இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Monday, February 27, 2012

மெழுகு பொம்மை தயாரிப்பது எப்படி

பார்த்த நொடியில் கவனம் ஈர்க்கின்றன சாந்தி செய்கிற மெழுகு பொம்மைகள். பரிசளிக்கவும் அலங்காரமாக வைக்கவும் ஏற்ற வகையில் மிக்கி மவுஸ், பிள்ளையார் என விதம்விதமான உருவங்களில் அசத்துகின்றன அத்தனையும். குறைந்த முதலீடும் குறைந்த நேர உழைப்பும் தேவைப்படுகிற மெழுகு பொம்மை தயாரிப்பு, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்குக் கணிசமான லாபம் தரும் என்கிறார் சாந்தி. ‘‘ஒரு எக்சிபிஷன்ல இதே மாதிரி பொம்மைகளைப் பார்த்தேன். அதைப் பண்றவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கத்துக்கிட்டேன். வீட்டுக்கு வர்றவங்களுக்கு அதை அன்பளிப்பா கொடுக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு பிறந்த நாள் பார்ட்டில கொடுக்கிறதுக்கும், கொலுவுக்கும் மொத்தமா ஆர்டர் வர ஆரம்பிச்சது. அப்படியே வளர்ந்து, இன்னிக்கு கடைகளுக்கும் சப்ளை பண்றேன். இதைச் செய்யறது ரொம்ப சிம்பிள். பெரிய உடலுழைப்பு தேவையில்லை. ஆனா, திருப்தியான லாபம் நிச்சயம்’’ என்கிறவர்,...

பூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி

பருவ வயதில் அடியெடுத்து வைக்கும்போதே பரு... முகம், கை, கால் என உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சி... பொலிவோ, பள பளப்போ இல்லாத சருமம்... இன்றைய தலை முறைப் பெண்கள் பலருக்கும் இருக்கும் இந்தப் பிரச்னைகள், அந்தக் காலத்துப் பெண்களுக்கு இருந்ததில்லை. காரணம், தினசரி வாழ்க்கையில் அவர்கள் பின்பற்றிய மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கம். காணாமல் போன பல பாரம்பரியங்களில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் ஒன்றாகி விட்டது. மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி எனத் தெரிந்தாலும், அதைத் தொடத் தயாராக இல்லை இன்றைய இளம் பெண்கள். ‘‘இளம் பெண்கள் மஞ்சளைத் தவிர்க்கக் காரணம், பளீர்னு தெரியற அந்த கலர். பார்க்கிறவங்க கிண்டல் பண்ணுவாங்களேங்கிற தயக்கம்தான் அவங்களைத் தடுக்குது. கஸ்தூரி மஞ்சள் தடவினா, மஞ்சள் பூசினதே தெரியாது. சரும நோய்களும் அண்டாது. இதை எடுத்துச் சொல்லி, பலரை பூசிக்க வச்சேன். இப்ப வாடிக்கையாளர்கள் லிஸ்ட்ல எனக்கு இளம்பெண்கள்...

மின்சாரக் குத்துவிளக்கு

இது இன்ஸ்டன்ட் உலகம். விரல் நுனியில், ரிமோட்டில் அலுங்காமல் குலுங்காமல் எந்தச் சாதனத்தையும் இயக்கலாம் இன்று. அந்த வரிசையில் லேட்டஸ்ட்...ஸ்விட்ச் போட்டால் ஒளிரக்கூடிய தீபங்கள் மற்றும் குத்து விளக்குகள். எண்ணெய் பிசுக்கு போக விளக்கைத் தேய்க்க நூலில் திரி தயாரிக்கவோ, விளக்கேற்றவோ மெனக்கெட வேண்டியதில்லை இன்றைய பெண்கள். ஸ்விட்சை தட்டினால், திரி வைத்து,எண்ணெய்  ஊற்றிப் பற்ற வைத்தது போல ஜெகஜோதியாக மின்னும் விளக்குகள் விற்பனைக்கு வந்து விட்டன. மொத்தவிலையில் விளக்குகளை வாங்கி, அவற்றில் பல்பும் ஒயரும் பொருத்தி, மின்சாரத்தில் எரியும் வகையில் தயார் செய்து விற்பனை செய் வதே முழுநேரத்தொழில் சென்னையைச் சேர்ந்த சந்திராவுக்கு. தனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுத்து,தொழில் தொடங்க ஆலோசனைகளும்சொல்கிறார் அவர்.‘‘சொந்தக்காரங்ககிட்ட கத்துக்கிட்டேன். பித்தளை, ஒயிட் மெட்டல், தேவைப்பட்டா வெள்ளின்னு எதுல வேணாலும்...

ரெக்சின் பை தயாரிப்பது எப்படி

சாதாரண பர்ஸில் ஆரம்பித்து, கைப்பை, பயணப்பை என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பலரும் உபயோகிப்பது ரெக்சினால் செய்யப்பட்டவற்றையே... விலை அதிகம், விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுவது எனப் பல காரணங்களுக்காக தோல் பைகளைத் தவிர்ப்பவர்களுக்கும் ரெக்சின் பைகளே சரியான மாற்று! ரெக்சின் பைகள் தைத்து விற்பனை செய்வதையே முழு நேரத் தொழிலாகச் செய்கிறார் விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தைச் சேர்ந்த பேபி மலர். 'பத்தாவது படிச்சிருக்கேன். மேல படிக்க வசதியில்லை. ஏற்கனவே தையல்ல ஆர்வம் இருந்ததால, ரெக்சின் பை தைக்க கத்துக்கிட்டேன். பேங்க் லோன் போட்டு, அதையே ஒரு பிசினஸாவும் ஆரம்பிச்சு நடத்திட்டிருக்கேன். பர்ஸ், ஸ்கூல் பை, ஆபீஸ் பை, மார்க்கெட் பைனு பல மாடல்கள் பண்றேன். எல்லா...

பனை ஓலையில் பொருள் சேர்க்கலாம்

சுற்றுச்சூழலுக்குக் கேடு என்று தெரிந்தும், பிளாஸ்டிக் உபயோகத்தைக் கைவிடுவதாக இல்லை நாம். சாப்பிடுகிற சிப்ஸில் இருந்து, அணிகிற செருப்பு வரை சகலத்திலும் பிளாஸ்டிக் கலப்பு! நாகை மாவட்டம் வேட்டைக்கார நெருப்பைச் சேர்ந்த பெரியநாயகி தயாரிக்கிற பொருள்கள் ஒவ்வொன்றும், பிளாஸ்டிக்குக்கு சரியான மாற்று! தொப்பி, தட்டு, கூடை, பை, பூக்கள், பூந்தொட்டி... இப்படி பிளாஸ்டிக்கில் தயாரிக்கக்கூடிய அத்தனை அயிட்டங்களையும், இயற்கைக்கு உகந்த பனை ஓலையில் செய்கிறார் இவர். ‘‘அஞ்சாவதுக்கு மேல படிக்கலை. கூலி வேலைக்குப் போயிட்டிருந்தேன். மகளிர் சுய உதவிக் குழுவில சேர்ந்தா, சுய தொழில் பண்றதுக்கு பேங்க் கடன் கிடைக்கும்னு சொன்னாங்க. சேர்ந்தேன். பனை ஓலைல பொருள்கள் தயாரிக்கக்...

பிரெட்கிராப்டிங் தயாரிப்பது எப்படி

பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க எத்தனையோ கவுரவமான வழிகள் உள்ளன. அவசரஅவசரமாய் தூங்கியெழுந்ததும் ஒன்றும் பாதியுமாய் சமையலை முடித்து அரக்கப்பரக்க குழந்தைகளை பள்ளிக்குத் துரத்தி விட்டு ஓட்டமும் நடையுமாய் சென்று காலைப் பேருந்தை பிடித்து அலுவலகம் போனால் உயரதிகாரியிடம் திட்டு வாங்கி... இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு சாரசரி பெண்ணால் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்? அதிகபட்சம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்குமா? * அதே அளவு வருவாயை நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு விருப்பமான நேரத்தில் பிடித்தமான வேலையைச் செய்யவும் முடியும். அட அது எப்படி என்கிறீர்களா? சாப்பிட பயன்படுத்துகிறோமே ரொட்டி. அதைக் கொண்டு விதவிதமான வடிவங்களில் கலைப் பொருட்களைச் செய்வதுதான்...

சோப்பு தயாரிப்பது எப்படி

சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் .நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக  போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள்  துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில்  பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும். தயாரிப்பது எப்படி? சோப் தயாரிக்கும் இயந்திரம்...

Sunday, February 26, 2012

'கேப்' விழுந்திருச்சா?..உடனே காரணத்தை கண்டுபிடிங்க!

திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப் பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். மன அழுத்தம் தம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம், பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது. குடும்ப பிரச்சினை உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும்...

இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்!

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது. பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பத்மாசனம் பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும். புஜங்காசனம் புஜங்காசனம்...

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா

பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது  என்று என்றாவது  நீங்கள் யோசித்தது  உண்டா ? மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய  ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார். சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த  ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense)...

ஜெராக்ஸ் உருவான எப்படி

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க  செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே  நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம். 1960 மார்ச் மாதம் “ ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து ...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites