இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 28, 2011

இறந்தவர் விட்டுச் சென்ற பொருள், கொஞ்சமோ கூடுதலோ அனைத்திலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பங்குண்டு.


"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்." (அல் குர்ஆன் 4 : 7)
மேற்குறிப்பிட்ட வசனம் இறங்கக் காரணம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்திலேயே ஹளரத் அவ்ஸ் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு மகள்கள், ஒரு பருவமடையாத மகன், மனைவி.
இறந்த செய்தி கேட்டு அவரின் அண்ணன் மகன்கள் இரண்டு பேர் வந்து, விட்டுச்சென்ற அனைத்தையும் எடுத்துச் சென்றனர். காரணம், பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது (அறிவீனர்களின் காலத்தில்). பையன் இன்னும் பருவமடையவில்லை. எனவே அவனுக்கும் சொத்து கிடையாது என்றனர்.
உடனே இறந்த ஸஹாபியின் மனைவி சொன்னார்கள்: ‘சொத்துக்களை எடுத்துக் கொண்டது போல் என் இரு மகள்களையும் நிகாஹ் செய்து கொண்டால் நான் அந்த கவலையின்றி இருப்பேனே!’ என்றார்கள்.
அதுவும் முடியாது என்ற அவர்கள் சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி மறையிட்டார்கள்
அவர்கள் அநீதம் செய்யப்பட்ட நிலையை எண்ணி தீர்வை எதிர்பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் பொழுது மேற்குறிப்பிடப்பட்ட இறைவசனம் இறங்கியது.
இறந்தவர் விட்டுச் சென்ற பொருள், கொஞ்சமோ கூடுதலோ அனைத்திலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பங்குண்டு.
பங்கு விகிதத்தில் வித்தியாசம் இருப்பினும் அவசியம் பெண்ணுக்கும், பருவமடையாத ஆணுக்கும் கூட நிச்சயம் பங்குண்டு என்பதை இந்த வசனம் வலியுறுத்துகிறது.
இறந்தவர் உடுத்தியிருக்கம் உடை, அணிகலன்கள் இதுவும் பொதுச் சொத்தில் சேர்க்கப்பட்டு முறைப்படி பங்க வைக்கப்பட் வேண்டம். தர்மம் செய்துவிடக்; கூடாது. அதுபோன்றே அலுமினிய, பித்தளை, தட்டு முட்டு சாமான்கள் கூட பங்க வைக்கப்பட வேண்டும். பங்கை பெற்றுக் கொண்ட பங்பதாரிகள் தன் விருப்பப்படி தர்மம் செய்யலாம்.
சில இடங்களில் இறந்தவரை குளிப்பாட்ட புதிய வாளி, துடைக்க புதிய துண்டு போன்றவை வாங்கப்பட்டு பின்பு அதை உடைத்து விடுகிறார்கள். துணியை தூர எறிகிறார்கள். இதுவும் கூடாது.
எவரும் தான் உயிருடன் இருக்கும்போதே தன் சொத்துக்கள் அனைத்தையுமோ அல்லது அதில் பாதியையோ தர்மம் செய்வதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். மூன்றில் ஒரு பாகம் தர்மம் செய்யலாம். இரண்டு பகுதி குடும்பத்தார்களுக்காக வைக்க வேண்டும் என்றார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இறந்தவரின் சொத்தில் பங்குபெறும் எவருக்கும் - தனிப்பட்ட முறையில் இறந்தவர் ஏ
Nதுனும் ஒரு சொத்தை எழுதி விட்டுச் சென்றாலோ, சொல்லி விட்டுச் சென்றாலோ அது செல்லாது. வல்ல ரஹ்மான் அவரவர்களுக்குரிய பாகங்களை ஒழுங்காக ஒப்படைக்கும் பேற்றினை தந்தருள்புரிவானாக! ஆமீன்.
thnxs:
மவ்லவி, பி.இஸட். பரகத் அலீ பாகவி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites