இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, February 16, 2012

காதல் பறவைகள்


 




ஒன்றை ஒன்று பாராவிட்டால்
உயிர் கூடு துறந்து
போகுமாம்
அன்றில் பறவையின்
உயிர் பறவை..
அன்பே...
ஒவ்வொரு முறை உன்னை பார்க்க வரும் போதெல்லாம்..
ஒரு கவிதையோடு வருவேன்..
உன் கையில் கொடுத்துவிட்டு
உன் முகத்தின் மாற்றங்களை
மௌனமாக ரசிப்பேன்..
எப்போதும் என்னை ஏமாற்றா நீ
எனக்கு மட்டும் காணக் கிடைக்கும்
உன் கன்னத்து சிவப்பை அப்போதும் 
அள்ளித் தருவாய்..
தினம் என்னை பார்க்கிறாய்..
மணிக்கணக்கில் பேசுகிறாய்..
ஆனாலும் உன் கவிதைகள்
தினம் தினம் புதிதாகவே இருக்கிறதே
எப்படி? என்று பொய் சந்தேகப் பார்வை பார்ப்பாய்..
நான் புன்னகைத்தபடியே
உன் இரு விழி நதிகளில்
என் விழி ஓடையைக் கலக்க விடுவேன்..
தினம் கொடுக்கும் ஒரே விளக்கத்தை
வெவ்வேறு உவமைகளில் நான்
சொன்னாலும் அன்றுதான்
கேட்பது போல
வெட்கத்தை மட்டும் 
பரிசாகத் தருவாய்..
இன்றும் ஒரு விளக்கம்...
வழக்கம் போலே
எனக்கு உன் வெட்கம்...
நாளைக்கு...
புது உவமை..
அதே விளக்கம்
ஆனால்
என்றும் புதிதாய்
தெரியும்
உன் 
வெட்கம்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites