இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Thursday, December 31, 2015

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை!

22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்!  பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத். பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு  மணி நேர பயண தூரத்துல இருக்கிற...

35 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.18 லட்சம்...இணைய விற்பனையில் கலக்கும் இளம் விவசாயி!

தேடலும், புதுமையான முயற்சிகளும் மட்டுமே வெற்றிக்கான சூத்திரங்கள். இதை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களால்தான் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், தெளிவான திட்டமிடலோடு, முயற்சி செய்பவர்கள், வெற்றிக்கனியை சுலபமாகப் பறித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியாளர்களில் ஒருவர்தான், இளம் விவசாயி ஜெயந்த். கிராமத்திலேயே குடியிருந்தும் சிலரால், சரியாக விவசாயத்தைக் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், சென்னையில் கணினித்துறையில் பணியாற்றிக்கொண்டே... தேனி மாவட்டத்தில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயத்தையும் செய்து வருகிறார், ஜெயந்த். அதோடு, தனது விளைபொருட்களை இணையம் மூலமாக விற்பனையும் செய்து வருகிறார். போடிநாயக்கனூர் பரமசிவன்...

பண்ணை

4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை! ‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரை. பல வகையான பயிர்கள், கால்நடைகள்... என்று பண்ணையம் செய்தால், நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது அனுபவ விவசாயிகள் பலருடைய ஆலோசனை! இதைத் தெளிவாகப் பின்பற்றி வஞ்சகமில்லாமல் வருமானம் எடுக்கும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருக்கும் சதுப்பேரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன். சாத்துக்குடி, எலுமிச்சை, மா, மல்லிகை, முல்லை, முள்ளில்லா மூங்கில், தேக்கு ஆகிய பயிர்களோடு... ஆடு, கோழி என கால்நடைகளையும் வளர்க்கிறார், மணிவண்ணன். ஒரு...

காய்த்துக் குலுங்கும் நெல்லி... பூத்துக் குலுங்கும் சம்பங்கி...

அசர வைத்த அய்யாவின் ஆலோசனை! ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி ‘‘நம்மாழ்வார் என்கிற ஆலமரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விழுதுகள் உருவாகி தனித்தனி மரங்களாகத் தழைத்து அவர் பெயரை உரக்கக் கூறிக் கொண்டிருக்கின்றன. அந்த அற்புத ஆலமரத்தில் நானும் ஒரு சிறு விழுது” என்கிறார், கரூர் மாவட்டம், பரமத்தி அடுத்துள்ள வேட்டையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரன். நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த பாடத்தை அச்சுப் பிசகாமல் தனது பண்ணையில் நடைமுறைப்படுத்தியும் வருகிறார், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான மனோகரன். பண்ணையின் முகப்பில் வரிசைகட்டி நிற்கின்றன, நான்கு வேப்பமரங்கள். வேப்பிலைகள் தாலாட்டும் மரத்தில் மாட்டப்பட்டிருக்கிறது, நம்மாழ்வார் புகைப்படம்....

செண்டுமல்லி 77 ஆயிரம் ரூபாய்...குண்டுமல்லி 34 ஆயிரம் ரூபாய்...

மகத்தான லாபம் கொடுக்கும் மலர்கள் ! இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன் விவசாயத்தில் ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் எனக் கிடைக்குமாறு பிரித்துக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று விவசாய வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி வருமானம் தரும் பயிர்களில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்றவை தினசரி வருமானத்துக்கு ஏற்ற பயிர்களாக இருந்தாலும், அவற்றில் முதலிடம் வகிப்பவை பூக்கள்தான்!  பூ சாகுபடியில் பெரிய தேவையே... வேலையாட்கள்தான். ஆனால், இன்றைக்கு வேலை ஆட்கள் கிடைப்பது பிரச்னையாக இருக்கும் நிலையிலும், அதைச் சமாளித்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டி வருகிறார்கள் பூ விவசாயிகள். அந்த வகையில் பெண்களுக்கு...

Thursday, December 10, 2015

நீங்கள் வாங்கும் நெய் தரமானதா? ஷாக் ரிப்போர்ட்

மணல் மணலான நெய், மணமணக்கும் நெய் என்றெல்லாம் நெய் விளம்பரங்களில் சொல்வது நமக்குத் தெரியும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் ஆய்வு குறித்தும், நெய் தொடர்பாக நுகர்வோர்கள் சொன்ன கருத்துக்களையும் இங்கே பார்க்கலாம்.ஒப்பீட்டு ஆய்வு!ஒப்பீட்டு ஆய்வு என்பது நுகர்வோர் பயன்படுத்தும் பல பொருட்களை அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் உள்ளதா  என சோதித்து அதில் கண்ட உண்மைகளை வெளியிடுவதாகவும். இதில் அப்பொருள் பற்றிய பயன்பாடு, தரம், பயன்படும் நாட்கள், பயன்படுத்துவதில் நுகர்வோர்க்கு ஆலோசனைகள், தயாரிப்பாளருக்கு ஆலோசனைகள் என பல வகையிலும் இந்த  அறிக்கை அமைந்திருக்கும். கான்சர்ட் இந்திய  நுகர்வோர் நலத்துறையின் அனுமதியுடன் இது போன்ற...

அதிகச் சம்பள உயர்வு பெற 7 வழிகள்!

சம்பள உயர்வு என்பது வருடத்துக்கு ஒருமுறை நிறுவனங்களில் நடக்கும் நடைமுறை. இதில் சிலருக்கு அதிகச் சம்பள உயர்வும், சிலருக்குக் குறைந்த அளவில் சம்பள உயர்வும் இருக்கும். இந்தச் சம்பள உயர்வில் அதிகச் சம்பள உயர்வைப் பெற வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கும். இந்த ஆசை நினைத்தவுடன் நடந்துவிடாது. இதற்கு அந்த வருடம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து போலாரிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டாளர் பாலமுருகன் விளக்குகிறார்.        1. உங்களின் சம்பளத்தை நிறுவனம் ஏன் உயர்த்த வேண்டும். ஏதாவது தனித் திறமை உள்ளதா, அதனால் அந்த நிறுவனத்துக்கு என்ன பயன் என்பதை நீங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும்....

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites