இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம். Show all posts
Showing posts with label காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம். Show all posts

Sunday, December 6, 2015

பால்காளான்

மாதம் ரூ.1,44,000... ‘பலே’ வருமானம் கொடுக்கும் பால்காளான்!
சைவ உணவுக்கு ஈடான சுவையுடன், சைவ உணவு தயாரிக்க சோயா, சேப்பங்கிழங்கு... எனப் பல விளைபொருட்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றில் முதலிடம் வகிக்கிறது, காளான்.
சிப்பிக்காளான், பட்டன் காளான், பால்காளான் என காளானில் பல வகைகள் இருந்தாலும்... அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு... இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது பால்காளான். அதனால், காளான் சந்தையில் தனியான இடம் பிடித்திருக்கிறது, பால்காளான். இதனால், சமீபகாலமாக விவசாய உபதொழிலாக பால்காளான் வளர்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பால்காளான் வளர்ப்பில் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்.
விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் இருபதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர் கிராமம். இங்குதான் பால்காளான் பண்ணை அமைத்திருக்கிறார், ரமேஷ். வெள்ளைக்குடை போல பாலித்தீன் பைகளில் வளர்ந்து நின்ற காளானை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரமேஷை சந்தித்தோம்.
விவசாயத்துக்கு வழிகாட்டிய ஜீரோ பட்ஜெட் பயிற்சி!
‘‘எங்க அப்பாவுக்குச் சொந்த ஊர் விழுப்புரம் பக்கத்துல இருக்கிற வளவனூர். நான் பி.எஸ்.சி. கணிதவியல் முடிச்சிட்டு, ஒரு போட்டோ ஸ்டியோவுல ஆறு மாசம் வேலை பார்த்துட்டு சொந்தமா போட்டோ ஸ்டுடியோ வெச்சேன். அப்பறம் கல்யாணம் ஆன பிறகு, ஸ்டுடியோவை விழுப்புரத்துக்கு மாத்தினேன். அந்த சமயத்துல தனியார் தொலைக்காட்சியில மாவட்ட செய்தியாளரா வேலை கிடைச்சது. செய்தி சேகரிக்க பல ஊர்களுக்குப் போற வாய்ப்பும் கிடைச்சது. அப்போ, விவசாயம் சம்பந்தமான செய்திகளைச் சேகரிக்கும் போது, விவசாயத்து மேல ஆசை வந்துச்சு. 
ஒரு கட்டத்துல தொலைக்காட்சி வேலையை விட்டு ஸ்டுடியோவை மட்டும் நடத்திக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துல ‘பசுமை விகடன்’ல ஜீரோ பட்ஜெட் பயிற்சி பத்தின அறிவிப்பு வந்தது. ஈரோடுல நடந்த பயிற்சியில கலந்துக்கிட்ட பிறகு, இயற்கை விவசாயம் பத்தின ஆர்வம் அதிகமானதால... விழுப்புரம் பக்கத்துல நிலம் வாங்கி விவசாயத்துல இறங்கினேன். ஆனா, குடும்ப சூழ்நிலை காரணமா, அந்த நிலத்தை விற்பனை செய்துட்டேன். அதுக்குப் பிறகு, அப்பாவும் தம்பியும் இந்த ஊர்ல (முகையூர்) வாங்கின பத்து ஏக்கர் நிலத்துல, விவசாயம் செய்றதோட காளானும் வளர்க்கிறேன்” என்று முன்னுரை கொடுத்த ரமேஷ், தொடர்ந்தார்.
‘‘திண்டிவனம் பக்கத்துல ஒரு நண்பர் பால்காளான் வளர்த்தார். அவர்தான் என்னையும்  காளான் வளர்ப்பில் ஈடுபடுத்தினார். நாலு வருஷத்துக்கு முன்ன காளான் வளர்ப்புல இறங்கின சமயத்துல... நோய்த்தொற்று காரணமா காளான்ல பல பிரச்னைகள் வந்தது. அப்பறம், கே.வி.கே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்னு போய் பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன்.
சில நண்பர்களோட சேர்ந்து முறைப்படி இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பிச்சதும் பிரச்னைகள் குறைய ஆரம்பிச்சதோட வருமானமும் வர ஆரம்பிச்சது. நண்பர்கள் பார்ட்னர்களா இருந்தாலும் அவங்களுக்கு வேற தொழில்கள் இருக்கிறதால, முழுக்க பண்ணையைப் பராமரிக்கிறது நான் மட்டும்தான். ரெண்டரை வருஷமா லாபகரமா காளான் வளர்ப்பு நடந்துக்கிட்டிருக்கு” என்றவர், காளான் வளர்ப்பு குறித்து சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஒரு நாளைக்கு 30 படுக்கை (காளான் பெட்) தயாரிக்கிறோம். அந்தக் கணக்குல மாசத்துக்கு 900 படுக்கைகள் தயாரிக்க முடியும். ஒவ்வொரு படுக்கையிலும் மூணு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுக்கையில மூணு அறுவடைக்கும் சேர்த்து 1,300 கிராம் வரை பால்காளான் கிடைக்கும். மொத்த படுக்கைகள்ல இருந்தும் சராசரியா ஒரு நாளைக்கு 30 கிலோ அளவுக்கு காளான் கிடைக்கும். மாசத்துக்கு 900 கிலோ. மொத்த விலைக்குக் கொடுக்கிறப்போ கிலோ 150 ரூபாய்னு எடுத்துக்குவாங்க. சில்லறை விற்பனையில 220 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். எப்படிப் பார்த்தாலும் சராசரியா கிலோவுக்கு 160 ரூபாய் கிடைச்சுடும். அந்தக் கணக்குல பார்த்தா ஒரு மாசத்துக்கு 900 கிலோ காளானை விற்பனை செய்றது மூலமா, 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் செலவு 54 ஆயிரம் ரூபாய் போக, மீதம் 90 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்” என்ற ரமேஷ் நிறைவாக,
‘‘வைக்கோலை வெளிய வாங்கிறப்போ அது ரசாயன உரம் போட்டு விளைய வெச்சதானெல்லாம் பார்த்து வாங்க முடியாது. அதேமாதிரி காளான் உற்பத்திக்கு, வைக்கோலை கிருமிநீக்கம் செய்றதுக்காக சில மருந்துகளைப் பயன்படுத்துவாங்க. வைக்கோல் காளான் வளர்றதுக்கு ஒரு மீடியம்தாங்கிறதால காளான்ல ரசாயன பாதிப்பு இருக்காது. ஆனாலும் நான் கிருமிநீக்கம் செய்ய மருந்துகளைப் பயன்படுத்துறதில்லை. எங்க தோட்டத்துல இயற்கை விவசாயத்துல விளையுற வைக்கோலை வேக வெச்சு கிருமிநீக்கம் செய்துதான் காளான் வளர்க்கிறேன். அதனால, எங்க பண்ணையில உற்பத்தியாகுற காளான் 100% இயற்கைக் காளான். பால்காளான் விற்பனையில எந்த பிரச்னையும் இல்லை. எங்களோட உற்பத்திக்கு அதிகமாவே ஆர்டர் இருக்கு. அடுத்து இன்னும் உற்பத்தியை அதிகரிக்கிற முயற்சியில இருக்கிறோம்” என்று சொல்லி மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார். 
தொடர்புக்கு,
ரமேஷ், 
செல்போன்: 94432-26467

Tuesday, September 16, 2014

மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!


இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.
'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
''நாங்க இந்தளவுக்கு வளந்திருக்கிறதுக்கு காரணமே 'பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு 'பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் 'பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு'' என ஸ்ரீப்ரியா பூரிக்க... அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார்.
''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.
மூன்று அறைகள் தேவை!
'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.
சுத்தம் அவசியம்!
முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.
தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.
மூன்று முறை அறுவடை!
இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.
காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா
150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,
2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார்,
''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ராஜ்குமார்,
செல்போன்: 99524-93556.

Monday, February 17, 2014

நெகிழ வைக்கும் ஒரு  நிஜ  கதை


காதலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஜெயிப்பதுதான் காதலுக்கு மரியாதை! அப்படி தங்கள் காதலுக்கு மரியாதை செய்த பல்லாயிரம் தம்பதிகளில், மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் - ஸ்ரீபிரியா தம்பதிக்கும் இடமுண்டு. காதலித்த நாட்களின் ரொமான்ஸ் நிகழ்வுகள்; திருமணத்தின்போது ஏற்பட்ட பதற்றங்கள்; கணவன் - மனைவியாக அவதாரமெடுத்த பின் பொருளாதார நெருக்கடியால் ஆசைப்பட்ட வாழ்வை வாழ முடியாமல் போன விரக்தி; நம் காதல் ஜெயித்தே தீர வேண்டும் என்று எதிர்நீச்சல் போட்டு இன்று கரை சேர்ந்திருக்கும் வாழ்க்கைப் பயணம் என... ஒரு விறுவிறு காதல் 'கம்’ குடும்பப் படம் பார்த்த உணர்வு அவர்களின் கதை. கேட்போமா..?!
''இப்போ நாங்க வாழுற வாழ்க்கை இவ்வளவு வசதியா, சந்தோஷமா இருக்கக் காரணம்.... எங்களை வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வெச்ச எங்க காதல்தான்!''
- 15 வருடங்களுக்கு முன் மலர்ந்த தங்கள் காதலின் ஆசைப் பக்கங்களை அசைபோடத் தொடங்கினார் ராஜ்குமார்.
''அப்போ நான் எம்.காம் படிச்சுட்டு இருந்தேன். தாடி வெச்சுருப்பேன். தினமும் போற வழியில ஒருநாள் ஒரு லெட்டர். எடுத்துப் பிரிச்சுப் பார்த்தா, 'டியர் தாடி, உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு. உங்க பேர் என்ன?’னு கேட்குது அந்தக் கடிதம். அன்னிக்கு நைட் எல்லாம் தூக்கமே வரல. 'நம்மளையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுதா..?’னு ஒரே ஆச்சர்யம். கடிதத்துக்கு சொந்தக்காரியை தெரிஞ்சுக்கிற முயற்சியில இறங்கினப்போ, என் தேவதையா முன்ன வந்தா ஸ்ரீபிரியா'' என்று ராஜ்குமார் நிறுத்த,
''எங்க வீட்டுக்கு எதிரே இருக்கிற டீ கடையில டீ குடிக்கவும், பக்கத்துல கிரிக்கெட் விளையாடவும் இவர் அடிக்கடி வருவார். அவரோட தாடிதான் என்னைக் கவர்ந்தது. லெட்டருக்குப் பிறகு, நாட்கள் சூப்பரா நகர்ந்துச்சு. ரெண்டு பேரும் ஒரே ஏரியா. எங்க வீட்டு ஜன்னல் வழியாவே காதல் வளர்த்தோம். சாதி, வசதி இது ரெண்டும் எங்க திருமணத்துக்குப் பெரிய தடைகளா இருக்கும்னு எங்களுக்குத் தெரியும். என்ன பிரச்னை வந்தாலும், எல்லாத்தையும் சமாளிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னு ரெண்டு பேருமே உறுதியா இருந்தோம்.
நான் பி.பி.இ படிச்சுட்டிருந்த சமயம், திடீர்னு ஒருநாள் அவர், 'ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் செஞ்சுக்குவோம். நீ உங்க வீட்டுலயே இரு, நான் என் வீட்டுலயே இருக்கேன்’னு சொன்னார். 'அலைபாயுதே’ சினிமாவெல்லாம் வராத சமயம் அது. எனக்கு அதிர்ச்சியாவும், பயமாவும் இருந்துச்சு. இருந்தாலும், நாங்க பிரிஞ்சுடாம இருக்கறதுக்கு இது ஒரு பாதுகாப்பா தெரிஞ்சதால சம்மதிச்சேன். ஒரு கட்டத்துல வீட்டுக்கு விஷயம் தெரிய வந்தப்போ, வீட்டுலயே பூட்டி வெச்சுட்டாங்க. அங்க இருந்து தப்பிக்க, ஆட்கள் துரத்த, கார்லயே ஊர் ஊரா ஓட... அந்தக் கார்லயே அவர் தாலி கட்டினதை எல்லாம் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு!'' என்றபோது, 'களவாணி’ திரைப்படம் கண்ணில் வந்து போனது நமக்கு. தொடர்ந்தார் ராஜ்குமார்...
''அவங்க அப்பா, 'ஒரு பைசா கூட நான் தரமாட்டேன்'னு சொல்லிட்டார். நாங்களும் அதை துளியும் எதிர்பார்க்கலங்கறதை அவர்கிட்ட சொல்லிட்டு, பாதி கட்டியும் கட்டாமலும் இருந்த நண்பரோட வீட்டில்தான் முதல்ல தங்கியிருந்தோம். அந்த நாட்கள், 'காதல் சடுகுடு’தான். குழந்தையும் பிறக்க, சந்தோஷமா இருந்தோம். ஆனா, நான் பார்த்துட்டு இருந்த நகைத்தொழில்ல திடீர் நஷ்டம் ஏற்பட, அதலபாதாளத்துக்குப் போயிட்டோம். அதுக்கு மேல போராடத் தெம்பு இல்லாம... ஒரு பக்கம் விஷத்தையும் இன்னொரு பக்கம் அண்ணன் அல்லது நண்பர்கள் உதவி பண்ணுவாங்க என்ற நம்பிக்கையையும் வெச்சுட்டு நின்னோம். நம்பிக்கை பொய்க்க, குழந்தைக்கு மட்டும் கொடுக்காம நாங்க ரெண்டு பெரும் விஷத்தைக் குடிச்சுட்டோம். ஆனா... எப்படியோ பிழைச்சுட்டோம்'' என்றபோது, நமக்கு ஏக அதிர்ச்சி!
''நாங்க உயிர் பிழைச்ச அந்த நொடி, அழகா அமைஞ்ச காதல் வாழ்க்கையை, வீணாக்க முடிவெடுத்த முட்டாள்தனத்தை உணர்ந்தோம். பரிதாபத்தைவிட, 'காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க என்ன சாதிச்சீங்க... முடிவை பார்த்தீங்களா..?’ என்ற ஏளனத்தைத்தான் சமூகம் எங்க மேல தெளிச்சுது. அதுதான், 'வாழ்க்கையில நாம ஜெயிச்சே தீரணும்’கற வைராக்கியத்தோட எங்களை எழுந்திருக்க வெச்சது. ரெண்டு பேரும் காளான் வளர்ச்சி பற்றிய பயிற்சிக்குப் போனோம். அதைப் பற்றி தேடித் தேடி நிறைய கத்துக்கிட்டோம். சின்ன முதலீட்டோட ஒரு தொழிலா எடுத்து செய்தோம். ஒவ்வொரு நாள் முடிவிலும், விடியல்லயும் 'நாம ஜெயிச்சுக் காட்டணும்’னு மந்திரமா சொல்லிக்கிட்டோம். உலகத்துலயே ஆகப் பெரிய சக்தி, அன்புதான். அவர் எனக்காகவும், நான் அவருக்காகவும் மாறி மாறி உழைக்க, நாலு வருஷத்துல, இப்போ 'பசுமை பால் காளான் பண்ணை’ உரிமையாளர் ஆகியிருக்கோம். அதுபற்றிய பயிற்சிகளையும் வழங்குறோம். மாசம் லட்சத்துக்கும் மேல வருமானம் வருது!'' என்றபோது, சந்தோஷத்துடன் கண்ணீரும் ததும்புகிறது ஸ்ரீபிரியா விழிகளில்!
''இப்போவெல்லாம் தொட்டதுக்கெல்லாம் சண்டை போடுற காதலர்களையும், ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்ற தம்பதிகளையும் பார்க்கும்போது எங்களுக்கு வேடிக்கையா இருக்கு. சந்தோஷமான தருணங்கள்ல சேர்ந்திருக்கிறது பெருசில்ல. துயரமான நேரங்களையும் கைகோத்து கடக்குறதுதான் காதலுக்கு அழகு, அதுதான் காதலோட அர்த்தம்... எங்கள மாதிரி!''
- மனைவியின் முகம் பார்த்துப் புன்னகைக்கிறார் ராஜ்குமார்!

Wednesday, January 1, 2014

தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை


காளான் தாய்வித்து மற்றும் படுக்கை வித்து தயாரிப்பு
காளான் வளர்ப்பில் “காளான் வித்து” உற்பத்தி செய்தல் தலையாய ஒன்று. திசு வளர்ப்பு நுணுக்கத்தால் பெட்ரித் தட்டு அல்லது சோதனைக் குழாயில் வளர்க்கப்பட்டுள்ள மூலவித்தைக் கொண்டு தாய் வித்து பின் அதிலிருந்து படுக்கை வித்தும் தயாரிக்கப்படுகின்றன. பிரித்தெடுத்த காளான் பூசண மூலவித்தை சோளம் போன்ற தானியங்கில் வளரச் செய்து அவற்றைத் தாய் வித்தாகப் பயன்படுத்தலாம். ஒருமுறை இவ்வாறு உற்பத்தி செய்த தாய் வித்துப்புட்டிகளிலிருந்து இரண்டு முறை படுக்கை வித்துத் தயாரிக்கலாம். ஒரு தாய் வித்துப்புட்டியிலிருந்து பலமுறை தொடர்ந்து வித்துப் பெருக்கம் செய்தால் பூசணத்தின் வீரியம் குறைந்து காளான் விளைச்சல் பாதிக்கப்படும்.

காளான் தாய் வித்து அல்லது படுக்கை வித்துத் தயாரிக்கத் தரமான சோளத்தைத் தண்ணீர் விட்டு அலசி நல்ல சோளத்தைத் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் கொதித்து சோளம் வேகும் நிலையில் ஒன்றிரண்டு சோளங்கள் வெடிக்க ஆரம்பிக்கும் போதோ அல்லது சோளத்தை விரல்களுக்கிடையில் வைத்து நசுக்கினால் மெதுவாக நகங்கும் நிலை வந்தவுடனோ வேக வைப்பதை நிறுத்தி விட வேண்டும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு வேகவைத்த சோளத்தைச் சாக்குப் படுதாவில் பரப்பி ஈரம் போக உலர்த்த வேண்டும். உலர் எடை அடிப்படையில் ஒரு கிலோ சோளத்திற்கு 20 கிராம் கால்சியம் கார்பனேட் தூளை வேக வைத்து ஈரம் போக்கிய சோளத்துடன் நன்கு கலந்துவிட வேண்டும்.

இந்நிலையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வேக வைத்த சோளத்தின் ஈரப்பதமாகும். சோளம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் கையிலெடுக்கும் போது பொல பொலவென்று இருக்க வேண்டும். காளான் வித்து தயாரிப்பதற்க 150 காஜ%( பருமனும் 11”X15” அளவு உள்ள பாலி புரபலீன் பைகளைப் பயன்படுத்த வேண்டும். பின்பு கால்சியம் கார்பனேட் கலந்த சோளத்தை பாலிபுரபலீன் பைகளில் 300 கிராம் அளவில் நிரப்பி வாய்பாகத்தை ஈரம் உறிஞ்சாத பஞ்சினால் அடைத்துப் பின்பு ஒரு காகிதத் துண்டினால் பஞ்சடைப்பானை மூடிச் சணல் நூல் கொண்டு கட்டி விட வேண்டும்.

பின்பு இவ்வாறு தயாரிக்கப்பட்ட பைகளை அழுத்த வெப்ப மூட்டி என்று சொல்லக் கூடிய ஆட்டோகிளேவில் வைத்து 20 ராத்தல் நீராவி அழுத்தத்தில் இரண்டு மணி நேரம் வைத்துத் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். புட்டிகளின் சூடு ஆறிய பிறகு அவற்றைத் தாய்வித்து அல்லது படுக்கை வித்துத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.

தொற்று நீக்கம் செய்யப்பட்ட சோளம் நிறைந்த புட்டிகளைத் தொற்று நீ்க்கம் செய்யப்பட்ட திசு வளர்ப்பறையினுள் வைக்க வேண்டும். பிறகு பெட்ரித் தட்டில் அல்லது சோதனைக் குழாயில் வளர்த்துள்ள காளான் பூசணத்தைத் தொற்று நீ்க்கம் செய்யப்பட்ட கம்பி மூலம் துண்டுகளாக வெட்டி சோளம் நிறைந்த புட்டிகளுக்கு மாற்ற வேண்டும். ஒரு புட்டிக்கு ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் வீதம் இட்டு புட்டிகளை மீண்டும் அதே பஞ்சடைப்பானால் மூடிவிட வேண்டும். ஒரு பெட்ரித்தட்டிலுள்ள பூசணத்திலிருந்து சுமார் 10 தாய் வித்துப் பைகள் வரை தயாரிக்கலாம். ஒரு சோதனைக் குழாயில் உள்ள பூசணத்திலிருந்த இரண்டு தாய் வித்துப்பைகள் தயாரிக்கலாம். இப்புட்டிகளைத் தனியறையில் வைத்து பூசணத்தை வளரச் செய்ய வேண்டும்.

சுமார் 15 நாட்களில் வித்துப் பை முழுவதும் பூசணம் பரவி வெண்மையாகக் காணப்படும். அதன் பின் 3 முதல் 5 நாட்களில் பூசண வளர்ச்சி நிறைவுற்றவுடன் இவற்றைத் தாய் வித்துப் புட்டிகளாகப் பயன்படுத்தலாம்.ஒரு தாய் வித்துப் பையிலிருந்து சுமார் 30 படுக்கை வித்துப் பைகள் வரை தயாரிக்கலாம். இதற்கு நன்கு வளர்ந்த தாய்வித்துப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். தாய் வித்துப் புட்டியிலிருந்து படுக்கை வித்துத் தயாரிக்க இருவர் தேவை. இதையும் திசு வளர்ப்பறையில் தான் செய்ய வேண்டும். ஒரு ஆள் தாய்வித்துப் பை இடது கையில் எடுத்துக் கொண்டு வித்துப் பை மூடியுள்ள பஞ்சடைப்பானை வலது கை விரல்களுக்கிடையே பிடித்துத் திறந்தவுடன் வித்துப்பை வாய்ப் பகுதியைச் சூடாக்க வேண்டும். நுனிப்பகுதி வளைந்த இரும்புக் கம்பி ஒன்றைச் சூடாக்கித் தொற்று நீக்கம் செய்த பிறகு அக்கம்பியால் தாய்வித்துப் புட்டியிலுள்ள வித்துக்களைக் கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது ஆள் படுக்கை வித்து தயாரிப்புக்காக வைத்துள்ள கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது ஆள் படுக்கை வித்து தயாரிப்புக்காக வைத்துள்ள பையை இடது கையில் எடுத்து வலது கையால் பையை மூடியு்ளள பஞ்சடைப்பானை நீக்கி வாய்ப்பகுதியைச் சூடாக்கிய பிறகு எரியும் புன்சன் பர்னருக்கு அருகில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது தாய்வித்துப் பையை வைத்திருப்பவர் கிளறி வைத்துள்ள வித்தினை சுமார் 10 கிராம் அளவுக்குப் புதிதாகத் தயாரித்து வைத்துள்ள வித்துப்பை வாய்க்குள் சாய்த்துக் கொட்டிவிட வேண்டும். உடனடியாக படுக்கை வித்துப் புட்டியைச் சூடாக்கி அதே பஞ்சினால் மூடி வைக்க வேண்டும். வேறு நுண்ணுயிரிகள் உட்செல்லாமல் இருக்க அனைத்துச் செயல்முறைகளையும் எரியும் புன்சன் பர்னருக்கு அருகிலேயே செய்ய வேண்டும்.

காளான் பூசணமிட்ட படுக்கை வித்துப்பைகளை வேறொரு அறைக்குள் வைத்துவிட வேண்டும். சுமார் 15 நாட்களில் வித்துப்பை முழுவதும் காளான் பூசணம் நன்கு பரவியிருப்பதைக் காணலாம். பின் 18 முதல் 20 நாட்கள் வளர்ந்த வித்துப்பை காளான் படுக்கை தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். வித்துப்பைகள் தயாரித்திலிருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது. பாலபுரபைலீன் பைகள் அதிக வெப்பத்தைக் தாங்கக் கூடியவை. தொற்று நீக்கம் செய்யும்போது உருகிவிடாது பயன்படுத்தலாம். வித்துப் பைக்கு வாய்ப் பகுதியாக சுமார் 3 செ.மீ. விட்டமும் 2 செ.மீ. உயரமும் உள்ள பி.வி.சி. பைப்பில் செய்த வளையங்களையும் பயன்படுத்தலாம். பாலிபுரபைலின் பையின் வாய் பகுதியைக் குவித்து வளையத்தினுள்ள செலுத்தி சுமார் 3 செ.மீட்டர் உயரத்திற்கு பையை வெளியே இழுத்து வாய்ப்பகுதியை விரித்துவிட்டு வளையத்தையொட்டி வெளிப்புறமாகக் கீழ்நோக்கி மடித்து விட வேண்டும். இப்போது பையின் அமைப்பு ஒரு கண்ணாடிப் புட்டி போன்றிருக்கும்.
காளான் வித்து உற்பத்தியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்
  • வித்து தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படும் சோளம் தரமானதாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்காதவாறும் இருத்தல் வேண்டும்.
  • சோளம் அரை வேக்காடாக மட்டுமே வேக வைக்க வேண்டும். அதிக நேரம் வேக வைத்தல் குழைந்து போவதோடு இதில் தயாரித்த வித்துக்கள் துர் நாற்றம் வீசும்.
  • வித்துப்பைகளின் வாய் பகுதியை அடைக்க ஈரம் உறிஞ்சா பஞ்சுவை காற்று புகா வண்ணம் அடைக்க வேண்டும்.
  • தொற்று நீக்கம் செய்யும் போது வெப்பமூட்டியின் இராத்தம் அழுத்தம் மற்றும் புட்டிகளை உள்ளே வைத்திருக்கும் நேரம் ஆகியவைகளை சரியான அளவில் கணக்கிட்டு செயல்படுத்தபட வேண்டும்.
  • தொற்று நீக்கிய ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பூசணத்தை உட்செலுத்தி வித்த உற்பத்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • ஒரு தாய் வித்திலிருந்து இரண்டு தலைமுறைக்கு மேல் வித்துப் பெருக்கம் மேற்கொள்ளப்படக் கூடாது.
  • வித்துப்பைகளின் மேல் காளான் இரகம் மற்றும், தயாரித்த தேதி போன்றவைகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
  • வேற்றுப் பூசணம் தாக்கிய வித்துப்பைகள் மஞ்சள், பச்சை கருப்பு மற்றும் ஊதா நிறங்களுடன் காணப்படும். அவ்வித்துப் பைகளை உடனே அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும். வித்துப்பையை பிரித்தவுடன் காளான் மணம் வீசப்பட வேண்டும். இதுவே நல்ல விதை என்பதைக் குறிக்கும். மாறாக புளித்த வாடை வீசும் வித்துக்களை அகற்றிவிட வேண்டும்.
  • வித்துக்களை தயாரித்து ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அதிக நாள் பட்ட வித்துக்கள் மஞ்சள் நிறத்துடன் ஆடை படர்ந்து இருக்கும். இதனை உபயோகித்தால் மகசூல் குறையும்.
  • வித்து தயாரிக்கும் அறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலின் திரவத்தை 1:2 என்ற விகித்தில் கலந்து புகையூட்டம் ஏற்படுத்தினால் வித்துப்பைகளில் வேற்று பூசணம் படர்வதை தவிர்க்கலாம்.
தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை


 


Monday, April 22, 2013

உணவுக் காளான்


உணவுக் காளான்

அகாரிக்கஸ் பைஸ்போரஸ்


ப்ளுரோட்டஸ் ஆஸ்ட்ரியேட்டஸ்

 
ப்ளுரோட்டஸ் இயோஸ்




கோ 2, ஆய்ஸ்டர் – ஹிப்சிஸ்கஸ் அல்மேரிஸ்


கலோசைப் இன்டிக்கா 


வால்வேரியல்லா வால்வேசியே


கனோடெர்மா லுசிடம்

      
அகாரிக்கஸ் அகேஸ்டஸ்

    
அகாரிக்கஸ் பைடார்க்குவிஸ்


ட்ரைக்கோலோமா மேக்னிவெல்லர்




வால்வேரியல்லா ஸ்பெசியோசா

Sunday, April 21, 2013

தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை



தாய் வித்து காளான் பூசணத்தை தானிய அடிப்படையிலான ஊடகத்தில் வைத்து வளர்ப்பதேயாகும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தால் சோதனை செய்யப்பட்ட பல பொருட்களில், சோளம் தான் பூஞ்சாண் வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. நோயற்ற சோள தானியங்களை காளான் வித்து வளர்வதற்கான அடிப்படைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தாய்க் காளான் வித்துக்களை தயாரிப்பதற்கான முறை பின்வருமாறு தரப்பட்டுள்ளது
  • சோளத் தானியங்களை சுத்தமான நீரில் ஊற வைத்து, சேதமடைந்த தானியங்களை அகற்ற வேண்டும்
  • சோளத்தை 30 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்
  • வேக வைத்த தானியங்களை சமதள தரையில் பரப்பி ஈரப்பதத்தை போக்க வேண்டும்
  • 50% ஈரப்பத நிலையில், கால்சியம் கார்பனேட்டை உலர் தானியங்களுடன் 20 கிராம் / கிலோ என்ற அளவில் கலக்க வேண்டும்
  • கிருமி நீக்கம் செய்த பாட்டில்களில் முக்கால் அளவு உயரத்திற்கு (சுமாராக 300 – 330 கிராம் / பாட்டில் (அ) கலன்) நிரப்பி, பிளாஸ்டிக் வளையத்தை உட்செலுத்தி, முனைகளை உறிஞ்சும் தன்மையற்ற பஞ்சைக் கொண்டு மூட வேண்டும்
  • பஞ்சைச் சுற்றி பயனற்ற தாளைக் கொண்டு மூடி நூலைக் கொண்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும்
  • இந்த பைகளை அழுத்தக் கொப்பரையில் வைத்து, 20 – எல்பி. எஸ் அழுத்தத்தில், 2 மணி நேரத்திற்கு வைத்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
  • குளிர்ந்த பின், பைகளை வெளியே எடுத்து, புற ஊதாக் கதிர் உள்ள வளர்ச்சி ஊடகத்தில் 20 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும்
  • பின் பூஞ்சாண் வளர்ச்சியை இரண்டு அரைப்பகுதியாக வெட்டி, ஒரு பகுதியை பாட்டிலிலும், அடுத்த அரைப்பகுதியை அடுத்த பாட்டிலிலும் மாற்ற வேண்டும்
  • பூசண வளர்ச்சி உட்செலுத்திய பாட்டிலை 10 நாட்களுக்கு அறை வெப்ப நிலையில் வைத்து அடைகாக்க வேண்டும். இதுவே படுக்கை வித்துத் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது
குறிப்பு: கால்சியம் கார்பனேட் கலப்பதின் நோக்கம்
  • வேகவைத்த தானியங்களில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற
  • தானியங்களின் கார அமிலத் தண்மையை நடுநிலைப் படுத்த
  • கிருமி நீக்கம் செய்தபின் கட்டியாவதைத் தடுக்க
    வெள்ளை சோளத் தானியங்கள்
    வேகவைத்தல் (30 நிமிடங்கள்)
    நிழலில் உலர்த்துதல்
    கால்சியம் கார்பனேட் (20 கிராம் / கிலோ) கலக்குதல்
    பிளாஸ்டிக் வளையங்கள்
    காளான் வித்துப்பைகள் தயாரித்தல்
    நிலை – 1
    நிலை – 2
    நிலை – 3
    தானியங்களை பைகளில் நிறைத்தல்
    பிளாஸ்டிக் வளையங்கள் கொண்டு இறுக்குதல் 
    உறிஞ்சும் தன்மையற்ற பஞ்சைக் கொண்டு அடைத்தல்
    தாளைக் கொண்டு மூடி, நூலைக் கொண்டு கட்டுதல் 
    தட்டுக்களில் சேமித்தல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  • சோளத்தை அளவுக்கு அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையென்றால், தானியங்கள் பிரிந்து விடும்
  • கால்சியம் கார்பனேட்டை பரிந்துரைக்கப்பட்ட அளவே பயன்படுத்த வேண்டும
நச்சுக் காளான்


அமேனிட்டா கன்ஸ்டிக்டா
 

லென்டினஸ் எடோட்ஸ்


ஆரிகுளேரியா பாலிடிரிக்கா


சைசோபில்லம் கம்யூனே


ஃப்ளேமுளினா வெலுட்டைப்ஸ்


பொலிட்டஸ் எடுலிஸ்


ட்ரெமெல்லா ஃபூசிபார்மிஸ்


பாலிபோரஸ் அம்பலேட்டஸ்


அபேனிட்டா சிசரியா


கேன்தரல்லஸ் சிபேரிக்கஸ்


ஹெரிசியம் எரினாசியஸ்


லேட்டிபோரஸ் சல்ப்யூரிஸ்

மார்செல்லா டெலிசியோசா


ஹெப்போமைசிஸ் ஹயலினூ

அமேனிட்டா ஃபேலோய்ட்ஸ்


அமேனிட்டா ஆக்ரியேட்டா


அமேனிட்டா மஸ்கேரியா


அமேனிட்டா மஸ்கேரியா

காளான் உற்பத்தியாளர்கள்
வ. எண்
பெயர் மற்றும் முகவரி
தொலைபேசி எண்
1
திரு. எம். மோகனா சுந்தரம்,
ஏ ப்ரின்ஸ் 5 காளான்,
பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், புள்ளியன் காடு தோட்டம், சூரியம்பாளையம்,
பெத்தம்பாளையம் (அஞ்சல்),
ஈரோடு – 638116
04294-35208
2
திருமதி. கே. புவனேஸ்வரி,
அபி ஆனந்த் காளான்,
சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான்
உற்பத்தியாளர், 5 – ஏ, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1
889601
3
திரு. செல்வா சேகரன். ஆர்,
அக்ரோவின் பண்ணை,
சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான்
உற்பத்தியாளர், 175 - பி, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1
887325, 888325,889914, Resi:881898
Cell:98422-88325 மின்னஞ்சல்:ocean24@eth.net
4
திரு. டி.சி. குணாலன், DEE,
தாரா காளான் மையம்,
சிப்பிக்காளான், பால் காளான்  மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், எல்.ஜி.எம் – 2, சேலம் முகாம்,
மேட்டூர் அணை – 2, சேலம்
04298-40872
திரு. ஆர். பாபு,
ஈஸ்ட்வுட் அக்ரோ சிஸ்டம்,
காளான் கருவிழை, தாய் காளான் கருவிழை, வளர்ப்புக் குழாய், சிப்பிக்காளான் காளான் உற்பத்தியாளர், 3/27, பி, வி.ஆர்.ஆர் வளாகம், மருதமலை சாலை, வடவள்ளி,
கோவை – 41
424747, வீடு: 424736
திரு.பி.இழஞ்செழியன், எம். ராதாகிருஷ்ணன்,
எம். கலைவானன்,
க்ரீ் ஹவுஸ பால் காளான் பண்ணை,
சிப்பிக்காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர்,
ஆர் 18/1, வெப்ப உறைவிடம்,
ஆர் – 4, பகுதி, சுப்பிரமணியர் கோவில் எதிரில்,
மேட்டூர்அணை – 1, சேலம்
04298-43083, 43969
திரு. கே. ஜே. பாலா சுந்தரம், ஜே. சாந்தி,
இன்டிகா காளான் பண்ணை,
பால் காளான், காளான் விதைகள்,
அங்கக உரம், 4/62 – ஏ,
கவுண்டம்பாளையம் அஞ்சல்,
விஜயம்பாளையம் வழி, கோவை – 110
854262
8
திருமதி. வி.அகிலா, M.Com, PGDCA, மற்றும் வி. பாக்யா,
ஜெயசக்தி காளான் பண்ணை, சிப்பிக்காளான் உற்பத்தியாளர், நள்ளிக்கவுண்டனூர், அய்யம்பாளையம் அஞ்சல்,
கவுண்தப்பாடி – 638456
04285-24668, 04256-42084
திருமதி. வேதம்பாள் மூர்த்தி,
கள்ளக்குழு, ஓண்ஸ்டர் காளான் விதைகள் மற்றும் காளான் உற்பத்தியாளர், கள்ளன்கட்டுவலசு, போலவகள்ளிப்பாளையம் அஞ்சல், கோபி – 638476
04285-25083, 26470 p.p
10
திரு. டி. இராஜேந்திரனம், ஆர். கே. ராமஜெயம்,
மதுரா காளான் உணவு உற்பத்திப் பொருள், பால் மற்றும் சிப்பிக்காளான் உற்பத்தியாளர், ஊறுகாய் உற்பத்தியாளர், 3/261 ஹெச், தங்கா நகர், பெரம்பலூர் சாலை, துரையூர் – 621010
45297, வீடு: 44557
11 
திருமதி. எஸ்.மீனாட்சி, (W/o ஏ.ஆர். சுப்பிரமணியன்),
மகா காளான் பண்ணை, காளான் உற்பத்தியாளர், எக்ஸ் – 27,
கோவைப்புதூர், கோவை – 42
0422-807021
12 
எம்.ஆர்.டி. காளான் விதைகள்,
சிப்பிக்காளான், காளான் கருவிழை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில், 16, மாரியம்மன் கோவில் வீதி, டி.என்.பாளையம், பி.என்.புதூர், கோவை – 41
440223, 430830
13
திருமதி. ராதா சண்முகம், புரதா சுய உதவிக் குழு,
பால் மற்றும் சிப்பிக்காளான், காளான் கருவிழை மற்றும் சூப் பவுடர், ஊறுகாய் உற்பத்தியாளர், உலர் காளான், காளான் பிரிவு, செங்குளம் இன்குர் அஞ்சல், பெருந்துரை (வழி),
ஈரோடு, தமிழ்நாடு
04294-30321, 30564
மின்னஞ்சல்:drda@erode.tn.nic.in
14
திருமதி. வசந்தி ஜெயபாலன்,
ராஜ லக்ஷ்மி காளான் பண்ணை, காளான் கருவிழை தரத்தின் சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கிடைக்குமிடம், 71 – பி, திலகர் வீதி, சீரனாயக்கன் பாளையம், கோவை – 7
434734
15
திரு. எஸ். செந்தில், ஆர். விஜயகுமார்,
ரேவதி காளான் பண்ணை,
பால் காளான் உற்பத்தியாளர் மற்றும் காளான் உற்பத்திப்பொருள் விற்பனை, 104 ரபிந்தர்நாத் தாகூர் சாலை,
மணியகாரன்பாளையம், கோவை – 6
0422-537161
16
திருமதி. ஆர். விஜயலக்ஷ்மி (W/o ரமேஷ் குமார்),
ஆர். வி. காளான் பண்ணை, சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் விதைகள், 1/41, ஆசிரியர் குடியிருப்பு, குள்ளம்பாளையம், கோபி – 638 476
04285-28190
17
திரு. சி. கதிர்வேல்,
சக்தி காளான், சூப் பவுடர்,
சிப்பிக்காளான் மற்றும் பால் காளான், காளான் கருவிழை உற்பத்தியாளர், 69, கட்டூர் வீதி,
டி.என். பாளையம்,
ஈரோடு – 638 506
04295-60899
18
திரு. ஜே. சஹாயநாதன்,
சஹாய் காளான் பண்ணை,
சிப்பிக் காளான் மற்றும் காளான் கருவிழை  உற்பத்தியாளர்,
கருமபுரம் அஞ்சல்,
காரிப்பட்டி, சேலம் – 636 106
0427-812341
19
திரு.பி. மாரப்ப கவுண்டர்,
சக்தி காளான் பண்ணை,
பால், சிப்பிக் காளான், மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், குப்பக்காடு,
மலைப்பாளையம், முள்ளம்பட்டி அஞ்சல்,
நாசியனூர், ஈரோடு – 638 107
0424-556263

20
திரு. பி. சோம சுந்தரம்,
எஸ்.ஆர்.ஜி. காளான் பண்ணை, சிப்பிக் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், தெத்துக்காடு அஞ்சல், கலப்பனாயக்கன்பட்டி (வழி), நாமக்கல் – 637 404
04286-42259
21
திரு. கே. நட்ராயன்,
ஸ்ரீநிவாஸ் காளான் விதைகள்,
சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கருவிழை மற்றும் அங்கக உரம் உற்பத்தியாளர், 3/59, சக்தி நகர்,
சர்வேயர் காலனி, கே.புதூர் அஞ்சல்,
மதுரை – 625 007
0452-560547
22
திரு. ஆர். ரங்கராஜ்,
ஸ்ரீ சக்தி காளான்,
சிப்பிக்காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், ஜோதிபுரம், 548, மேட்டுப்பாளையம் சாலை,
பெரியநாயக்கன் பாளையம், கோவை- 47
0422-893115,
0422- 893727
23
திரு.என். சுப்பிரமணியன்,
சுஜி களன் உலகம்,
பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், வங்கரன்காடு, குமாரசாமிபாளையம்,
கணபதிபாளையம் அஞ்சல், ஈரோடு – 638153
0424-51686
தொலைபேசி:98430-89681
24
கே. தியாகராஜன்,
சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் உற்பத்தியாளர்,
சின்னியம்பாளையம், கஞ்சி கோவில் அஞ்சல்,
ஈரோடு – 638 116
04294-35556
25
திருமதி. ஜி. திலகவதி,
டி.ஜி. காளான்கள், சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் கருவிழை உற்பத்தியாளர், 44, தீம் கவுண்டர் வீதி, கவுண்டம்பாளையம், கோவை – 30
-
26
திரு. டி. யோகநாதம்,
வேல் முருகா களன், சிப்பிக்காளான் மற்றும் பால் காளான் உற்பத்தியாளர், 376, ஒணைக்கட்டு சாலை,
சூரம்பட்டி வலசு,
ஈரோடு - 9     
272913
27
கே. வெங்கடேசன்,
சிப்பிக்காளான் உற்பத்தியாளர், ப்ளாட் எண். 4,
ராஜாஜி வீதி, நைநார் மண்டபம், பாண்டிச்சேரி – 4
043-355269
28
திரு. கே.எஸ். சரவணன் (சேகர்),
எஸ்.எஸ். காளான்கள்,
சிப்பிக்காளான், உலர் காளான் விதைகள் உற்பத்தியாளர், ஐயர் தோட்டம், களராமணி, கோபி(எஸ்) – 638 476
-
29
திரு. டி.பி. பொன்னுசாமி,
சக்தி காளான் மற்றும் விதைகள் மையம்,
சிப்பிக்காளான், பால் காளான் மற்றும் காளான் கருவிழை, திட்டம் பாளையம், மரவப்பாளையம், சென்னிமலை – 638 051
04257-43018,
04294-52247
30
திரு. டி. பரமேஸ்வரன்,
(S/o ஆர். தசப்பன்,
நில களன் பண்ணை, சிப்பிக்காளான் உற்பத்தியாளர்,
பச்சைமலை அடிவாரம் பின்புரம், கோபி – 638 476
26500

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites