இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, April 16, 2012

மாற்றத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்

ஆத்மா விவசாயிகள் சங்கத்தின் அசத்தல் சாகுபடி
'பசுமை விகடன்' 25.3.11-ம் தேதியிட்ட இதழில் 'நாட்டு மாடு வாங்கிட்டோம்... இயற்கைக்கு மாறிட்டோம்..!’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலூகாவில் உள்ள கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள 45 விவசாயிகள் இணைந்து இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றிய கட்டுரைதான் அது. கிட்டத்தட்ட ஓராண்டு நெருங்கும் நிலையில், அவர்களின் இயற்கை விவசாயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக அங்கே சென்றோம்.

 மாற்றத்தை ஏற்படுத்திய பசுமை விகடன்!
ரசாயனத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருந்த விவசாயிகளை இயற்கையின் பக்கம் இழுத்தவர், கவுரிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம். கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரான இவர், தற்போது, முழு நேர விவசாயி. இவர்தான் தற்போது இயற்கைக்கு மாறியிருக்கும் விவசாயிகள் அமைத்திருக்கும், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்க’த்தின் தலைவர். ''இவர்கள் இந்தளவு முன்னேறியதற்கு முக்கியமான காரணம் 'பசுமை விகடன்’தான் என்கின்றனர். அதில் வரும் கட்டுரைகளைப் பற்றி ஊருக்குள் நண்பர்கள்கிட்ட அடிக்கடி பேசுவோம். அப்படிப் பேசும்போதுதான், 'நாம ஒண்ணா சேர்ந்து இயற்கை விவசாயம் செய்யலாமே’என்ற எண்ணம் தோன்றியது. அதில் உருவானதுதான் இவர்கள் சங்கம்.

அதற்கான வேலைகளில் நாங்கள் இறங்கியபோது எங்களைப் பற்றி செய்தி வெளியிட்டு, எங்களை ஊக்கப்படுத்தினது பசுமை விகடன்தான் என்கின்றனர். அதற்குப்பிறது நிறைய பேர் இவர்களிடம் பேச ஆரம்பித்தாக கூறுகின்றனர். அதனால், இவர்களுக்கான பொறுப்பு அதிகமானதாக கூறுகின்றனர். அந்த ஊக்கத்தில்தான் இவர்கள் இன்னமும் ஆர்வமாக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக கூறுகின்றனர். இப்போது இவர்கள் சங்கத்தில் 45 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற சிவலிங்கம் தங்களின் சாகுபடி முறைகளைப் பற்றி விளக்கினார்.

ஆரம்பத்தில் அரை ஏக்கர் இப்பொழுது ஒன்றரை ஏக்கர்!
ஆரம்பத்தில், குறைந்தபட்சம் அரை ஏக்கரில் மட்டுமாவது இயற்கை முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்று இறங்கினோம். ஆனால், இப்பொழுது, ஒவ்வொருத்தரும் ஒன்றரை ஏக்கருக்கும் குறையாமல் இயற்கை முறையில சாகுபடி செய்வதாக கூறுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை காய்கறிகளை கோயம்புத்தூர், கேரளா என்று வெளியே அனுப்புகிறார்கள். எல்லோரும் கலந்து பேசி , ஒவ்வொருத்தரும் இந்த இந்த காய் என்று பிரித்து வைத்து சாகுபடி செய்கிறார்கள்.

பாகங்களாகப் பிரித்து சாகுபடி!
தன்னோட நிலத்தை நாற்பது சென்ட் அளவில் தனித்தனி பாகமாகப் பிரித்து வைத்திருக்கிறார். அதில் ஒரு பாகத்தில் சுரைக்காய் போட்டிருக்கிறார். இப்பொழுது முழுவதுமாக அறுவடை முடிந்திருக்கிறது. அது முடியும்போது அறுவடைக்கு வருவது போல்  மற்றொரு பாகத்தில் பாகல் போட்டிருக்கிறார். இப்பொழுது இதோடு அறுவடை முடியும் தருவாயில் இருக்கிறது. இதேபோல் புடலங்காய், பீன்ஸ் என்று ஒவ்வொரு பாகத்திலேயும் ஒவ்வொன்றாக பிரித்து போட்டிருக்கிறார்.

வாரத்துக்கு 3,500 ரூபாய் லாபம்!
ஒவ்வொரு காய் அறுவடை முடியும்பொழுதும் இன்னொரு காய் அறுவடைக்கு வந்துவிடும். சில சமயங்களில் ஒரே நேரத்தில் இரண்டு வகையான காய்களும் கிடைக்கும். சுரைக்காயில் மட்டும் நான்கு மாதத்தில் மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது. ஒரு காயில் கிடைகின்ற லாபத்தை வைத்தே, இன்னொரு காய்க்கு செலவிடலாம். ஒவ்வொரு காயிலேயும் இனைத்து செலவும் போக வாரத்துக்கு, சராசரியாக 3 ஆயிரத்து 500 ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைக்கிறது. இதேமாதிரி சுழற்சி முறையில்தான் எல்லாருமே சாகுபடி செய்வதாக கூறுகிறார்கள்.

இயற்கை இடுபொருட்கள்!
அடியுரமாக தொழுவுரம்தான் போடுகிறார்கள். சுற்று வட்டாரத்தில் எங்க கிடைத்தாலும், தொழுவுரத்தை வாங்கிட்டு வந்து இருப்பு வைக்கிறார்கள். தேவைப்பட்டால் புங்கன்கொட்டை, ஆமணக்கு, வேப்பம்பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு என்று ஏதாவது ஒன்றை அதில் கலந்து, வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகவ்யா, அமுதக்கரைசல் கொடுக்கிறார்கள். பூ உதிர்ந்தால் மோர், டிரைக்கோடெர்மா விரிடி இரண்டையும் கலந்து தெளிக்கிறார்கள். முட்டையின் வெள்ளைக்கரு, வேப்பெண்ணெய், காதி சோப் இது மூன்றையும் கலந்தும் தெளிக்கலாம்.

அக்னி அஸ்திரத்துக்கு ஈடு இணை இல்லை!
காய்கறிச் செடிகளில் பெரும்பாலும் அசுவிணி, பேன், சாறு உறிஞ்சும் பூச்சிகளோடு தொல்லை அதிகமாக இருக்கும். பொதுவாக பூச்சிகள் வருவதற்கு முன்பே ஐந்திலைக் கரைசலைத் தெளித்தி விடுவதாக கூறுகிறார்கள். இதைத் தெளித்தபின் எந்தப் பூச்சியும் தாக்குவதில்லை. அதையும் மீறி வரும்பொழுது அருவாமனைப் பூண்டுகளைப் பிடுங்கி வந்து அரைத்து, சாறு எடுத்து 1:10 விகிதத்தில் தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளிக்கிறார்கள். இதையெல்லாம் கடந்தும் பூச்சி பாதிப்பு இருந்தால், கடைசி ஆயுதம் 'அக்னி அஸ்திரம்’தான். பாதிப்புக்கேத்த அளவுக்கு இதை அடித்தால் ஒரு பூச்சி, இருக்காது. இதற்கு அடங்காத பூச்சிகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்ற சிவலிங்கத்தைத் தொடர்ந்தார் சங்கத்தின் செயலாளரான கொட்லுமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ். 

மாயம் செய்த பஞ்சகவ்யா!
இவர் 30 சென்டில் சுரைக்காய் போட்டிருக்கிறார். விளைச்சல் சமயத்தில் காய்களைப் பார்த்து கண் போடாத ஆட்களே இல்லை. ஏனென்றால், இவரேட மண் நுரம்பு மண். இப்படிப்பட்ட மண்ணில், இந்த அளவுக்கு விளைந்ததுக்கு காரணமே பஞ்சகவ்யா தான். இப்போ இரண்டு ஏக்கரில் தர்பூசணி போட்டிருப்பதாக கூறுகிறார்.
உரம், பூச்சிக்கொல்லி இதெல்லாம் விலை ஏறுவதைப் பற்றி இவர்கள் கவலைபடுவரில்லை. ஆள் பிரச்னை மட்டும்தான் இவர்களது ஒரே கவலை என்கிறார். ஆனாலும், தாங்களே ஓடியாடி உழைத்து சரி செய்வதாக கூறுகிறார். அதற்கேற்ற மாதிரி இவர்களுக்கு லாபமும் கிடைக்கிறது.

கலெக்டரும், வேளாண் விற்பனை மற்றும் வணிகப்பிரிவு அதிகாரிகளும் பாப்பிரெட்டிப்பட்டி கே.வி.கே. மையத்தினரும் நன்றாக உதவி செய்வதாக கூறுகிறார். அது இவர்களுக்கு கூடுதல் பலம்'' என்று நன்றி பெருக்கோடு சொன்னார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல, தாங்கள் மட்டும் இயற்கை விவசாயத்தை செய்து கொண்டிருக்காமல், அக்கம் பக்கமிருக்கும் விவசாயிகளுக்கும் அதன் பலன் சென்று சேரும் வகையில், 'ஆத்மா இயற்கை விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் செயல்பட்டுக் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு. தொட்டிப்பள்ளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் தனக்குச் சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில், இரண்டரை ஏக்கரை இயற்கை முறை சாகுபடிக்கு என ஒதுக்கி இருக்கிறார்.

தினந்தோறும் டீக்கடைகளில் அமர்ந்து இயற்கை விவசாயம் குறித்து ராஜேந்திரன் நடத்தும் பிரசங்கத்தால் கவரப்பட்ட ஆசிரியர் ஒருவர், தற்போது மெள்ள இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி தன் எட்டு ஏக்கர் நிலத்தையும் இயற்கையின் பக்கம் திருப்பி விட்டார். இவருடைய நிலத்தில் இயற்கை விவசாயத்தில் மரவள்ளி, மஞ்சள், தக்காளி, பெல்ட் அவரை என சாகுபடி செய்கிறார்.

இச்சங்கத்தினர் 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல், ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒவ்வொருவரின் அனுபவத்தையும் அலசுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு உறுப்பினரும் சந்தா தொகையாக நூறு ரூபாயை வழங்குகின்றனர். இப்படி சேரும் மொத்தத் தொகையை இவர்களுக்குள்ளாகவே குறைந்த வட்டியில் கடன் கொடுத்து மாற்றிக் கொள்கின்றனர்.

தொடர்புக்கு,சிவலிங்கம்,
செல்போன்: 97875-45231.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites