இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label அலங்காரப் பொருட்கள். Show all posts
Showing posts with label அலங்காரப் பொருட்கள். Show all posts

Thursday, August 11, 2016

இளம் தொழிலதிபர்

கனவுகள் சுமக்கும் கண்களும் லட்சியங்கள் சுமக்கும் மனதுமாக துடிப்புடன் இருக்கிறார் கிருத்திகா. இளம் தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் வலம் வருகிற இன்ஜினியர். ப்ரின்ட் லே’ என்கிற பெயரில் இவர் நடத்துகிற நிறுவனம் நம்மூருக்குப் புதிதான 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டது. பெண்களுக்குப் பொருந்தா துறையாகப் பார்க்கப்படுகிற டெக்னாலஜியில் அசத்திக் கொண்டிருக்கிறார் கிருத்திகா!

2015லதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வெளியில வந்தேன். படிப்பை முடிக்கிறதுக்கு முன்னாடியே கேம்பஸ் இன்டர்வியூவுல செலக்ட் ஆகி, ஒரு பெரிய கம்பெனியில நல்ல வேலை கிடைச்சது. ஆனாலும், ‘வேணாம்’னு சொல்லிட்டேன். காரணம் என் கனவு... யெஸ்... எனக்கு ரொம்ப சின்ன வயசுலேருந்தே தொழிலதிபராகணும்கிறது ஆசை. வேலை கிடைச்சப்ப, `இது மாதிரி யாராவது பைத்தியக்காரத்தனம் பண்ணுவாங்களா? கிடைச்ச வேலையை விட்டுடாதே... 

இந்த வயசுல பிசினஸ் எல்லாம் சரியா வராது’னு நிறைய பேர் நிறைய அட்வைஸ் பண்ணினாங்க. ஆனா, என் கனவு அதுக்கெல்லாம் இடம் கொடுக்கலை. ரெண்டாவது வருஷம் இன்ஜினியரிங் படிக்கிறபோது நானும் என் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து இன்டர்நேஷனல் ரோபோடிக்ஸ் போட்டியில கலந்துக்கிட்டோம். அதுல மனுஷனை மாதிரியே இயங்கக்கூடிய ஒரு ரோபோவை டிசைன் பண்ண யோசிச்சோம். அப்பதான் முதன் முதலா 3டி பிரின்ட்டிங் பத்திக் கேள்விப்பட்டோம். அதுலேருந்து அதைப் பத்தித் தேடித் தேடி நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். 

படிப்பை முடிச்சிட்டு வௌியில வந்ததும் நான் பண்ணப் போற பிசினஸ் 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டதா இருக்கணும்னு அப்பவே தீர்மானம் பண்ணிட்டேன்...’’ என்கிறவர், தன்னுடன் இன்ஜினியரிங் முடித்த சக மாணவர் வைத்யநாதனின்  துணையுடன் பிசினஸை ஆரம்பித்து நடத்துகிறார்.

நம்ம நாட்டுக்கு 3டி பிரின்ட்டிங் புதுசு. வெளிநாடுகள்ல 3டி பிரின்ட்டிங் இல்லாத துறையே இல்லை. மண்டையோட்டை ரீப்ளேஸ் பண்ற அறுவை சிகிச்சைக்கும், எலிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கும் மருத்துவத் துறையில 3டி பிரின்ட்டிங் டெக்னாலஜியை யூஸ் பண்ணி இருக்காங்க. இன்னும் டிரெஸ் டிசைனிங், ஷூ டிசைனிங், பைக், கார் டிசைனிங்னு தினசரி நாம பயன்படுத்தற எல்லா தயாரிப்புகள்லயும் 3டி பிரின்ட்டிங் வந்தாச்சு.

இந்த முறையில பிளாஸ்டிக், மெட்டல், மரம்னு எதுல வேணாலும் ரொம்பவும் நுணுக்கமான, சிக்கலான முப்பரிமாணப் பொருட்களை அடுக்கு, அடுக்கா பிரின்ட் பண்ணி உருவாக்கலாம். கொஞ்சம் எளிமையா சொன்னா எல்லாருக்கும் புரியும். ஒருத்தங்க தன் வீட்டு அலமாரியில அழகான ரோஜா பொம்மையை வச்சிருந்ததாகவும் திடீர்னு அது உடைஞ்சு போனதாகவும் கற்பனை பண்ணிக்கோங்க. அதே மாதிரி ரோஜா பொம்மையைத் தேடிப் பிடிச்சு வாங்கறது கஷ்டம்னு வச்சுப்போம். 3டி பிரின்ட்டிங் முறையில அதே கலர்ல, அதே டிசைன்ல ரோஜா பொம்மையை உருவாக்க முடியும். 

இந்த மாதிரி எதை வேணாலும் டிசைன் பண்ணிக்கலாம். ஃபிலமென்ட் ரோல்னு ஒயர் மாதிரியான ஒரு மெட்டீரியல் இருக்கும். அதை 3டி பிரின்ட்டிங் மெஷினுக்குள்ள வச்சா, உருகி, திரவ நிலைக்கு மாறும். அது லேயர் லேயரா நமக்குத் தேவையான பொருளோட டிசைனை இழைச்சு, இறுதி வடிவத்துக்குக் கொண்டு வரும்...’’ - விஞ்ஞான ரீதியாக 3டி பிரின்ட்டிங் தொழில்நுட்பத்தை விளக்குகிறார் கிருத்திகா. 

3டி பிரின்ட்டிங் முறையில மொபைல் கேஸ், லேப்டாப் கவர், கீ செயின், காபி மக், சாப்பிடற தட்டு, டைல்ஸ்... இப்படி எதுல வேணாலும் நமக்கு விருப்பமான உருவங்களை பதிச்சுக்கலாம். ஃபேவரைட் சினிமா நட்சத்திரங்கள், ஸ்போர்ட்ஸ் ஆட்கள், குடும்ப உறுப்பினர்கள்னு மனசுக்குப் பிடிச்சவங்க போட்டோவை பிரின்ட் பண்ணிக்கிறதுக்கும் இளைஞர்கள் மத்தியில பயங்கர வரவேற்பு இருக்கு...’’ என்கிற  கிருத்திகா, அடுத்தகட்டமாக தொழில் நிறுவனங்களுக்கான பொருட்களை ஆர்டர் எடுத்து 3டி முறையில் பிரின்ட் செய்து கொடுக்கும் பெரிய பொறுப்பையும் கைப்பற்றியிருக்கிறார்!

டிசைனிங் ஸ்டேஜ்லயே தவறு களை சரி செய்யவும், டிசைனை இம்ப்ரூவ் பண்ணவும் 3டி பிரின்ட்டிங் முறையில வாய்ப்புகள் அதிகம். செலவும் கம்மி...’’ என்கிறவர், இன்னொரு பக்கம் ரோபோடிக்ஸ் பயிற்சி  வகுப்புகள் எடுப்பதில் பயங்கர பிசி! வயசு வாரியா இந்தப் பயிற்சி வகுப்புகளை சொல்லித் தரேன். 5 வயசுக் குழந்தைக்கு பேட்டரியால ஒரு காரை ஓட்ட வைக்கக் கத்துக் கொடுக்கிறது மூலமா, அது எப்படி இயங்குதுனு யோசிக்க வைக்க முடியும். வரையற ரோபோ, பூச்சி ரோபோ, டூத் பிரஷ் ரோபோ எல்லாம் குழந்தைகளுக்கானது. 

அடுத்த லெவல்ல ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்களுக்கு விஞ்ஞானப்பூர்வமான ரோபோடிக்ஸ் வகுப்புகள் மூலமா, படிக்கிற பாடங்களை இன்னும் சுலபமா புரிஞ்சுக்கற மாதிரியான பயிற்சிகள் கொடுக்கறேன். மூணாவது காலேஜ் ஸ்டூடன்ட்ஸுக்கானது. இனிமே வரப் போற காலத்துல ரோபோக்களோட பயன்பாடு அதிகமா இருக்கப் போகுது. ரோபோ டிசைன் பண்ண லட்சக்கணக்குல செலவாகும்னு பலரும் நினைச்சிட்டிருக்காங்க. 

அப்படியெல்லாம் இல்லை. சரியான பயிற்சியும் பிளானிங்கும் இருந்தா அதிக செலவில்லாம ரோபோவை டிசைன் பண்ணிடலாம். வெளிநாடுகள்ல வீட்டு வேலைகளுக்கான ரோபோக்கள் வந்தாச்சு. சமைக்கிறது, வீட்டை சுத்தப்படுத்தறதுக்கெல்லாம் அங்கே ரோபோ இருக்கு. நம்மூர்லயும் அது மாதிரி நிறைய ரோபோக்கள் வரணும். நானும் என் பிசினஸ் பார்ட்னர் வைத்யநாதனும் ரெண்டு ரோபோக்களுக்கான ஐடியாக்களை பிளான் பண்ணிட்டிருக்கோம். ஒண்ணு... ஹோட்டல்கள்ல சாப்பாடு பரிமாறும் ரோபோ. ரெண்டு கை, ரெண்டு கால்கள் இருந்தாதான் ரோபோனு நினைக்காதீங்க. ஒரு டிராலி மாதிரி இருந்தாலே போதும். ஒவ்வொரு டேபிளுக்கும் அதுவா போய் ஆர்டர் எடுத்து சாப்பாடு கொண்டு போய் கொடுக்கும். 

ஆட்கள் இல்லாத டேபிள்ல லைட், ஃபேன் ஓடிக்கிட்டிருந்தா தானா ஆஃப் பண்ணி, மின்சாரத்தை மிச்சப்படுத்தும். இன்னொண்ணு மனித வடிவ ரோபோ. நாம பேசறதைப் புரிஞ்சுக்கிட்டு சொல்ற வேலையைச் செய்யும். இந்த ரெண்டு கனவு புராஜெக்ட்டுகளையும் சீக்கிரமே முடிச்சிட்டு, அந்த சாதனை சந்தோஷத்தோட சீக்கிரமே மறுபடி சந்திப்போம்...’’  3டி புன்னகையுடன் வழியனுப்புகிறார் கிருத்திகா.
நன்றி குங்குமம் தோழி


படங்கள்: ஆர்.கோபால்

பூந்தொட்டிகள் மற்றும் தொங்கும் பூந்தொட்டிகள்

பூக்கள் மலரும் இடங்களில் நம்பிக்கையும் மலரும்...’ என்கிறதொரு பொன்மொழி. பூக்கள் சூழ்ந்த வாழ்க்கை ரசனையானது. அழகானது. ஆரோக்கியமானது. பூக்கள் பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? அதேபோலத்தான் பூந்தோட்டம் பிடிக்காதவர்களையும் பார்க்க முடியாது. மனிதர்கள் வாழும் இடங்களே சுருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், பூக்கள் வளர்ப்பதும், பூந்தோட்டம் அமைப்பதும் எப்படி சாத்தியம் என்கிறீர்களா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

இருக்கும் இடத்துக்குள் பூக்கள் வளர்க்கும் தொழில்நுட்பங்களைப் பார்ப்பதற்கு முன், பூந்தொட்டிகள் அமைக்கிற கலாசாரம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்வோமா? வாடகை வீட்டில் வசிக்கிறோம்... அங்கேயே நிரந்தரமாகத் தங்கும் பகுதி என்பது சாத்தியமில்லை. வேறு வீடுக்கு மாற வேண்டியிருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் செடிகளே வளர்க்க ஆசைப்படக்கூடாதா என்ன? நம்முடைய குழந்தைகளை வளர்க்கிறோம். 

எப்போதும் நம்முடனேயே வைத்துக் கொள்கிறோம். போகிற இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறோம்... அதுபோலத்தான் நாம் வளர்க்கும் செடிகளையும் எங்கே போனாலும் நம்முடனேயே எடுத்துச் செல்லலாம் என்கிற எண்ணத்தில் உருவானவைதான் இந்த பூந்தொட்டிகள். இன்னொரு காரணம் இடப்பற்றாக்குறை. இன்று மண் என்பதையே பார்க்க முடியாத அளவுக்கு எங்கெங்கு பார்த்தாலும் சிமென்ட் போடப்பட்ட பகுதிகள்தான். 

அந்தப் பகுதிகளை அழகுப்படுத்தவும் பூந்தொட்டிகளை வைக்கிறோம். பூந்தொட்டிகளில் மண் நிரப்புவதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். பூந்தொட்டிகளை எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்போம். வீட்டின் வராண்டா பகுதியில் அதாவது, வீட்டையும் தோட்டத்தையும் இணைக்கிற பகுதிகளில் பூந்தொட்டிகளை வைக்கலாம். வீட்டினுள்ளும் வைக்கலாம். இரண்டு அறைகளைப் பிரிப்பதற்கும் பூந்தொட்டிகளைப் பயன்படுத்தலாம். 

உதாரணத்துக்கு மணிபிளான்ட் செடியை ட்ரெல்லி அல்லது lattice என்கிற வேலி போன்ற அமைப்புடன் வைக்கலாம். அல்லது சின்ன செங்கல்கட்டு போல அமைத்து அதில் மண்ணை நிரப்பி அதற்கு மேல் செடிகளை வைக்கலாம். இரண்டு அறைகளைப் பிரிக்க room divider ஆகவும் இவற்றைப் பயன்படுத்தலாம். வீட்டுக்குள் ஆங்காங்கே செடிகளை வைக்கும்போது வீட்டுக்கும் உயிரோட்டம் வரும். வீட்டினுள் டேபிளின் மேல் செடிகளை வைக்கலாம். வீட்டின் முன் வைக்கலாம். மொட்டை மாடியில் வைக்கலாம். 

வீட்டிலேயே ஏதோ ஒரு பார்ட்டி நடத்துகிறீர்கள் என்றாலும், இந்தத் தொட்டிகளை அழகாக அடுக்கி வைத்துவிட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பவும் அவற்றை அவற்றின் இடங்களுக்கே எடுத்துச் சென்று விடலாம். பூந்தொட்டிகளிலேயே இன்னொரு வகை தொங்கும் தொட்டிகள். தொட்டிகளை ஏன் தொங்க விட வேண்டும்? 2 மாடிக் கட்டிட வீடு என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாடியிலும் தொங்கும் தொட்டிகளை அமைத்தால் அந்த உயரத்தை இணைக்கும்படியான ஒரு தோற்றத்தைக் கொடுக்கும். 

ஆகாயத்திலிருந்து தொங்குகிற மாதிரியும், செடிகள் தழைத்துக் கீழே தொங்குவதும் ரம்மியமான காட்சியாக இருக்கும். மண் தொட்டியா, சிமென்ட் தொட்டியா என்பது அடுத்த கேள்வியாக இருக்கும். மண் தொட்டியே சிறந்தது. அதில் பல வடிவங்களை வாங்கிக் கொள்ளுங்கள். சிமென்ட் தொட்டிகள் நீண்ட காலம் உழைப்பவை. ஆனால், அவற்றில் சூடு அதிகமிருக்கும். எடை அதிகமானவையாக இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், சிமென்ட் தொட்டிகளுக்கு நீங்கள் என்னதான் டெரகோட்டா பெயின்ட் அடித்தாலும் மண் தொட்டிகளுக்கே உரித்தான அந்தப் பாரம்பரியம் வராது. 

செடிகள் வளர்ப்பது என்பதே நல்ல விஷயம். அப்படி இருக்கும்போது, மண் தொட்டிகளை வாங்கி வைப்பதன் மூலம் நமது பாரம்பரிய தொழில் அழியாமல் பாதுகாக்கவும் மறைமுகமாக உதவுகிறோம். மண் தொட்டிகளில் சின்னது முதல் பிரமாண்டமானது வரை பல அளவுகள் உள்ளன. மண் தொட்டிகளுக்கும் சிமென்ட் தொட்டிகளுக்கும் இடையில் டெரகோட்டாவில் பிளாஸ்டிக் தொட்டிகளும் கிடைக்கின்றன. சிலர் அவற்றையும் உபயோகிப்பதுண்டு. இவை தவிர water saving pots என்றும் கிடைக்கின்றன. இது இரண்டு வகைகளில் பயன்
படும். வெளியூருக்குச் செல்லும்போது தண்ணீர் ஊற்றி வைத்தால் மண்ணே தண்ணீரை உறிஞ்சி வைத்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளும். 

இன்னொன்று இந்தத் தொட்டிகளை டேபிள் போன்ற இடங்களில் வைத்தாலும் தண்ணீர் வெளியே கசியாது. மேல் பகுதிக்கு ஈரப்பதம் வராது. கொசு வருமோ என்கிற பயமும் இருக்காது. இந்தத் தொட்டிகளில் ஓவல், சதுரம், வட்டம் எனப் பல வடிவங்கள் கிடைக்கின்றன. இவற்றை போன்சாய்க்கும் நாம் பயன்படுத்தலாம். இவற்றில் அடுத்த தரம் எனப் பார்த்தால் செராமிக் தொட்டிகள். அவற்றுக்கும் தனி அழகு உண்டு. இப்படி அவரவர் விருப்பம் மற்றும் வசதிக்கேற்ப தொட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம். எந்தத் தொட்டியானாலும் தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக கீழே இறங்கி வருகிறதா என்று மட்டும் பார்க்க வேண்டும்.

சரி... இவற்றில் என்ன மாதிரியான செடிகளை வைக்கலாம்?
பூச்செடிகள் வைக்கலாம்... மூலிகைச் செடிகள் வைக்கலாம். அழகுக்கான ஃபோலியேஜ் செடிகள் வைக்கலாம். பழ மரங்களைக்கூட தொட்டிகளில் வைக்க முடியும். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பதே ஒரு கலை. ஒரு தொட்டியில் ஃ வடிவத்தில் 3 செடிகளை வைத்து பிறகு அவற்றை ஷேப் செய்து அழகுப்படுத்தலாம். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பது பராமரிப்புக்கும் எளிதானது. ஒரு பெரிய தோட்டத்தைப் பராமரிப்பதற்கும் சில தொட்டிகளை வைத்துப் பராமரிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அந்தந்த செடிகளுக்குத் தேவையான விஷயங்களை மட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

இதையே வணிக ரீதியாக எப்படிச் செய்யலாம்?
50 தொட்டிகள் வைப்பது வரை அதைப் பொழுதுபோக்காகப் பார்க்கலாம். அதைத் தாண்டும் போது சமாளிப்பதும் பராமரிப்பதும் சற்றே சிரமமாகும். அந்த மாதிரி நேரத்தில் அழகான செடிகளை தொட்டிகளில் வளர்த்து வாடகைக்கு விடலாம். பெரிய பெரிய விழாக்கள் நடைபெறும் இடங்களில் பூக்கள் வைப்பது போல தொட்டிகளில் செடிகளும் வைப்பார்கள். அந்த நேரத்துக்கு அந்தச் சூழலை பசுமையாக்கித் தருவதே இவற்றின் வேலை.

தொங்கும் தொட்டிகளில் கீழே தழைத்து வருகிற மாதிரியான சின்ன கொடிகள், ஆஸ்பராகஸ், பைலியா போன்ற வகைகளை வைக்கலாம். பார்க்க அழகாக இருக்கும். பூந்தொட்டிகளை வைப்பதற்கென்றே இப்போது ஸ்டாண்டுகள் வந்திருக்கின்றன. இரும்பில் இருக்கும். வட்டவடிவத்தில் வைக்கலாம். செங்குத்தாக வைக்கலாம். ஒரே ஸ்டாண்டில் நான்கைந்து தொட்டிகளைக்கூட வைக்கலாம். இவற்றை நமது கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். ஒரு பார்ட்டி நடக்கிறது... தொட்டிகளை நடுவில் வைக்கலாமா? சுற்றி வைக்கலாமா? டேபிள் மீது வைக்கலாமா? இதையெல்லாம் அவரவர் கற்பனைத் திறனைப் பொருத்தது.

தொட்டிகளின் தரம் இன்னும் சில நாட்கள் நீடிக்க வேண்டும் என நினைத்தால் நாம் வாங்கி வரும் மண் தொட்டிகளில் ரெட் ஆக்சைடு அடித்து வைக்கலாம். தொட்டிகளைக் கீழே வைக்கும் போது தண்ணீர் தேங்காமலிருக்க Drain cells என்பவை கிடைக்கின்றன. அவற்றின் மேல் தொட்டிகளை வைத்தால் தண்ணீர் தேங்காது. தரை கெடாது. அல்லது அடியில் ஒரு தட்டு வைத்து அதன் மேல் தொட்டிகளை வைக்கலாம். ஆனால், அப்படி வைக்கிற போது அதில் தேங்குகிற தண்ணீரை முறையாக சுத்தம் செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அதுவே கொசுக்கள் விருத்தியாகக் காரணமாகி விடும்.

பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் சில முறைகள் உள்ளன. 12 இன்ச் தொட்டி என்றால் 250 மி.லி. தண்ணீர் அல்லது ஜூஸ் பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாட்டிலில் பின் வைத்து மெல்லிய துளைகள் போட்டு, தண்ணீரை நிரப்பி வையுங்கள். அதன் வழியே தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் 2-3 நாட்களுக்குக்கூட தண்ணீர் விடாமல் செடிகளைப் பராமரிக்க முடியும். மாடியில் வைப்பதற்கேற்ப எடை குறைவான மண் நிரப்புவது எப்படி என்றும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கிறோம். அவற்றையும் இந்த விஷயத்தில் பின்பற்றலாம். 

பூந்தொட்டிகளை வளர்ப்பது என்பது மிக முக்கியமான ஒரு பொழுதுபோக்கு. குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் அருமையான பொழுதுபோக்கு. கனத்த விவசாய வேலைகள் இதில் கிடையாது. ஆனாலும், விவசாயத்தில் உள்ள பல நுட்பங்களும் இதில் இருக்கும். தினம் அரை மணி நேரம் இவற்றுக்காக செலவிட்டால் மனம் அமைதியாகும். உடற்பயிற்சியாகவும் அமையும்!

பூச்செடிகள் வைக்கலாம்... மூலிகைச் செடிகள் வைக்கலாம். அழகுக்கான ஃபோலியேஜ் செடிகள் வைக்கலாம். பழ மரங்களைக்கூட தொட்டிகளில் வைக்க முடியும். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது என்பதே ஒரு கலை!

பெண்களுக்கு இது மிகவும் அருமையான  பொழுதுபோக்கு. கனத்த விவசாய வேலைகள் இதில் கிடையாது. ஆனாலும், விவசாயத்தில்  உள்ள பல நுட்பங்களும் இதில் இருக்கும். தினம் அரைமணி நேரம் இவற்றுக்காக  செலவிட்டால் மனம் அமைதியாகும். உடற்பயிற்சியாகவும் அமையும்!

பூ தலையணை

நீங்கதான் முதலாளியம்மா! 

வீ ட்டு அலங்காரப் பொருட்களிலும் அவ்வப்போது சீசன் மாறும். அந்த வகையில் வட்டமாக, சதுரமாக, நீள் வட்டமாக வீட்டின் மூலைகளை அலங்கரித்த குஷன் தலையணைகளுக்கான மவுசு சற்றே மாறி, இப்போது பூ டிசைன்களில் வருகிற தலையணைகள்தான் ஃபேஷன். சூரியகாந்தி டிசைனில், ரோஜா டிசைனில்... இன்னும் விரும்பிய டிசைன்களில் எல்லாம் இதை உருவாக்கலாம் என்கிறார் சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ராணி.    
``கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை குஷன் தலையணைகள் ரொம்பப் பிரபலமா இருந்தது. சாட்டின் துணிகள்ல கலர் கலரா, எல்லா வடிவங்கள்லயும் பண்ற அந்தத் தலையணைகளை வீட்ல சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியெல்லாம் உபயோகிக்கலாம். இப்ப அதுக்குப் பதிலா பூ தலையணை ஃபேஷனாக ஆரம்பிச்சிருக்கு. இதையும் வீட்டுக்குள்ள அழகுக்காக எங்கே வேணா வைக்கலாம். குழந்தைகளை தூங்க வைக்கிறப்ப ரெண்டு பக்கங்கள்லயும் பாதுகாப்புக்காக வைக்கலாம். காருக்குள்ளே வைக்கலாம்...’’ என்கிறார் ராணி.
பாலியஸ்டர், காட்டன், டர்கிஷ் துணி, வெல்வெட், ஃபெல்ட் என எந்தத் துணியிலும் இந்தத் தலையணைகளை தைக்கலாம். ஒரு தலையணைக்கு 2 மீட்டர் துணி வேண்டும். துணிக்கு 200 ரூபாயும், உள்ளே ஸ்டஃபிங் செய்கிற ைநலான் பஞ்சு மற்றும் இதரப் பொருட்களுக்கு 200 ரூபாயும் செலவாகும். கையிலும் மெஷினிலும் தைக்கலாம்.
``அடிப்படையான கட்டிங் முறையும் தையலும் பிடிபட்டுட்டாலே, ஒரே நாள்ல 4 தலையணைகள் வரைகூட தச்சிடலாம். ஒரு தலையணையை 700 ரூபாய் வரை விற்கலாம். உள்ளே நைலான் பஞ்சு வைக்கிறதால, அழுக்கானாலும் துவைச்சு பயன்படுத்த முடியும். எல்லா கலர் காம்பினேஷன்லயும் பண்ண முடியும்கிறது இன்னொரு சிறப்பு...’’ என்கிற ராணியிடம் 2 நாள் பயிற்சியில் இந்தப் பூ தலையணைகளை டிசைன் செய்யக் கற்றுக் கொள்ளலாம். 3 டிசைன்கள் கற்றுக் கொள்ள தேவையான மெட்டீரியல்களுடன் சேர்த்துக் கட்டணம் 1000 ரூபாய். ஒரு டிசைனுக்கு 600 ரூபாய்.
பூ தலையணையை குழந்தைகளை தூங்க வைக்கிறப்ப ரெண்டு பக்கங்கள்லயும் பாதுகாப்புக்காக வைக்கலாம். காருக்குள்ளே வைக்கலாம். சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியும் உபயோகிக்கலாம்...

Saturday, March 7, 2015

புதுமையான கஸ்டமைஸ்டு தோரணம்

ஏழாவது படிக்கிறதுலேருந்து கைவினைப் பொருட்கள் பண்றேன். இப்ப எனக்குக் கிட்டத்தட்ட 500 வகை கைவினைக் கலைகள் தெரியும். புதுசா எதைக் கத்துக்கிட்டாலும், அதுல என்னோட கிரியேட்டிவிட்டியை கலந்து, சின்னதா ஒரு வித்தியாசம் காட்டுவேன். அதுதான் என் ஸ்பெஷல்’’ என்கிறார் பாலக்காட்டைச் சேர்ந்த ஜோதிலட்சுமி. கேரளாவில் பரபரப்பான கைவினைக் கலைப் பயிற்சியாளராக இருக்கும் ஜோதிலட்சுமியின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு கஸ்டமைஸ்டு தோரணம்!

அதென்ன கஸ்டமைஸ்டு தோரணம்?

‘‘மணி, முத்து, பேப்பர், உட்... இப்படி எதை வேணாலும் வச்சு தோரணம் பண்ணலாம். நான் பண்றதுல கிரிஸ்டல் உருவங்கள் மட்டுமே இருக்கும். கேரளாவுல இந்த கிரிஸ்டல் உருவங்கள் எனக்குக் கிடைச்சது. கிரிஸ்டல் என்பதால ரெண்டு பக்கமும் டிரான்ஸ்பரன்ட்டா இருக்கும். எந்தப் பக்கத்துலேருந்து பார்த்தாலும் பளபளக்கும். அதை வச்சு தோரணம் பண்ணினப்ப பயங்கர வரவேற்பு. கணபதி, குபேரன்னு சாமி உருவங்கள்லயும் யானை, மயில் உருவங்கள்லயும் கிரிஸ்டல் கிடைக்குது. 

சாமி ரூமுக்கு, வரவேற்பறைக்கு இந்தத் தோரணங்களை மாட்டறதால வீட்டோட அழகும் கூடும். பிறந்தநாள், கல்யாணம், கிரஹப்ரவேசம்னு எந்த நல்ல நிகழ்ச்சிக்கும் அன்பளிப்பா கொடுக்கப் பொருத்தமானது இந்தத் தோரணம்...’’ என்கிற ஜோதிலட்சுமி, இந்தத் தோரணங்களிலேயே சம்பந்தப்பட்டவரின் போட்டோவை லேமினேட் செய்து இணைத்துச் செய்கிற புதுமையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘‘குழந்தைங்களோட ரூம்ல அவங்களோட போட்டோஸ் வச்ச தோரணம் மாட்டினா சந்தோஷப்படுவாங்க. 

மகனுக்கோ, மகளுக்கோ கல்யாணமாகிப் போற போது, அவங்க குடும்ப போட்டோக்களை வச்சு தோரணம் பண்ணி அன்பளிப்பா கொடுக் கிறதை விரும்பறாங்க. போட்டோவை வாங்கி, லேமினேட் பண்ணி, விருப்பமான ஷேப்ல கட் பண்ணி, தோரணத்துக்கு இடையில இணைச்சுக் கொடுக்கிறதுக்கு நிறைய வரவேற்பு இருக்கு...’’ என்பவர், தோரணத்தையே வீட்டின் அறையின் நடுவில் பிரிக்கும் திரையாகவும் பயன்படுத்த ஐடியா கொடுக்கிறார்.‘‘பட்டு நூல் பந்துகள், கிரிஸ்டல் மணிகள், கிரிஸ்டல் உருவங்கள், வளையம், நூல்னு ஒரு தோரணம் செய்யத் தேவையான பொருட்களுக்கு 750 ரூபாய் முதலீடு வேணும். 

இதுல பட்டுநூல் பந்துகள் ரெடிமேடா கடைகள்ல கிடைக்குது. அதைவிட நாமளே செய்யறதுல பணம் மிச்சமாகும்னு அதைச் செய்யவும் நானே கத்துக் கொடுக்கறேன். ஒரு தோரணத்தை 1,000 ரூபாய் வரைக்கும் விற்கலாம். போட்டோ வச்சதுன்னா இன்னும் கொஞ்சம் காஸ்ட்லி. தோரணத்தைப் போய் இவ்ளோ ரூபாய் கொடுத்து வாங்கு வாங்களானு நினைக்க வேண்டாம். பெரிய வீடுகள்ல சாதாரண தோரணம் மாட்ட யாரும் விரும்ப மாட்டாங்க. அங்கல்லாம் இந்த மாதிரி டிசைனர் தோரணங்களுக்கு ஆர்டர் வாங்கலாம். 

ஒரு நாளைக்கு 6 தோரணம் வரைக்கும் செய்யலாம். அசதியைக் கொடுக்காத அசத்தலான பிசினஸ் இது’’ என்கிற ஜோதியிடம், ஒரே நாள் பயிற்சியில் 3 வகையான தோரணம்,  திரைச்சீலை,  ஊதுவர்த்தி ஸ்டாண்ட்,  மாலை என அத்தனையையும் கற்றுக் கொள்ள தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 1,000 ரூபாய். (090481 10272)

அழகான கார் டேங்ளர்ஸ்

திங்க் பிக்’ என்பார்கள். சென்னையைச் சேர்ந்த ராணியோ, அதையே உல்டாவாக சிந்தித்திருக்கிறார். ‘திங்க் ஸ்மால்’ என்கிற அவரது ஐடியாதான் இன்று அவரை பரபரப்பான தொழில் முனைவோராக வைத்திருக்கிறது. பெரிய பெரிய பொம்மைகள் செய்யத் தெரிந்தாலும், குட்டிபொம்மை களுக்கான வரவேற்பை அறிந்து, அதிலேயே கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டவர் இவர்!

‘‘பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எல்லாரையும் போலத்தான் நானும் பொழுதுபோக்கா நிறைய கைவேலைகளைக் கத்துக்கிட்டேன். ஹேண்ட் எம்பிராய்டரி, மியூரல், ரங்கோலி, பொம்மை பண்றதுனு நிறைய தெரியும். ஒரு ஸ்கூல்ல கிராஃப்ட் கிளாஸ் எடுக்கறேன். குழந்தைங்களுக்காக குட்டிக்குட்டி பொம்மைகள் பண்ணிக் காட்டுவேன். அப்படி நான் பண்ற பொம்மைகளை நிறைய பேர் கார்ல தொங்கவிட வாங்கிட்டுப் போயிருக்காங்க. தொடர்ந்து அந்த பொம்மைகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது தெரிஞ்சதும், கார் டேங்ளர்ஸ் பண்றதுலயே ஸ்பெஷலைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். 

கார்ல தொங்க விடறதுக்கு மட்டுமில்லாம, இன்னிக்கு காலேஜ் பொண்ணுங்க, அவங்களோட ஹேண்ட்பேக்ல குட்டியா ஒரு பொம்மையை தொங்கவிடறதை ஃபேஷனா வச்சிருக்காங்க. அவங்களுக்கும் நிறைய சப்ளை பண்றேன்’’ என்கிற ராணி, கார்களில் தொங்கவிடக் கூடிய குட்டிக் குட்டி பொம்மைகள் தயாரிக்கிறார். ‘‘ஃபர் கிளாத், ஃபெல்ட் கிளாத், ஊசி, நூல், கத்திரிக்கோல், பொம்மைகளுக்கு வைக்கிற கண், மூக்கு, உள்ளே வைக்கிற நைலான் பஞ்சுனு தேவையான பொருட்களுக்கு 500 ரூபாய் முதலீடு போதுமானது. 1 மீட்டர் துணியில 4 முதல் 5 பொம்மைகள் வரை பண்ணிடலாம். ஒரு நாளைக்கு 3 பொம்மைகள் வரை தைக்கலாம். தையல் மெஷின் தேவையில்லை. கையாலயே தச்சிடலாம். ஆரம்ப விலை 40 ரூபாய்.  மாடலையும் கற்பனைத் திறனையும் பொறுத்து விலையை ஏத்தலாம். 

25 சதவிகிதம் லாபம் தங்கும். கார் டேங்க்ளர் பொம்மைகள் பண்ணத் தெரிஞ்சாலே, பெரிய பெரிய பொம்மைகளையும் சுலபமா பண்ணிடலாம். அடிப்படை தையல் ஒண்ணுதான். அதுக்கான  முதலீடும் லாபமும் இன்னும் அதிகம்’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 மாடல் கார் பொம்மை களைக் கற்றுக் கொள்ள, தேவையான பொருட்களுடன் கட்டணம் 750 ரூபாய். (94450 92276)

Saturday, January 31, 2015

ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்

கிராஃப்ட் பொருட்கள் செய்யறதுக்கான மெட்டீரியல்களை வாங்கக்கூட கணவர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கு”
- எங்கிட்ட கிராஃப்ட் வகுப்புகளுக்கு வரும் பெண்கள் பலரும் இப்படி சொல்லக் கேட்டிருக்கேன். ஒரு காலத்துல இந்த நிலையில் இருந்தவதான் நானும். இன்னிக்கு மாசம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். அதனால, நம்பி கத்துக்கோங்க, நம்பிக்கையோட களத்துல இறங்குங்க, நாளைக்கு நம் தேவைகளை மட்டும் இல்ல… குழந்தைகள், வீட்டுச் செலவுனு எல்லாத்தையும் நாமே பார்த்துக்கலாம்னு கிராஃப்ட் வகுப்புகளுக்கு வர்ற பெண்களுக்கெல்லாம் சொல்வேன். இதுதான் உண்மை!”
- சிரித்த முகத்தோடு ஆரம்பித்தார் சென்னை, பெரம்பூர் அருகேயுள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரன்.
”சின்ன வயசுல என்னோட கிராஃப்ட் ஆர்வத்தைப் பார்த்து, ‘இவளை ஏதாவது ஆர்ட் கிளாஸில் விடுங்க’னு பலரும் சொன்னாங்க. ஆனா, எங்கப்பா, அம்மாவுக்கு அது பெருசா தெரியாம போயிடுச்சு. கல்யாணத்துக்கு அப்புறம், ‘இப்போவாச்சும் உன் விருப்பப்படி கிராஃப்ட் கிளாஸ் போயேன்’னு தம்பி தூண்டுகோலா இருக்க,  கணவரும் சந்தோஷமா அனுப்பி வெச்சார். தஞ்சாவூர் பெயின்ட்டிங், மியூரல் வொர்க், குஷன் மேக்கிங், கேண்டில் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ரிட்டர்ன் கிஃப்ட்னு ஏகப்பட்ட கிராஃப்ட் அயிட்டங்களை முழுமையா கத்துக்கிட்டேன்.
பொருட்களைத் தயாரிச்சு விற்பனைக்கு கொடுத்ததோட, 15 வருஷ அனுபவம் மூலமா… ஏரியா பெண்கள், கல்லூரிப் பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள்னு பலருக்கு பயிற்சிகளையும் கொடுக்கிறேன். ராமேஸ்வரம், கோவை, துபாய்னு அழைப்புகள் வந்துட்டே இருக்கு!” என்றபோது, பெருமிதம் சாந்தி குரலில்.
”நான் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருந்த காலகட்டத்தில், என்னை மீட்டதே… இந்த கைவினைக் கலைதான். வேலைக்குப் போற பெண்களானாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களானாலும் சரி… சுற்றம் எல்லாம் சேர்ந்து அவங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துறதுல குறை வைக்கிறதில்ல. இது தொடரும்போது, மனதளவில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, அந்த நேரங்கள்ல உங்களுக்குப் பிடிச்ச ஒரு விஷயத்தை செய்து பாருங்க… மனசுக்கு புத்துணர்வு கிடைக்கும். இதுவே கைவினைப் பொருட்களா இருந்தா, மனசும் லேசாயிடும், வருமானத்துக்கும் வழி கிடைக்கும். பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிச்சுட்டா, நாலு மனுஷங்களை பார்த்துப் பழகுற அந்த அனுபவம், சுவாரஸ்யமா நம்மை அழைச்சுட்டுப் போகும்!”
- ரசித்து அனுபவித்துப் பேசுகிறார் சாந்தி.
”எனக்கு ரொம்ப பிடிச்சது, கேண்டில் மேக்கிங்தான். நான் செய்யும் கேண்டில்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமா இருக்கும். தண்ணீரில் மிதக்கும் தீபம், ரோஜா, ஆட்டின் ஷேப், ரிட்டர்ன் கிஃப்ட் விளக்குகள், கேண்டில் ஜுவல் பாக்ஸ்னு பார்க்கிறவங்களை வாங்க வைக்கும். நியூ இயர், கார்த்திகை, கிறிஸ்துமஸ் விழா காலங்கள்ல இதுக்கான தேவை அதிகமா இருக்கும். மே, ஜூன் தவிர, மற்ற மாதங்கள்ல ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும். சர்ச் ஆர்டர்கள் கிடைச்சுட்டா, எப்பவும் பிஸியா வைக்கும். ஆர்டர்களைப் பிடிக்கறதுலதான் நம்மோட சாமர்த்தியமும், வருமானத்துக்கான வழியும் அடங்கியிருக்கு.
கேண்டில் பிசினஸில் மட்டுமே மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். மற்ற கிராஃப்ட் பொருட்களையும் சேர்த்து செய்தா, கிட்டத்தட்ட 20 ஆயிரம் வரை கிடைக்கும். நான் வகுப்புகளும் எடுக்கிறதால, 25 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். சீரியஸ் படங்கள், மெகா சீரியல்கள் எல்லாம் எனக்குப் பார்க்கப் பிடிக்காது. அதனால போரடிக்கிற நேரத்தை கிராஃப்ட்டில் செலவழிக்க ஆரம்பிச்சேன். இப்போ இதுவே எனக்கு முழுநேர தொழிலா ஆகிடுச்சு!” என்ற சாந்தி, தன் அருகில் இருந்த வேக்ஸ் டெடிபியரை இதமாக வருடினார்.

நிரந்தர லாபம்… நிகரில்லா கிராஃப்ட்!
”எம்ப்ராய்டரி தொடங்கி, பெயின்ட்டிங் வரை கிராஃப்ட்டில் உங்களுக்கு இருக்கிற ஏ டு இஸட் கேள்விகள் என்னென்ன? மார்க்கெட்டிங், விளம்பரம், வருமானம், லாபம் இதிலெல்லாம் என்னென்ன சந்தேகங்கள் இருக்கு? குறிப்பா, கேண்டில் மேக்கிங்கில் வெற்றிக்கொடி நாட்டுவதற்கான சூட்சுமம் என்னென்ன? எல்லாத்துக்கும் பதில் தர தயாரா இருக்கேன். தினமும் மூணு நிமிஷத்துக்கு கீழ இருக்கற நம்பர்ல என்னைக் கூப்பிடுங்க” என்று வாசக, வாசகிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் கிராஃப்ட் பயிற்சியாளர், சாந்தி.
+(91)-44-66802912
இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள். உங்களுக்கு ஏற்ற வழிகாட்டுதல் அங்கே ஒலிக்கும்! என்ன… உங்கள் செல்போனில் ‘அவள் விகடன் வழிகாட்டும் ஒலி’ என 04466802912 எண்ணை பதிவு செய்துவிட்டீர்கள்தானே!
நன்றி விகடன்

பிஸ்தா ஓட்டில் கலைப்பொருட்கள்

உபயோகமில்லை எனத் தூக்கி எரிகிற பொருட்களில் கூட கண்களைக் கவரும் கலைநயமிக்க பொருட்களை உருவாக்கலாம் என்கிறார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கல்பனாஸ்ரீ. பிஸ்தா பருப்பின் ஓடுகளை வைத்து இவர் உருவாக்கும் ஒவ்வொரு கை வினைப் பொருளும் கொள்ளை அழகு!

‘‘சின்ன வயசுல ஸ்கூல்ல கைவினைக்கலை கிளாஸ்ல நிறைய கத்துக்கிட்டேன். கல்யாணமாகி, குழந்தைங்க, குடும்பம்னு வந்ததும் எல்லாத்தையும் தற்காலிகமா மறக்க வேண்டியிருந்தது. குழந்தைங்க பெரிசாகி, பொறுப்புகளை முடிச்சு, நிறைய நேரம் கிடைச்சப்ப, மறுபடி பழைய ஆர்வங்களை தூசி தட்டி செய்ய ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகு கைவினைக் கலைஞர்களை அடிக்கடி சந்திச்சேன். புதுசு புதுசா நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஒவ்வொருத்தரோட கற்பனையும் கைத்திறனும் பிரமிக்க வச்சது. 

ஒருமுறை தீபாவளிக்கு நிறைய பிஸ்தா பருப்பு அன்பளிப்பா வந்தது. பருப்பை சாப்பிட்டு, அதோட ஓட்டை தூக்கி எறிவோம். அப்படி இறைஞ்சு கிடந்த ஓடுகளைப் பார்த்தப்ப அதை வச்சு கலைப்பொருட்கள் பண்ற ஐடியா எனக்கு வந்தது. சும்மா சின்னச் சின்ன அயிட்டங்களா ட்ரை பண்ணிப் பார்த்ததுல எல்லாமே நல்லா வந்தது. நான் பண்ணினதை வீட்டுக்குள்ள அலங்காரமா வச்சிருக்கிறதைப் பார்த்துட்டு பரவலா எல்லாரும் பாராட்ட ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் அதையே ஒரு பிசினஸா பண்ணினா என்னனு யோசிச்சேன். 

இன்னிக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாதிரி வாழணும்கிற விழிப்புணர்வை நிறைய பேர்கிட்ட பார்க்க முடியுது. பர்சனலா உபயோகிக்கிற பொருட்கள்லேருந்து, அடுத்தவங்களுக்குக் கொடுக்கிற அன்பளிப்பு வரை, எல்லாமே இகோ ஃப்ரெண்ட்லியா இருக்கணும்னு விரும்பறவங்க இருக்காங்க. அப்படிப்பட்டவங்களுக்கு என்னோட பிஸ்தா கிராஃப்ட் அயிட்டங்கள் ரொம்பப் பிடிக்குது’’ என்கிற கல்பனாஸ்ரீ, பிஸ்தா ஓட்டில் ஹேர் கிளிப், மாலை, தோடு, பெண்டென்ட், பேனா ஸ்டாண்ட், போட்டோ ஃப்ரேம், ட்ரே, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் எனப் பலதையும் வடிவமைக்கிறார்.

‘‘பெரிய முதலீடு தேவையில்லை. வீட்டு உபயோகத்துக்கு பிஸ்தா வாங்கிக்கலாம். கால் கிலோ பிஸ்தா 250 ரூபாய். ஒட்டறதுக்கு பசை, பிவிசி பைப், மேக்ரமி திரெட், அலங்காரத்துக்கான முத்து, மணிகள்னு 350 ரூபாய் முதலீடு போதும். மாலை, ஹேர்கிளிப், தோடு ஆகியவை சேர்ந்த ஒரு செட் 250 ரூபாய்லேருந்து 300 ரூபாய் வரைக்கும் விலை போகும். ஒரு நாளைக்கு 20 அயிட்டங்கள் வரை பண்ணலாம். விருப்பப்படறவங்க இதுக்கே கலர் கொடுத்து இன்னும் அழகாக்கலாம். குறைஞ்ச உழைப்புல 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிறவரிடம், ஒரே நாள் பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்தில் 10 வகை பிஸ்தா கலைப் பொருட்களைக் கற்றுக் கொள்ளலாம் ( 9003218459).

ஜடை மாலை கொண்டை

சீவி முடிச்சு சிங்காரிச்சு.... சிவந்த நெற்றியிலே பொட்டும் வச்சு...’ என்றெல்லாம் இந்தக் காலத்து மணப்பெண்களைப் பார்த்துப் பாட முடியாது.  பின்னலை மறந்து, தலைவிரி கோலமாகத் திரிகிற அவர்கள், திருமண நாளன்றும் அப்படியே இருக்க விரும்புகிறார்கள். எத்தனை குட்டி கூந்தலையும்  பின்னி, ஜடை வைத்துத் தைத்து அலங்காரம் செய்த அந்த நாட்கள் மறைந்து கொண்டிருக்க முக்கிய காரணம் நேரமின்மை... பொறுமையின்மை...

‘உண்மைதான்... ஆசை இருந்தாலும் இன்னிக்கு ஜடை தைக்கவோ, கொண்டை அலங்காரம் பண்ணவோ யாருக்குமே நேரமும் பொறுமையும்  இருக்கிறதில்லை. பியூட்டி பார்லருக்கு போய் ஹேர் ஸ்டைல் பண்ணிட்டு வந்துடறாங்க. இதே நிலைமை தொடர்ந்தா, ஜடை தைக்கிற கலாசாரமே  நம்மை விட்டு மறைஞ்சாலும் ஆச்சரியமில்லை’’ என்கிறார் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த நளினி.

‘‘முன்னல்லாம் ரிசப்ஷனுக்கு மட்டும்தான் மாடர்ன் ஹேர் ஸ்டைல் பண்ணிட்டிருந்தாங்க. இப்ப கல்யாணங்களுக்கே கூட தலைவிரி கோலமா நிற்கற  ஃபேஷன் பரவிட்டு வருது. கல்யாணப் பெண்ணுக்கு, தலை சீவி, ஜடை தச்சு, அதை விதம் விதமா அலங்காரம் பண்ணிப் பார்க்கிற கொடுப்பினை,  இன்றைய அம்மாக்களுக்குக் கிடைக்கிறதே இல்லை. நேரமில்லைனு சொல்ற வங்களுக்காகத்தான் ரெடிமேட் ஜடைகளும், கொண்டைகளும் பண்றேன்.  முன்னல்லாம் அவங்கவங்க ஒரிஜினல் முடியிலயே விதம் விதமா ஜடை தைச்சு அலங்காரம் பண்ணுவாங்க. 

இன்னிக்கு பல பெண்களுக்கு நீளமான முடியும் இருக்கிறதில்லை. அவங்களுக்கு இந்த ரெடிமேட் ஜடையும், கொண்டையும் உதவியா இருக்கும்.  எவ்வளவு சின்ன முடி உள்ளவங்களுக்கும் இந்த ரெடிமேட் ஜடையை இணைச்சிடலாம்’’ என்கிற நளினி, 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஜடை,  கொண்டை மற்றும் மாலைத் தயாரிப்புத் தொழிலைத் தொடங்க உத்தரவாதம் தருகிறார். ‘‘சவுரி முடி, இயற்கை மற்றும் செயற்கை பூக்கள், வளையம்  அல்லது வளையல், ரிப்பன், பீட்ஸ்... இவ்வளவுதான் தேவை. 

சவுரியோட தரம், சீசனைப் பொறுத்து பூக்களோட விலைனு ஒவ்வொருத்தரோட பட்ஜெட்டும் கொஞ்சம் மாறலாம். சிம்பிளான ஒரு ஜடையை 100  ரூபாய்லேருந்து விற்கலாம். ஆண்டாள் கொண்டையை 75 ரூபாய்க்கும், மாலையை 150 ரூபாய்க்கும் விற்க முடியும். கல்யாண சீசன்ல ஆர்டர்  அதிகமாகும். ரொம்ப சுலபமா 50 சதவிகித லாபம் சம்பாதிக்கிற தொழில் இது’’ என்கிற நளினியிடம், 500 ரூபாய் கட்டணத்தில் ஜடை, கொண்டை,  மாலை உள்ளிட்ட 7 வகைகளைக் கற்றுக் கொள்ளலாம். (ரூ 96008 07887)

பட்டு நூல் நகைகள்




திருமணம் என்றாலே பட்டுக்குத்தான் முதலிடம். புடவையும் ஜாக்கெட்டும் மட்டும்தான் பட்டாக இருக்க வேண்டுமா என்ன? அணிகிற நகைகளிலும் அதன் பிரதிபலிப்பு தெரிய வேண்டாமா? பகட்டாகவும் பாந்தமாகவும் காட்டக் கூடிய பட்டுநூல் நகைகள் பற்றிச் சொல்கிற ஷர்மிளா, அவற்றை உருவாக்குவதில் நிபுணி!

‘‘ஐம்பதாயிரம் கலர்ல பட்டுப்புடவை வாங்கி உடுத்தணும்னு ஆசைப்பட்டீங்கன்னாலும், அத்தனை கலர்களுக்கும் மேட்ச்சா நகை வேணும்னா, பட்டுநூல் ஜுவல்லரியில மட்டும்தான் சாத்தியம். பட்டுநூலை வச்சு, வளையல், தோடு, ஜிமிக்கி, ஆரம், பிரேஸ்லெட், நெக்லஸ்னு எது வேணாலும் பண்ணலாம். வேற எந்த கவரிங் நகைகள்லயும் புடவையோட உடல் மற்றும் பார்டர் கலரோட அச்சு அசலா மேட்ச்சாகிற மாதிரி கிடைக்காது. பட்டுநூல் நகைகள்ல ஒரு ஷேடு கூட மாறாம அவ்வளவு மேட்ச்சா நகைகள் பண்ணலாம். 


இதை பண்றதும் சுலபம். செலவும் குறைவு...’’ என்கிற ஷர்மிளா, 200 முதல் 500 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலை துணிந்து தொடங்க நம்பிக்கை தருகிறார். ‘‘பிளாஸ்டிக் வளையல், மீட்டர் செயின், பட்டு நூல், கோல்டன் பீட்ஸ்னு இதுக்குத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. 2 வளையல் பண்ண 2 நூல்கண்டு தேவைப்படும். ஒரு மொத்த செட்டும் செய்யறதுக்கு 4 நூல் கண்டு போதும். இப்ப மெலிசான 15 வளையல் கொண்ட செட்டை கல்யாணப் பெண்கள் விரும்பி போட்டுக்கிறாங்க. 

இதுக்கிடையில தங்க வளையல் போடறதுதான் இப்ப ஃபேஷன். வளையல், தோடு, நெக்லஸ்னு ஒரு நாளைக்கு 4 முழு செட் நகைகள் பண்ணிடலாம். அளவையும் டிசைனையும் பொறுத்து 40 ரூபாய்லேருந்து விற்கலாம். சிம்பிளான செட் 400 ரூபாய்க்கும் கிராண்டா கேட்கறவங்களுக்கு 1,000 ரூபாய்க்கும் பண்ணித் தரலாம். 

இதை கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்கு பட்டுப்புடவைக்கு மட்டும்தான் போட்டுக்க முடியும்னு நினைக்க வேண்டாம். வுட்டன் மணியும், கயிறும் வச்ச சிம்பிள் செட், காலேஜ் பொண்ணுங்களுக்கும், காட்டன் சேலை விரும்பிகளுக்கும் பிடிக்கும். 50 சதவிகிதம் லாபம் நிச்சயம்’’ என்கிற ஷர்மிளாவிடம், ஒரே நாள் பயிற்சியில் இதைக் கற்றுக் கொள்ளலாம். 8 வகையான வளையல்கள், ஒரு ஆரம், தோடு, பிரேஸ்லெட், ரோப் ஜுவல்லரி அனைத்தையும் தேவை யான பொருட்களுடன் சேர்த்துக் கற்றுக் கொள்ள கட்டணம் 1,500 ரூபாய். ( 86083 30246)

கடவுள் உடை கச்சித மாலை

அம்மனுக்கு சிவப்புல ஜரிகை வச்ச புடவையும், அன்னப்பூரணிக்கு தங்க நிறத்துல தகதகனு மின்னும் சேலையும், பாபாவுக்கு ஆரஞ்சு கலர் அங்கியும், கிருஷ்ணருக்கு வெண்பட்டுல பஞ்சகச்சமும் எவ்வளவு அழகு தெரியுமா? உங்க வீட்டு பூஜை ரூம் எவ்வளவு சின்னதா வேணா இருக்கட்டும். காஸ்ட்லியான சாமி சிலைகள் இல்லாம இருக்கட்டும். அதனால என்ன? இருக்கிற சாமி உருவங்களுக்கு நீங்க விதம் விதமா தச்சு அணிவிக்கிற உடையும் மாலைகளும் உங்க பூஜை ரூமையே அட்டகாசமாக்கிடும்’’ என்கிறார் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த திலகவதி. சாமி உருவங்களுக்கான உடைகள் மற்றும் மாலைகள் தயாரிப்பதில் நிபுணி இவர்!


‘‘பிளஸ் டூ படிச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு கணவர், பிள்ளைகள், வீட்டு வேலை, சமையல்னு காலம் போச்சு. பிள்ளைங்க வளர்ந்த பிறகு நிறைய நேரம் கிடைச்சது. என் கடமைகளை எல்லாம் தவறாமப் பண்ணிட்டேன். என் சந்தோஷத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சு சின்னச் சின்ன கைத்தொழில்கள் கத்துக்க ஆரம்பிச்சேன். பெயின்ட்டிங், அலங்காரத்தட்டுனு எல்லாம் செய்வேன். அடிப்படையில எனக்கு கொஞ்சம் பக்தி அதிகம். 

அதனால என் வீட்டு பூஜை ரூம்ல உள்ள சாமி உருவங்களுக்கு அடிக்கடி புதுசு புதுசா டிரெஸ் தச்சு போட்டு அழகு பார்ப்பேன். அதைப் பார்க்கிறவங்க எல்லாம் கேட்பாங்க. நானே தைக்கிறதுனு சொன்னா ஆச்சரியமா பார்ப்பாங்க. கடையில நிறைய விலை கொடுத்து வாங்கறதைச் சொல்லி, என்கிட்ட தச்சுக் கொடுக்க ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. எந்த சாமிக்கு எந்த அளவுல என்ன மாதிரி டிரெஸ் வேணும்னு சொல்லிட்டாங்கன்னா, அதுக்கேத்தபடி தச்சுக் கொடுத்துடுவேன். 

அம்மன் பாவாடை, பஞ்சகச்சம், பாபா அங்கி, குத்துவிளக்கைச் சுத்தி அலங்கரிக்கிற துணி, சாமி சிலை வைக்கிற தாமரைப்பூனு நிறைய செய்வேன். கூடவே பட்டுநூல் மாலையும் சாட்டின் ரிப்பன் மாலையும் பண்ணுவேன்’’ என்கிற திலகவதி வெறும் 1,000 ரூபாய் முதலீட்டில் இந்த பிசினஸை ஆரம்பிக்க தைரியம் தருகிறார்.‘‘துணிக்கடைகள்ல சாமிக்கு தைக்கிறதுக்குன்னு துணிகளைப் பார்த்து வாங்கணும். 1 மீட்டர்ல சின்ன டிரெஸ் 5 தைக்கலாம். தையல் மெஷின் இருந்தா நல்லது. இல்லாதவங்க கையாலயும் தைக்கலாம். ஊசி, நூல்னு இதுக்குத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. 30 ரூபாய்லேருந்து கொடுக்கலாம். 50 சதவிகித லாபம் பார்க்கலாம்...’’ என்கிறவரிடம் 3 விதமான சாமி உடைகளையும் 2 விதமான மாலைகளையும் ஒரே நாள் பயிற்சியில கற்றுக்கொள்ள கட்டணம் 500 ரூபாய். ( 97908 12598)

Monday, November 17, 2014

தோரணம்!


அளவில் சின்ன வீடு முதல், ஆடம்பர பங்களா வரை வாசலுக்குத் தோரணம் கட்டி அழகுப்படுத்தும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு. தோரணங்கள்  கட்டும் பழக்கமில்லாதவர்கள், அதையே சுவர்களை அலங்கரிக்கும் வால் ஹேங்கிங்காக உபயோகிக்கலாம். பெரிய முதலீடோ, உடலை வருத்தும்  உழைப்போ தேவையில்லாமல் சின்ன முதலீட்டில் தோரணம் தயாரிக்கும் பிசினஸை தொடங்கலாம் என்கிறார் சுதா செல்வக்குமார்.

‘‘சாதாரண பேப்பர், ஹேண்ட் மேட் பேப்பர், சணல், ஓ.ஹெச்.பி ஃஷீட், பிளாஸ்டிக் பூக்கள், மணிகள், கிரிஸ்டல், மரம்னு எந்த மெட்டீரியல்ல  வேணாலும் தோரணம் பண்ணலாம். மரத்துல பண்றதானா, டிசைன் கொடுத்து வெளியில கட்பண்ணி வாங்கணும். மற்ற எல்லா மெட்டீரியல்களையும்  நாமளே வெட்டி டிசைன் பண்ணிடலாம். சின்னதா ஒரு பெட்டிக் கடை திறப்பு விழாவுல தொடங்கி, கார்ப்பரேட் ஆபீஸ் திறப்புவிழா வரைக்கும்  அவங்கவங்க பட்ஜெட்டுக்கு ஏத்தபடி தோரணங்கள் பண்ண முடியும். குறைஞ்ச பட்ஜெட்ல கேட்கறவங்களுக்கு பேப்பர், பிளாஸ்டிக் மணி, பூக்கள்  வச்சும், மீடியம் பட்ஜெட்ல கேட்கறவங்களுக்கு ஹேண்ட்மேட் பேப்பர், ஓ.ஹெச்.பி. ஷீட்லயும், காஸ்ட்லியா கேட்கறவங்களுக்கு மரத்துலயும் பண்ணித்  தரலாம். 

100 ரூபாய்லேருந்து. 1,000 ரூபாய் வரைக்கும் விற்க முடியும். பேப்பர்லயும் ஹேண்ட்மேட் பேப்பர்லயும் பண்றதை தோரணங்கள் தவிர, மற்ற  எல்லாத்தையும் தூசு படிஞ்சா அலசி உபயோகிக்கலாம். மரத் தோரணங்களை ஈரத்துணி வச்சுத் துடைச்சா போதும்’’ என்கிறார் சுதா.
பேப்பர் முதல் மரம் வரை எல்லா மெட்டீரியலிலும் தோரணம் செய்ய 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவையாம். ஒரு நாளைக்கு 10  தோரணங்கள் வரை செய்யலாம். 50 சதவிகிதம் லாபம் தருகிற இந்தத் தொழிலுக்கான பயிற்சியை ஒரே நாளில் கற்றுத் தரக் காத்திருக்கிறார் சுதா.  கட்டணம் 500 முதல் 2 ஆயிரம் ரூபாய். (93823 32600)









Wednesday, September 17, 2014

தகதக தஞ்சாவூர் மோடிஃப் வேலைப்பாடு!

Sunday, June 22, 2014

சிங்கார செயற்கை நீரூற்று!


Singara Water Fountain!

David Villa to retire after 2014 Wo...

சலசலக்கும் நீரோடையின் சத்தமும் அருவி நீரின் குளிர்ச்சியும் யாருக்குத்தான் பிடிக்காது? அழகான அந்த அருவியின் நீரோட்டத்தையும் அமைதி  கலந்த அதன் சத்தத்தையும் எப்போதாவது மட்டுமே ரசிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. எப்போதும் ரசிக்க முடிந்தால்? செயற்கை நீரூற்று அமைத்து,  அழகு பார்க்கலாமே...

வீட்டுக்குள்ளேயே அழகுக்காகவும் வாஸ்து நம்பிக்கைக்காகவும் செயற்கை நீரூற்று வைக்கிற வழக்கம் பரவலாகி வருகிறது. தண்ணீர் கொட்டும் ஓசை  வீட்டுக்கு நல்லது என்றொரு நம்பிக்கை. வீட்டையே அழகாக்கக் கூடியது இந்த நீரூற்று என்பது நிஜம். செய்யவும் விற்கவும் கற்றுக் கொண்டால்,  லாபம் கொழிக்கும் என்பது முக்கியச் செய்தி!

சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ, விதம் விதமான நீரூற்றுகள் செய்வதில் நிபுணி. அவரது வீட்டினுள் நுழைந்தால் முதலில் வரவேற்பது சலசலக்கும்  தண்ணீர் சத்தம்தான். பூஜையறைக்குப் பக்கத்தில், வரவேற்பறையில், சுவரில்... இப்படி எங்கெங்கு திரும்பினும் நீரூற்றுதான்! செயற்கை நீரூற்று  செய்வதைத் தொழிலாகத் தொடங்க நினைக்கிறவர்களுக்கு வழிகளைக் காட்டுகிறார் அவர்.

இது இப்படித்தான்...

• மூலப்பொருட்கள்

ஒயிட் சிமென்ட், செராமிக் பொம்மைகள், பிளாஸ்டிக் பறவைகள், பூக்கள், செடிகள், கொடிகள், புல் வகையறா, பிளாஸ்டிக் டப் (வட்டம், செவ்வகம் எனக்  கிடைக்கிற வடிவங்களில் எல்லாம்), பசை, அக்ரிலிக் மற்றும் எனாமல் பெயின்ட், ஃபவுன்டன் மோட்டார்.

• எங்கே வாங்கலாம்? முதலீடு?

ஒயிட் சிமென்ட், பெயின்ட் இரண்டும் ஹார்டுவேர் கடைகளிலும், மோட்டாரை அக்வேரியத்திலும், மற்ற பொருட்களை ஃபேன்சி ஸ்டோர்களிலும்  வாங்கலாம். ஒரு நீரூற்று செய்ய 800 முதல் 1,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.

 என்னென்ன மாடல்?
தெப்பக்குளம், கோயில் கோபுரம், ஸ்பைரல் வடிவம், மலை, பூங்கா, சுவரில் மாட்டக்கூடிய 3டி மாடல் என கற்பனைக்கெட்டும் எந்த  மாடலும்சாத்தியம்.

• எதில் கவனம் தேவை?

ஒயிட் சிமென்ட்டை சரியான பக்குவத்தில் பிசைய வேண்டும். பதம் சற்று மாறினாலும், செய்து முடித்த நீரூற்று உடைந்து போகவோ, விரிசல்  விட்டுக் கொள்ளவோ கூடும். பிறகு அதை ஒட்ட வைப்பதோ, சீர் செய்வதோ சாத்தியமின்றிப் போகும். மொத்த வேலையும் வீணாகும்.

 வருமானம்?

சிம்பிளான மாடல் நீரூற்றையே குறைந்தது 1,500 முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம். அளவு, வடிவம், அதில் பொருத்துகிற அலங்கார  பொம்மைகள், விளக்குகள் போன்றவற்றைப் பொறுத்து விலை அதிகரிக்கும். ஒரு நீரூற்றை முழுமையாக முடிக்க 2 முதல் 3 நாள் ஆகும். செய்து  முடித்ததும், அது முழுக்க காய்ந்த பிறகுதான் பெயின்ட் அடிக்க வேண்டும். நவராத்திரி, புத்தாண்டு, பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும்.  திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட எந்த விசேஷத்துக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்பதால் மற்ற நாட்களிலும் தொய்வில்லாத விற்பனை  சாத்தியம்.

• பயிற்சி?

2 நாள் பயிற்சி. தேவையான பொருட்களுடன் ஒரு மாடல் நீரூற்று செய்யக் கற்றுக்கொள்ளக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்  (95001 38796)

thanks:

Wednesday, June 18, 2014

ரூம் ஸ்பிரே... பாடி ஸ்பிரே

Room Spray ... Body  Spray ...

அலங்கார 3டி பெல்

Decorative 3-D Bell




அழைப்பு மணி இருக்கும். ஆனால், அதற்கான ஸ்விட்ச் எங்கே என்பது தெரியாது. பல வீடுகளின் நிலை இப்படித்தான். அழைப்பு மணிக்கான ஸ்விட்ச் இருக்கும் இடத்தில் ஒரு அடையாளம் இருந்தால்? அடையாளமாக மட்டுமின்றி, வீட்டையே அழகாக்கும் விதத்திலும் அதை அமைக்க முடியும் என்கிறார் கைவினைக் கலைஞர் மீனாட்சி. முப்பரிமாண பெல் செய்வதில் நிபுணி.

‘‘வீட்டு வாசல்ல காலிங் பெல் ஸ்விட்ச் இருக்கிற இடத்துல இந்த 3டி பெல்லை பொருத்தி வைக்கலாம். வாசல்படியில அழகுக்காக மாட்டலாம். பூஜையறையில பொருத்தி, பூஜையின் போது அடிக்க வசதியா, அதுலயே  நிஜமான மணியையும் மாட்டி வைக்கலாம்.  அது மட்டுமில்லாம, மாடிப்படிகள்ல சின்னதுலேருந்து பெரிசு வரைக்கும் வேற வேற அளவுகள்ல வரிசையா மாட்டி வைக்கலாம். வரவேற்பறையில மெகா சைஸ் பெல்லை அலங்காரமா மாட்டி வைக்கலாம்.

இன்னும் கல்யாணம், கிரஹப்ரவேசம்னு எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் பாரம்பரியமான அன்பளிப்பா கொடுக்க இது பொருத்தமானது’’ என்கிற மீனாட்சி, என்.ஆர்.ஐ. மக்களின் விருப்பமான அன்பளிப்புப் பொருளாக இது இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.‘‘கோயில் மணியோசையை கேட்கறதுக்கு மட்டுமில்லை, பார்க்கிறதுக்கும் அழகு. இந்த 3டி பெல் சத்தம் எழுப்பாது. தேவைப்பட்டா நாமதான் மணியைப் பொருத்தணும். இதை வீட்ல மாட்டி வச்சா சுபிட்சமா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

எந்த அளவுலயும் பண்ண முடியும். ரொம்ப சுலபமா சுவர்ல மாட்டிடலாம். மரம், க்ளே, பசை, அலங்கரிக்க குந்தன் ஸ்டோன்ஸ்னு இதுக்கு 2 ஆயிரம் முதலீடு தேவைப்படும். அது 50 சதவிகித லாபமா திரும்பக் கிடைக்கும். பூஜை பொருட்கள் விற்கற கடைகள்லயும், இன்டீரியர் அழகுசாதனங்கள் விற்கற கடைகள்லயும் விற்பனைக்கு வைக்கலாம். கொலு சீசன்ல விற்பனை அள்ளும்’’ என நம்பிக்கைத் தருகிற மீனாட்சியிடம் ஒரே நாள் பயிற்சியில்  தேவையான பொருட்களுடன் சேர்த்து 1,500 ரூபாய் கட்டணத்தில் 3டி பெல் செய்யக் கற்றுக் கொள்ளலாம். (98410 19293)

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites