இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Thursday, July 13, 2023

பேக்கரி தொழில்

 முந்தைய காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட கேக், திருமணங்கள், அலுவலகக் கொண்டாட்டங்கள், முக்கிய பண்டிகை தினங்கள் எனப்பல நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருளாக மாறிவிட்டது. பல்வேறு பேக்கரிகளில் ரசாயன சேர்மானங்கள் சேர்த்து கேக், சாக்லேட் தயாரிக்கப்படுவதாகப் பலரும் ஆதங்கப்படும் நிலையில், அதற்கு மாற்றாக உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தாத கேக் வகைகளை நாடுவோர் அதிகரித்து வருகின்றனர். நான் வசிக்கும் பகுதியிலேயே 20 பேர் வீட்டில் இருந்தபடியே கேக் தயாரிக்கின்றனர். எனக்குத் தெரிந்தே சென்னையில் நூற்றுக்கணக்கானோர் இந்தத் தொழிலில் இருக்கின்றனர். ஆனால், எல்லோருக்குமே ஆர்டர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் விருப்பும் கேக், சாக்லேட் தயாரிப்பில் தரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் ஆர்டர்கள்...

தையால் தொழில்லில் நல்ல லாபம்

 விழுப்புரத்தைச் சேர்ந்த மான்விழி கண்ணன், டெய்லரிங் தொழிலில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஃபேஷன் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.வர்லாம் வாங்க!காலங்கள் மாற, மக்கள் தங்கள் உடைகளிலும் புதுமைகளை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கான ஆடைகள் தயாரிப்பில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் ஏராளம். அதிலும் மணமகளுக்கான ஆடை, அலங்காரப் பொருள்கள் தயாரிப்பில் பெரிய வியாபார வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என ஒவ்வொரு தருணத்திலும் ஏராளமான வேலைப்பாடுகளுடன்கூடிய ஆடைகள், அவற்றுக்குப் பொருத்தமான அலங்காரப் பொருள்களைத் தயாரித்து, ஒரு திருமண ஆர்டரிலேயே பல ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதுபோல சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் உட்பட வழக்கமான பயன்பாடுகளுக்கான ஆடை களிலும் பல்வேறு டிசைன்களைப் புகுத்தி அட்டகாசமான வருமானம் ஈட்டலாம்.ஒரு பிளவுஸ்... பல...

சிறுதானிய மிக்ஸ் தயாரிப்பில் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தனது தொழில்

 வழக்கத்தைவிடவும் கொரோனாவுக்குப் பிறகு மூலிகைப் பொருள்களுக்கான தேவையும் வரவேற்பும் அதிகரித்துவிட்டது. இன்றைய அவசர உலகில், தினமும் பொறுமையுடனும் பக்குவத்துடனும் குழம்பு வைக்கப் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. குழம்பு செய்வதற்குத் தேவையான அடிப்படை மசாலா மற்றும் இதர உணவுப் பொருள்களைச் சேர்ந்து பவுடராகச் செய்து விற்பனை செய்யலாம். இதனால் பத்தே நிமிடங்களில் குழம்பு தயாரித்துவிடலாம். இதுபோன்ற காரணங்களால் மூலிகை, சிறுதானிய தயாரிப்புகளுக்குஅதிக வரவேற்பு உள்ளது. இந்தத் தொழிலில் பெரு நிறுவனங்களைவிடவும், குடிசைத் தொழிலாக நேர்த்தியுடன் தயாரிப்பவர்களையே மக்கள் அதிகம் நாடுகின்றனர்.பாரம்பர்யத்தில் பலவித தொழில் வாய்ப்புகள்!பிரண்டை, வல்லாரை, முடக்கத்தான் கீரை உட்பட பல்வேறு மூலிகைகளையும் பவுடர் செய்து அவற்றைச் சிறுதானிய மாவில் கலந்து தோசை மிக்ஸ் வடிவில் விற்பனை செய்யலாம். அவற்றில் தண்ணீர் சேர்த்துக் கரைத்துத்...

இனிப்பான வருமானம் தரும் தேனீ வளர்ப்பு

 கிராமத்தினர் முதல் நகரத்தினர் வரை அனைவரும் வீட்டில் இருந்தே எளிய முறையில் தேனீ வளர்ப்பில் வெற்றி பெற ஆலோசனைகள் வழங்குகிறார், மதுரையைச் சேர்ந்த ‘விபிஸ் இயற்கைத் தேனீப் பண்ணை’ உரிமையாளர் ஜோஸ்பின்.வர்லாம் வாங்க!குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அருமருந்து தேன். உலகம் முழுக்க இதற்கான வரவேற்பு அதிகம் இருக்கும் சூழலில், தேனில் கலப்படமும் பெருகிக் கொண்டே இருப்பதைத் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். காடுகள் அழிப்பு, இயற்கைச் சூழல் சீர்கேடு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் சிறப்பான தேன் உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. அதேநேரம், தேனீ வளர்ப்பு மூலமாகத் தேன் உற்பத்தி என்பது கொஞ்சம் கொஞ்சமாக, பெருக ஆரம்பித்துள்ளது. வீடு, தோட்டம், மாடி...

கேட்டரிங் தொழிலில்

 எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், எந்த வேலையில், எந்த நாட்டில் வசித்தாலும் அடிப்படையில் உணவுதான் ஒருவருக்கான முதல் தேவை. படிப்பு, பணிச்சூழலால் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் பலரின் முதல் தேடல் வீட்டுப் பக்குவத்திலான தரமான உணவுதான். பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்ய, வயதான பெற்றோர் பலரும் நல்ல உணவுக்காக ஏங்குவார்கள். இப்படி நம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்போரை நம்பியே சிறிய அளவில் உணவு தயாரிப்புத் தொழிலைத் தொடங்கினால், தானாகவே பலரும் நம்மைத் தேடிவந்து நிரந்தர வாடிக்கை யாளர்களாக மாறுவார்கள்.எல்லா நாளும் வருமானம்!மூன்று வேளைக்கான உணவுகள் தயாரிப்பது தவிர, குழம்பு, பொரியல், இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ் வகை உணவுகளையும் தனித்தனியேகூட விற்பனை செய்யலாம். உணவுக்கடை தொடங்க முடியாதவர்கள், ஆர்டரின் பேரில் வீட்டில் இருந்தே உணவு தயாரிக்கலாம். முதல் ஆறு மாதங்கள் பெரிதாக லாபம் பார்க்காமல், வாடிக்கையாளர்கள்...

வளமான வருமானம் தருமே பெட்ஸ் சொந்தங்கள்!

 வளர்ப்புப் பிராணிகளைக் காலங்காலமாகவே நம் முன்னோர்கள் தங்கள் வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். அந்த வழக்கம் தற்போதுவரை தொடர்ந்தாலும், சில வளர்ப்புப் பிராணிகளைப் பெருமிதத் துக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் வளர்ப்போரும் அதிகரித்துவிட்டனர்.பச்சைக்கிளி, குருவி, குரங்குகள் உட்பட இந்திய வனப்பகுதியில் வளரும் விலங்குகள், பறவைகள், பிராணிகள் எதையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. ஆனால், நாய், பூனை, வெளிநாட்டுப் பறவைகள், பிராணிகள் உட்பட இந்தியாவில் வளர்க்க அனுமதியுள்ள வளர்ப்புப் பிராணிகளை வளர்த்து வரு மானமும் ஈட்டலாம். பல நிறங்களில் ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் உள்ளன. அவை ஜோடி 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு மூன்று முறை இனப் பெருக்கம் செய்யும்....

எப்போதும் கைவிடாத கைவினைத் தொழில்கள்!

 பெண்கள் அனைவரும் வெளி வேலைக்குச் செல்வது சாத்தியமில்லாதது. அதேநேரம், குடும்ப பொருளாதாரச் சூழலால் வீட்டில் இருந்தே வேலை செய்ய நினைக்கும் பெண்களுக்குச் சிறந்த தொழில் வாய்ப்பாக ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் கைவினைத் தொழில்கள் அமையும். இதற்காகப் பயிற்சி எடுக்கப் பெரிதாக அலையத் தேவையில்லை. நகை மற்றும் ஆடை அலங்காரம், கோலம் போடுவது, மெகந்தி உள்ளிட்ட விஷயங்களில் பெண்களுக்கு இயல்பாகவே ஆர்வம் அதிகம் இருக்கும். அதையே கொஞ்சம் நுணுக்கத்துடன் தெரிந்துகொண்டால், வியாபார வாய்ப்புகளாக மாற்றலாம். வீட்டில் இருந்தபடியே பல்வேறு கைவினைத் தயாரிப்புகள் மூலம் நிறைவாகச் சம்பாதிக்கலாம். இதற்கு அதிக செலவுகள் இருக்காது. ஆனால், கலை ஆர்வமும் தொடர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளும்...

நர்சரி தொழில்......

 சென்னை ‘ஆக்ஸி கிரீன் நர்சரி’ உரிமையாளரான உமா ஆனந், செடிகள் மீதான ஆர்வத்தில் ஐ.டி வேலையை விட்டுவிட்டு நர்சரி தொழிலுக்கு வந்தவர். இந்தத் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார்.வர்லாம் வாங்க!நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கறிகளும் உணவுப்பொருள்களும் ரசாயன உரங்கள் பயன்படுத்தியே விளைவிக்கப்படுகின்றன. இந்த விழிப்புணர்வு பலதரப்பட்ட மக்களுக்கும் ஓரளவுக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, பலரும் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைத்து முடிந்த அளவில் காய்கறிகளை விளைவித்துக்கொள்ள விரும்புகின்றனர். இடவசதி இல்லாதோர், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போர் பால்கனியில் சில தொட்டிகளில் அவுட்டோர் செடிகளையும், வீட்டுக்குள் இண்டோர் செடிகளையும் வளர்க்கின்றனர். திருமணங்களில் மரக்கன்றுகள், விதைகளை ரிட்டர்ன் கிஃப்டாகக் கொடுப்பது அதிகரித்துவிட்டதால், நர்சரி தொழில் செய்வோருக்கான தேவை...

பெண்கள் சுயதொழில்...

வீட்டுக்காரர் தவறினதுக்குப் பிறகு, அவர் கவனிச்சுகிட்டு இருந்த பாக்குமட்டை தயாரிப்புத் தொழிலை நான் நடத்த ஆரம்பிச்சேன். ஆர்டர்கள் கிடைச்சாலும், வர்ற வருமானம் தயாரிப்புச் செலவுக்கே சரியா இருக்கு. சொல்லிக்கிற அளவுக்கு லாபம் நிக்கிறதில்ல. எந்த இடத்துல சிக்கல் ஏற்படுதுனு கணிக்கவே முடியல’ – தொழில் முனைவோராக இரண்டு ஆண்டுகள் அனுபவம் கொண்ட கமலாவின் கவலை இது!தொழிற்சாலைகள் நிறைந்த அந்த ஊரில், ஒருவர் உணவுக்கடையும், மற்றொருவர் ஜவுளிக்கடையும் புதிதாகத் தொடங்கினர். அங்கிருக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் பலரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். வெளியூர்களைச் சேர்ந்த அவர்கள் அந்த ஊரில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். வீட்டு உணவை எதிர்பார்க்கும் அவர்களின் தேவையை அறிந்து, உணவுக்கடையைத் தொடங்கிய ராணிக்கு அந்தத் தொழில் விரைவாக வளர்ச்சியடைந்தது. தொழிற்சாலைகளில் வழங்கப்படும் சீருடைகளையே பயன்படுத்தும் அங்கிருந்த பணியாளர்கள்,...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites