இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 20, 2012

பேனா ஸ்டாண்ட் ஸ்பூன் ஸ்டாண்ட் வியாபாரம்

‘‘பேனா ஸ்டாண்டோட உபயோகம் இல்லாத வீடே இருக்காது. குழந்தைங்களுக்கு தனியா பேனா ஸ்டாண்ட் கொடுத்துட்டா, அவங்களோட பென்சில், பேனா உள்ளிட்ட பொருள்களை பத்திரமா வச்சுப்பாங்க. அதுலயும் அவங்களுக்குப் பிடிச்ச கார்ட்டூன் மாடல், போட்டோ வச்ச மாடல்ல பண்ணிக் கொடுத்தா சந்தோஷப்படுவாங்க’’ என்கிற சுதா, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘பிவிசி பைப் (விருப்பமான அளவுகளில்), உபயோக மில்லாத பழைய சிடி, மரத்துண்டுகள், பல் குத்தும் குச்சி வரும் பெட்டி, குட்டிக்குட்டி பானைகள், ஓ.ஹெச்.பி. ஷீட், கண்ணாடி, பேப்பர் கப், ஃபோம் ஷீட், மேக்ரமி ஒயர், பசை, அலங்காரப் பொருள்கள்... 500 ரூபாய் முதலீடு போதுமானது.’’

என்ன ஸ்பெஷல்?

‘‘கடைகள்ல கிடைக்கிற பேனா ஸ்டாண்ட் குறிப்பிட்ட சில மாடல்கள்லதான் இருக்கும். நாமளே நம்ம கைப்பட செய்யறப்ப, என்ன வடிவத்துல, என்ன உருவத்துல வேணாலும் பண்ணலாம். குழந்தைங்களுக்கு பொம்மை வடிவம், இளைஞர்களுக்கு ஆண், பெண் முக வடிவம், பெரியவங்களுக்கு சாமி உருவம்னு விருப்பப்படி பண்ணலாம். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அவங்க கம்பெனி லோகோவோட பண்ணலாம். ஒரு நாளைக்கு 7 முதல் 8 ஸ்டாண்ட் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘கடைகள், பள்ளிக்கூடங்கள், ஓட்டல்கள், கம்பெனிகள்ல சுலபமா ஆர்டர் பிடிக்கலாம். 60 ரூபாய்லேருந்து, 750 ரூபாய் வரை மாடலை பொறுத்தது விலை. 50 சதவீத லாபம் நிச்சயம்.’’

அந்திமந்தாரை சுய உதவிக் குழு 15.03.2004 முதல்  15 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு    மண் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்       
               
                                                     
 
  1. பூச்சாடிகள் தயாரித்தல், சுவர் மாட்டிகள். பேனா ஸ்டாண்டு, கரண்டி ஸ்டாண்டு,
  2. அலங்கார மெழுகுவர்த்தி ஸ்டாண்டு
  3. சேலை. தலையனை உறை மற்றும் கைகுட்டைகள் வர்ணம் தீட்டுதல்




                                                    

                                                               

              
மேற்படி தயாரிப்பு பொருட்கள் சென்னை, மதுரை மற்றும் புதுடில்லி ஆகிய இடங்களில் நடைபெறும் விற்பனை கண்காட்சிகளில் இடம் பெற்று வருகிறது.  சென்னையில் நடைபெறும் வருடாந்திர நவராத்திரி கண்காட்சி தவறாது இடம் பெற்று வருகிறது.  2005 ம் வருடம் செப்டம்ர் மாதம் சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் மாநில அளவில் விற்பனையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites