இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, September 17, 2014

உடனடி இடியாப்பம்!

உடனடி இடியாப்பம்!

இட்லி, தோசை போன்று மிகவும் விரும்பிச் சாப்பிடும் ஓர் உணவு இடியாப்பம். அரிசியைத் தவிர வேறு எந்த பொருட்களும் இதில் சேர்க்கப் படுவதில்லை என்பதால் குழந்தை முதல் வயதானவர்கள் வரை எந்த பயமும் இல்லாமல் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
இதை தினமும் வீட்டில் செய்வதென்றால் கொஞ்சம் போர் அடிக்கத்தான் செய்யும். காரணம், செய்முறை சரியாக இருந்தால்தான் சுவையான இடியாப்பம் கிடைக்கும்.
இன்றைய பரபரப்பான உலகில் யாருக்கும் ரிலாக்ஸ்டு-ஆக இடியாப்பம் செய்யும் பொறுமை இல்லை. தரமான, சுவையான இடியாப்பம் ரெடியாக கிடைத்தால் நன்றாக இருக்குமே என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.
இன்றைக்கு உடனடி இடியாப்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இருக்கவே செய்கிறது.
முதலில், இடியாப்ப மாவை மாவு பிசையும் இயந்திரத்தில் போட்டு பிசையவேண்டும். பிறகு, அதை இடியாப்பமாக பிழிந்தெடுக்கும் இயந்திரத்துக்கு மாற்றவேண்டும்.
குறிப்பிட்ட எடையில் வட்டமாக முறுக்கு பிழிவதுபோல் அந்த இயந்திரமே பிழிந்தெடுத்துவிடும். இதை நவீன ஓவன்களில் வைத்து 55-60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காய வைக்கவேண்டும். இப்படி தயாரான இடியாப்பத்தை பேக்கிங் செய்து அனுப்ப வேண்டியதுதான். இந்த நவீன ஓவன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 1,200 இடியாப்பம் தயார் செய்ய முடியும்.
இந்த இடியாப்பத்தை மீண்டுமொருமுறை வேகவைக்க வேண்டாம். சூடான நீரில் நனைத்தாலே சாப்பிடும் பக்குவத்துக்கு வந்துவிடும். விற்பனைக்கு கொண்டு செல்லும்போது செய்முறை விளக்கத்தையும் தந்துவிட்டால் மார்க்கெட்டிங் செய்வதில் சிக்கல் இருக்காது. இதேமுறையில், ராகி இடியாப்பம்கூட செய்யலாம்.
திட்ட அறிக்கை!
இடம் - வாடகை
இயந்திரம் - 8.75 லட்சம்
நடைமுறை மூலதனம் - 2.25 லட்சம்
மற்ற உபகரணங்கள் - 1 லட்சம்
மின்சாரம் - பயன்பாட்டுக்கு ஏற்ப
மொத்தம் - 12 லட்சம்
நமது பங்கு 5% - 60 ஆயிரம்
மானியம் 25% - 35% - 3 லட்சம்
வங்கிக் கடன் - 8.40 லட்சம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாநில அரசின் நீட்ஸ் திட்டம் அல்லது பொது மானிய திட்டம் என ஏதாவது ஒன்றில் மானியம் பெற வாய்ப்பு உண்டு.
திட்ட அனுமானங்கள்!
1. நாள் ஒன்றுக்கு 120 கிலோ அரிசி உபயோகித்து இடியாப்பம் செய்யலாம்.
2. உற்பத்தி செய்யும்போது 10 முதல் 12% எடை குறையும்.
3. ஒரு மணி நேரத்துக்கு 1,200 இடியாப்பம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இயந்திரம்.
4. 150 கிராம், மற்றும் 200 கிராம் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யலாம்.
5. தரமான அரிசி 30 ரூபாய்க்கு கிடைக்கும்.
6. 150 கிராம் பாக்கெட்டில் 8 முதல் 9 இடியாப்பம் உள்ள வகையில் உற்பத்தி செய்யவும்.
7. இதை பாலிதீன் பைகளில் (40 மைக்ரான்) உங்கள் பெயர் மற்றும் செய்முறையோடு உள்ள பைகளில் 150 கிராம் அல்லது 200 கிராம் பாக்கெட்களில் பேக் செய்யவும்.
8. பேக்கிங் செலவு ஒரு கிலோவுக்கு ரூ.1.15
9. வேலையாட்கள்.
மேலாளர் 1ஜ் 10,000 = 10,000
இயந்திர தொழிலாளர்கள் 2 ஜ் 8,000 = 16,000
பேக்கிங் தொழிலாளர்கள் 3 ஜ் 6,000 = 18,000
விற்பனையாளர் 1 ஜ் 8,000 = 8000
மொத்தம் = 52,000
10. மின்சாரம் மாதம் = ரூ.2,000
11. 17 கிலோ எரிவாயு 3 சிலிண்டர் -
3 ஜ் ரூ.1,800 = ரூ.5,400
ஒருநாள் உற்பத்தி: 120 கிலோ. இதில் கழிவுகள் 12% போக (120 - 14.40) 105.60 கிலோவுக்கு இடியாப்பம் கிடைக்கும். 10 கிலோவுக்கு 66 பாக்கெட்டுகள் வரை போடலாம்.
ஒரு பாக்கெட் விலை தோராயமாக ரூ.18 என நிர்ணயித்துக்கொள்ளலாம். மாதத்துக்கு 25 வேலை நாட்கள் கணக்கிட்டால் (105.60ஜ்6.6ஜ்18ஜ்25= ரூ.3,13,632) ரூ. 3.13 லட்சம் விற்பனை வருமானம் கிடைக்கும்.
மொத்த செலவு!
வாடகை : 5,000
மூலப்பொருள் : 90,000 (120ஜ்30ஜ்25)
பேக்கிங் செலவு : 3,450 (120ஜ்25ஜ்1.15)
மின்சாரம் : 2,000
எரிவாயு : 5,400
தொழிலாளர் சம்பளம் : 52,000
கடன் வட்டி (12.5%) : 8,750
கடன் தவணை (60 மாதம்) : 14,000
இயந்திர பராமரிப்பு : 10,000
விற்பனை செலவு : 10,000
நடைமுறை மூலதன வட்டி : 2,500
மேலாண்மை செலவு : 5,000
தேய்மானம் : 11,000
மற்றவை : 10,000
மொத்த செலவு : 2,29,100
மொத்த வரவு : 3,13,632.00
மொத்த செலவு : 2,29,100
லாபம் : 84,532
ஒரு பாக்கெட்டுக்கு 150 கிராம் வீதம் அடைக்கவேண்டும். நமது விலை 18 என்றாலும், அதிகபட்ச சில்லறை விலையாக 24 ரூபாய்க்கு ஒரு பாக்கெட்டை விற்பனை செய்ய முடியும்.
(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், திட்ட மேலாளர், தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்.)
முத்தையா, ஸ்ரீ அண்ணாமலையார் ஃபுட் ப்ராடக்ட்ஸ்.
''மொத்த ஏஜென்டாக இருந்த அனுபவம் எனக்கு இருந்தது. கூடவே எனது மகன் எம்.பி.ஏ படித்துவிட்டு வந்ததால் உணவுப் பொருள் துறையில் சொந்தமாக தொழில் தொடங்கலாம் என யோசனை வந்தது.
பாரதப் பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் இந்தத் தொழிலுக்கான திட்ட அறிக்கையைத் தந்தோம். அதிலிருந்து கிடைத்த மானியத்துடன், வங்கிக் கடன் வாங்காமல் நாங்களே முதலீடு போட்டு தொழிலில் இறங்கினோம்.
எங்கள் பகுதியில் இடியாப்பம் இல்லாத பண்டிகைகளே கிடையாது. எனவே, எனது மனைவியின் உதவியுடன் இயந்திர முறையில் இடியாப்பம் தயார் செய்ய ஆரம்பித்தோம். நான் மார்க்கெட்டிங், எனது மகன் நிர்வாகம், மனைவி தயாரிப்பு, மருமகள் கணக்குவழக்குகளைக் கவனிப்பது என செய்து வருகிறோம்.
இதில் பேக்கிங் முக்கியம். நாங்கள் தயாரிக்கும் இடியாப்பம், 9 மாதங்கள்வரை கெடாமல் இருக்கும். எல்லா செலவுகளும்போக மாதம் 40 ஆயிரம் ரூபாய் வரை வரும். தவிர, இடியாப்ப மாவு தனியாக விற்பதன் மூலமும் வருமானம் பார்க்கலாம்.''

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites