இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, October 24, 2011

இப்படி ஒரு சிக்கலில்தான் கிரண் பேடியும் சிக்கியுள்ளா


சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். கிறித்துவுக்கு முந்தைய 63ம் ஆண்டில், ஜுலியஸ் சீஸர் ரோம் சாம்ராஜ்யத்தின் தலைமை போதகராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  இதற்காக அவருக்கு அரசாங்கத்தால் ஒரு வீடு ஒதுக்கப் படுகிறது.   அந்த வீட்டில் சீஸரின் மனைவி போம்பியா அந்த வீட்டில் ஒரு விருந்து வைக்கிறார்.  அந்த விருந்தில் ஆண்கள் யாரும் அனுமதிக்கப் படமாட்டார்கள்.  ஆனால் பெண் வேடமிட்டு பூப்லியஸ் க்ளோடியஸ் புல்ச்சர் என்ற இளைஞன் சீசரின் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறான்.  அவன் பிடிக்கப் பட்டு விசாரணைக்கு நிறுத்தப் படுகிறான்.   போதுமான சாட்சிகள் இல்லாததால் அவன் விடுதலை செய்யப்படுகிறான்.  ஆனாலும் சீசர் தன் மனைவி போம்ப்பியாவை விவாகரத்து செய்கிறார்.  அதற்கு சீஸர் சொன்ன காரணம், என் மனைவி சந்தேகத்தின் நிழலில் கூட இருக்கக் கூடாது.   இந்தக் கதையிலிருந்துதான் சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற வாக்கியத் தொடர் வந்தது.
இப்போது சந்தேகத்திற்கு உள்ளான சீஸரின் மனைவி யார் தெரியுமா ?  அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் முன்னணியில் இருந்த கிரண் பேடிதான் அது.   அன்னா ஹசாரே போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கிரண் பேடி பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.   அரசியல்வாதிகள் ஊழல் பேர்விழிகள் என்றும், அன்னா ஹசாரேதான் இந்தியாவின் விடிவெள்ளி என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் பேசினார்.
 DSC04708
அடுத்தவரை குறை சொல்வதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா ?   உங்களின் கடந்த கால தவறுகள் எப்படி இருந்தாலும், தோண்டி எடுத்து கண்டு பிடிக்கப் பட்டு விடும்.   மிக மிக கவனமாக, அது வெளியில் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், நிச்சயமாக அது கண்டுபிடிக்கப் படும்.  அப்போது, நீங்கள் பேசிய பேச்சுக்களும், எடுத்த நிலைபாடுகளும் உங்கள் முகத்தில் அறையும்.  இத்தனை நாட்களாக நீங்கள்  கவனமாக கட்டிக் காத்து வந்த உங்களின் இமேஜ் சரி செய்ய முடியாத அளவுக்கு அதள பாதாளத்தில் வீழ்ந்து போகும்.   அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது.
இப்படி ஒரு சிக்கலில்தான் கிரண் பேடியும் சிக்கியுள்ளார்.   கூட்டங்களில் பேசுவதற்காக அவரை அழைக்கும் அமைப்புகளிடமிருந்து விமான டிக்கட்டுகள் வாங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது ஆதாரத்தோடு அம்பலமாகியுள்ளது.  அதாவது விமானத்தில் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்து விட்டு முதல் வகுப்புக்கான டிக்கட்டுகளின் விலையை க்ளெய்ம் செய்துள்ளார்.  மேலும், வீர தீரச் செயலுக்கான விருது பெற்றவர் என்ற வகையில், அவருக்கு ஏர் இந்தியா விமான கட்டணத்தில் 75 சதவிகிதம் சலுகை இருந்தும், முதல் வகுப்பில் பிரயாணம் செய்தது போல போலியாக பணம் பெற்றுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.  இவ்வாறு இவர் கூடுதலாக பெற்ற பணத்தை தான் எடுத்துக் கொள்ளவில்லை மாறாக, அவரது என்ஜிஓ அமைப்பான இந்தியா விஷன் பவுன்டேஷன் என்கிற அமைப்பின் கணக்கில் வரவு வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
 kiran-bedi-1
1979ம் ஆண்டில் கிரண் பேடிக்கு வீரதீரச் செயல் புரிந்ததற்கான விருது வழங்கப் பட்டுள்ளது.  பிப்ரவரி 2001ல் வெளியான சுற்றறிக்கையின் படி, வீர தீர விருது பெற்றவர்களுக்கும், அவரோடு பயணம் செய்யும் ஒருவருக்கும், ஏர் இந்தியா விமானத்தில் இரண்டாம் வகுப்பிலும், ரயிலில் ஏசி வகுப்பிலும் 75 சதவிகித கட்டணச் சலுகை உண்டு.
 1
29 செப்டம்பர் 2011ல் கிரண் பேடி டெல்லியிலிருந்து ஐதராபாத்துக்கும், ஐதராபாத்திலிருந்து சென்னைக்கும் பிறகு டெல்லிக்கும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார்.   இந்த பயணத்துக்காக கிரண் பேடி செலுத்திய சலுகை கட்டணம் 17,134/-.  ஆனால் கிரண் பேடி 73,117 ரூபாய் செலவாகியுள்ளதாக க்ளெய்ம் செய்துள்ளார்.
30 மே 2011 அன்று  டெல்லியிலிருந்து பூனாவுக்கும், மும்பையிலிருந்து சென்னைக்கும் தனியார் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.  இதற்கு ஆன செலவு 12,458/-.  கிரண் பேடியை அழைத்த சேரிட்டீஸ் எய்ட் பவுன்டேஷன் என்ற அமைப்பிடம் கிரண் பேடி க்ளெய்ம் செய்த தொகை 26,386/-.
25 நவம்பர் 2010ல் டெல்லியிலிருந்து மும்பைக்கு தனியார் விமானத்திலும், மும்பையிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்திலும் பயணம் செய்கிறார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 14,097.    கிரண் பேடி பர்ஸ்ட் மான்டிசோரி கான்பெரன்ஸ் என்ற அமைப்பிடமிருந்து க்ளெய்ம்  செய்த தொகை 42,109/-.
2009 மார்ச் 6 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்கு சென்று பிறகு திரும்பி ஏர் இந்தியா விமானத்தில் வந்துள்ளார் கிரண் பேடி.  இதற்கு ஆன செலவு 12,483.    நோவார்டிஸ் என்ற தனியார் நிறுவத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 32,495.
2008 டிசம்பர் 5 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்கு சென்று பிறகு திரும்பி ஏர் இந்தியா விமானத்தில் வந்துள்ளார் கிரண் பேடி.  இதற்கு ஆன செலவு 12,614.    கிரண் பேடி பெற்ற தொகை 31,387.
2007 மார்ச் 24 அன்று டெல்லியிலிருந்து பெங்களுர் சென்று பிறகு டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 9,625.  இன்டஸ் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற அமைபிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 29,872.
2007 மார்ச் 8 அன்று டெல்லியிலிருந்து ஐதராபாத் சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 8,331.  ஆந்திரா தலைமைச் செயலக ஊழியர் நலச் சங்கத்திலிருந்து  கிரண் பேடி பெற்ற தொகை 25,163
2006 நவம்பர் 21 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,689.  லீமேன் பிரதர்ஸ் நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 30,084
2006 அப்டோபர் 14 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,691.  சஹாரா இந்தியா நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 30,085
 2
2006 அக்டோபர் 10 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,689.  மிடிடெக் நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 21,098
2006 மே 21 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 5,733.  திருபாய் அம்பானி பள்ளியிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 29,181
2006 மே 12 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 5,733.  திருபாய் அம்பானி பள்ளியிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 18,085
இந்தச் செய்தி நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லி பதிப்பில் வெளியானது. இந்தச் செய்தி வெளியானதும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கிரண் பேடி, இந்தத் தொகைகள் அனைத்தும், என்ஜிஓ அமைப்புக்கு சேமிப்பாக சேர்க்கப் பட்டது என்றார்.  அந்த அமைப்பின் பொருளாளரும் இதே கருத்தை வழிமொழிந்தார்.
டிசம்பர் 2007ல் கிரண் பேடி ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெறுகிறார்.   டிசம்பர் 2007க்கு முன், அவர் பயணம் செய்து, தவறாக பெற்ற தொகைகள் அனைத்தும், அது அவருக்காக இருந்தாலும், வேறு ஒருவருக்காக இருந்தாலும், லஞ்ச ஒழிப்புச் சட்டப் படி தண்டனைக்குரிய குற்றம்.
 KiranBedi-seminar
லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவு 13 (1) (d) (i), (ii) மற்றும் (iii) என்ன சொல்லுகிறது தெரியுமா ?
  
13. Criminal misconduct by a public servant
(1) A public servant is said to commit the offence of criminal misconduct,-
(i) by corrupt or illegal means, obtains for himself or for any other person any valuable thing or pecuniary advantage; or
(ii) by abusing his position as a public servant, obtains for himself or for any other person any valuable thing or pecuniary advantage; or
(iii) while holding office as a public servant, obtains for any person any valuable thing or pecuniary advantage without any public interest; or
ஒரு பொது ஊழியர், தனக்காகவோ, அல்லது வேறு ஒருவருக்காகவோ விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அல்லது, பொது ஊழியராக இருக்கும் போது, வேறு யாரோ ஒருவருக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அவர் கிரிமினல் மோசடி தவறை செய்தவர் ஆகிறார் என்றுதான் சட்டம் சொல்கிறது.
சட்டம் தெளிவாக, “தனக்கோ அல்லது வேறு ஒருவருக்காகவோ” என்று சொல்கிறது.   அந்த வேறு ஒருவர், கிரண் பேடி தலைமையேற்று நடத்தி வரும் ட்ரஸ்டாகவும் இருக்கலாம்.  இப்படிப்பட்ட ஒரு குற்றத்தை ஒருவர் செய்து விட்டு, ஊழலைப் பற்றிப் பேசலாமா ?
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மிகச் சரியாக, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியக் கூடாது என்று சொல்லியுள்ளார். ஒரு ட்ரஸ்டுக்கு தலைமை நிர்வாகியாக (Chairperson) இருந்து கொண்டு, அந்த ட்ரஸ்டுக்கு, போலியான பயணப் பட்டியல்களைக் கொடுத்து அதில் வரும் பணத்தை செலவிட்டேன் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் ?
இவரைப் போன்ற நபர்கள் ஊழலுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதால் தான் இந்தப் போராட்டம் முனை மழுங்கடிக்கப் படுகிறது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites