இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label எந்த ஊரில் என்ன வாங்கலாம். Show all posts
Showing posts with label எந்த ஊரில் என்ன வாங்கலாம். Show all posts

Monday, February 17, 2014

பசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம்




அந்தியூர் அசத்தல்
காய்கறிச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தைபோல வருஷம் ஒரு முறை ஈரோடு மாவட்டம், அந்தியூரில் களைகட்டுகிறது குதிரைச் சந்தை. பரந்து விரிந்த மைதானம் எங்கும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் கம்பீரமாய் நிற்கின்றன. குதிரைகளின் வாயைப் பிளந்து, அதன் பல்லைப் பார்த்தும் அதன் குளம்புகளைத் தட்டிப் பார்த்தும் விலை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் குதிரை வியாபாரிகள்.
    அந்தியூர் குருநாத சுவாமி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் பொங்கல் விழா புகழ்பெற்றது. அந்த விழாவுடன்  சேர்ந்துகொள்கிறது குதிரைச் சந்தையும். கோலாகலமாக நடக்கும் இந்தக் குதிரைச் சந்தைக்கு தமிழகம்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து விதவிதமான குதிரைகளை ஓட்டி வருகிறார்கள் வியாபாரிகள்.
மன்னர்கள் காலத்தில், படை வீரர்களுக்கான குதிரையை வாங்கவும் விற்கவும் இந்தச் சந்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் மாறாமல்  இங்கு இப்போதும் நடந்துவருகிறது  குதிரைச் சந்தை. சந்தையில் பல வகையான குதிரைகள் இருந்தாலும் கீழ்க்கண்டவைதான் ஸ்பெஷல். அவைகளைப் பற்றிய  சிறு குறிப்புகள்...
கட்டியவார் குதிரை:

உயர் ரகக் குதிரை வகை. 'கட்டியவார்’ என்பது வட மாநிலத்தில் புழங்கும் வார்த்தையாகும். இந்த வகைக் குதிரைகள் அழகாகவும் உயரமாகவும் இருக்கும். விலையும் அதிகம். ஒரு குதிரையின் விலை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை நீள்கிறது. இந்தக் குதிரைகள் ஜவான்கள் செல்லவும் ஆடம்பரத் திருமணங்களில் சாரட் வண்டிகளை இழுத்துச்  செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டியவார் குதிரைகளைக் கட்டி மேய்த்துக்கொண்டு இருந்தார் கோவை மாவட்டம், சரவணம்பட்டியைச்சேர்ந்த தம்பி என்பவர்.
''எனக்கு 30 வருஷமா குதிரைங்களோட பரிச்சயமுங்க. ஒரு குதிரை கனைக்கிறச் சத்தத்தை வெச்சே அதோட சாதி, குணம், ஆரோக்கியம் எல்லாத்தையும் சொல்லிப்போடுவேனுங்க. குதிரைங்க எல்லாம் குழந்தைங்க மாதிரி.  நாலைஞ்சு தடவை அதுங்களுக்கு ஒரு விஷயத்தை புரியுற மாதிரி அதோட பாஷையில சொல்லித் தந்துட்டோம்னா சாகிற வரைக்கும் சரியாச் செய்யுமுங்க. என்ன... அதுங்களை தினமும் அக்கறையா பார்த்துக்கோணும். தினமும் குளிப்பாட்டி உடம்பு எல்லாம் தட்டிவிட்டு, நீவிவிடணும். ரெண்டு வேளையும் புல்லுக்கட்டு,  கோதுமைத் தவிடு, கொண்டக்கடலை கொடுக்கோணும். இந்தாப் பாருங்க...  பானு. 68 அங்குலம் உசரத்துக்கு சும்மா நெலுநெலுனு அம்சமா வளர்ந்து நிக்கிறா. இந்தச் சந்தையில இருக்கிற அத்தனை பசங்களுக்கும் (குதிரைகள்தான்) இவ மேலதான் கண்ணு.  ரெண்டரை வயசு பொம்பளைப் புள்ளையைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியதா இருக்கு. இவளோட பல், குளம்பு, காது, கண்ணுனு எல்லா அங்க லட்சணமும் ரொம்ப நல்லா இருக்குது. அதனால, இவளோட விலை 10 லட்சம் ரூபா. ஒரு ரூபா குறைவாக் கொடுத்தாலும் பானு கிடைக்க மாட்டா'' என்கிறார் பெருமிதத்துடன்.
மார்வான் குதிரை:
மார்வான் இனக் குதிரைகள், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்டவை. கம்பீரம்  இதன் சிறப்பு. மன்னர்கள் காலத்தில், போர்க்களத்தில்  பயன்படுத்தப்பட்டவை இந்தக் குதிரைகள். இன்றும் இந்திய ராணுவத்தின் குதிரைப் படை மற்றும் காவல் துறையில் மார்வான்களின் பங்கு மிக மிக அதிகம். இந்த வகைக் குதிரையின் விலை 50ஆயிரம் ரூபாய் தொடங்கி மூன்று லட்சம் வரை போகும். இந்தக் குதிரையும்  தம்பியின் பராமரிப்பிலுள்ளது.  'தமிழகத்துல இந்தக் குதிரைங்க குறைவாத்தான் இருக்குது. இதோட பின்னங்காலு வளைஞ்சி இருக்கும்.  அதனால, இந்தக் குதிரைங்க மேல சவாரி செய்றது ரொம்ப வசதியா இருக்கும். இந்தக் குதிரையோட எடை, தலைச்சுழி, மினுமினுப்பு இதை எல்லாம் வெச்சுத்தான் விலையை நிர்ணயிக்கிறோம்'' என்றார்.
ரேஸ் குதிரை:
ரேஸ் குதிரைகள் 'இங்கிலீஷ் பினாட்’ வகையைச் சேர்ந்தவை. இவை ஆங்கிலேயர்களால் நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை. இதில் அரேபியன் குதிரை, ஓல்டன் பர்க், தரோவ்பின்ட் என்று மூன்று வகைகள் உள்ளன. இந்தக்குதிரைகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரைக்கும் விற்கப்படுகின்றன.  குதிரையின் உரிமையாளர் சிவக்குமார், 'இந்த வகைக் குதிரைகளைத்தான் பந்தயங்களுக்குப் பயன்படுத்துவாங்க. உண்மையில் பல நேரங்களில் இந்தக் குதிரைகள் ஓடுவது இல்லை. வேகமாக நடக்கின்றன. அவ்வளவுதான்.  மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் நடக்கும். அதுதான் நமக்கு ஓடுவதுபோலத் தெரிகிற்து. இவை ஓட ஆரம்பித்தால் மணிக்கு 130 கி.மீ. வேகம்தான்... ''  ஆச்சர்யத் தகவல் சொன்னார்.
மட்டக் குதிரை:
   இந்த வகைக் குதிரைகளுக்கு நாட்டுக் குதிரை என்கிற இன்னொரு பெயரும் உண்டு. உயரம் குறைவாக இருக்கும். கழுதையைப் போன்ற தோற்றம் கொண்டவை. பொதி சுமக்கவும்  வண்டி இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.  இதன் விலை 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையாகும். கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்தக் குதிரைகள்  இந்தச் சந்தைக்கு வருகின்றன.
நாட்டியக் குதிரை:
    
இந்த வகைக் குதிரைகள்  விற்பனைக்கு இல்லை.  கண்காட்சிக்கு மட்டும் வைத்துள்ளார்கள். நான்கு கால்களிலும் சலங்கையைக் கட்டிவிட்டால்  'ஜல்ஜல்'  என்று ஜோராக நடனம் ஆடுகின்றன. இதன் உரிமையாளர் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தேசக்குமார். 'என்கிட்டே ராஜு, சுவான்னு ரெண்டு நாட்டியக் குதிரைங்க வளருது. குதிரை குட்டியாக இருக்கிறப்பவே ஆறு மாச காலத்துக்கு நடனப் பயிற்சிக் கொடுப்போம். குதிரைக்கு முன்னாடி நின்னு எங்க கால்ல சலங்கையைக் கட்டிட்டுக் கையைக் காலைத் தூக்கிட்டு ஆடுவோம். அதைப் பார்த்துப் பார்த்துக் குதிரையும் நாட்டியம் ஆடக் கத்துக்கும். கோயில் விசேஷம், கல்யாணங்களுக்கு இந்தக் குதிரைங்களை ஆடவைப்போம்'' என்றார்.
அந்தியூர் சந்தையில் இப்படிக் குதிரைகள் மட்டும் அல்ல; அரிய வகை மலை மாடுகள், நாட்டு மாடுகள், நீண்ட காதுகளைக்கொண்ட ஜமுனாபாரி ஆடுகள், குறும்பாடுகள் எனப் பலவகையான கால் நடைகளும் அணிவகுக்கின்றன!
- மு.கார்த்திகேயன்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்-கருப்பட்டி

கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம்  அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால்  இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. பனங்கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடுவோர் மிக சிலரே என்பதால், அதை தயாரிக்க கற்றுக்  கொண்டால் லாபத்தை  அள்ளிக்கொடுக்கும் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்தூரில் ‘கவித்தமிழ்Õ என்ற பெயரில் பனங்கருப்பட்டி  தயாரிக்கும் முருகேசன். அவர் கூறியதாவது: 10 ஆண்டுக்கு முன்பு, பாத்திரக்கடையில் வேலை பார்த்தேன். கள் இறக்க அனுமதி இல்லாததால், இங்குள்ள பனை மரங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந் தன. விவசாயிகளிடம் கேட்டு, மரம் ஏற ஆட்களை ஏற்பாடு செய்து பதநீர் இறக்கினேன். அதைக் காய்ச்சி கருப்பட்டியாக விற்றால் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நினைத்து அத்தொழிலில் இறங்கினேன்.tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

துவக்கத்தில் குறைந்த அளவு பதநீர் கிடைத்தது. புட்டுக் கருப்பட்டி என்ற சின்ன சின்ன கருப்பட்டிகளை வீட்டிலேயே தயாரித்து கிராமங்களில் தெரு தெரு வாக கூவி நானே விற்றேன். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருநாள் தெருவில் விற்றுக் கொண்டிருந்தேன்.அப்போது தலையில் இருந்த கூடையை கீழே இறக்க குனிந்தபோது  வேட்டி கிழிந்தது. மானத்தை காக்க வேட்டி தேவை. கருப்பட்டி விற்காததால் புதுவேட்டி வாங்க கையில் காசும் இல்லை. அருகிலுள்ள சர்வோதயா சங்கத் தில் 2 கிலோ கருப்பட்டியைக் கொடுத்து வேட்டி வாங்கினேன். பணத்தைக் கொடுத்துவிட்டு கருப்பட்டியை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, மீதமுள்ள  கருப்பட்டியை விற்பதற்காக சென்றேன்.

 

பின்னர், சர்வோதயா சங்கத்தில் பணத்தை கொடுத்து கருப்பட்டியைக் கேட்டபோது, ‘நீங்கள் கொடுத்த கருப்பட்டி விற்று விட்டதுÕ என்றனர். அடுத்து வ ரும்போது மொத்தமாக சப்ளை செய்யும்படி கூறினர். அடுத்த முறை கொடுத்தேன். கருப்பட்டியை பிளாஸ்டிக் கவரில் போட்டு, லேபிள் வைத்து மாவட்டத் திலுள்ள அனைத்து சர்வோதயா கடைகளுக்கும் சப்ளை செய்யும்படி கூறினார்கள். தினசரி 10 கிலோ அளவு தயாரித்த எனக்கு, தற்போது 500 கிலோ அளவுக்கு ஆர்டர் கிடைக்கிறது. ஆனால், 100 கிலோவுக்கு மேல் உற்பத்தி செய்யும் அளவு  பதநீர் கிடைப்பதில்லை. ஆள் பற்றாக்குறையும் உள்ளது. இவ்வாறு முருகேசன் கூறினார்.

முதலீடு எவ்வளவு?

மூலப்பொருட்கள்: 

பனை பதநீர், சுக்கு, மிளகு, திப்பிலி.

கட்டமைப்பு: 

பதநீர் காய்ச்ச, கருப்பட்டி பாகு அச்சில் ஊற்ற ஒரு அறை. உலர வைக்க, பேக்கிங் செய்ய மற்றொரு அறை. மூலதனச் செலவு: கட்டிட அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். கொப்பரை அல்லது அலுமினிய பாத்திரம் 4 கிலோ அளவுள்ளது ணீ600, அச்சுப்பலகை 6 அடி நீளம்  ரூ2000, உலர வைக்க 20 தட்டுக்கூடை ரூ1500, துடுப்பு, கரண்டி ரூ200, பேக்கிங் செய்ய எடை மெஷின் ரூ500 என கட்டமைப்புக்கு ரூ24,800 தேவை.

உற்பத்தி செலவு: 

தினசரி 100 கிலோ சுக்கு கருப்பட்டி தயாரிக்க 750 லிட்டர் பதநீர் வீதம், மாதம் 26  நாளில் 2,600 கிலோ பனை சுக்கு கருப்பட்டி தயாரிக்க  19,500 லிட்டர் பதநீர் தேவை. லிட்டர் ரூ10 வீதம் பதநீருக்கு மட்டும் மாதம் ரூ1.95 லட்சம், பிளாஸ்டிக் கவர் ரூ110, லேபிள் ரூ25, செலோ டேப், பார்சல்  பெட்டி, பேக்கிங் கயிறு உட்பட ரூ50. உற்பத்திக் கூலி தினசரி 5 பேருக்கு தலா ரூ150 வீதம், மாதம் ரூ19,500. இட வாடகை ரூ2,000 என உற்பத்திச் செலவுக்கு ரூ2.16 லட்சம் தேவை.

பதநீர் எங்கு வாங்கலாம்?

ஒரு லிட்டர் பதநீர் தோட்டங்களில் ரூ.10க்கு கிடைக்கும். மொத்த வியாபார கடைகளில் சுக்கு கிலோ ரூ255, மிளகு ரூ260, திப்பிலி ரூ650க்கு கிடைக்கும்.  பதநீர் போதிய அளவு கிடைக்காவிட்டால் கருப்பட்டி தயாரிக்கும் குன்னத்தூர், வேம்பாரை, தூத்துக்குடி, உடன்குடி, நாகர்கோவில், சிறுவலூர், வேலூர்  மாவட்டம் ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கும் கருப்பட்டியை வாங்கி வந்து, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பதநீரை ஊற்றி மீண்டும்  காய்ச்சி அதில் சுக்கு, மிளகு, திப்பிலி போட்டு சுக்கு கருப்பட்டியாக தயாரிக்கலாம். 

தயாரிக்கும் முறை 

கருப்பட்டி: அலுமினிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து 70 அல்லது 80 லிட்டர் பதநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பாகு ஆனவுடன் அடுப்பில்  இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். கொஞ்சம் ஆறிய பின்பு அச்சுப்பலகையில் ஊற்றினால், அரை மணி நேரத்தில் கட்டியாக மாறியிருக்கும். அச்சுக்கு ழியில் உள்ளவற்றை குச்சியால் நெம்பி எடுத்து, நன்கு ஆற வைக்க வேண்டும். 10 கிலோ கருப்பட்டி கிடைக்கும். பின்னர் பேக்கிங் செய்து விற்கலாம். சுக்கு கருப்பட்டி: பனங்கருப்பட்டி தயாரிப்பு முறையில் 70 அல்லது 80 லிட்டர் பதநீர் கொதிக்கும்போது 200 கிராம் சுக்கு, 75 கிராம் மிளகு, 50 கிராம்  திப்பிலி ஆகியபொடி கலவையை போட்டுக் கலக்கி கொதிக்க வைக்க வேண்டும். மற்றவை பனங்கருப்பட்டி தயாரிப்பு போலவே.

மாத லாபம் ரூ31 ஆயிரம்

தினமும் 100 கிலோ கருப்பட்டி வீதம் உற்பத்தி செய்து மாதம் சுமார் 2600 கிலோ தயாரிக்க முடியும். கருப்பட்டி ஒரு கிலோ ரூ90க்கும், பனம் சுக்கு கருப்ப ட்டி ரூ100க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மாத உற்பத்திச் செலவு ரூ2.16 லட்சம். விற்பனை வருவாய் சராசரியாக கிலோவுக்கு ரூ95 வீதம், மாத லாபம்  ரூ31 ஆயிரம்.

பனங்கற்கண்டு தயாரிக்கலாம்

100 லிட்டர் பனை பதநீரை கொப்பரையில் ஊற்றி 110 டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய கொப்பரையை மூடி நிலத் துக்கடியில் புதைக்க வேண்டும். 40 நாள் கழித்து கொப்பரையை வெளியே எடுத்தால் உள்ளே பதநீர் பனங்கற்கண்டாக மாறியிருக்கும். 100 லிட்டர் பதநீருக்கு  5 கிலோ பனங்கற்கண்டு கிடைக்கும். கிலோ ரூ300 முதல் ரூ500 வரை விற்கலாம்.

விற்பனை வாய்ப்பு

புட்டு கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி தயாரிப்பு தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு கெடாது. சுக்கு கருப்பட்டிக்கு அதிக வரவேற்பு உள்ளது. 100 கிராம், 200  கிராம் பாக்கெட்களில் தின்பண்டமாக விற்கலாம். தமிழகத்திலுள்ள சர்வோதய சங்கங்கள், கடலூர் பனை பொருள் தயாரிப்பு நிலையம் மற்றும் தமிழகம்  உள்ளிட்ட கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள், முக்கிய விற்பனை நிலையங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.  வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சப்ளை குறைவாக இருப்பதால் கிராக்கி உள்ளது.  

மருத்துவ குணம்

சீரகத்தை வறுத்து சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்தைச் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
25 கிராம் குப்பைமேனி கீரையுடன் 25 கிராம் கருப்பட்டி எடுத்து வாணலியில் வதக்கி சிறு துண்டுகளாக சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளி  குணமாகும். இஞ்சி டீயிலும் இதைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.



கருப்பட்டி கதை கேளூ...!



தற்போது 20, 30 வயதுகளிலேயே... Ôசர்க்கரை வியாதி வந்துவிடுமோÕ என்கிற
 பயத்துடனேயே திரிகிறார்கள் பலரும். 30 வயது கடந்த நிலையிலேயே பலரும்
 அந்த நோய்க்கு ஆட்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏன்... 
குழந்தைகள் கூட இப்போதெல்லாம் சர்க்கரை நோய் (டைப் 2) தாக்குதல்
 காரணமாக பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது! ஆனாலும்கூட
 கருப்பட்டியின் மகத்துவத்தை இன்னமும் உணராமல்தான் இருக்கிறார்கள்
 நம்மவர்கள்!


கருப்பட்டி பயன்படுத்துவது ஒரேயடியாகக் குறைந்து போக... அதன் உற்பத்தியும்
 பெருமளவு குறைந்து விட்டது. என்றாலும்... பாரம்பரியத்தை மறக்காத
 பகுதிகளில் கருப்பட்டி உற்பத்தி சுறுசுறுப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு
 கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

நாலரை லட்சம் பனை மரங்கள்!
வட்டன்விளை கிராமத்தைச் சேர்ந்த பனைபொருள் உற்பத்தியாளர்
 ராமச்சந்திரனை, அவரது பனை மரத் தோப்பில் சந்தித்தபோது...இருபது 
வருஷங்களுக்கு முன்ன சுமார் 790 ஹெக்டேர் பரப்பளவுல, சுமார் 4 லட்சத்து 50
 ஆயிரம் பனைமரங்கள் கற்பகவிருட்சமா பயன் தந்திட்டிருந்துச்சு. உள்ளூர் 
ஆட்கள் தவிர, திருநெல்வேலி, கன்னி-யாகுமரி மாவட்டங்கள்ல இருந்தும்
 பனைஏறும் தொழிலாளிகள் வந்து தங்கியிருந்து, மரம் ஏறுவாங்க. ஒரு
 நாளைக்கு ஒவ்வொரு மரத்துலயும் மூணு தடவை ஏறுவாங்க. அந்தக் 
காலத்துல ‘கள்‘ இறக்கறதுக்கு அனுமதி இருந்ததால... கள் வியாபாரம் 
அமோகமா நடந்துச்சு. பனை ஏறுற தொழிலை மட்டுமே நம்பி
 கிட்டத்தட்ட ரெண்டாயிரம் குடும்பங்கள் இருந்துச்சு. திரும்பிய
 திசையெல்லாம் கருப்பட்டித் தொழில் கமகமத்த காலம் அது என்று
 பனை பெருமை பேசினார்.

Sunday, November 3, 2013

மண்ணை நம்பி எங்க பொழப்பு!


வில்லியனூர்

ண்டாள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். குழந்தைகளைப் படிக்கவைக்க முடியாத அளவுக்கு வறுமை ஆண்டாளை வாட்டி வதைத்து இருக்கிறது. இவை எல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வில்லியனூரைச் சேர்ந்த ஆண்டாளுக்கு நடந்த சோகமான ஃப்ளாஷ்பேக்குகள். ஆனால், இப்போது அவருடைய வாழ்க்கை மிக நன்றாக இருக்கிறது. இதற்குக் காரணம் மண்தான்.
களிமண்ணில் இருந்து சுடுபொம்மைகள் செய்து விற்கும் தொழில்தான் ஆண்டாளைக் கைதூக்கிவிட்டுக் கரைசேர்த்து இருக்கிறது. இந்தச் சுடுபொம்மைத் தொழிலில் ஈடுபட்டு உள்ள வர்கள்குறித்து  வாய்ஸ் ஸ்நாப்பில் பதிவுசெய்து இருந்தார் 'என் விகடன்’ வாசகி விசாலாட்சி. அவர்களில் சிலரைச் சந்தித்தபோது, ''இந்தத் தொழிலுக்குப் பெரிதாக மூலதனம் தேவை இல்லை. மூளை இருந்தால் போதும்'' என்கிறார் ஐந்து ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுதா.
''நாங்க மாவட்டத் தொழில் மையம் மூலமா இந்தக் கலையைக் கத்துகிட்டோம், அதுக்கப் புறம் 20 பேர் ஒண்ணாசேர்ந்து 'ஓம் சக்தி’ என்ற பெயர்ல குழுவா இயங்க ஆரம்பிச்சோம். எல்லா ரும் எட்டாவது, பத்தாவது படிச்சவங்கதான். ஆர்வமும் அனுபவமும்தான் எங்களை வாழவைக்குது. எங்களுக்குத் தேவையான களிமண்ணை எங்க ஊர் பக்கத்துல இருக்கிற சங்கராபரணி ஆத்துல இருந்து எடுத்துக் கிறோம்.
அலங்காரப் பொருட்கள், ஜாடி வகைகள், கலைப் பொருட்கள்னு விதவிதமாத் தயாரிக்கிறோம். களிமண் சிற்பத்துக்கு மரச் சிற்பம், கல் சிற்பம், வெண்கலச் சிற்பம் மாதிரி பெயின்ட் அடிப்போம். எல்லாப் பொருட் களையும் நாங்க கையாலதான் செய்வோம். மெஷின்ல செஞ்சா சிற்பம் அவ்வளவு முழுமையா வராது. நுணுக்க மான வேலைப்பாடுகளையும் கொண்டுவர முடியாது.
ஆயுத பூஜை, கார்த்திகை தீபம், பொங்கல் போன்ற விசேஷ சமயத்துலதான் வேலை அதிகமா இருக்கும். மற்ற நாட்கள்ல வெளியூர் ஆர்டர்களுக்கு ஏற்ற மாதிரி வேலை செய்வோம்'' என்கிறார் சுதா.
''புதுவை போன்ற நகரங்களில் இருக்கும் வணிக வளாகங்களில் சீனா, கொரியா போன்ற நாடுகளின் பொருட்கள் விற்பனை ஆகுது. ஆனா, இது மாதிரியான இந்தியப் பாரம்பரியப் பொருட்களுக்குனு தனியா ஒரு கடைகூட இல்லை. மக்கள் மண் பானைகளை வாங்கணும்னா ஊர் முழுக்க அலைஞ்சு திரிஞ்சு ரோட்டுக் கடைகளில் தான் வாங்க வேண்டியதா இருக்கு'' என்று வருத்தத்துடன் கூறும் சித்ரா தொடர்கிறார்.
'' 'கலையில் ஈடுபடுறவங்க எந்த ஒருநிலை யிலேயும் நம்பிக்கையை இழக்க மாட்டாங்க, எப்படியாச்சும் வாழ்ந்து காட்டுவாங்க’னு எங்களுக்கு ஆரம்பத்தில் பயிற்சி தரும்போது சொன்னாங்க. அது இப்ப எங்க வாழ்க்கையிலேயும் உண்மையா நடக்குது. வீட்டில் எந்த ஒரு கஷ்டம்னாலும் இங்கே வந்து வேலையை ஆரம்பிச்ச உடனே எல்லாக் கஷ்டங்களையும் மறந்துடுவோம். மன நிம்மதியோட வாழத் தேவையான பணமும் கிடைக்குது. அதைவிட முக்கிய மானது கைத்தொழில் ஒன்று தெரி யும் என்ற நம்பிக்கை. அது எங்களை  பலப்படுத்துது'' என்கிறார்!

Monday, September 16, 2013

கும்பகோணம் வெற்றிலை

கும்பகோணம் வெற்றிலை என்று சொன்னாலும், வெற்றிலை எல்லாம் பயிரிடபடுவது என்பது அதன் சுற்று வட்டார பகுதிகளில்தான், அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு என்று பல ஊர்களில் இருந்து கும்பகோணம் வருகிறது !

வெத்தலை போட்ட ஷோக்குல......நான் கப்புன்னு குத்துனே......!!

கரும் பச்சை என்பது ஆண் வெற்றிலை...... இளம் பச்சை என்பது பெண் வெற்றிலை !




வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது, அது கொடி போல படர்வது, வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வது இதனால்தான் ! வெற்றிலை என்று நாம் சொன்னாலும் அதன் பெயர் காரணம் என்னவென்று தெரியுமா ? எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும், இதனால் வெற்று இலை என்பது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது. இது வளர்வதற்கு தண்ணீர் ஜாஸ்தி தேவை, வெற்றிலையைப் பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டிப் பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையில் கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும், இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். சிலர் அதில் பின்புறம் இருக்கும் நரம்புகளைப் பார்த்தும் ரகம் பிரிப்பதுண்டு. ஒரு வருடத்தில் நன்கு வளரும், பின்னர் மூன்று வருடங்களுக்கு வெற்றிலையை பறிக்கலாம் !









வெற்றிலை கொடிக்கு பராமரிப்பு மிகவும் தேவை, அது கொடி போல வளர ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு கொடியையும் கட்டிக்கொண்டே வர வேண்டும். அது நன்கு வளர்ந்தவுடன் நீங்கள் வெற்றிலையை கிள்ள ஆரம்பிக்கலாம். சிலர் வெற்றிலையை ஒரு மரத்துடன் கட்டி வளர்த்து வருவார்கள், இதனால் மரம் வளர வளர வெற்றிலைக்கு ஒரு ஊன்றுகாளாய் இருக்கும். ஒரு சிலர் வெற்றிலையை பாத்தி கட்டி வளர்ப்பார்கள், சிலர் திராட்சை கொடி போல படர விடுவார்கள். வெற்றிலை வளர்ப்பது என்பது எளிது, ஆனால் பறிப்பது என்பது மிகவும் கடினம். அது வளர ஆரம்பிக்கும்போது கீழே எளிதாக பறிக்கலாம், ஆனால் மேலே செல்ல செல்ல பறிப்பது என்பது கடினமாக இருக்கும். இந்த வெற்றிலையில் இரண்டு வகை உண்டு..... கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை; மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை. இதையே வேளாண்மை அறிவியல்படி பார்த்தால்..... கற்பூரி மற்றும் அல்லது எஸ்.ஜி.எம் 1, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா வகைகள்.

வெற்றிலை கொடியை மூங்கிலின் மேல் படர விடுவது ஒரு வகை....

வெற்றிலை கொடியை மரத்தின் மீது படர விடுவது ஒரு வகை...

வெற்றிலை கொடியை பந்தல் போட்டு படர விடுவது ஒரு வகை....

அது என்ன கும்பகோணம் பகுதியில் மட்டும் வெற்றிலை அவ்வளவு பேமஸ் என்று கேட்பவர்களுக்கு........ வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை, இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது என்கிறார்கள் கும்பகோணம் மக்கள்.

 









இந்த கட்டுரை மற்றும் படம் சுட்டது நன்றி :http://www.kadalpayanangal.com

இரகங்கள் : கற்பூரி மற்றும் அல்லது எஸ்.ஜி.எம் 1, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா வகைகள்.
 மண் : வடிகால் கொண்ட வண்டல் மண் கலந்த களிமண், களர் மற்றும் உவர் மண் உகந்தவை அல்ல.
அகத்தி விதைப்பு : தை - பங்குனி (சனவரி - மார்ச் 2) ஆனி - ஆவணி (சூன் – ஆகஸ்ட்)
கொடி நடும் பருவம் 1) பங்குனி – சித்திரை (மார்ச் - மே), 2) ஆவணி – புரட்டாசி (ஆகஸ்ட் - அக்டோபர்)
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு பண்படுத்தி ஒரு மீட்டர் அகலதம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். நீளம் வயலின் அமைப்புக்கேற்ப ருக்கலாம். பாத்திகளின் உயரம் 0.5 மீட்டர் இருத்தல்வேண்டும். மேட்டுப்பாத்திகளில் இரட்டை வரிசைகளாக அகத்தி விதைகளை 30 செ.மீ இடைவெளிகளில் விதைக்கலாம். ஓரங்களில் வாழை கட்டைகளை நடவு செய்யலாம்.
பயிர்இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு 
(கிலோ)
தழை
மணி
சாம்பல்
10:26:26
யூரியா
சூப்பர் பாஸ்பேட்
வெற்றிலைஅடியுரமாக
37.5
100
50
193
40
313
மேலுரம்
(3 தவணைகளாக)
112.5
0
0
0
245
0
விதையும் விதைப்பும்
விதைக்கொடிகள் : வெற்றிலைக் கொடிகளைப் பட்டங்களில்  45 செ.மீ இடைவெளியில்  இரண்டு வரிசைகளில் நடவு செய்யவும். வரிசைக்குள் இடைவெளி மாறுபடும் விவரம் பின்வருமாறு
வரிசைக்குள் இடைவெளிஏக்கருக்குஎக்டருக்கு
ஒரு கொடிஇரட்டைக்கொடிஒரு கொடிஇரட்டைக்கொடி
20 செ.மீ20,00040,00050,0001,00,000
30 செ.மீ (1 அடி)12,00024,00030,00060,000
45 செ.மீ (11/2 அடி)9,00018,00022,50045,000
விதைக்கொடி நேர்த்தி
  • விதைக்கொடிகளை, தாய் கொடியின் நுனியிலிருந்து முதல் மூன்று அடி வரை நறுக்கி, அதனை மூன்று துண்டுகளாக்கி நடவு செய்யவும். விதைக்கொடிகளில் 4-5 கனுக்குள் இருப்பது உகந்தது.
  • விதைக்கொடிகளை நடும் முன் 6 பொட்டலம் அசோஸ்பைரில்லம் கொண்ட சாணக்குழம்பில் அடிப்பகுதிகளை 10 நிமிடம் ஊறவைத்து நடுவதன் மூலம் வேர்கள் துரிதமாக வளரும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
  • கொடிகள் நட்ட 40 நாட்களுக்குப்பிறகு 20 நாட்கள் இடைவெளியில் கொடிகளை வாழை நார் கொண்டு கட்டவும்.

  • நட்ட 50 ஆம் நாள் தொழு உரம் 3-5 டன் இடவும்.
  • தொழு உரத்துடன், இரசாயன உரங்களை 150:100:50 கிலோ / எக்டர் என்ற அளவில் இடவேண்டும். மணி மற்றும் சாம்பலை சத்துக்களை அடியுரமாக இடவேண்டும். தழைச்சத்தை 4 தவணைகளாக 45 நாட்கள் இடைவெளியில் இடவும். முதல்  தவணையை அடியுரமாக தொழு உரத்துடன் கொடுக்கவும்.

  • 150 கிலோ தழைச்சத்தை சம அளவில் யூரியா மற்றும் தொழு உரம் வாயிலாகக் கொடுக்கலாம்.
  • தழைச்சத்தை வேப்பம் புண்ணாக்கு கலந்து யூரியாவாக இருப்பின், 100 கிலோ தழைச்சத்து / எக்டர்  போதுமானது.

  • அகத்திச் செடிகளை 2 மீட்டர் உயரம் வரை  ஒரு தண்டாக வளர்த்து நுனிகளைக் கிள்ளுதல் வேண்டும்.
  •  பொதுவாக கொடிகள் வருடத்தில் 3 மீட்டர் வரை வளரும். கொடிகள் குறுக்கு விட்டங்கள் உயரம் வந்தவுடன், கீழ் இறக்கி, மடித்துக் கட்டுவதன் மூலம், தூர்களின் எண்ணிக்கை கூடி மகசூல் கூடும்.

  • கொடிகள் நட்ட 5ஆம் மாதம், டிரையா காண்டனால்  என்ற பயிர் ஊக்கியை அரை மிலி / லிட்டர் (500 பிபிஎம்) என்ற அடர்த்தியில், மாதத் தவணைகளில் மூன்று முறை தெளித்து மகசூலைக் கூட்டலாம்.
  • சிங்சல்பேட் 5 கிராம்/ லிட்டர் என்ற அடர்த்தியில் 20 நாட்கள் இடைவெளியில் தெளித்து வெற்றிலையின் மகசூலைக் கூட்டலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அகத்திக் காலில் பூச்சிக் கட்டுப்பாடு
அகத்தியைத் தாக்கும்  தண்டு துளைப்பான்கள், சாறு உறிங்சும் பூச்சிகள் மற்றும் இலைத் துளைப்பான்கள் நன்கு கட்டுப்படுத்த அகத்தி விதைத்த 20ம் நாள் ஒரு முறையும் பிறகு 50ம் நாள் ஒரு முறையும் அகத்திக் கால்களை ஒட்டடி கார்போபியூரான் குருணை மருந்து பத்துப் பட்டங்களுக்கு (சுமார் 2000 தானங்கள்) போதுமானது.
குருணை மருந்து இட்டபின் 40 நாட்கள் வரை அகத்தித் தலைகளை தீவனமாகவோ வீட்டு உபயோகத்திற்கோ கண்டிப்பாகப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால், குருணை மருந்திக் எஞ்சிய நஞ்சு 40 நாட்க்ள வரை அதிகமாக இருக்கும். எக்காரணம் கொண்டும். குருணை மருந்துகளை வெற்றிலைக் கொடி நடவு செய்த பிறகு இடக்சகூடாது. (அல்லது) வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ மண்ணில் இட்டு மாதம் ஒரு முறை வேப்பம் கொட்டைச்சாறு 5 சதம் (அல்லது)வேப்பம் எண்ணெய் 2 சதம், காதி கோபுர சோப்புடன் (ஒரு கிராம் / லிட்டர்) கலந்து தெளிப்பதினால்  தண்டு துளைப்பானின் சேதாரம் குறையும்.
செதில்பூச்சி மற்றும் மாவுப்பூச்சி
  • பூண்டுச்சாறு 2 சதம், வேப்பெண்ணெய் 2 சதம், காதி கோபுர சோப் / டீப்பால் 1 மில்லி / லிட்டர் 15 நாள் இடைவெளியில் ஒரு முறை (அல்லது) குளோரிபைரிபாஸ்  2 மில்லி / லிட்டர்.
சிவப்பு சிலந்தி
  • நனையும் கந்தகம் 2 கிராம் / லிட்டர் (அல்லது) ஈதியான் 50 இசி 1 மில்லி / லிட்டர் பூச்சி மருந்துகளான குளோரிபைரிபாஸ் (அல்லது) ஈதியான் தெளித்த பின் 21 நாட்கள் இடைவெளியிட்டு இலைகளைப் பறிக்கவும்.
வேர் அழுகல் நோய்
  • சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட சிறுகமணி - 1 என்ற வெற்றிலை இரகம் வேர் அழுகல் நோயை எதிர்த்து வளரக்கூடிய தன்மை கொண்டது. ஆதலால், சிறுகமணி - 1 என்ற வெற்றிலை இரகத்தைப் பயிரிடுவதன் முலும் வேர் அழுகல் நோழய வெகுவாகத் தடுக்கலாம்.

  • கொடிக்கால்  நடவு செய்யும் பொழுது, நோய்த் தாக்காத கொடிகளில் இருந்து, விதைக்கொடிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

  • விதைக் கொடிகளை நடுமுன், போர்டோ மருந்துக் கலவையில்ஈ 5 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நடவேண்டும். இதற்கு 0.25 சத போர்டோக்கலவை தயாரித்து, இத்துடன் ஸ்ட்ரெப்டோசைக்ளின் மருந்தை ஒரு லிட்டர் போர்டோக்கலவைக்கு 0.5 கிராம் என்ற அளவில் கலக்கவேண்டும்.
  • இந்நோயின் பூசண வித்துக்கள், நோய் தாக்கிய கொடிகளிலும், இலைகளிலும் நிறைந்துள்ளதால் ஆதலால் நோய் தாக்கிய கொடிகளை உடனே அப்புறப்படுத்தி, எரித்திவிடவேண்டும். இதனால் மற்ற கொடிகளுக்கு நோய் பரவுவதைக் குறைக்கலாம்.

  • நோய் தாக்கும் காலங்களான அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம்  வரை ஒவ்வொரு மாதமும் 0.25 சத போர்டோக்கலவை தயார்  செய்து பட்டங்களில் இரு மாதமும் 0.25 சத போர்டோக்கலவை தயார் செய்து பட்டங்களில் இரு வரிசைகளுக்கு இடைவெளியில் பார் வாங்கி வேர் நனையும்படி மண்ணில் ஊற்றவேண்டும். போர்டோக் கலவை தயார் செய்ய இயலாவிட்டால், தாமிர பூசணக் கொல்லி மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கலந்து மண்ணில் பார் வாங்க ஊற்றவேண்டும்.
  • வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா என்ற எதிர் பூசணத்தையும் பயன்படுத்தலாம். ஏக்கருக்கு ஒரு கிலோ ட்ரைக்கோடெர்மா பொடியை நன்கு மக்கிய 100 கிலோ தொழு உரம்  மற்றும் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் நன்றாகக் கலந்து மூன்று மாதங்கள் இடைவெளியில் கொடியைச் சுற்றி மண்ணில் இடவேண்டும்.

  • ஒரு ஏக்கருக்கு நிழலில் உலர்த்திய எருக்கந்தலை அல்லது வேப்பந்தலைகளை 1.5 டன்ட என்ற அளவில் இடவேண்டும்.
  • கடலைப் புண்ணாக்கை அதிகமாக வெற்றிலைக்கு அல்லது வேப்பந்தலைகளை 1.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

  • மழை மற்றும் குளிர் காலங்களில் பட்டங்களில் நன்கு காயவிட்டு கொடிக்கால் சுகாதாரத்தைப் பராமரிக்கவேண்டும்.
விதைக்கொடி அழுகல்நோய்
  • விதைக்கொடிகளை நடவுக்குத் தேர்வு செய்யும் போது, நோயற்ற நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்களில் இருந்து விதைக் கொடிகள் எடுக்கவேண்டும்.

  • 0.25 சத போர்டோக் கலவையுடன் 1 லிட்டருக்கு 0.5 கிராம் ஸ்ரெப்டோ சைக்கிளின் என்ற விகிதத்தில் கலந்து விதைக்கொடிகளை இக்கலவையில் 5 நிமிடம் ஊறவைத்து பிறகு நடவேண்டும்.
  • விதைக்கொடிகளை நடுமுன், எதிர்ப்பூசணமாக ட்ரைக்கோடடெர்மாவை (ஏக்கருக்கு ட்ரைக்கொடெர்மா) 1 கிலொ + மக்கிய தொழு உரம் 100 கிலோ  + வேப்பம் புண்ணாக்கு20 கிலோ ) மண்ணில் இடவேண்டும்.
பாக்டீரியா இலைக்கருகல் மற்றும கருந்தாள் நோய்
  • இந்நோயினால், அதிகம் பாதிக்கப்படாத சிறுகமணி - 1  என்ற வெற்றிலை இரகத்தைப் பயிர் செய்யலாம்.
  • நோய் தாக்காத வெற்றிலைத் தோட்டங்களில் இருந்து விதைக்கொடிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

  • நோய் தாக்கப்பட்ட  கொடிகள் மற்றும் இலைகளைச் சேகரிதது வயலுக்கு வெளியே கொண்டு எரித்துவிடவேண்டும்.
  • நோய் தோன்றியவுடன் ஸ்ரெப்டேதசைக்கிளின் கலந்த 0.25 சத போர்டோக்கலவையை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும். போர்டோக்கலவையை தயாரிக்க இயலவில்லையெனில் தாமிர பூசணக் கொல்லி மருந்து ஒன்ளை ஒரு லிட்டருக்கு 2.5 கிராமுடன், பிளாஸ்டோமைசின் அல்லது ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 0.5 கிராம் கலந்தும் தெளிக்கலாம். கிடங்குப் பயிராக இருந்தாலும் பாத்திப் பயிராக இருந்தாலும் கொடி இறக்கிக் கட்டும் பயிராக முன்பும், கொடி இறக்கிக் கட்டிய ஒரு தடவை மருந்து தெளிக்கவேண்டும்.
தீச்சல் நோய்
நோய் தாக்கிய இலைகளைப் பறித்து வயலுக்கு வெளியே கொண்டு வந்து எரித்துவிடவேண்டும். நோயின் அறிகுறி தென்பட்டவுடன் திரம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வீதம் கலந்தோ அல்லது 0.25 சத போர்டோக்கலவையையோ 15 நாட்கள் இடைவெளியில்  3 முறை தெளிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் வெற்றிலை கிள்ளிய பிறகே மருந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
கொடிகள் 5 மாதங்கள் முடிந்தவுடன் மூன்று வார இடைவெளியில் வெற்றிரலையைக் கிள்ளலாம். 75-100 இலட்சம் இலைகள் / எக்டர் / வருடம்.

Wednesday, September 4, 2013

எந்த ஊரில் என்ன வாங்கலாம்

உலகின் மிகப் பெரிய பனியன் சந்தை திருப்பூர். தரம், வடிவமைப்பு உள்பட எல்லாவற்றிலும் சர்வதேச எதிர்பார்ப்பிற்கு  தன்னை அப்டேட் செய்து கொண்டிருப்பதால் இந்த பிஸினஸ் ரேஸில் வீழ்ந்திடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது திருப்பூர் குதிரை.
இந்த பனியன் பிரதேசத்தில் 'காதர் பேட்டைஎன்றொரு ஏரியா உங்களுக்குத் தெரியுமா? திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர்புறம் இருக்கும் இந்த காதர் பேட்டை 'செகண்ட்ஸ் பனியன்என்றழைக்கப்படும் சிறிய அளவிலான டேமேஜ்களுடைய பனியன் துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் ஏரியா. இந்த பேட்டையின் ஓராண்டு டேர்ன் ஓவர் சுமார் சில நூறு கோடிகளைத் தாண்டுமாம்.  
அப்படி என்னதான் நடக்கிறது காதர் பேட்டையில்? என்று இறங்கி அலசினோம்.  பிளாட்ஃபார்ம் கடையில் ஆரம்பித்து மெகா ஷோரூம்கள் வரை இந்த செகண்ட்ஸ் துணிகளை விற்பனை செய்யும் கடைகள் அறுநூறுக்கும் மேல் இருக்கின்றன.
எப்படி உருவானது இந்த காதர் பேட்டை என்பதுகுறித்து சொன்னார் 'திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் ஓனர்ஸ் அசோசியேஷன்துணைத் தலைவரான நாகராஜ். 
''1965-ம் ஆண்டுவாக்குல இந்த காதர் பேட்டை உருவாச்சு. திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகளுக்கு பல நாடுகள்ல இருந்து டி-ஷர்ட், பனியன், ஷார்ட்ஸ், நைட் பேன்ட்ஸ் மாதிரியான துணிகளை தயாரிச்சு தரச் சொல்லி ஆர்டர் கொடுப்பாங்க. ஒரு லட்சம் பீஸ் ஆர்டர் கிடைச்சதுன்னா, ஒரு லட்சத்து பத்தாயிரம், இருபதாயிரம்னு தயாரிப்பாங்க கம்பெனி ஓனர்கள். காரணம், சில துணிகள் மெஷின்ல சிக்கி கிழிஞ்சிடும், மெஷின்ல உள்ள ஆயில் பட்டுடும். இது மாதிரி பிரச்னைக்குள்ளான பீஸை ஏற்றுமதி பண்ண மாட்டாங்க.

இப்படி கழிக்கப்பட்ட துணிகளை குறைஞ்ச விலையில மொத்தமா வாங்கிட்டு வந்து அப்படியேயும் அல்லது ஓட்டை விழுந்த இடத்துல பேட்ச் ஒர்க் பண்ணியும், ஆயில்பட்ட இடத்தை வாஷ் பண்ணியும் விற்பனை செய்யுறதுதான் காதர் பேட்டை பிஸினஸ் ஸ்டைல்'' என்றார் நாகராஜ்.
''நல்ல குவாலிட்டியான டி-ஷர்ட்டை ஷோரூம்ல போய் வாங்கினா ஐநூறு, அறுநூறு ரூபா சொல்லுவாங்க. ஆனா, அதே டி-ஷர்ட் சின்னதா ஒரு ஓட்டையோட இருக்குதுன்னா, இந்த காதர் பேட்டையில வெறும் முன்னூறு ரூபாய்க்கு கிடைக்கும். குழந்தைகளுக்கான ஜட்டி 10, 15 ரூபாயில் ஆரம்பித்து, பெரியவர்களுக்குத் தேவைப்படுகிற துணிகள் வரை மிகக் குறைந்த விலையில் இங்கு வாங்கிவிடலாம். தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் சமயங்களில் புதுத் துணிகள் பிஸினஸுக்கு இருக்கிற வரவேற்புக்கு நிகரான டிமாண்ட் இங்கேயும் இருக்கும்'' என்றும் சொன்னார் அவர்.
''காதர் பேட்டையில வெறும் சில்லறை விற்பனைகள் மட்டுமல்ல, மொத்தமா கொள்முதல் பண்ணிட்டு போயி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள்ல விற்கிற பிஸினஸையும் ஆயிரக்கணக்கான ஆளுங்க பண்ணிட்டிருக்காங்க'' என்கிறார்கள் இங்கு கடை நடத்தும் வியாபாரிகள்.
இந்த செகண்ட்ஸ் துணிமணிகளை நம் வியாபாரிகள் வாங்கிச் செல்வது ஒருபக்கமிருக்க,  சமீப காலமாக வெளிநாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெரிய அளவில் வாங்கிச் சென்று, நைஜீரியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் அதிக விலை வைத்து விற்கிறார்களாம். ''இதனால் உள்ளூர்க்காரர்களின் வியாபாரம் கெடுவதோடு, அரசாங்கத்தின் வருமானமும் குறைகிறது. முதலில் இவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்'' என்கிறார்கள் செகண்ட்ஸ் வியாபாரிகள்.
அடுத்தமுறை திருப்பூர் போனால் காதர் பேட்டைக்குப் போக மறக்காதீர்கள்!
- எஸ்.ஷக்தி,
படங்கள்: வி.ராஜேஷ்
(நாணயம் விகடன் இதழில் இருந்து)


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites