இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 30, 2011

நம் நாட்டைப் பொறுத்தவரை ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு திருமணம்தான் அவனது அந்த பிறவி முழுவதற்குமான இன்ப துன்பங்களை நிர்ணயிக்கும் விஷயமாக கருதப் படுகிறது.

ம் நாட்டைப் பொறுத்தவரை திருமணம் என்பது சட்ட பூர்வமானது. `ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நம் கலாசாரத்தை காட்டும் தாரக மந்திரம்போல இருக்கிறது. மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண், என்பதை இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகத்தான் நமது கலாசாரம் கருதுகிறது. அது ஒரு பாவச் செயல்போல குறிப்பிடப்படுகிறது. ஆனால் மேலை நாட்டவரின் நிலைமையே வேறு. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்களுடைய பெரும்பாலான பொறுப்புகளை அரசாங்கமே ஏற்றுக் கொள்வதால் அவர்களால் இஷ்டம்போல் வாழ முடிகிறது.
நம் நாட்டைப் பொறுத்தவரை ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு திருமணம்தான் அவனது அந்த பிறவி முழுவதற்குமான இன்ப துன்பங்களை நிர்ணயிக்கும் விஷயமாக கருதப் படுகிறது. அது மட்டுமல்லாமல் சமூக பாதுகாப்பு என்பதும் திருமணத்தால் ஏற்படுவதால் அதற்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு பெண்ணின் பாதுகாப்பு, சந்ததியினரின் கல்வி, வளர்ச்சி, எதிர்காலம், பெற்றோரின் வயோதிக கால பாதுகாப்பு ஆகிய அனைத்தும் இந்த திருமண கட்டமைப்பில் அடக்கம்.
வெளிநாட்டவர் பலரும் மதித்துப் பெருமைப்படும் விதமாக இந்திய திருமணங்கள் இருக்கின்றன. சிக்கல்கள் வந்தாலும் அந்த சிக்கல்கள் குறைவுதான். நம் நாட்டில் விவாகரத்து என்பது இரு குடும்பங்களையும் பாதிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. விவாகரத்து என்பது சமூகத்தில் சற்று சறுக்கலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. விவாகரத்து பெற்ற பெண்கள் `வாழாவெட்டி’ என்ற பெயரோடு தாய்வீட்டில் அடைக்கலம் புகுந்த காலங்கள் மாறி பெண்கள் எந்த நிலையிலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் சூழல் நிலவும் இந்த கால கட்டத்திலும் விவாகரத்து என்பது விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் ஒருவனுக்கு ஒருத்தியாக அனுசரித்துச் செல்லும் வாழ்க்கையே முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில்கூட முந்தைய காலத்தில் மன்னர்களும், வசதி படைத்தவர்களும் பலதார மணம் முடித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். பல பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வாழ்க்கை எந்த அளவுக்கு நிம்மதியாக இருந்தது என்று தெரியவில்லை. அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சேர்த்துக்கொண்டு வாழும் முறை ஐரோப்பிய நாடுகளில் இன்றும் உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது, `ஒப்பந்த மனைவிகள்’ என்ற முறை!
எந்த ஒரு விஷயத்தையும் தூரத்திலிருந்து பார்த்து சரி, தவறு என்று சொல்லிவிட முடியாது. அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்றபடிதான் அங்குள்ள மனிதனின் வாழ்க்கை முறையும் அமையும். சில நாடுகளில் வயதானவர்கள் துணைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் பணக்கார பெண்களை தங்களுடன் சேர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவளது செலவில் தானும் வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம்.
தற்போது உலகளாவிய நிலையில் ஒப்பந்த மனைவிகள் உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கி யிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு ஒன்று சேர்ந்து வாழும் அவர்கள் `ஒப்பந்தம் முடிந்த பின்பு எங்கள் எதிர்காலம் என்னவாகும்? ஒப்பந்த காலத்தில் கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றுவிட்டால் அந்த குழந்தைக்கு யார் பொறுப்பு? குழந்தையை பராமரிப்பது யார்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒப்பந்த மனைவிகளை வைத்துக் கொள்ளும் செல்வந்தர்கள் அந்த மனைவிகளின் எதிர்கால தேவைகளுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக் கிறார்கள். பணம் படைத்த ஆண்களிடம் ஏமாந்து, தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விடக்கூடாது என்பதில் ஒப்பந்த மனைவிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்.
அவர்களது போராட்டங்களாலும், அதனால் ஏற்படும் சமூக சிக்கல்களாலும் ஐரோப்பிய நாடுகளில் பல, இந்தியாவின் திருமண முறை பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது. `ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற வாழ்க்கை முறையே உயர்வானது என்பதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.
அதே நேரத்தில் இந்தியாவில் வசதி வாய்ப்பு கொண்டவர்கள், பாரம்பரிய கலாசாரத்தை மறந்துவிட்டு `வெளிநாட்டு ஒப்பந்த மனைவிகள் முறை இங்கு வந்தால் மகிழ்ச்சியாக இருக்குமே’ என்ற ரீதியில் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைதான் இதில் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
நன்றி-தினத்தந்தி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites