்கான ஃபோலியேஜ் செடிகள் வைக்கலாம். பழ மரங்களைக்கூட தொட்டிகளில் வைக்க முடியும். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பதே ஒரு கலை!

பெண்களுக்கு இது மிகவும் அருமையான  பொழுதுபோக்கு. கனத்த விவசாய வேலைகள் இதில் கிடையாது. ஆனாலும், விவசாயத்தில்  உள்ள பல நுட்பங்களும் இதில் இருக்கும். தினம் அரைமணி நேரம் இவற்றுக்காக  செலவிட்டால் மனம் அமைதியாகும். உடற்பயிற்சியாகவும் அமையும்!

பூ தலையணை

நீங்கதான் முதலாளியம்மா! 

வீ ட்டு அலங்காரப் பொருட்களிலும் அவ்வப்போது சீசன் மாறும். அந்த வகையில் வட்டமாக, சதுரமாக, நீள் வட்டமாக வீட்டின் மூலைகளை அலங்கரித்த குஷன் தலையணைகளுக்கான மவுசு சற்றே மாறி, இப்போது பூ டிசைன்களில் வருகிற தலையணைகள்தான் ஃபேஷன். சூரியகாந்தி டிசைனில், ரோஜா டிசைனில்... இன்னும் விரும்பிய டிசைன்களில் எல்லாம் இதை உருவாக்கலாம் என்கிறார் சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ராணி.    
``கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை குஷன் தலையணைகள் ரொம்பப் பிரபலமா இருந்தது. சாட்டின் துணிகள்ல கலர் கலரா, எல்லா வடிவங்கள்லயும் பண்ற அந்தத் தலையணைகளை வீட்ல சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியெல்லாம் உபயோகிக்கலாம். இப்ப அதுக்குப் பதிலா பூ தலையணை ஃபேஷனாக ஆரம்பிச்சிருக்கு. இதையும் வீட்டுக்குள்ள அழகுக்காக எங்கே வேணா வைக்கலாம். குழந்தைகளை தூங்க வைக்கிறப்ப ரெண்டு பக்கங்கள்லயும் பாதுகாப்புக்காக வைக்கலாம். காருக்குள்ளே வைக்கலாம்...’’ என்கிறார் ராணி.
பாலியஸ்டர், காட்டன், டர்கிஷ் துணி, வெல்வெட், ஃபெல்ட் என எந்தத் துணியிலும் இந்தத் தலையணைகளை தைக்கலாம். ஒரு தலையணைக்கு 2 மீட்டர் துணி வேண்டும். துணிக்கு 200 ரூபாயும், உள்ளே ஸ்டஃபிங் செய்கிற ைநலான் பஞ்சு மற்றும் இதரப் பொருட்களுக்கு 200 ரூபாயும் செலவாகும். கையிலும் மெஷினிலும் தைக்கலாம்.
``அடிப்படையான கட்டிங் முறையும் தையலும் பிடிபட்டுட்டாலே, ஒரே நாள்ல 4 தலையணைகள் வரைகூட தச்சிடலாம். ஒரு தலையணையை 700 ரூபாய் வரை விற்கலாம். உள்ளே நைலான் பஞ்சு வைக்கிறதால, அழுக்கானாலும் துவைச்சு பயன்படுத்த முடியும். எல்லா கலர் காம்பினேஷன்லயும் பண்ண முடியும்கிறது இன்னொரு சிறப்பு...’’ என்கிற ராணியிடம் 2 நாள் பயிற்சியில் இந்தப் பூ தலையணைகளை டிசைன் செய்யக் கற்றுக் கொள்ளலாம். 3 டிசைன்கள் கற்றுக் கொள்ள தேவையான மெட்டீரியல்களுடன் சேர்த்துக் கட்டணம் 1000 ரூபாய். ஒரு டிசைனுக்கு 600 ரூபாய்.
பூ தலையணையை குழந்தைகளை தூங்க வைக்கிறப்ப ரெண்டு பக்கங்கள்லயும் பாதுகாப்புக்காக வைக்கலாம். காருக்குள்ளே வைக்கலாம். சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியும் உபயோகிக்கலாம்...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites