இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label குங்குமம் செய்வது எப்படி. Show all posts
Showing posts with label குங்குமம் செய்வது எப்படி. Show all posts

Monday, June 25, 2012

குங்குமச்சிமிழ் செய்வது எப்படி

தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற சுப நாட்கள் மட்டுமல்லாமல் எந்த நாளாக இருந்தாலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் தருவது மனநிறைவைத் தரும். குங்குமம் நெற்றிக்கு அழகு என்றால், அதை அலங்காரமான சிமிழில் வைத்து தருவது கண்ணுக்கு அழகு! அந்தக் குங்குமச்சிமிழையும் ஆர்டர் எடுத்து செய்து கொடுத்தால் அது நல்ல பிசினஸுக்கு அழகு. .

என்னென்ன தேவை?

உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்யப்பட்ட மரப்பெட்டிகள் (கார்ப்பென்டரிடம் கேட்டு செய்து வாங்கலாம். மரப்பெட்டி பிடிக்காதவர்கள் திக்கான அட்டையில் நீங்களே வெட்டி சின்ன பாக்ஸ் செய்து கொள்ளலாம்), டெக்ஸர் வொயிட் அல்லது பிரெஞ்ச் சாக் பவுடர் மற்றும் வொயிட் கம், மெட்டாலிக் கலர்கள் (காப்பர் மற்றும் கோல்டன் யெல்லோ), பெயின்ட் பிரஷ், குந்தன் ஸ்டோன் மற்றும் கண்ணாடி, கெமிக்கல் கிளே (எம்சீல்), வார்னிஷ்.

எப்படிச் செய்வது?


  •   மெஹந்தி போடுவதற்கு கோன் செய்வது போல பால் கவர் அல்லது பாலித்தீன் கவரில் கோன் செய்து கொள்ளவும். அதில் டெக்ஸர் வொயிட்டை நிரப்பவும். அல்லது பிரெஞ்ச் சாக் பவுடருடன் பெவிகால் கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கோனில் நிரப்பவும்.
  •  மரப்பெட்டி மேல் கோன் மூலம் டிசைன்கள் வரைந்து மூன்று, நான்கு மணிநேரம் காயவிடவும்.
  •  பெட்டி முழுவதும் மெட்டாலிக் காப்பர் மற்றும் கோல்டன் யெல்லோ கலர்களை மாற்றி மாற்றி அடித்து 10 நிமிடம் காயவிடவும்.
  •  எம்சீல் பாக்கெட்டில் இருக்கும் இரண்டு நிற எம்சீலை நன்றாகப் பிசைந்து, அதை பாக்ஸின் மேல்புறம் உங்களுக்குப் பிடித்த டிசைனில் ஒட்டி காயவிட்டு கலர் அடிக்கவும்.
  •  பாக்ஸில் பெவிகால் தடவி அதன் மீது குந்தன் ஸ்டோன் மற்றும் கண்ணாடிகளைப் பதித்து அழகுபடுத்தவும்.
  •  கடைசியாக வார்னிஷ் அடித்து 12 மணிநேரம் காயவிட்டால் எத்தனை நாள் ஆனாலும் பளபளப்பு குறையாமல் இருக்கும். குங்குமம், விபூதி, சந்தனம் போட்டுவைக்க அட்ராக்டிவான பாக்ஸ் தயார்.
  •  இதையே கொஞ்சம் பெரிய சைஸில் செய்து ஜுவல் பாக்ஸாகவும் பயன்படுத்தலாம்.

��பொதுவாக மீடியம் சைஸ் பாக்ஸ் செய்ய 100 ரூபாய் செலவாகும். ஆனால் இவற்றை 150 ரூபாய்க்கு விற்கலாம். ஹெவி வொர்க் செய்த பாக்ஸ்களை அவற்றின் தரத்துக்கு ஏற்ப விலையை ஏற்றி விற்கலாம். அதிக ரிஸ்க் இல்லாத, ஈஸியாக செய்யக்கூடிய வேலை இது. ஃப்ரெண்ட்ஸ் மூலமாகவும் ஃபேன்ஸி ஸ்டோர்கள் மூலமாகவுமே கஸ்டமர்கள் கிடைத்துவிடுவதால் இதற்கு எப்போதும் மார்க்கெட் உண்டு�� .

Thursday, June 14, 2012

குங்குமம் செய்வது எப்படி

தேவையானவை:

1)
அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் --ஒரு கிலோ
2)
எலுமிச்சம் பழச்சாறு---------------------------------1 1/2 லிட்டர்
3)
வெங்காரம்-------------170 கிராம்
4)
சீனாக்காரம்------------65-70 கிராம்
5)
நல்லெண்ணை--------100 கிராம்
6)
ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர்----------வாசனைக்கு தேவையான சில துளிகள்

கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதனுடன் கலக்கவும் .
அத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்

நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத்துணியால் மூடி தனியே வைக்கவும். தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும்.
கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும்
சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே
இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.

பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும்.
இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறைய
பொறுமையும் பிடிக்கும் வேலையிது!

நன்றாக காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை
கொண்டு கைப்பிடி கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக
இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத்துணியால்
கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக 'வஸ்தரகாயம்' செய்ய
வேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.


this process goes on & on till you get little
கப்பி.
fine powder -
ஆக கிடைத்த மஞ்சள் பொடியை....இனிமேல் 'குங்குமம்' என்றே
அழைக்கலாம். குங்மத்தோடு தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி
கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணை தேவை.

இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர் சில சொட்டுகள் விட்டு நன்றாக கலந்து காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றி வைத்துக்கொள்ளவும். தேவைப்படும் போது
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும் கொடுக்கலாம். சிறு பிளாஸ்டிக் டப்பாவில் பக்கிங் செய்து விற்பனை செய்யலாம்
எல்லோரும் மஞ்சள் குங்மத்தோடு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
பழைய பாட்டொன்றொடு முடிக்கிறேன்.

"
கொத்து மஞ்சள் முகத்தில் பூசி கொறநாட்டு புடவை கட்டி
நெத்தியிலெ திலகமிட்டு நீண்ட சடை பின்னிவிட்டு
உத்தமி சென்ற நாளில் உலகம் கண்டு புகழ்ந்ததையா
நற்றிடும் பழமை அதை நாடுவதே நல்லதையா!"

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites