இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, April 4, 2012

வெந்தயக்கீரை

நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை ,வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை தூவினாலே வெகு சீக்கிரத்தில் வளர்ந்துவிடுகிறது. இக்கீரையை பிடுங்கி சயைலுக்கு பயன்படுத்தலாம்.

அளவில் சிறியது என்றாலும் அபரிமிதமான சத்துக்களைக் கொண்டது. இக்கீரை மருத்துவப் பயன்கள் கொண்டது. இக்கீரை பல நோய்களைத் தீர்க்கும். இக்கீரையின் கசப்புத்தன்மையால் அதிகம்பேர் இதை பயன்படுத்துவதில்லை.

இக்கீரையில் வைட்டமின் A.B உயிர்சத்துக்கள் காணப்படுகிறது. நமது உடலில் எலும்புப்பகுதியினை உறுதியாக வைத்திருக்க இக்கீரை பயன்படுகிறது.

இக்கீரையின் பருத்துவப் பயன்கள்

மாதவிடாய் கோளாறா?

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கிவிடும்.

இடுப்பு வலியா ?
இன்று அதிக உழைப்பில்லாதால் ஏகப்பட்ட நோய்களை பெருகின்றன. , அவற்றில் இடுப்புவலியும் ஒன்று, இந்த வலிக்கு ஆளானவர்கள் படாதபாடுபடுகின்றனர் இவர்களுக்கு நிவராணம் வெந்தயக்கீரையை ஆகும். இக்கீரையோடு தேங்காய்ப்பால் நாடடுக்கோழிமுட்டை நிரிழிவுநோய் உள்ளவர்களுக்கு மஞசள் கருவை நீக்கவும் கசகசா சீரகம் மிளகுத்தூள் பூண்டு இவைகளோடு நெய்யையும் சோத்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்துபோகும்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிககு

படிப்பில் கவனம் செலுத்தாத, எவ்வளவு படித்தாலும் மறந்துபோகிற, படிப்பென்றால் கசக்கிறது என்கிற குழந்தைகளுக்கு, படிப்பென்றால் மகிழ்ச்சி தரக்கூடிதாக மாற்றுகின்ற தன்மை இக்கீரைக்கு உண்டு. இக்கீரையை பாசிப்பருப்பு மற்றும் வேர்க்கடலை நெய்யுடன் கலந்து அடிக்கடி சமைத்து சாப்பிட்டுவந்தால் ஒரிரு மாதங்களில் நன்கு படிப்பார்கள்
  • இருமலை குணப்படுத்தும்.

  • கபம், சளியை அகற்றுகிறது.

  • மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது.

  • உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது.

  • அஜீரணத்தைப் போக்குகிறது.

  • பசியைத்தூண்டிவிடுகிறது.

  • கண் நோய்களைப் போக்குகிறது.

  • கண் பார்வையைத் தெளிவாக்குகிறது.

  • சொறி சிரங்கை நிவர்த்தி செய்கிறது.

  • வயிற்றுக் கோளாறுகளை, வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, போன்ற நோய்களைப் குணப்படுத்துகிறது.

  • வாத சம்பந்தான நோய்களை குணப்படுத்தும்.

  • நிரிழிவு நோயை கட்டுப்படுத்துப்படுகிறது.

  • நரம்புத்தளாச்சியைப் போக்குகிறது.

  • பற்களை உறுதியாக்குகிறது.

  • இரத்ததை சுத்தமாக்குகிறது.

  • வயிற்றில் அடையும் கசடுகளைப் போக்கி வயிற்றை சத்தமாக்கி மலச்சிக்கலலைப் போக்குகிறது.

  • மூலவாயுவை குணமாக்குகிறது.

  • தொத்து நோய்களிலிருந்து காக்கிறது.

  • எலும்புகளைக் உறுதிப்படுத்துகிறது.

  • மூட்டுவலிகளை குணமாக்கிறது.

  • வீக்கம் கட்டி புண்களை அகற்றுகிறது.

  • மார்பு வலியிலிருந்து காக்கிறது.

  • தொண்டைப் புண்ணை ஆற்றுகிறது.

  • தலைசுற்றலை நிறுத்துகிறது.

  • பித்தத்தால் எற்படும் கிறுகிறுப்பை போக்குகிறது.

  • உடல்சூட்டை தணிக்கிறது


  •  

    0 comments:

    Share

    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites