இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, October 6, 2011

ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

ஞாபக சக்தியை வளர்க்கப் பயன்படும் காய்கறிகளுள் இலைக்காய்கறிகளுள் முதலிடத்தில் இருப்பது, வல்லாரைக் கீரை.
தங்களின் சிந்தனை சக்தியை வளர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் வாரம் ஒரு முறை சாப்பிட வேண்டிய கீரை இது.
இந்திய மருத்துவத்தில் ஞாபகசக்தியை வளர்க்க வல்லாரையைவிடச் சிறந்த மருந்து எதுவும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்பவர்களுக்கு வல்லாரை மாத்திரைகள் ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது.
அளவோடு சாப்பிட்டு நலமுடன் வாழ வேண்டும்.
மூளைக்கு நல்ல பலத்தையும், திறமையையும், சுறுசுறுப்பையும் தரும் இந்தக் கீரையை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது. அப்படி உபயோகித்தால் மூளை பாதிக்கப்படும். உடலில் வலி அதிகமாகும். கோமா நிலைக்குக் கொண்டு போய்விடும். எனவே வல்லாரைக் கீரையை அளவோடு பயன்படுத்த, பலவிதமான நோய்களையும் குணப்படுத்தி, நலமோடு வாழ வேண்டும்.
இது நம் நாட்டு இலைக் காய்கறி
ஆறு, வாய்க்கால், குளம், ஏரி முதலியவற்றின் ஓரங்களில் தானாகவே வளர்கிறது. வல்லாரைக் கீரை படர்கொடி, போல் வளரும். வல்லாரையின் தாயகம், இந்தியாதான். இது செடிதான்.
அதனால்தான் ஆங்கிலத்தில் இந்தக் கீரைக்கு இந்தியன் பென்னிவொர்ட் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பண்டைய இந்தியர்களின் சமஸ்கிருத நூல்களில் இந்தக் கீரையின் மருத்துவக் குணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் பயிராகும் இக்கீரை இரண்டாயிரம் மீட்டர் உயரமான மலைப்பகுதிகளிலும் கூடத் தானாகவே வளர்கிறது.
பறித்த புதிய வல்லாரைக் கீரையில் வெல்லாரைன் (Vellarine) என்னும் எண்ணெய்ப் பொருள் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கீரை மிகுந்த நறுமணத்தை உணவுக்கு ஊட்டுகிறது.
உலர்ந்த கீரையில் இந்த நறுமணம் மறைந்துவிடுகிறது. ஆனாலும் கீரையின் மருத்துவக் குணங்கள் அழியாமல் உலர்ந்த கீரையிலும், கீரைப் பொடியிலும் அப்படியே கிடைக்கிறது.




வல்லாரையில் கொழுப்பு எண்ணெய் சிட்டோஸ்டிரோல், டானின், ஒரு வகை மரப்பசை போன்ற பொருள்கள் உள்ளன. உலர்ந்த செடியில் காடிப்பொருளும், ஹைடிரோ கோட்டிலைன் என்னும் பொருளும் உள்ளன.
கீரையிலும் வேரிலும் வெல்லாரைன், பெக்டிக் அமிலம், நீரில் கரையாத மரப்பிசின் போன்றவை இருப்பதால் கசப்புச் சுவை அதிகம் இருப்பது போல் உணருகிறோம்.
கீரை மட்டும் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு ஆகிய சுவைகள் கொண்டுள்ளது.
ஊட்டம் தரும் இலைக்காய்கறி
வல்லாரைக்கீரை மிகுந்த சத்துணவு நிரம்பியது. அத்துடன் அது எளிதில் உணவை வயிற்றுக்குள் கொண்டு சென்று செரிக்கச் செய்துவிடுகிறது. உணவுப் பொருள்களையும் நன்கு உறிஞ்சிக்கொண்டு கழிவுப்பொருள்களையும் உடனே வெளியேற்றி உடலை பழையபடி ஆரோக்கியமான நிலைக்கே கொண்டுவந்துவிடுகிறது.
காய்ச்சல் உடனே தணிய….
அதனால்தான் எல்லாவகையான காய்ச்சல்களுக்கும் இதன் இலை, துளசியிலை, மிளகு போன்றவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கொடுக்கிறார்கள். காலை, மாலை என இருவேளை கொடுத்தால் காய்ச்சல் தணியும், இலையாகக் கிடைக்காதவர்கள் தலா அரை தேக்கரண்டி வீதம் வல்லாரைக் கீரைப்பொடி, துளசி இலைப் பொடி, கால் தேக்கரண்டி மிளகுப்பொடி சேர்த்துச் சாப்பிடலாம். இதை ஒரு வேளை சாப்பிட வேண்டும்.
சிறு நீர் நன்கு பிரிய
இக்கீரையைச் சாதாரணமாய்ப் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், இது உடலில் உள்ள வீக்கங்களுடன் போரிட்டுச் சமாதானப்படுத்திவிடும். உள் உறுப்புகளில் உள்ள வீக்கங்களும் குணமாகிவிடும். ஓரளவு பேதி மருந்து போலவும் இது செயல்படுகிறது. சிறு நீர் நன்கு சுரந்து உடனே வெளியேறவும் இக்கீரை பயன்படுகிறது. வாரம் ஒரு முறை உடல் உறுப்புகளைப் புதுப்பித்துக்கொள்ளவும். பல்வேறு விதமான நோய்க் கிருமிகள் அகலவும் இக்கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.
ஆரோக்கியத்தைப் புதுப்பிக்க ஒரு டீஸ்பூன்!
இல்லையெனில் உலர்ந்த வல்லாரைக் கீரைப்பொடியில் ஒரு தேக்கரண்டியும் அதே அளவு நல்லெண்ணெயும் சேர்த்துச் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இந்த முறையில் தினசரி பயன்படுத்தினாலும் ஞாபக சக்தியும் உடல் நலனும் பாதுகாக்கப்படும்.
இக்கீரையின் தண்டு, வேர், பூ என அனைத்தும் சிறந்த உணவாகவும், நன்கு குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றன. மேலை நாடுகளில் இந்தக் கீரையைச் சூப்பாக தயார் செய்து அருந்துகிறார்கள்.
100 கிராம் கீரையில் கிடைக்கும் கலோரி 37 ஆகும. இதில் ஈரப்பதம் 84.5%, புரதம் 2.1%, கொழுப்பு 0.5%, தாதுஉப்புகள் 2.7%, நார்சத்து 4.2%, மாவுச்சத்து 6.0% என்று உள்ளன. இத்துடன் 224 மில்லி கிராம் கால்சியமும், பாஸ்பரஸ் 32 மில்லி கிராமும், இரும்புச்சத்து 68.8 மில்லி கிராமும் உள்ளன. எனவே, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் இரத்த சோகை குணமாக, இக்கீரையைத் தவறாது வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வல்லாரையில் நார்ச்சத்து அதிகமாய் இருப்பதால் கொலாஸ்டிரல் குறைக்கப்படும். மலச்சிக்கலும் உடனுக்குடன் குணப்படுத்தப்படும்.
இருமலா?
வாய்ப்புண், வயிற்றுவலி, எக்ஸிமா என்னும் சொறி சிரங்கு, வயிற்றுப்புண் முதலியவற்றையும் இக்கீரை குணப்படுத்துகிறது. டி.பி. நோயால் ஏற்படும் இருமலையும் குணப்படுத்துகிறது.
சொறிசிரங்கு, வி.டி. நோய், கெட்டுப்போன இரத்தம், வயிறு தொடர்பான நோய்கள் முதலியவை குணமாக ஒரு டம்ளர் பசும் பாலில் ஒரு தேக்கரண்டி வல்லாரைக் கீரைப் பொடியும், ஒரு தேக்கரண்டி அதிமதுரமும் சேர்த்துக் கலந்து கொடுக்க வேண்டும். மிகச்சக்தி வாய்ந்த மருந்து இது. குணம் தெரிய ஆரம்பிக்கும் போது கீரைப்பொடி, அதிமதுரம் முதலியவற்றின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துப் பாலை அருந்த வேண்டும்.
வெட்டைச்சூடு குணமாகக் காலையில் வெறும் வயிற்றில் மிளகுப்பொடி சேர்த்து ஒரு தேக்கரண்டி வல்லாரைக் கீரைச் சாறு அருந்த வேண்டும்.
தலை முடி நன்கு வளரும்
ஞாபக சக்தி அதிகரிக்கவும், மன நோய் குணமாகவும், மூளை நல்ல பலத்தைப் பெறவும், தலை முடி நன்கு வளரவும் ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி அளவு இக்கீரைக் பொடியைக் கலந்து அருந்த வேண்டும். தினமும் ஒரு வேளை மட்டும் இந்த முறையில் அருந்தினால் போதும்.
மனநோயாளிகள் விரைந்து குணமாக வாரம் இருமுறை மட்டும் இக்கீரையைச் சமைத்துப் பரிமாறலாம்.
காசநோய்க்காரர்களுக்கு ஏற்படும் தொண்டைக்கட்டு, தொண்டைக்கம்மல் முதலியவை இக்கீரையை உண்டால் குணமாகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி உடனே குணமாக நான்கு இலைகள், சீரகம், சர்க்கரை சேர்த்து துவையலாக அரைத்துப் பயன்படுத்த வேண்டும். இது மிகச்சக்தி வாய்ந்த உணவு மருந்தாகும். இந்தத்துவையலை கொப்பூழ் பகுதியைச் சுற்றித்தடவ வேண்டும், உணவாகவும் கொடுக்க வேண்டும்.
நரம்புத் தளர்ச்சியா?
தோல், நரம்பு, இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக இக்கீரையைப் பொடியாகத் தினமும் பாலுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். பலவீனம் அடைந்த நரம்புகளைப் புதுப்பிக்க அரை தேக்கரண்டி வீதம் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும. முதல் நாள் மட்டுந்தான் அரை டீஸ்பூன். மறுநாளிலிருந்து அளவைக் குறைத்துக்கொண்டே வந்து ஒரு சிட்டிகை வரை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு என்றால் ஒரு சிட்டிகையே போதும்.
யானைக்கால் வியாதி குணமாகும்!
இக்கீரையின் செடி, தண்டு, கீரை முதலியவற்றலிருந்து சாறு எடுத்து, யானைக்கால் வியாதியுள்ள பகுதிகளில் தடவினால் நாளடைவில் குணமாகும். அல்லது பறித்த கீரைகளை வேகவைத்துத் துணியில் கட்டிச் சூட்டுடன் குறிப்பிட்ட இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம்.
இக்கீரைப் பொடித் தூளை நாட்பட்ட புண்கள் மீது தூவினால் குணமாகும். மேகப்புண் மற்றும் சொறி சிரங்குகளின் மீது இது போலவே தூவ வேண்டும்.
பல்லில் படிந்துள்ள மஞ்சள் நிறம் அகல இந்தக் கீரையால் பல் துலக்கலாம். நிறம் மாறி பற்களும் வெண்மையாகிவிடும்.
கொப்புளங்கள் குணமாக இலைச் சாறுடன் கருஞ்சீரகம் நெய் ஆகியன சேர்த்துப் பூச வேண்டும்.
ஆரோக்கியத்துடன் உடல் உறுதி பெற வல்லாரைக் கீரையையும், கீரைப்பொடியையும் அளவுடன் பயன்படுத்தி, அளவற்ற நன்மை பெற வேண்டும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites