இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Monday, October 31, 2011

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்

நான் சில மாதங்களுக்கு முன்பு, ‘நாளை நமதா?’ என்ற தலைப்பில் சமுதாய மக்களை வெறும் வியாபாரிகளாக அல்லாமல் தொழில் முனைவர்களாகுங்கள் என்று எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையினைப் படித்து விட்டு கனடா நாட்டு தலைநகர் டொரண்டோவில் வாழும் சகோதரர் ஹ_சைன் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மலேசியா, சிங்கப்பூர், துபை, கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலான வாழ்க்கையினை அடுத்தவர்களுக்கு வேலை பார்த்து தொழிலாளியாக இருந்து விட்டேன், தனக்கு வயது 45 ஆகிறது, இனிமேல் இருக்கிற சேமிப்பினை வைத்து ஏதாவது ஒரு தொழில் தமிழத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரிலோ அல்லது பக்கத்திலுள்ள பெரிய நகரிலோ ஆரம்பிக்கலாம் என்று நினைப்பதாகவும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள் என்றார். அவருக்கு சில ஆலோசனை வழங்கினேன். அவருடைய உணர்வினைப் பாராட்ட வேண்டும். காலம் முழுவதும் கசக்கி பிழியப்பட்டு, கைகட்டி நிற்கும் வேலைக்காரனாக இருப்பதினை விட்டு விட்டு கம்பீரமாக தொழில் முனைவராக ஆகவேண்டும் என்ற முயற்சிக்காக. இது போன்று எண்ணற்ற சகோதரர்கள், சகோதரிகள் வாழ வழி தெரியாது திக்குத்தெரியாத காட்டில் வாழ்வதினைப் போன்றுள்ளனர். அவர்களை நீங்களும் தொழில் முனைவர்களாக்கலாம் என்பதினை வழியுறுத்தவே இந்த கட்டுரையினை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
      தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது  தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத்தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச் சொல்லி உங்களுக்கு விளக்கலாம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன்  விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனினையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்? அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி? தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டு பிடிப்பிற்காக ‘ஐ. ஸ்வீப’; என்ற எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா?
      மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான். அவன் கண்டு பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதிற்கும் வழியாகுமல்லவா? ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.
      மானியம் வழங்கப்படும் தொழில்கள்:
மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
வுhகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
மருந்துப் பொருட்கள் உற்பத்தி
சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
ஏற்றுமதி ஆபரணங்கள்
மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
விளையாட்டுப் பொருட்கள்
சிக்கன கட்டுமானப் பொருட்கள்
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை        என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
      தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.
தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களான சென்னையிலிருக்கும் வி.ஜி.பி, எம்.ஜி.எம், சரவண பவன் உரினையாளர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து வெறுங்கையுடன் வந்து ஹோட்டலில் வேலை பார்த்து இன்று பெரிய பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகவில்லையா? ஏன் அவர்களைப் போல உங்களால் வெறும் கையினை வைத்துக் கர்ணம் போட்டு சாதிக்க முடியாதா? முடியும். உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு  ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா? அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே! ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரினையுடன் நினைக்க வேண்டும்.
      இரண்டு வாரத்திற்கு முன்பு வெள்ளியன்று சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவிலுள்ள பள்ளிவாசலுக்கு தொழுக சென்றிருந்தேன். தொழுகை முடிந்து வரும்போது 35 வயது மிக்க திடகார்த்தமான ஒரு பெண் ‘நாலணா எட்டணா’ கொடுங்கள் என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார் அவருடன் நடுத்தர பெண்களும் இருந்தார்கள். ஏன் இந்த நிலை என்று சமுதாய அமைப்பு சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா? ‘டாஃபே’ என்ற டிராக்டர் நிறுவனம் நடத்தும் சிவசைலம் மகள் மல்லிகா சீனிவாசன் ஆயிரம் கோடி தொழில் அதிபதி என்று இருக்கும் போது நாம் ஏழை எளிய முஸ்லிம் பெண்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சுய வேலை திட்டத்திலாவது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யலாமே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கத்தானே செய்யும்! இந்திய தாராள பொருளாதார கொள்கைக்கு பின்பு இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியுள்ளது என்று அறிய பொருளாதார நிபுணர் டெண்டுல்கர்(கிரிக்;கட் வீரர் அல்ல) தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்ன? வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் தொகை 25 சதவீதத்திலிருந்து 2009ல் 37.2 சதவீதமாக அதிகரித்து விட்டது என்பது தான் அது. ஆகவே வறுமைக் கோட்டின் கீழ் துவண்டு கொண்டுள்ள பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க வழி வகை செய்யலமே!.
சுயவேலை தொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு.  வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!
ஓருங்கினைப்பு:
      முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:
செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
  ஃபேக்ஸ்: 28588364
தொழில் நுணுக்கங்கள்:
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதாரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையிலுள்ள ‘நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்’; ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங்குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மகன் கவனித்து வந்தார்கள். வாடிக்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையிட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவர் என்று கேள்விப் பட்டேன். வழக்கம் போல் வாங்கும் மளிகை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரித்தபோது அது பூசனம் அடைந்திருந்தது. உடனே அதனை எடுத்துச் சென்று அந்த இளைஞரிடம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தரமறுத்து விவாதம் செய்தார். நானும் அதனை பெரிது படுத்தவில்லை. ஆனால் அந்த இளைஞர் வந்து மூன்று மாதத்திற்குள் வுhடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தினை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தினர் இப்போது நடத்துகின்றனர்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மற்றவர்களை கவரும் அனுகுமுறைக்கு தொழில் அதிபரும் வாழும் சீதக்காதியுமான பி.எஸ். அப்துர் ரஹ்மானுடைய உதாரணத்தினைக் கூறலாம். 2007 ஆம் ஆண்டு பி.எஸ்.ஏ பற்றி சிலம்பொலி சு. செல்லப்பன் எழுதிய சரிதை வண்டலூர் இன்ஜினீரியங் கல்லூரியில் நடந்தது. அதில் பி.எஸ்.ஏ உறவினர் சுயம் ஆலிம்சா அவர்கள் பி.எஸ்.ஏ வாடிக்கையாளர்களை கவரும் குணத்தினைச் சொன்னார். பி.எஸ்.ஏயும் சுயம் ஆலிம்சாவும் உறவினர்கள். இருவரும் வியட்நாம் தலைநகர் செய்கோன் நகரில் ஒருவரிடம் வைரம் இருப்பதாக 1960ஆம் ஆண்டுக்கு முன்பு சென்றார்கள். அவர்களுக்கு வியட்நாம் நாட்டு மொழி தெரியாது. அந்த வியாபாரியினை இருவரும் சந்தித்து வைரங்களின் விலையினைக் கேட்டார்களாம். வியட்நாம்காரர் விலை ரூபாய் ஏழு லட்சம் என்றாராம். ஆனால் இவர்கள் கொண்டு சென்றது வெறும் ரூபாய் மூன்று லட்சமாம். பேரம் நடந்தது. வியட்நாம் காரர் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு குறைந்து முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் பி.எஸ்.ஏ அவரை விட வில்லையாம் அந்த வைரங்களின் தரத்தினை எடுத்துச் சொல்லி அந்த விலைதான் பெரும் என்றாராம். வியட்நாம்காரருக்கு ஒரு நாள் டைம் கொடுத்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்து விட்டார்களாம். சுயம் ஆலிம்சா நாம் தங்கி பிரஜோனம் இல்லை ஊருக்குப் போய் விடலாம் என்றாராம். ஆனால் பி.எஸ்.ஏ, ‘பார் அந்த வியட்நாமி நாளைக்கு நம்மை வரச்சொல்லுவார்’ என்றாராம். அதன்படியே அடுத்த நாள் வியட்நாமி வியாபாரி அவர்களை வரச்சொல்லி பி.எஸ்.ஏ வாதத்தினை பாராட்டி வைரத்தினை பி.எஸ்.ஏ கேட்ட ரூபாய் மூன்று லட்சத்திற்கே கொடுத்தானாம். ஆகவே தொழிலில் சுமுகமான  அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது பி.எஸ்.ஏயின் அணுகுமுறை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே!
ஆகவே சிறிய முதலீட்டினை வைத்து சிறப்பாக சமுதாய மக்களை தொழில் அதிபராக்க அனைத்து அமைப்புகளும் முன் வரவேண்டும் என வேண்டுகிறேன்
நன்றி :டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

Sunday, October 30, 2011

தாம்பத்யத்தில் சிக்கலை ஏற்படுத்தும் தைராய்டு

மனித உடலில் நாளமில்லா சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. ஹார்மோன்களை உற்பத்தி செய்து அதை உடலில் உள்ள செல்களுக்கு செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொண்டை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி. இது சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும்.
தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தவது, குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும். இது தவிர தைராய்டு சுரப்பினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தைராய்டு நோயினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மனதளவில் பாதிப்பு
நீரிழிவு, இதயநோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு சத்து, புகைபிடித்தலால் தோன்றும் உடல் பருமன் போன்ற நோய் தாக்கிய பெண்கள் ஆண்களைக் காட்டிலும் உடலுறவில் ஈடுபாடு குன்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பாலியல் நிபுணரான டாக்டர் கோல்டுமேன் தெரிவித்துள்ளார். அதேபோல் தைராய்டு குறைபாடினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு அதனால் இல்லற வாழ்க்கையில் விருப்பமின்றி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதன் காரணமாகவே உறவில் ஈடுபாடு குறைவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து இதயத்தை சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக் கூடும். கோமா நிலைகூட ஏற்படலாம் என்று மருத்துவர்கள்.
பிரச்சினைக்கு தீர்வு
அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். மெனோபாஸ் உடன் தைராய்டு குறைபாடும் இணைந்து கொள்வதால் உறவில் ஈடுபாடு குறைந்து வருவதாக கூறும் மருத்துவர்கள் வயக்ராவின் வருகைக்குப்பின்னர் ஆண்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதைப்போல பெண்களின் பிரச்சினைக்கு இன்னும் சரியான தீர்வு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பிரசவ காலத்தில் பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கப்படுகிறது. அதனாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படலாம். பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால் மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.
குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதேபோல் மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள்

ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள். அதில் சில இங்கு…
செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அதை மனதோடும் சம்பந்தப்படுத்தி உண்மையான இன்பத்தை அனுபவிப்பவர்கள் பெண்கள் மட்டுமே. உடலும், மனதும் இணையும் நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.
சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக் கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்பதில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதில்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா என்பதை அறிந்து கொண்டு இசையை பரவ விடுங்கள்.
இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே ‘செல்’லும் கையுமாகத்தான் உள்ளனர். சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும் கூட சிலர் பேசப் பார்த்திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விடுங்கள், உறவு தொடர்பான பேச்சுக்களை மட்டுமே ‘ஆன்’ செய்து வைத்திருங்கள். பெண்களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறிப்பாக ‘அந்த’ நேரத்தில் அரட்டை அடிப்பது அறவே பிடிக்காது.
அவசரக் குடுக்கைகளை பெண்களுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மென்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய்வது பிடிக்காது. நேர்மையாக, நேருக்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களுக்குப் பிடித்திருக்கிறது. அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொதுவாக எதிர்பார்க்கிறார்கள். எப்போது ஒருவர் தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சயம் வெளிப்படையான ஆள் இல்லை என்று பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம். எனவே உறவுக்காக கெஞ்சுவதை தவிருங்கள். மாறாக, வெளிப்படையாக பேசுங்கள். இன்று வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் துணை கூறினால் உடனே முகம் சுளிக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க முடியும்.
செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடிக்கும். ஆண்களுக்கோ சில நிமிடங்களில் எல்லாம் நெருங்கி வந்து முடிந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. முத்தமிடுவது, தொடுதல், உரசுதல், தழுவுதல் உள்ளிட்ட சின்னச் சின்ன விஷயங்களை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.ஆண்கள் இதையெல்லாம் செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.
மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அளவுக்கு இன்பத்தில் பூர்த்தி நிலை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதி வேகமாக உறவுக்குப் போக முற்பட்டால் இன்பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.
முத்தமிடுவதில் சொதப்புவதை தவிருங்கள். எந்த மாதிரியான முத்தம் உங்களது துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் – அது ரொம்ப ரொம்ப முக்கியம்.
உறவின்போது நடைபெறும் முன்விளையாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷயம் உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இரு பாலாருக்கும் முக்கியமானது. இருவரும் பேசுவதற்கு நிறைய விஷயங்களை யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும். போர் அடிப்பது போன்ற பேச்சு்க்களை அறவே தவிருங்கள். உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு பேச்சுக்களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் ‘சித்தாந்தம்’ பேசுவதை விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசுவதற்கு முயலுங்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது, எதைச் செய்தாலும் அதற்கு ‘பெர்மிஷன்’ கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து வைத்துக் கொண்டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும். மாறாக, இப்படி கட்டிப்பிடிக்கவா, இங்கு முத்தமிடவா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும்.
இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு தெளிந்து செயல்படும் ஆண்கள் மீது பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் உண்டாகுமாம்.

மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பது மருத்துவர்கள் தரும் ஆலோசனை.
நியூராட்டிசம் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், எரிச்சல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டமென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு திருமணமும், தாம்பத்ய உறவும் மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு. அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இனிய மண வாழ்க்கை
இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடியை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டுகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையாம். பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர்.
இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதே இதற்கு காரணம். ஒரு ஆண்டு கழித்து தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாகவில்லை. காரணம், வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவில் ஈடுபட்டனர்.
நரம்பியல் கோளாறுகள் தீரும்
4வது ஆண்டுவாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தாம்பத்ய உறவு நரம்பியல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து என்பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பக்குவமடையும் மனம் 
எனவே புதிதாக திருமணமானவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டு, தாம்பத்ய உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள்.
எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடையவர்கள், டென்சன் ஆகும் குணமுடையவர்கள், காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக விடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை

தாம்பத்ய உறவில் திருப்தி, மகிழ்ச்சி என அனைத்தையும் அனுபவிக்க, உணர நீண்ட நேரம் தேவையில்லை, வெறும் பத்து நிமிடமே போதுமானது என்று ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அநேகம் பேருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், சிலருக்கு அப்படியெல்லாம் இல்லை என்ற எதிர்ப்பு எழலாம். ஆனால் உண்மையில் பத்து நிமிட செக்ஸ் உறவில் போதுமான திருப்தியும், மகிழ்ச்சியையும் எட்ட முடியும் என்கிறது அந்த ஆய்வு.
செக்ஸ் பிரச்சினைகள் தொடர்பான அறிவுரை, சிகிச்சை முறைகளைக் கொடுக்கக் கூடிய செக்ஸ் தெரப்பி மற்றும் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த 50 பேர் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யமான சில விஷயங்கள்…
உறவுக்கு ஏற்ற கால அளவு
சிலருக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும். நீண்ட உடலுறவைக் கொடுத்தால்தான் பார்ட்னருக்கு திருப்தி கிடைக்கும், மகிழ்ச்சி கிடைக்கும் என்று ஆண்களும், பெண்களும் எண்ணுவதால் பல அவுசகரியங்களே ஏற்படுகிறது. மேலும் அதுபோல நடப்பதும் இல்லை. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் ஏற்படுகிறது.
இரவு முழுவதும் உல்லாசமாக இருந்தால்தான் திருப்திகரமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் திருப்தியான உறவுக்கு 7 முதல் 13 நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இருவருக்கும் ஏற்ற நிமிடங்கள்
ஒன்று முதல் 2 நிமிடம் வரையிலான உறவு என்பது மிக மிக குறுகியது. இதில் இருவருக்குமே திருப்தி கிடைக்காது. 3 முதல் 7 நிமிடம் வரை என்பது நார்மலானது. இதில் இருவருக்கும் முழு திருப்தி கிடைக்கும். 13 நிமிடங்கள் வரை நீடிப்பது என்பது மிகவும் நீளமானது. இதிலும் இருவருக்கும் திருப்தி இருக்கும், அதேசமயம், கூடவே சில அசவுகரியங்களையும் சந்திக்க நேரிடும். எனவே 7 முதல் 13 நிமிடங்கள் வரை என்பது இரு தரப்புக்கும் ஏற்ற, பொருத்தமான, சரியான கால அளவாகும். அதிலும் 10 நிமிடம் என்பது மிகவும் பர்பக்ட் ஆன கால அளவு.
முன் விளையாட்டுக்கள்
உறவுக்கான கால அளவு வெறும் பத்து நிமிடமே போதுமானது என்கிறது ஆய்வு அதேசமயம், உறவுக்கு முந்தைய விளையாடல்கள், சீண்டல்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு நேரம்தான் என்று கணக்கில்லை. அது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீடிக்கலாம். ஆனால் உச்சகட்ட உறவுக்கு பத்து நிமிட அவகாசம் என்பது சரியானது, பொருத்தமானது, போதுமானது என்கிறது ஆய்வு முடிவு.
இரவு நீண்டிருந்தாலும், நம் உறவுக்கு தேவை சில நிமிடங்கள் மட்டுமே. இதை புரிந்து கொண்டு உறவில் இறங்கினால் குழப்பங்கள், கவலைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். உண்மையைப் புரிந்து கொண்டு எதார்த்தமாக உறவுக்குள் நுழைவதே மனதுக்கும், நமது உடலுக்கும், செக்ஸ் வாழ்க்கைக்கும் சிறந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்

உற்சகமணா உடல் பயிற்சி உயிருக்கு பாதுகப்பு

தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள்.
இதயநோய் தடுக்கப்படுகிறது:
உறவின் போது உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் உணவின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். தாம்பத்ய உறவின் மூலம் உடல் வலிமையடையவதோடு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்துக்கும் உடலுறவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இது பற்றி ஆய்வு நிகழ்த்திய வல்லுநர்கள் உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாகக் கூறுகின்றனர். உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
உறவின் நிலைகள்
உறவின் நிகழ்வுகளை எழுச்சி நிலை, கிளர்ச்சி நிலை, உச்ச நிலை, மீள் நிலை என ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். இந்த நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.
தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தாம்பத்யத்தின் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.
உடலியல் மாற்றங்கள்
தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.
உச்சக்கட்ட உறவின் போது ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது. இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
வயதானவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.
உற்சாகமான உடற்பயிற்சி
பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.
இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகளே என நிபுணர்கள் தெரிவித்துள்ளதோடு உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை கூடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிக கலோரிகள் கரைக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் குண்டாவதும் தடுக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த உற்சாகமான இந்த உடற்பயிற்சியினை காதலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

நான் இப்படித்தான்

புதுமணத் தம்பதிக்குள் எவ்வளவு அன்யோன்யம், நெருக்கம் இருக்கும்..! முதல் குழந்தை பெற்றெடுத்த பின்பும் அதே அளவு ஆசையும், ஆர்வமும் கணவனுக்கு இருக்கும். ஆனால் மனைவியின் உடல் ஒத்துழைக்க மறுக்கும். பொறுப்புகள் தடுக்கும். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் முக்கியமான சூழல்களில் இதுவும் ஒன்று. இதுபோன்ற நேரங்களில் சில கணவன்கள் திசைமாறிக் கூட சென்றி ருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?
* குழந்தை பெற்றெடுத்ததும் இளம் தம்பதி என்ற நிலைமாறி பெற்றோர் என்ற புது அந்தஸ்து கிடைக்கும். புதுமையான உலகமும் தம்பதிகளை சூழ்ந்து கொள்ளும். இப்போது இருவருக்குள்ளும் சிந்தனைகள் மாறத் தொடங்கும். பொறுப்பும், அக்கறையும் கூடுவது போலவே, கவலையும், பயமும் தொற்றிக் கொள்ளும். அதுவரை கணவரையே நம்பியிருந்த மனைவி, இப்போது குழந்தையே உலகமென மாறிவிடுவாள். இங்குதான் பிரச்சினை ஆரம்பம்.
* ஆண் இப்படித்தான் இருப்பான் என்று பெண்ணும், பெண் இப்படித்தான் இருப்பாள் என்று ஆணும் அறிந்து கொண்டால் பிரச்சினைகள் எழுந்தாலும் எளிதில் அடங்கி விடும். பெண்ணுக்கு அரவணைக்கும் குணம் அதிகம். கருத்து வேறுபாடு ஏற்பட்டபின் நீங்கள் ஒருபடி இறங்கி வந்தால் அவள் பத்து படி இறங்கி வரும் அளவுக்கு இரக்கமும், அரவணைக்கும் பண்பும் கொண்டவளாக இருப்பாள். ஆனால் யார் முதலில் இறங்கி வருவது என்பதுதான் பிரச்சினை பெரிதாக காரணம்.
*பெண் இயல்பாகவே பெற்றோர், கணவர், குழந்தை என்று சார்ந்து வாழ பழக்கப் பட்டவள். எனவே நேசிக்கவும், நேசிக்கப்படவும் விரும்புவாள். அவளை நீங்கள் ஏதோ ஒன்றை காரணம் காட்டி வெறுக்கும்போது அவள் நிலை அடியோடு மாறும். குழப்பத்தில் அவள் எந்த முடிவு எடுக்கவும் துணிந்து விடுவாள். தாம்பத்யம் அவசியம் என்ற நிலையிலும் தவிர்ப்பாள். இதிலும் பிரச்சினைகள் எழும்.
* திறமை வாய்ந்த வெற்றிகரமான ஆணை விரும்புவது பெண்களின் அடிப்படை குணம். உங்கள் தோற்றத்தில் மயங்கி உங்களை ஏற்றுக் கொண்டபின் தன் எதிர்பார்ப்பில் ஏமாற்றங்களை கண்டால் மனம் உடைந்து போவாள். உறவிலும் அதிக பெண்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இதனாலும் குடும்பத்திற்குள் பிரச்சினை வரலாம். குழப்பத்தை யும், முரண்பாடுகளையும் தவிர்க்க விரும்புகிறவர்கள் பேசிப் பார்த்தாலே அனேக விஷயங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியும்.
* ஆணின் அடிப்படைப் பண்பே போராட்ட குணம் தான். பெண்களை கவர விரும்புவதும் அவர்கள் இயல்பு. எப்போதும் வெற்றியை நோக்கி விரட்டப்பட்டுக் கொண்டி ருப்பார்கள். ஒருபுறம் இயல்பும், இன்னொருபுறம் இயலாமையும் விரட்ட, போராட்டம் அவர்களின் வாழ்வில் நிரந்தரமாகி விடுகின்றன. அதனால்தான் அவர்கள் தலையை பிய்த்துக் கொண்டு, `கல்யாணம் முடிக்காமலே இருக்கலாம்’ என்று ஆலோசனை சொல்ல கிளம்பி விடுகிறார்கள். வீறாப்பால் விட்டுக்கொடுக்காததாலும் பிரச்சினைகள் நீளும்!
* குழந்தை பிறந்த பிறகு தனக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்பதுதான் பெரும்பாலான கணவர்களின் குற்றச்சாட்டு. இப்போதைய நிலையில் உலகத்தைப் பற்றிய புதிய பார்வை இருவருக்கும் வேறுவேறாக இருப்பதால், ஒருவர் மீது ஒருவர் நிறை கண்ட நிலை மாறி, குறை காண ஆரம்பிப்பார்கள். தாம்பத்யம் உள்பட பிற விஷயங்களில் இருந்த நெருக்கம் குறைய ஆரம்பிக்கலாம். கருத்து வேறுபாடுகள் எழலாம். வாழ்வில் ஒருவித சலிப்பு தோன்றும்.
* பிறந்த குழந்தை தம்பதிக்கு கூடுதல் பொறுப்புகளைத் தரும். குடும்பத்திலும், வெளியிலும் பிரச்சினைகள் ஆணின் மனதை அதிகமாக உறுத்தும். தேவைகளை நோக்கி ஓடத் தொடங்குவான். மனைவியோ பொறுப்புகளை கணவன் பகிர்ந்து கொள்வாரா? என்று எதிர்பார்ப்பாள். சம உரிமை கோரி நிற்பாள். ஏற்கனவே தன்னை முன்போல் கவனிப்பதில்லை என்ற ஆதங்கத்திலும், நிதிச்சுமையிலும் தடுமாறிக் கொண்டி ருக்கும் ஆண், எதிர்பாராத இந்த உரிமை கோரலால் குழப்பமடைவான். மோதல் ஆரம்பமாவது இங்கு தான்.
* கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதும் இருவரும் தங்கள் பலத்தைக் காட்டுவார்கள், பலவீனங்களை சுட்டிக்காட்டி குறைகூறத் தொடங்குவார்கள். அந்தரங்கங்கள் மூன்றாம் மனிதர் நுழையும் அளவுக்கு போகும். இருவரும் சுமூக முடிவுக்கு வராத நிலையில், பிரச்சினை விவாகரத்து வரை கூட செல்லலாம். தலை தூக்கும் முரண்பாடுகளைத் தவிர்க்கவும், காலம் முழுவதும் கணவன்-மனைவி சேர்ந்து வாழவும் சில குணநலன் களை புரிந்து நடக்க வேண்டும்.
* ஆண்கள் எப்போதும் உறவுகளில் மிக நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பார்கள். தனக்கு பலம் அதிகம் என்றெண்ணி உடல் நலத்தை கெடுத்துக் கொள்வதும் உண்டு. போராட்டம், விரக்தி இவற்றால் விரட்டப்பட்டு அடிக்கடி மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் வீறாப்பு குணம் விட்டுக் கொடுப்பதை விரும்பாது. இதை பெண்கள் புரிந்து கொண்டாலும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
* ஆணானாலும், பெண்ணானாலும் அடிப்படை குணங்களைவிட்டு வெளியே வரா விட்டால் பிரச்சினை தான். “நான் இப்படித்தான்” என்ற கோட்பாட்டை தகர்த்து ஒரு வருக்குள் ஒருவர் ஐக்கியமாகிவிடும்போது வேறுபாடுகள் நீங்கும். இன்பம் பெருக் கெடுக்கும். திருமணத்தோடு, குழந்தை பிறப்போடு எல்லாமே முடிந்து விடுவதில்லை. எப்போதும் முதன்முதலாகச் சந்திக்கும் ஆவலோடு நேசம் கொள்ளுங்கள், பிரச்சினை களை சிறு பிள்ளையின் தவறாக மன்னிக்கப் பழகுங்கள். மணவாழ்க்கை மகிழ்வும், நிறைவும் பெறும்.
நன்றி-தினத்தந்தி

அதுக்கெல்லாம் எது நேரம்

அதிகாலை எழுந்து அரக்கப் பரக்க வீட்டு வேலை செய்துவிட்டு உடனே அலுவலகப் பணிக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கையே இயந்திரமயமாகி விட்ட சூழலில் சுற்றத்தாரையும், நண்பர்களையும் சந்தித்துப் பேச நேரமேது என்று ஆதங்கப்படுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
அலுத்து சலித்து போய், ‘அதற்கெல்லாம் நேரம் ஏதுங்க’ என கூறப்படும் வரிசையில் ஒன்றாகி வருகிறது தாம்பத்யம். இது அதிர்ச்சியும் வருத்தமும் படவேண்டிய விசயம்தான். தளர்வும், சோர்வுமே தாம்பத்யத்தை தள்ளி வைப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. 10ல் 7 தம்பதியர்கள் இவ்வகையான சோர்வு நிலையிலேயே உள்ளனர் என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தவிர்க்க ஐந்து காரணங்கள்
தாம்பத்யத்திற்கு முன் சோர்வாக காணப்படுவதற்கு 5 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை : போதுமான அளவு தூக்கமின்மை, நீண்ட வேலை நேரம், துணையில் ஒருவர் நேரங்கழித்து படுக்கைக்கு செல்லுதல், குழந்தைகள் சீக்கிரமாக எழுந்து நம்மையும் எழுப்பி விடுதல் அல்லது தாமதம் ஏற்படுத்துதல், இயந்திர மயமான சமூக வாழ்க்கை போன்ற சூழ்நிலைகளால் தாம்பத்யம் தவிர்க்கப்படுகிறது.
தூக்கமின்மையால் பாதிப்பு
இது தொடர்பாக 3,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2/3 பங்கு பேர் தங்களது தாம்பத்யத்திற்கு வார இறுதி நாட்கள் உகந்ததாக உள்ளது என கருத்து கூறியுள்ளனர். மறுநாள் விடுமுறை ஆதலால் அவசரமாக எழுந்து எந்த வேலையையும் செய்ய வேண்டியதில்லை.
இந்த வாரம் கிடையாது என 5ல் ஒருவர், தெளிவாக சொல்லி விடுகின்றனர். போதுமான தூக்கம் இன்மையே தங்களின் இயலாமைக்கு காரணமாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த காரணமே நீண்டநேர பணி என்று குறிப்பிட்டுள்ளனர்.
களைப்பினால் தவிப்பு
மேலும் அந்த ஆய்வில், தாம்பத்யத்தை தவிர்ப்பதற்கு களைப்பு மட்டும் காரணமாக அமையவில்லை. உடல் பலவீனமும் ஒத்துழையாமை இயக்கத்துடன் சேர்ந்து கொள்கிறது. குறிப்பாக 7 சதவீதம் பேர் தாங்கள் தினமும் சோர்வான நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். 39 சதவீதம் பேர் களைப்பின் மிகுதியால் ஏதோ ஒன்றை மறக்க முயல்கின்றனர். 38 சதவீதம் பேர் தங்களது துணையுடன் இரவு பொழுதை கழிப்பதை தவிர்த்து உறங்க சென்று விடுகின்றனர்.
பெரும்பான்மையான தம்பதிகள் இரவு 10 மணி கடந்து விட்டால் தூங்க சென்று விடுகின்றனர். கால்வாசி பேர் இரவு 9 மணி கடந்து விட்டாலே தாம்பத்யத்திற்கு மறுப்பு தெரிவித்து விடுகின்றனர். 10ல் 6 பேர், தாம்பத்யத்திற்கு என நேரம் ஒதுக்க வேண்டும். குறைந்தது அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என கூறி தங்களை தேற்றி கொள்கின்றனர்.
ஆற்றலை பெருக்கும் பானம்
எனவே இதிலிருந்து விடுபட்டு தங்களது ஆற்றல் அளவை பெருக்கிக்கொள்ள 40 சதவீதம் பேர் டீ அல்லது காபி அருந்துகின்றனர். ஒரு பிரிவினர் உடற்பயிற்சி செய்து தங்களை தூக்கத்தில் இருந்து விடுவித்து கொள்ள முயல்கின்றனர். 21 சதவீதம் பேர் சாக்லேட் போன்ற இனிப்புகளை எடுத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சோர்வையும், மனஅழுத்தத்தையும் போக்கும் மாமருந்தாக தாம்பத்ய உறவை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அந்த சோர்வை தாம்பத்ய உறவுக்கு இடையூராக மாறியுள்ளது என்பது விநோதமான உண்மை.

உறவுகளால் பூரிக்கும் உடம்பு

தாம்பத்ய உறவில் தொடர்ந்து ஈடுபட்டால், உடல் பெருத்து விடும் என்ற நம்பிக்கை பெண்களிடையே உள்ளது. ஆனால் இதெல்லாம் ஒரு விதமான மூட நம்பிக்கைதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேசமயம், செக்ஸ் உறவை ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதனால்தான் உடல் பெருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
பூரிப்பும் திருப்தியும்
அதேபோல திருமணத்திற்கு பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை. சிங்கிளாக இருப்பவர்களை விட திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது
கட்டுப்பாடும் பயிற்சியும்
தாம்பத்ய உறவு காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, திருமணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
திருமணத்திற்குப் பிறகும், தாம்பத்ய உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நம் நாட்டைப் பொறுத்தவரை ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு திருமணம்தான் அவனது அந்த பிறவி முழுவதற்குமான இன்ப துன்பங்களை நிர்ணயிக்கும் விஷயமாக கருதப் படுகிறது.

ம் நாட்டைப் பொறுத்தவரை திருமணம் என்பது சட்ட பூர்வமானது. `ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நம் கலாசாரத்தை காட்டும் தாரக மந்திரம்போல இருக்கிறது. மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண், என்பதை இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகத்தான் நமது கலாசாரம் கருதுகிறது. அது ஒரு பாவச் செயல்போல குறிப்பிடப்படுகிறது. ஆனால் மேலை நாட்டவரின் நிலைமையே வேறு. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்களுடைய பெரும்பாலான பொறுப்புகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்வதால் அவர்களால் இஷ்டம்போல் வாழ முடிகிறது.
நம் நாட்டைப் பொறுத்தவரை ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு திருமணம்தான் அவனது அந்த பிறவி முழுவதற்குமான இன்ப துன்பங்களை நிர்ணயிக்கும் விஷயமாக கருதப் படுகிறது. அது மட்டுமல்லாமல் சமூக பாதுகாப்பு என்பதும் திருமணத்தால் ஏற்படுவதால் அதற்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு, சந்ததியினரின் கல்வி, வளர்ச்சி, எதிர்காலம், பெற்றோரின் வயோதிக கால பாதுகாப்பு ஆகிய அனைத்தும் இந்த திருமண கட்டமைப்பில் அடக்கம்.
வெளிநாட்டவர் பலரும் மதித்துப் பெருமைப்படும் விதமாக இந்திய திருமணங்கள் இருக்கின்றன. சிக்கல்கள் வந்தாலும் அந்த சிக்கல்கள் குறைவுதான். நம் நாட்டில் விவாகரத்து என்பது இரு குடும்பங்களையும் பாதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. விவாகரத்து என்பது சமூகத்தில் சற்று சறுக்கலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. விவாகரத்து பெற்ற பெண்கள் `வாழாவெட்டி’ என்ற பெயரோடு தாய்வீட்டில் அடைக்கலம் புகுந்த காலங்கள் மாறி பெண்கள் எந்த நிலையிலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் சூழல் நிலவும் இந்த கால கட்டத்திலும் விவாகரத்து என்பது விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் ஒருவனுக்கு ஒருத்தியாக அனுசரித்துச் செல்லும் வாழ்க்கையே முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில்கூட முந்தைய காலத்தில் மன்னர்களும், வசதி படைத்தவர்களும் பலதார மணம் முடித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். பல பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வாழ்க்கை எந்த அளவுக்கு நிம்மதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு வாழும் முறை ஐரோப்பிய நாடுகளில் இன்றும் உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது, `ஒப்பந்த மனைவிகள்’ என்ற முறை!
எந்த ஒரு விஷயத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சரி, தவறு என்று சொல்லிவிட முடியாது. அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றபடிதான் அங்குள்ள மனிதனின் வாழ்க்கை முறையும் அமையும். சில நாடுகளில் வயதானவர்கள் துணைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் பணக்கார பெண்களை தங்களுடன் சேர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவளது செலவில் தானும் வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம்.
தற்போது உலகளாவிய நிலையில் ஒப்பந்த மனைவிகள் உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கி யிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஒன்று சேர்ந்து வாழும் அவர்கள் `ஒப்பந்தம் முடிந்த பின்பு எங்கள் எதிர்காலம் என்னவாகும்? ஒப்பந்த காலத்தில் கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றுவிட்டால் அந்த குழந்தைக்கு யார் பொறுப்பு? குழந்தையை பராமரிப்பது யார்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒப்பந்த மனைவிகளை வைத்துக் கொள்ளும் செல்வந்தர்கள் அந்த மனைவிகளின் எதிர்கால தேவைகளுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக் கிறார்கள். பணம் படைத்த ஆண்களிடம் ஏமாந்து, தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விடக்கூடாது என்பதில் ஒப்பந்த மனைவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
அவர்களது போராட்டங்களாலும், அதனால் ஏற்படும் சமூக சிக்கல்களாலும் ஐரோப்பிய நாடுகளில் பல, இந்தியாவின் திருமண முறை பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. `ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற வாழ்க்கை முறையே உயர்வானது என்பதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
அதே நேரத்தில் இந்தியாவில் வசதி வாய்ப்பு கொண்டவர்கள், பாரம்பரிய கலாசாரத்தை மறந்துவிட்டு `வெளிநாட்டு ஒப்பந்த மனைவிகள் முறை இங்கு வந்தால் மகிழ்ச்சியாக இருக்குமே’ என்ற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைதான் இதில் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
நன்றி-தினத்தந்தி

இனிய தாம்யத்தை விரும்புபவரா நீங்கள்?

இல்லறத்தில் இனிய தாம்யத்தை விரும்புபவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த கட்டுரை. இயற்கை உணவுகளை உட்கொண்டால் இதமான தாம்பத்யத்தை அனுபவிக்கலாம் என்று மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவிக்கின்றனர்.
உணவியல்துறை வல்லுநர்கள் ஆய்வு
ஜின்செங் மற்றும் குங்குமப்பூவை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் அது உடலை உற்சாகம் மூட்டும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சிவப்பு ஒயின், மற்றும் சாக்லேட்டும் கூட தாம்பத்யத்தின் இனிமையை கூடுதலாக்கும் என்று குல்ப்ஸ் பல்கலைக்கழகத்தின் உணவியல்துறை பேராசிரியர் மாஸிமோ மார்க்கோன் தனது மாணவர் ஜான்மிலின்க் உடன் இணைந்து ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர். அவர்களது ஆய்வு முடிவுகள் உலக உணவு ஆய்வியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து சில முக்கிய பகுதிகள் உங்களுக்காக.
பக்கவிளைவு ஏற்படுவதில்லை
தாம்பத்யத்தில் சரியான ஈடுபாடு இல்லையென்றால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவே இயற்கையான ஜின்செங், குங்குமப்பூ, யோகிம்பைன் போன்ற மருந்துகளை கண்டறிந்துள்ளனர். ஜின்செங் என்பது சீனாவில் பயிரிடப்படும் வேர்ச்செடி, யோகிம்பீ என்பது மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் மரமாகும். இவற்றை உட்கொள்வதன் மூலம் தாம்பத்ய வாழ்வில் உற்சாகம் அதிகரிக்கிறது என்று ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். இதேபோல் சாக்லேட்டும் உறவின் போது உற்சாகத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.
இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள், உணவுகள் தாம்பத்ய வாழ்க்கைக்கு உற்சாகமூட்டுகின்றன. ஆனால் தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்கிறார் மிலின்க்.
போதை தேவையில்லை
ஆனால் நீடித்த இன்பத்திற்காக தற்போது விற்பனை செய்யப்படும் வயாக்ரா உள்ளிட்ட மாத்திரைகளை உபயோகிக்கின்றனர். இதனால் உடல்வலி, தலைவலி உள்ளிட்ட ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் மிலின்க்.
போதை மருந்து ஆல்கஹால் போன்றவை உறவின் போது உற்சாகத்தை தரலாம் ஆனால் தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள்

ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி




உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகளில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது, `ஆண்மைக் குறைவு’ பற்றிய ஆராய்ச்சி! ஏன்என்றால் உலகம் முழுக்க இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இதன் தாக்கம் அதிகம். ஏன்?
இந்தியா விவசாய நாடு. எங்கு பார்த்தாலும் விளைநிலங்களாக இருந்தன. எழுபது சதவீத மக்கள் விவசாய வேலை பார்த்து, விவசாயிகளாக வாழ்ந்துவந்தார்கள். அதிகாலையிலே எழுந்து, வயலுக்கு செல்வார்கள். கடுமையாக உழைப்பார்கள். அவர்கள் உற்பத்தி செய்த இயற்கையான உணவை, அவர்கள் கைப்பட சுவையாக தயாரித்து உண்டார்கள். நீர் நிலைகளில் நீச்சல் அடித்து குளித்தார்கள். கிராமிய விளையாட்டுக்களை விளையாடினார்கள். இரவில் நிம்மதியாகத் தூங்கினார்கள்.
இந்தியர்களின் உழைப்பு நிறைந்த இந்த வாழ்க்கை முறை இன்று படிப்படியாக மறைந்து, சினிமாவில்கூட பார்க்க முடியாததாகிவிட்டது. சிறுவர்களாக இருக்கும்போதே பள்ளிக் கூடத்திற்குள்ளும், வீட்டிற்குள் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். உடல் இயக்கம் நிறைந்த வெளி விளையாட்டுகள் இல்லை. டெலிவிஷன் முன்பும் கம்ப்யூட்டர் முன்பும் சிறுவயது பருவத்தை தொலைக்கும் அவர்கள், இளைஞர்கள் ஆகும்போது முழு நேரமும் படிப்பு. பின்பு `ஒயிட் காலர் ஜாப்’ எனப்படும் அலுவலக இருக்கை வேலை. வேலையில் ஏற்படும் மன உளைச்சல், எந்திரத்தனமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களால் அவர்கள் மன, உடல் ஆரோக்கியம் கெட்டு ஆண்மைக் குறைபாடு தோன்றுகிறது. ஆண்மைக் குறைபாடு என்பது, செக்ஸ் எழுச்சியின்மையாகும்!
சமீபத்தில் `இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் செக்சுவல் தெரபி’ எடுத்த சர்வேபடி ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் 7 சதவீதம் அதிகரித்திருக் கிறார்கள். அதன்படி திருமணமானவர்களில் 22 சதவீதம் பேர் வரை இந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
உடல் உழைப்பின்மைதான் ஆண்மைக் குறைவுக்கான பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. மனித உடலே உழைப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. உழைத்தால்தான் உடல் சீராக இயங்கும். உடல் சீராக இயங்கினால்தான் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீர்படும். உச்சி முதல் பாதம் வரை ஆக்டிவ் ஆக இருக்கும். உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடல் நோய்களின் கூடாரம் ஆகிவிடும்.
மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆனாலும், அதில் பெரும்பாலான காலங்கள் மனித இனம் பட்டினிக்கு உள்ளாகியிருக்கிறது. பட்டினிச் சாவை குறைக்க இயற்கை தரும் வாய்ப்பாக இருந்தது கொழுப்பு. மனிதன் நன்றாக சாப்பிடும்போது அதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில், வயிறு, தொடைப் பகுதிகளில் படிந்திருக்கும். பட்டினிக்காலங்களில் அது கரைந்து, ஒரு சில நாட்களுக்கு உடலை பாதுகாக்கும். ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் பட்டினிச் சாவு குறைந்துகொண்டே வருகிறது. இப்போது பட்டினிச் சாவே இல்லை என்ற நிலையை அடைந்திருக்கிறோம். அதனால் உடலுக்கான கொழுப்பின் தேவை குறைந்துவிட்டது. அதை புரிந்துகொள்ளாமல் மனிதர்கள் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடல் இயக்கத்தை சீர்குலைக்கிறார்கள்.
ஆண்களுக்கு உடல் உழைப்பு குறைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்கள் பார்க்கும் வேலை. எல்லோரும் உட்கார்ந்து பார்க்கும் சொகுசான வேலையைத்தான் விரும்புகிறார்கள். சொகுசாக பயணிக்கிறார்கள். நடை பயிற்சியோ, உடல் பயிற்சி செய்வதில்லை. அதனால் அவர்கள் உடல் இயக்கம் சீரற்று போகிறது.
உடல் ஆரோக்கியத்திற்காக சாப்பிடுதல் என்ற நிலை மாறி, சுவைக்காக சாப்பிடுகிறோம். வறுத்த, பொரித்த உணவுகளை வகைவகையாக உண்ணுகிறோம். அதனால் உடலுக்குள் எண்ணை அதிகமாக செல்கிறது. உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதர்களுக்கு எண்ணெய் சத்தே தேவையில்லை. எந்த எண்ணெய், என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அதில் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாத நிலையில் மென்மேலும் எண்ணெயை பயன்படுத்தி கொழுப்பைச் சேர்க்கிறார்கள். இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிகிறது. இதயம் ரத்த நாளங்களால் சூழப்பட்டிருப்பதைப் போல், ஆண் உறுப்பும் ரத்த நாளங்களாலே இயங்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படியும்போது, முதலில் ஆண்மைக் குறைவு ஏற்படும். உறுப்பு எழுச்சி குறையும். திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்ள முடியாது.

ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேரை வகைப்படுத்தி ஆராய்ந்தபோது அவர்கள்..
* உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர் ஆண்மைக்குறைவுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
* மனஉளைச்சல் மற்றும் வேலை தரும் அழுத்தத்தால்- 28 சதவீதம் பேர் இந்த பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
* முரண்பாடான வாழ்க்கை முறையால் ஆண்மைக் குறைவுக்கு உள்ளானவர்கள்- 14 சதவீதம்.
* தவறான உணவுப் பழக்கத்தால் 12 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட்டுள்ளது.
* அதிக அளவில் மது அருந்துவதால் 8 சதவீதம் பேருக்கு ஆண்மைக் குறைவு உருவாகியுள்ளது.
* இதர காரணங்களால் 7 சதவீதம் பேருக்கு ஆண்மைக்குறைபாடு தோன்றுவதாக தெரியவந்துள்ளது.

இந்த குறைபாட்டை கவனிக்காமலே விட்டுவிட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் இதய பாதிப்பு தொடங்கிவிடும். இதய பாதிப்பு என்கிற யானை வரும் முன்பே, அதை உணர்த்துகின்ற மணியோசையாக ஆண்மைக்குறைவு தோன்றுகிறது.
மன உளைச்சல் மக்களை மிக அதிக அளவில் தாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியர்களில் 2 சதவீதம் பேர் மன உளைச்சலு டன் இருப்பதாக குறிப்பிட்ட ஆய்வறிக்கைகள் தற்போது அது நான்கு சதவீதமாக உயர்ந்திருப்பதாக குறிப்பிடுகிறது. மூளைக்கும், உடலின் குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டும் அதிக வேலை கொடுப்பது, அத்தகைய வேலைகளை ஓய்வின்றி பார்ப்பது, சரியாக தூங்காமல் தவிப்பது, குறிப்பிட்ட இலக்கை அடைய கடுமையான போட்டி மனப்பான்மையுடன் செயல்படுவது, நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தேவையற்ற பிரச்சினைகளில் சிக்குவது போன்றவைகளெல்லாம் மனஉளைச்சலுக் கான அடையாளங்கள். திருமணமான ஆண்கள் மனைவியிடம் நல்லுறவை பேண முடியாமல் குழம்புவதும் மன உளைச்சலுக்கான முக்கியமாக காரணமாகிறது. 2020-ம் ஆண்டில் உலகிலே மன அழுத்ததம்தான் பெரிய நோயாக இருக்கும் என்று எச்சரிக் கிறது இன்னொரு புள்ளிவிபரம்.
வாழ்வியல் சிக்கல்களால் ஆண்மைக் குறைவு அதிகரித்துவருவதால், அதை தீர்க்க மருத்துவ உலகம் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறது. 1970-களில் செக்ஸ் தெரபியும், 1980-களில் உறுப்பில் ஊசி மருந்து செலுத்தும் முறையும், ஆபரேஷன் இணைப்பு மூலம் மேம்படுத்தும் முறையும் உருவாகின.
இதில் புரட்சிகரமான மாற்றம் வயாகரா வடிவில் வந்தது. 1990-ல் உருவாக்கப்பட்ட அது, 1998-ல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது. இதய நோய் மாத்திரையான அது, பின்பு உறவின் எழுச்சிக்கான மருந்தாக உலகம் முழுக்க வரவேற்பை பெற்றது. ஆயினும் அந்த நேரத்திற்கு அது எழுச்சியாக இருந்தாலும், ஒவ்வொரு நேரமும் அது தேவை என்ற நிலை ஏற்படுகிறது. அந்த நிலையை மாற்ற கதிர்களை பாய்ச்சி ரத்த நாளங்களை சீர்படுத்தி, வளப்படுத்தும் சிகிச்சை தற்போது உள்ளது. ஆண்மைக் குறைவை போக்க சிகிச்சைகள் இருந்தாலும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலை வளப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் ஆண்கள் முன்வர வேண்டும்.
முறையாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் குறைந்தது பத்தாயிரம் அடியாவது நடக்க வேண்டும்.
கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து, காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். யோகா, தியானம் போன்றவைகளை செய்து மனஅமைதியுடன் வாழ வேண்டும். ஆரோக்கியமும், மன அமைதியும் ஆண்மைக் குறைவை தவிர்க்கும்.
விளக்கம்: டாக்டர் டி. காமராஜ்,
(பிரபல செக்ஸாலஜிஸ்ட்) சென்னை





















ஆரோக்கியமான உறவு உடலின் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும்

மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்று பாலுணர்வு. இயற்கையாக தோன்றும் இந்த உணர்வை ஆரோக்கியமானதாக மாற்றுவதில்தான் இருக்கிறது மனிதர்களின் வெற்றி. தம்பதியர்களிடையே ஆரோக்கியமான உறவு மேம்பட இந்த பாலுணர்ச்சியே முக்கிய காரணியாக இருக்கிறது. இதனை சிறப்பாக வெளிப்படுத்த நமது சமையலறையே முக்கிய சாதனமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.
ஒருவரின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, இளமையை தக்க வைப்பதில் தாம்பத்யத்தின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார் ஹார்மோன் மற்றும் இளமையியல் சிறப்பு வல்லுநர் சிசில்லா டிரிகியர். லண்டனின் மருத்துவமனை வைத்துள்ள அவர் 25 ஆண்டுகளாக தனது மருத்துவமனைக்கு வந்த தம்பதியர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியர் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், உடல் வனப்புடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரியவந்ததாக டெய்லி மெயில் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கிய தெர்மா மீட்டர்
பாலுணர்ச்சியும், அது தொடர்பான ஆர்வமுமே நமது உடல் நலத்தை அளக்கும் தெர்மா மீட்டர் என்று டிரிகியர் குறிப்பிட்டுள்ளார்.
பாலுணர்ச்சியை தூண்டுவது என்பது அவர்கள் உட்கொள்ளும் உணவு முறையை சார்ந்ததாக இருந்துள்ளது. சத்தான உணவு உடல் நலத்திற்குத் தேவையான ஹார்மோன்களை சிறப்பாக செயல்பட வைப்பது தெரியவந்துள்ளது. அதன் மூலம் பாலுணர்ச்சியை தூண்டுவதற்கான ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்தது கண்டறியப்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதன் மூலமே தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபட முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தினசரி உறவு என்பது உடற்பயிற்சி செய்வதைப்போல அவசியமானது என்று கூறும் மருத்துவர், இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்கிறார். அதற்கான முக்கியமான மூன்று வழிமுறைகளை அவர் தெரிவித்துள்ளார்.
மூளைக்கு உற்சாகம்
எந்த செயலுமே முதலில் தொடங்குவது மூளையில் இருந்துதான். மனித உறுப்புக்களில் மிகப்பெரிய பாலுணர்ச்சியை தூண்டக்கூடிய ஆர்கன் மூளைதான் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனும், ரசாயனமாற்றமும்தான் பாலுணர்வின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம்தான் உறவின் போது வெளிப்படும் காதல், அளவுகடந்த கற்பனா சக்தியுடன் துணையை கவர மேற்கொள்ளும் சாகசம், அதனால் பெண்கள் அடையும் உச்சநிலை ஆகியவை ஏற்படுகின்றன. இவை எல்லாம் நாம் உண்ணும் உணவில்தான் இருப்பதாக தெரிவிக்கின்றார் மருத்துவர்.
எனவே முதலில் உண்ணும் உணவுமுறையில் அக்கறை கொள்ளவேண்டும். இதன் மூலம் சக்தியானது நரம்புகள் வழியே மூளையை அடைகிறது. சிறப்பாக செயல்பட முடியும் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உறவில் ஈடுபட மூளையானது தூண்டுகிறது.
ஹார்மோன்களின் ஒத்துழைப்பு
பாலுணர்ச்சியை தூண்டுவதில் ஹார்மோன்களின் பங்கு அவசியமானது. அவைதான் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை சீராக வைக்க உதவுகிறது. இதில் மூன்று ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென். டெஸ்ட்டிரோஜென், ஆகிய ஹார்மோன்கள் சிறப்பாக செயல்படுவதை சரிவிகிதமாக வைப்பதில் மீன், இறைச்சி, ஆகியவற்றில் உள்ள நல்ல கொழுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை ஹார்மோன்களை தூண்டி அவற்றை சீரான முறையில் சுரக்கச்செய்கின்றன. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என்று தெரிவிக்கிறார் டிரிகியர்.
சக்தியின் ரகசியம்
ஆரோக்கியமான உறவு உடலின் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும். அதற்கு ஆரோக்கியமான அவசியமான உணவுகள் உதவுகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். இதன் மூலம் மனித வளர்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன் (Human Growth Hormone (HGH).) சுரப்பு சீராவதோடு பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பினை அதிகரிக்கச்செய்கிறது. தொடர்ச்சியான ஆரோக்கிமான உறவுக்கு புரதச்சத்து நிறைந்த கோழி இறைச்சி, மீன், பன்றி இறைச்சி ஆகியவை உதவுகின்றன என்று கூறுகின்றார் மருத்துவர்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites