கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் பல தீவிர மாற்றத்துற்Ì உள்ளாகியுள்ளது. சாகுபடியை பெருக்கும் எண்ணத்தில், அறிவற்று இராசயன உரங்களையும், பூச்சிகொல்லி தெளிப்பான்களையும் உபயோகித்து, விவசாயத்தை ஒரு வியாபார ரீதியான நடைமுறையாக மாற்றியுள்ளது.
கேள்விக்குறிய உண்மை:இராசயனங்கள் அதிக மகசூல் தர உதவுகிறது எனில், விவசாயிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் விரக்தியால் தங்கள் விளை நிலங்களை விற்பதும் ஏன், என்று கேட்கிறார், முனைவர் கமலாசனம் பிள்ளை, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி துறை தலைவர், UK-NARDEP கன்னியாகுமரி, தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம், கோழிக்கொட்டுபோதையின் பெண் விவசாயியான திருமதி.தங்கம் கூறுகையில், முதலீட்டை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக லாபம் தரும் ஒரே தொழில் வேளாண்மையாகும் என்கிறார். மேலும் நெல், காய்கறி, பழவகைகள் என எவ்வகையினை விவசாயம் செய்தாலும், அவற்றை குறைந்த ஈடுபொருட்களை கொண்டு சிறந்த முறையில்...