இவர்களுக்கு பாஸ்டியன் என்ற 3 வயது மகன் இருந்தான். இவன் அங்குள்ள ஒரு நர்சரி பள்ளியில் படித்து வந்தான். படு சுட்டியான இவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனின் ஓவியத்தை வீணடித்ததாக கூறி, பள்ளி நிர்வாகம் கிறிஸ்டோபியை அழைத்து கண்டித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மகன் பாஸ்டியனின் கை, கால்களை கட்டி வாஷிங்மெஷினுக்குள் போட்டு விட்டு, பின் சுவிட்சை ஆன் செய்து துணி சலவை செய்வது போன்று அவனை துவைத்து எடுத்தார். இதனால் அவன் தலை மற்றும் கை, கால்களில் அடிபட்டது. இதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி சார்லின் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து கிறிஸ்டோபியை தடுத்து நிறுத்தி சிறுவன் பாஸ்டியனை வாஷிங்மெஷினியில் இருந்து மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிறிஸ்டோபியை கைது செய்தனர். இச்சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அவரது மனைவி சார்லினும் கைதானார். இச்சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில், கிறிஸ்டோபிக்கு பாஸ்டியனை பிடிக்காது. பிறந்ததில் இருந்தே அவன் மீது வெறுப்பை காட்டி வந்த அவர் கொடூரமான முறையில் கொன்று விட்டார் என்றனர். |
3 வயது சிறுவனை உடுப்பு துவைக்கும் இயந்திரத்தில் போட்டு துவைத்த கொடுமை! | ||
சிறுவர் பாடசாலையில் சக மாணவன் கீறிய படம் ஒன்றைக் கிழித்து விட்டதாக ஆசிரியை கூறியதை அடுத்து, Bastien எனும் அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கு மிருகத் தனமான தண்டனை கொடுத்துள்ளான் அந்தத் தந்தை. உடுப்புத் துவைக்கும் இயந்திரத்தினுள் வைத்து மூடி இயந்திரத்தினை இயக்கியுள்ளான். தாய் வந்து இயந்திரத்தை நிறுத்தியபோது குழந்தை முற்றாகக் குளிர்ந்து போயிருந்தது. |
0 comments:
Post a Comment