இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 16, 2012

குறைந்த முதலீட்டில் குணபஜலம் மீன் வளர்ச்சி ஊக்கி



கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் பல தீவிர மாற்றத்துற்Ì உள்ளாகியுள்ளது. சாகுபடியை பெருக்கும் எண்ணத்தில், அறிவற்று இராசயன உரங்களையும், பூச்சிகொல்லி தெளிப்பான்களையும் உபயோகித்து, விவசாயத்தை ஒரு வியாபார ரீதியான நடைமுறையாக மாற்றியுள்ளது.

கேள்விக்குறிய உண்மை:
இராசயனங்கள் அதிக மகசூல் தர உதவுகிறது எனில், விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் விரக்தியால் தங்கள் விளை நிலங்களை விற்பதும் ஏன், என்று கேட்கிறார், முனைவர் கமலாசனம் பிள்ளை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர், UK-NARDEP கன்னியாகுமரி, தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம், கோழிக்கொட்டுபோதையின் பெண் விவசாயியான திருமதி.தங்கம் கூறுகையில், முதலீட்டை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக லாபம் தரும் ஒரே தொழில் வேளாண்மையாகும் என்கிறார். மேலும் நெல், காய்கறி, பழவகைகள் என எவ்வகையினை விவசாயம் செய்தாலும், அவற்றை குறைந்த ஈடுபொருட்களை கொண்டு சிறந்த முறையில் பராமரித்தோம் எனில், அதிக லாபம் தரும்.

பல விவசாயிகள் காலங்காலமாக அங்கீகரிக்கப்பட்டு, பாரம்பரியம் செயல்முறை பருத்திவந்த பயிற்சிகளை மறந்துவிட்டனர். இரசாயனங்கள் அதிக மகசூல் தருவதைவிட, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகிறது என்பதை ஒவ்வொரு விவசாயியும் உணர்ந்த பின், மெதுவாக பாரம்பரிய இயற்கை விவசாய முறையற்று மாறி வருகின்றனர் என்று விவசாயியான மாணிக்கவாசகர் கூறுகிறார். கூடுதலாக, நிலம், நீர், காற்று ஆகியவற்றில் தீங்கு விளைவிக்காத, சில செய்முறைகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, மீன் குணாபஜலம் அல்லது மீன் வளர்ச்சி ஊக்கி, திருமதி. தங்கம் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தின் பல விவசாயிகள் இப்பாரம்பரிய முறையை பயன்படுத்துகின்றனர். ரோஜா, மிளகாய் மற்றும் நெற்பயிர் வளர்ச்சிக்கு இதனை உபயோகிக்கின்றனர். மீன் வளர்ச்சி ஊக்கியின் தயாரிப்பு முறை: சுமார் ஒரு கிலோ மீன் வேஸ்ட் (மீன் சுத்தம் செய்த பின் கிடைக்கும் வீணான பாகங்கள்) மற்றும் ஒரு கிலோ பிளாஸ்டிக் டிராம்மில் வைக்கவும். இதனை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு நன்கு கலக்கி, நிலவின் வைக்கவும்.
பதினைந்து நாட்களுக்கு பின், இதை வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம் (ஒரு லிட்டர் ஏக்கர் நிலத்திற்கு 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் விகிதம் மீன் ஊக்கியை கலந்து கொள்ளவும்).

தெளிக்கும் நேரம்:
அதிக பூச்சி தாக்குதல் உள்ள காலை அல்லது மாலை நேரத்தில் இதை தெளிக்கலாம். நெற் பயிர்களுக்கு இதை தெளிக்கவும் செய்யலாம் அல்லது அரிசி அல்லது கோதுமை உமி அல்லது மண்புழு உரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து நிலங்களுக்கு போடலாம்.
மேலும் ஒரு செய்முறையானது, அரிவாள் மனை பூண்டு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை தயாரிக்க அரிவாள் மனை பூண்டுயை சிறு துண்டுகளாக வெட்டி, 5 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இத்தண்ணீர் ஒரு லிட்டர் வரை நன்கு கொதிக்க விட்டு, அதில் சுமார் 5 கிராம் பெருங்காயம் நன்கு கரையும் வரை கலக்கவும்.
இக்கரைசல் குளிர்ந்தவுடன், அதை வடிகட்டி பின் தெளிக்க பயன்படுத்தலாம்
 ஒரு ஏக்கர் நிலத்திற்கு, நூறு லிட்டர்  தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் விகிதம் நன்கு கலந்து, தெளிக்கவும். இக்கரைசலை தயாரிக்க 10 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இராசயன உரங்களை உபயோகித்தால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 1500 முதல் 2000 ரூபாய் வரை செலவிடவேண்டும். மாறாக மேற்குரிய இயற்கை கரைசல்களை உபயோகித்தல் ஒரு ஏக்கர்க்கு சுமார் 100 ரூபாய் மட்டுமே செலவாகும். “இதை உணர்த்து விவசாயின் குறைந்த செலவுத்திட்டத்திலான இயற்கை இடுபொருட்களை உபயோகிக்கலாம்” என்று திரு மாணிக்கவாசகம் கூறுகிறார்.
தொடர்புக்கு: திருமதி.எம்.தங்கம்
கோழிக்கொட்டுபொதை
குமாரப்புரம் தோப்பு அஞ்சல்
கன்னியகுமரி மாவட்டம் , தமிழ்நாடு
அலைபேசி: 9952607450 மேலும்
முனைவர்.கமலாசனம் பிள்ளை
உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர்
UK - NARDEP
விவேகனாந்தபுரம் , கன்னியாகுமரி 629 702, தமிழ்நாடு
மின்னஞ்சல்: azollapillai@gmail.com
தொலைபேசி: 9387212005

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites