இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 21, 2014

ஏலக்காய் (எலட்டேரியா கார்டமம்)


ஜின்ஜிபெரெசியே
இரகங்கள் :
மலபார்: முடிகிரி 1, முடிகிரி 2, பிவி 1, ஐசிஆர்ஐ 1, ஐசிஆர்ஐ 3, டி கே டீ 4, ஐ ஐ எஸ் ஆர் ஸ்வர்ணா, ஐ ஐ எஸ் ஆர் விஜிதா, ஐ ஐ எஸ் ஆர் அவினாஷ்

மைசூர்: 
ஐசிஆர்ஐ 2
வழுக்கா:பிவி 2, நிஜாலனி (கிரீன் கோல்ட்)
ஏலக்காய் தோட்டம்
ஏலக்காய் செடி

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நிழலான பகுதிகளில், வடிகால் வசதியள்ள இரும்பொறை மண் உகந்தது. காற்றில் அதிக ஈரப்பதம் மிகுந்த மிதமான தட்பவெப்பநிலையில் இது நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 6-6.5க்குள் இருந்தால் அவசியம். அதிகமாக காற்று வீசும் பகுதிகளில் இதனைப் பயிரிட முடியாது. மலபார் வகைகளை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 முதல் 1600 மீட்டர் வரை உள்ள உயரத்தில் பயிரிடலாம். ஆண்டிற்கு சராசரியாக 1500 முதல் 2500 மில்லி மீட்டர் வரை மழை பொழியும் இடங்களில் இவ்வகை ஏலக்காயை் பயிரிட முடியும். ஆனால் மைசூர்  வகைக்கு அதிக மழைப்பொழிவு தேவை.

பருவம் : ஜூன் - டிசம்பர்
இனப்பெருக்கம் : ஏலக்காய் விதை மூலமும், நிலத்தடி தண்டு கிழங்கு மூலமும் இனப்பெருக்கம் செய்யலாம்.
விதையும் விதைப்பும்
நாற்றுகள் / ஒட்டுக்கன்றுகளை கொண்டு இனப்பெருக்கம் செய்யலாம்.
விதை பயிர்பெருக்கம்
  • நல்ல ஆரோக்கியமான செடிகளிலிருந்து விதைகளைச் சேகரித்துக் கொள்ளவேண்டும்.  
  • ஒரு எக்டர் நடுவதற்கு 600 கிராம் விதைகள் தேவைப்படும்.
  • விதைகளை வணிகத்தரம் வாய்ந்த கந்தக அமிலம் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் 20 நிமிடம் வைத்திருந்து பின்பு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.
  • தேவையான அளவுக்கு மேட்டுப்பாத்திகள் அமைத்து,  அதில் நன்றாய்ப் பொடி செய்த மக்கிய தொழு உரம், மரச்சாம்பல் மற்றும் அங்ககச் சத்து நிறைந்த மண் இவற்றை சம அளவில் பாத்திகளில் கலந்து விடவேண்டும்.
  • இந்தப் பாத்திகளின் குறுக்கே கோடுகள் கிழித்து ஒரே சீராக விதைகளை விதைத்து மணல் கொண்டு மூடவேண்டும்
  • பின்பு அவற்றின் மேல் காய்ந்த புல் அல்லது வைக்கோல் கொண்டு இலேசாக பூவாளியின் உதவி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும்.  விதைத்த மூன்றாம் மாதத்தில் செடிகள் முளைக்க ஆரம்பிக்கும் சுமார் ஒரு வருடம் ஆன பிறகு நாற்றுக்கள் இரண்டாம்நிலை  நாற்றாங்காலில் நடுவதற்கு தயாராக இருக்கும்.
இரண்டாம்நிலை நாற்றாங்கால் :
  • முதல் நிலை நாற்றங்கால் போல் படுக்கைகளை தயார் செய்ய வேண்டும். பந்தல் எழுப்பி நாற்றுகளுக்கு நிழல் அளிக்க வேண்டும்.
  • நாற்றுகளை 20 x 20 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.
  • நடவுக்காக 18-22 மாதங்களுக்கான நாற்றுகளை பயன்படுத்த வேண்டும்.
  • 20 x 20 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளை பயன்படுத்தலாம்.
தாவரக் கன்று மூலம் பயிர்பெருக்கம் :
  • அதிக மகசூல் தரக் கூடிய செடிகளில் இருந்து எடுக்கப்பட்ட தாவரக் கன்றுகளை குளோன் செய்யப்பட்ட தோட்டங்களில் நட வேண்டும்.
  • இடைவெளி 1.8 மீ x 0.6 மீ (6800 செடிகள் / எக்டர்).
  • நீர் பாய்ச்சுதல் வேண்டும். நட்ட 12 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 32 முதல் 42 தாவரக் கன்றுகள் கிடைக்கும்.
நிலம் தயாரித்தல் :
நடவு நிலத்தில் 60 செ.மீ நீள. அகல, ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் மேல் மண் மற்றும் இலை மட்கு போன்றவற்றை இட்டு நிரப்பி, குழிகளின் மத்தியில் நாற்றுக்களை நடவேண்டும்.

இடைவெளி : குழிகளின் இடைவெளி உயரமாக வளரும் செடிகளுக்கு 2.5x2.0 மீட்டராகவும், குட்டையாக  வளரும்  செடிகளுக்கு 2.0 x 1.5 மீட்டர் இருக்குமாறும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
நீர்ப்பாசனம் :
பொதுவாக ஏலக்காய் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டாலும், கோடை காலங்களில் தெளிப்பு நீர்ப்பாசனம் செய்யப்பட்டாலும் மகசூல் திறனை அதிகப்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
எக்டருக்கு 25 கிலோ மக்கிய கம்போஸ்ட், 75 கிலோ தழைச்சத்து, 75 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இருசம பகுதிகளாகப் பிரித்து ஜூன் - ஜூலை மாதங்களில் ஒரு முறையும், பின்பு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஒரு முறையும் இடவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
பின்செய்நேர்த்தி : பின்செய் நேர்த்தியாக தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். பழுத்த, காய்ந்த இலைகளையும், கிளைகளையும் மே - ஜூன் மாதங்களில் களைந்து அப்புறப்படுத்த வேண்டும். மழைக்குப் பின் செடிகளைச் சுற்றி மண்  வெட்டியால் கொத்தி விடவேண்டும்.
நிழல் அளித்தல் :
  • நிழல் கட்டுப்பாடு : இயல்பாக 50 -60%, மானாவாரி – 40-50%, பாசனப்பயிர் – 55-60%
  • நடுத்தர அளவில் நிழல் தரும் மரங்கள் – கரோனா, ரெட் சீடர், கோனிக்கோனா, பாலா, வெள்ளக்கில், தெம்பாவு, தம்பாகோம், போலோங்கி, இளஞ்சி.
  • எக்டருக்கு 10 முதல் 15  தேனீ வளர்க்கும் பெட்டிகள் அமைப்பது மூலம் மகரந்த சேர்க்கையை மேம்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பூச்சிகள் :
இலைப்பேன்:
பூச்சிக்கொல்லி
அளவு
டையஃபெந்தையுரான்
50 % WP 8 கிராம்/10 லிட்டர்
மோனோகுரோட்டோபாஸ்
36 % SL 10 மிலி/10 லிட்டர்
பெந்தோயேட்
50 % EC 5.0 மிலி/10 லிட்டர்
குயினால்பாஸ்
25 % EC 12 மிலி/10 லிட்டர்
கம்பளிப் புழு
போசலோன் 35EC  1 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.

தண்டு மற்றும் காய் துளைப்பான் 
ஒரு எக்டருக்கு 12 இனக் கவர்ச்சிப் பொறிகள் என்ற விகிதத்தில் உபயோகித்து பெண் அந்துப் பூச்சிகளை அழிக்கலாம்.
சிலந்திப் பூச்சி
டைக்கோபால் 1 லிட்டருக்கு 2 மி.லி வீதம் தெளித்து இப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

வேர்ப்புழுக்கள் : தாக்குதல் தென்படும் இடங்களில் லிண்டேன் மற்றும் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும்.
நூற்புழு
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை நாற்றங்கால் படுக்கைகளை மிதைல் பிரோமைட் (500 கிராம் / 10 ச.மீ) (அ) எதிலின் டை பிரோமைட் (20 லி / எக்டர்) அல்லது டியூரோப்யூம் (30லி / எக்டர்) கொண்டு பாலித்தீன் பந்தலுக்கு கீழ் 2-3 நாட்கள் புகைமூட்டுதல் வேண்டும் அல்லது 2% பார்மலின் மருந்தினை கொண்டு நனைக்க வேண்டும். எக்டருக்கு 5 கிலோ கார்போபூரான் இட வேண்டும்.
நோய்கள்
மொசைக் அல்லது கட்டே நச்சுயிரி நோய் : இந்நோய் ஏலக்காயை தாக்கும் ஒரு முக்கியமான நோய் ஆகும். இதனால் அதிக அளவில் மகசூல் பாதிக்கப்படும். வாழை அசுவினி பூச்சி மூலம் இந்நோய் பரப்பப்படுகிறது. எனவே நோய் பரப்பும் பூச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். எக்டருக்கு 750 மில்லி பாஸ்போமிடான் அல்லது மீதைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் தெளித்து இப்பூச்சியை கட்டுப்படுத்தவேண்டும்.
குத்து அழுகல் நோய் : பாதிக்கப்பட்ட குத்து அழுகிவிடும்.
கட்டுப்பாடு : நாற்றாங்காலில் விதைகளை, விதைப்பதற்கு முன்பே 3 சதுர மீட்டர் நாற்றாங்காலுக்கு 1 லிட்டர் பார்மால்டிஹைடு மருந்தை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணில் ஊற்றவேண்டும். விதைத்தவுடன் 1 சதவீத கலசை அல்லது 0.25 சதம் மேன்கோசெப் கரைசலை மண்ணில் ஊற்றவேண்டும்.
ஏலக்காய்ப் பூ
முதிர்ச்சியடையாத ஏலக்காய்கள்
அறுவடை
ஏலக்காய் நட்ட மூன்றாம் வருடத்தில் இருந்து காய்க்கத்தொடங்கும். மே - ஜுன் மாதங்களில் அதிக அளவில் பூக்கும் பூ காயாக மாறி முற்றுவதற்கு சுமார் 8 மாதங்கள் பிடிக்கும். மாதத்திற்கு ஒரு முறை காய்களை அறுவடை செய்யலாம். அறுவடையாகும் காய்கள், வெவ்வேறு முதிர்ச்சி நிலையில் காணப்படும். விதைகள் முதிர்ந்து கருமை நிறமடையும் நிலையில் காய்களை காம்புகளுடன் அறுவடை செய்யவேண்டும். காய்களை நன்றாக முதிர்ச்சியடைய விட்டு அறுவடை செய்தால், காயவைக்கும் போது காய்கள் வெடித்துச் சிதற வாய்ப்புண்டு. எனவே அறுவடையை கவனமாக செய்யவேண்டும்.
ஏலக்காய்
ஏலக்காய் விதைகள்
மகசூல் : ஒரு எக்டருக்கு 200 முதல் 250 கிலோ ஏலக்காய்.
சந்தை தகவல்கள்
பயிரிடும் மாவட்டங்கள்தேனி
முக்கிய சந்தைகள்போடிநாயக்கனார், குமுளி, தேக்கடி, கம்பம்
முன்னுரிமை இரகங்கள்அலப்பி பச்சை எக்ஸ்ட்ரா போல்ட் (AGEB)
தரம்புதுமை, நிறம், நறுமணம் மற்றும் அளவு

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites