இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label சர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். Show all posts
Showing posts with label சர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். Show all posts

Thursday, June 7, 2012

ரப்பர்

 

இன்றைய உலகின் இன்றியமையாத் தேவைகளுள் ஒன்றாக விளங்குவது ரப்பர் எனில் அது மிகையன்று. இப்பொருள் இல்லாத உலகை இன்று நாம் கற்பனை செய்தும் பார்க்க இயலாது. 

துவக்கத்தில் இப்பொருள் பென்சிலால் எழுதப்பட்டவற்றை அழிப்பதற்குப் பயன்பட்டதால், "அழிப்பான்" என்ற பொருளில் பிரீஸ்ட்லி என்பவர் 1770இல் இதனை ரப்பர் (rubber) என அழைத்தார். இப்பெயருக்கு முன்னர் இந்தியன் என்ற சொல்லும் சேர்த்து 'இந்தியன் ரப்பர்' என்றே அழைக்கப்பட்டது. முதன் முதலில் ரப்பர் அமெரிக்காவில் (சிவப்பு) இந்தியர்கள் வசித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இந்த இந்தியன் ரப்பர் லண்டன், பாரீஸ் ஆகிய நகரங்களில் பென்சிலால் எழுதப்பட்டவற்றை அழிப்பதற்கான கருவியாக விற்கப்பட்டது. 

ரப்பர் இயற்கையாக மரங்களிலிருந்தே பெறப்பட்டது; பின்னர் அதன் தேவை மிகுதியானதன் காரணமாக ரப்பர் உற்பத்தியில் முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; புதிய வகைச் செடிகொடிகளை வளர்ப்பதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கப் பழங்குடி மக்கள் 11ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே ரப்பர் பற்றி அறிந்திருந்தனர். அக்காலத்திய ரப்பர் பொருட்கள் இன்றும் தொன்மையான காட்சிப்பொருட்களாக விளங்குகின்றன. கொலம்பஸ் தமது இரண்டாவது கடல் பயணத்தை 1493இல் ஹைட்டி என்னும் பகுதியில் மேற்கொண்டார்; அப்பகுதியின் பழங்குடி மக்கள் மரக்கோந்து அல்லது பிசினால் செய்யப்பட்ட பந்து ஒன்றை வைத்துக்கொண்டு விளையாடியதைப் பார்த்து வியப்படைந்தார். பிரெஞ்சு நாட்டு வானியல் குழுவினர் 1735ஆம் ஆண்டு தென் அமெரிக்காவின் பெரு நாட்டிற்குச் சென்றபோது அப்பகுதியில் கோந்து மற்றும் வடிசாறு போன்ற திரவங்களை வடிக்கும் மரங்களைப் பார்த்தனர். இவ்வடிதிரவம் நிறமற்று, ஒட்டிக்கொள்ளும் தன்மையுடன் இருந்ததோடு, சூடுபடுத்தும்போது அல்லது சூரிய வெப்பத்தில் வைக்கும்போது கெட்டித்தன்மை அடைவதையும் கண்டனர். இந்த கோந்துப் பொருளை அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் காலணி, குப்பி போன்ற பொருட்களைச் செய்யப் பயன்படுத்தினர். இப்பொருட்கள் சிலவற்றை அந்தப் பிரெஞ்சுக் குழுவினர் தங்கள் நாட்டிற்கும் எடுத்துச் சென்றனர். இப்பொருட்கள் பலகாலம் ஐரோப்பாவில் வியப்பிற்குரிய பொருட்களாக விளங்கின. இதே வேளையில் தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்து வந்தோர் கூடை, பந்து போன்ற பொருட்களை ரப்பரைக் கொண்டு செய்து வந்தனர். ஆனால் ஐரோப்பியர் அமெரிக்காவிடமிருந்தே ரப்பர் பொருட்களைப் பற்றி அறிந்தனர். உயர்ந்த, தரமான ரப்பர் தென் அமெரிக்காவின் அமேசான் காட்டுப்பகுதிகளில் விளையும் ஹிவியா மரத்திலிருந்தே பெறப்பட்டது.

நாளுக்கு நாள் பல்வேறு அறிவியல் சோதனைகள் ரப்பரில் மேற்கொள்ளப்பட்டன. ரப்பரைக் கற்பூரத் தைலத்துடன் கலந்து துணிகளுக்கு மேலே பூசி மழையில் நனையாத ஆடைகளை உருவாக்கினர். இத்தகைய துணிகளில் தண்ணீர் உட்புக முடிவதில்லை. இம்முறையைப் பயன்படுத்தி சார்லஸ் மகிண்டோஷ் என்பவர் வணிக ரீதியாக மழைக்கால ஆடைகளைத் தயாரித்தார். 

குட் இயரும் ரப்பரும் :

ரப்பரைச் செயல்முறைப் பயன்பாட்டிற்கு 1831ஆம் ஆண்டு கொண்டு வந்தவர் சார்லஸ் குட் இயர் என்னும் அமெரிக்கர் ஆவார். இவர் தம் வாழ்நாள் முழுவதையும் ரப்பர் பற்றிய ஆய்விற்காகவே செலவிட்டவர். பல்வேறு பொருட்கள் ரப்பருடன் எவ்வாறு வினை புரிகின்றன என்ற ஆய்வுகளை இவர் நடத்தினார். ரப்பருடன் உப்பு, சர்க்கரை, கடுகு எண்ணெய், சோப்பு போன்ற பல பொருட்களைக் கலந்து பரிசோதனைகளை மேற்கொண்டார். ரப்பரில் திடத்தன்மையைக் கொண்டுவரவும், எளிய வெப்பத்திலும் அது உருகி ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்கவும் குட் இயர் முயற்சிகளை மேற்கொண்டார். பலவகைப் பொருட்களையும் ரப்பரைக் கொண்டு செய்வதற்கு முயன்றார். ஆனால் கோடைக்காலத்தில் ரப்பர் உருகித் தீநாற்றம் வீசவும் ஒட்டிக்கொள்ளவும் துவங்கின. காலணிகள், பைகள் போன்ற ரப்பர் பொருட்களின் விற்பனை நின்று போயிற்று. விற்ற பொருட்களும் திருப்பித் தரப்பட்டன. இவற்றை உற்பத்தி செய்தோர் பொது மக்களின் சினத்திற்கும், எதிர்ப்புக்கும் ஆளாயினர். இத்தகைய சூழலில் குட் இயர் அவர்களின் உயிருக்கே கூட ஆபத்து உண்டாயிற்று. ஆனாலும் ரப்பர் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அவர் தயங்கவில்லை. எனவே அவர் தம்மையே ஒரு ரப்பர் போர்வையால் போர்த்திக்கொண்டு சென்றார். அந்நாளில் அவரைப்பற்றி வேடிக்கையாக இவ்வாறு கூறுவது உண்டு: " யாராவது ஒரு மனிதர் ரப்பர் கோட் உடுத்துக்கொண்டு, இந்திய ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை அணிந்துகொண்டு, சட்டைப் பையில் ரப்பரால் செய்யப்பட்ட பணப்பையுடன், ஆனால் அப்பையில் ஒரு செண்ட் காசும் இல்லாமல் நடந்து சென்றால் அம்மனிதர் வேறு யாருமன்று, குட் இயர் அவர்கள்தான்." 

ஒரு நாள் குட் இயர் தம் நண்பர்கள் முன்னிலையில் ரப்பர், கந்தகம் ஆகிய இரு பொருட்களுடன் பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டிருந்தார். தற்செயலாக இவ்விரு பொருட்களின் கலவை அடுப்புத் தீயில் விழுந்து விட்டது; பின்னர் அக்கலவை மீட்டெடுக்கப்பட்டது. குட் இயருக்கு வியப்பூட்டும் விதமாக, வெப்பத்திலிருந்து மீட்கப்பட்ட அந்த ரப்பர்-கந்தகக் கலவை ஒட்டும் தன்மை சிறிதுமின்றி கெட்டித்தன்மையுடன் விளங்கிற்று; வெப்பத்தில் மட்டுமன்று, கடுங்குளிரிலும் அக்கலவையில் வெடிப்பு ஏதும் உண்டாகவில்லை. இதிலிருந்து ரப்பரைக் கந்தகத்துடன் கலந்து வெப்பமூட்டி, குறிப்பிட்ட வெப்ப அளவில் சூடாக்குவதை நிறுத்தி விட்டால், ரப்பரின் ஒட்டிக்கொள்ளும் தன்மை முழுமையாக நீங்கிவிடும் எனும் உண்மையை அவர் கண்டறிந்தார். இச்செயல்முறை கந்தக வலுவூட்டல் செயல்முறை (vulvanizing process) எனப் பின்னாளில் அழைக்கப்பட்டது. இதற்கு உரிய, சரியான வெப்ப அளவைக் கண்டறிய ரப்பரையும் கந்தகத்தையும் கலந்து பல்வேறு வெப்பநிலைகளில் சூடுபடுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குட் இயர் அவர்களின் அயராத முயற்சிகளால், மக்களின் வாழ்க்கையில் ரப்பர் சிறப்பானதோர் இடத்தைப் பிடித்தது.

ரப்பரின் முக்கியத்துவத்தைக் கருதி, இங்கிலாந்தில் ரப்பர் மரங்களை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரேசில் நாட்டிலிருந்து ரப்பர்ச் செடி விதைகளை இறக்குமதி செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால் பிரேசில் அரசு இதற்குத் தடை விதித்தது. இருப்பினும் விக்மென் (Wickmen) எனும் ஆங்கிலேயர், ஹிவியா ரப்பர் மர விதைகளைத் திருட்டுத்தனமாக இங்கிலாந்துக்குக் கடத்திச் சென்றார். லண்டன் நகரப் பூங்கா ஒன்றில் 1876ஆம் ஆண்டு சுமார் 70,000 ரப்பர் செடி விதைகள் விதைக்கப்பட்டன. இவற்றுள் சுமார் 27,000 விதைகள் மட்டுமே துளிர்த்தன. இச்செடிகள் மிகக் கவனமாக சிங்கப்பூர், ஜாவா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு ரப்பர் விளைவிக்கப்பட்டது. 

அந்நாளில் ரப்பர் மரங்கள் இந்தியாவில் இயற்கையாகவே வளர்ந்தன என்றாலும், அதன் வாணிக முக்கியத்துவம் இங்கிருப்போர்க்குத் தெரியவில்லை. தற்போது உள்ளவாறு ரப்பர் பயிரிடுவது இந்தியாவில் 50-60 ஆண்டுகளுக்கு முன்னர்தான் துவங்கியது. ரப்பர் செடிகளை வளர்த்தல், ரப்பரை உருவாக்குதல், தூய்மைப்படுத்தல் ஆகியவற்றில் தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ரப்பர் பொருட்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது இந்தியாவிலேயே பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ரப்பர் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுவிட்டன.

கடந்த முப்பதாண்டுகளில் இந்தியாவில் இயற்கை ரப்பர் உற்பத்தி பத்து மடங்கு பெருகியுள்ளது. உலகின் ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளுள் தற்போது இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. ரப்பரைச் செயற்கை முறையிலும் கூட ஆய்வகங்களில் உற்பத்தி செய்ய இயலும். 

இயற்கையில் கிடைக்கும் ரப்பர் ஆதாரங்கள் :

பால், கோந்து, பிசின், சாறு வகைகளில் ரப்பரைத் தரும் சுமார் 500 தாவர வகைகள் உள்ளன. சிறந்த வகை ரப்பர் ஹிவியா மரத்திலிருந்து பெறப்படுவதே. இது தென் அமெரிக்காவின் அமேசான் பள்ளத்தாக்கில் பெருமளவு வளர்கிறது. தென் இந்தியாவின் திருவாங்கூர், கொச்சி, மைசூர், குடகு, மலபார்ப் பகுதிகளிலும் இது காணப்படுகிறது. 

Monday, December 19, 2011

சர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 நேற்று காலை சுற்றுலாவாக மதுரை பாலமேடு அருகிலுள்ள சக்கரையாலைக்கு சென்றோம். மாணவர்கள் படிப்பு கவலையை மறந்து பிற நாட்களைவிட உற்சாகமாக வந்தனர். முகத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் போட்டியாக வானமும் தன் அழகை வெயில் மறைத்து,மேகங்கள் சூழ ,இதமான காற்றைத் தந்தது, மாணவர்களை விட ஓட்டுனர் உற்சாகமடைந்து நிதானமாக இயற்கை காற்றை சுவாசித்து, தூசிகள் நிறைந்த நகரை விட்டு இயற்கையைத் தேடி பறந்தோம்.
        பசுமைகள் தார் சாலையின் இருபுறமும் எங்கள் கண்களுக்கு விருந்தாக , எங்களின் மகிழ்ச்சி மேகங்களுக்கும் ஓட்டிக் கொள்ளவே அவைகளும் எங்களுடன் இருட்டிக் கொண்டு வந்தன. குற்றாலச் சாரலை உணர்ந்தோம். குளிர்ந்த காற்றுடன் சக்கரையாலையை அடைந்தோம். வரிசையாக எம் மாணவர்கள் கரும்பு எப்படி சக்கரையாக மாற்றமடைகிறது என்பதை பார்த்து வியந்தனர்.
 

      இதோ மேலே உள்ளப்படம் லாரிகளிலிருந்து டன் கணக்கில் கரும்புகள் கிரேன் மூலம் சாறு பிழிவதற்கு அனுப்பப்படுகின்றன.ஒரு நாளுக்கு 2400 டன் கரும்புகள் அரைக்கப்படுகின்றன. இந்த கிரேன் அப்படியே லாரியிலுள்ள கரும்பைத் தூக்கி,  அரைக்க அனுப்புகிறது. அதனால் லாரிகள் வரிசையில் வெகு நேரம் நிற்பது குறைகிறது .
     இது மில் ஹவுஸ் எனப்படும் அரைக்கும் பகுதி. கரும்பு சக்கையாக பிழிந்து சாறு தனியாகவும் சக்கைத் தனியாகவும் அனுப்பப்படுகிறது. இச்சக்கைகள் மீண்டும் மீண்டும் அரைக்கப்படுகின்றன.

   பாருங்கள் மேலேயுள்ளப்படத்தில் எப்படி கரும்பு சக்கையாகப் பிழிந்து எடுக்கப்படுகிறது. நன்கு சாறுப் பிழியப்பட்ட இச்சக்கைகள் , காகித ஆலைகளுக்கு காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சக்கரையாலையின் மிசின்களை இயக்க பாயிலர் பயன்படுகிறது. இந்த ஆலைக்குத் தேவையான மின்சாரம் தாயாரிக்கவும் இந்த பாய்லர் பயன்படுகிறது. பாயிலர்கள் மூலம் ஸ்டீரீம் பாய்ச்சப்பட்டு , ஜெனிரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ,இம் மிசின்களை இயக்குகிறார்கள். இவ்வாறு பிழியப்படும் கரும்புச்சாறு பாகு ஆகும் வரை கொள்கலன்களில் வெவ்வேறு வெப்ப நிலைகளில் கொதிக்கவைக்கப்படுகின்றன.

    இவ்வாறு பிழிந்து எடுக்கப்படும் சாற்றிலுள்ள மாசுக்கள் நீக்க ஒரு கட்டத்தில் இச்சாறுடன் சுண்ணாம்புக்கல்லும் சல்பர் வாயுவும் செலுத்தப்படுகிறது. அதனால் இச்சாற்றிலுள்ள அசுத்தங்கள் வடிக்கட்டப்பட்டு சுத்தமான சாறு மட்டும் அதற்கு அடுத்துள்ள கொள்கலன்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. மேலேயுள்ளப்படம் கொதித்து வரும் சாற்றுடன் சுண்ணாம்பும் , சல்பரும் சேரும் இடமாகும்.

    சுண்ணாம்பு நீர் இந்த கலைன் வழியாக பைப்புகளில் கலக்கப்பட்டு , சல்பர் வாயுவுடன் , கொதிக்கும் சாற்றில் கலக்கப்பட்டு , தூசுக்கள் வடிக்கட்டுதல் முறையில் நீக்கப்படுகின்றன. அடுத்த நிலையில் சாறு கொஞ்சம் பாகு நிலைக்கு தள்ளப்பட்டு , அதிலுள்ள இனிப்பு முழுவதும் பாகு தன்மையாடையும் வரை காய்ச்சப்படுகிறது. அதற்கு என பிரசர் அளவுகள் குறிக்கப்படுகின்றன. கண்ணாடியில் வைத்து அதன் தன்மையை சரிப்பார்க்கின்றனர். 



சல்பர் கலந்த பின் பாகு தன்மையுடன் வெளிவரும் கரும்பு ச்சாறு...

   பின்பு இச்சாறு மிகப்பெரிய சுழலும் டிரம்மில் செலுத்தப்படுகிறது. அந்த டிரம்மில் மிகச்சிறிய துளைகள் உள்ளன. அவைகள் மூலம் சாறு பாயும் போது சக்கைகள் , கல், மண் மற்றும் பிற கழிவுகள் டிரம்மின் மேற்பரப்பில் ஓட்டிக் கொள்கின்றன. மேலேயுள்ள படத்தில் அந்த கழிவுகள் ஓட்டியுள்ளதைப்பார்க்கலாம்.அவைகள் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. அப்பகுதி விவசாயிகள் இதனை கிலோ நூறுவுக்கு வாங்கி இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர்.




   மேலேயுள்ள படத்தில் பாகு சக்கரை தன்மைக்கு பின் ,மொலாஸ் எனப்படும் நிலைக்கு மாற்றப்படும் போது உள்ள தன்மை சோதிக்கப்படுகிறது. இந்த மொலாஸ் சாராயத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு நல்ல காசுக்கு விற்க்கப்படுகின்றன. சக்கரையாலையில் எதுவுமே வேஸ்ட் இல்லை . இதற்கு என தனி மின்சாரம் தேவையில்லை. அனைத்தும் பாய்லர் மூலம் ஜெனரேட்டரை இயங்கச் செய்வதன் மூலம் பெறப்படுகிறது. 




 பாகு சீனியாக மாற்றப்பட்டு அரைக்கப்படு வருகிறது. அவைகள் தரம் பிரிக்கப்பட்டு , மிகவும் பொடியாக உள்ள சீனி மட்டும் மூடை மூடையாக கிலோ கணக்கில் சாக்கில் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கீழேயுள்ள படம் தான் சீனி யாகி வரும் கடைசிக் கலன் ஆகும் 


    அங்கிருந்து விடைப்பெற்று , பாலமேட்டிற்கு அருகிலுள்ள சாத்தியார் அணைக்கட்டிற்கு ஆனந்தமாக பயனித்தோம். இயற்கை எங்களுக்கு மேலும் ஆனந்தம் அளிக்கும் விதமாக மழையைப் பொழிந்தது. பேருந்தில் இருந்த வண்ணம்  மழையினை ரசித்தனர். பத்து நிமிடம் கணத்த மழை . பூமி குளிர்ந்து எங்களுக்கு வழிவிட்டது. மழையினை  சாலையின் இருபுறம் உள்ள மலையையும் ரசித்து வந்தனர்.”

வரிசையாக அமர்ந்து சாப்பிட்டோம். அணைக்கட்டையும் , அதன் சுற்றுப்புறம் , இயற்கையை ரசித்தோம்.அணைக்கட்டின் அருகில் சென்று இயற்கை அரண்களாக மலைகள் அமைந்து எப்படி நீர் தேக்கப்படுகிறது என்பதை வியப்போடு பார்த்தனர். நான் அவர்களுடம் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.


பயணம் இனிமையாக முடிந்தது.

Thursday, December 1, 2011

விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை


. சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் அதிக அளவில் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும் சக்தியில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

ஆபத்தான சர்க்கரை

சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.

சர்க்கரை தேவையில்லை

சர்க்கரையை உபயோகிப்பதன் மூலம் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். புரதச்சத்து அளிக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து உறிஞ்சப்படுகிறது. தாது உப்புக்கள் அழிக்கப்படுவதால் உடலானது எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்

நோயாளிகளாக மாறும் குழந்தைகள்

குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடல் குண்டாகிறது. இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நோயாளியாக உருவாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் கட்டிகள்

உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகளை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே தினமும் காபி அல்லது தேநீர் பருகும் போது குறைந்த அளவு சர்க்கரையை பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites