இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Tuesday, October 22, 2013

பெண்கள் ஏன் வேலைக்குப் போகணும்?

Why do women go to work?சௌந்தர்யா ராஜேஷ் நிறுவனர் - தலைவர், 
அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ் 

‘அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ்’, ‘ஃப்ளெக்ஸி கேரியர்ஸ்’, ‘அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட்’ ஆகிய நிறுவனங்களின் ஆணிவேர் -சௌந்தர்யா. வெற்றிகரமான பிசினஸ் பெண்மணி ‘‘சொந்த ஊரு புதுச்சேரி. பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். புரொபஸர்  ஆகணும்னு ஆசை.  அப்பா சந்திரசேகருக்கு என்னை பிஸினஸ்ல பெரிய ஆளாக்கணும்னு ஆசை. அவருக்காகவே எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு எழுதினேன். செலக்ட்  ஆனேன். புதுச்சேரி பல்கலைக்கழகத்துல எம்.பி.ஏ. அக்கவுன்ட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் கோர்ஸ். 

‘எம்.பி.ஏ. படிக்குறவங்க பெரிய ஜீனியஸ்’னு நினைச்ச காலகட்டம் அது. மேனேஜ்மென்ட் பாடத்துல கத்துக்குற முதல் விஷயம் டீம்  வொர்க். ஒரு  விஷயத்தை தலைமைப் பண்போட எப்படி அணுகணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு,  திறம்பட நடத்துற வித்தையை  இதில கத்துக்கிட்டேன். இடையில எனக்கும் ராஜேஷுக்கும் கல்யாணம். திருமணத்துக்குப் பிறகு தனி யார் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். 

குழந்தை பிறந்த பிறகு முழுநேர வேலைக்குப் போற சூழல் அமையல. அதனாலதான் பிசினஸ்ல இறங்கலாம்னு முடிவு பண்ணினேன்.  முதல்  முயற்சியா ‘அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ்’ நிறுவனத்தை 2005ல ஆரம்பிச்சேன். வேலைவாய்ப்பு தேடுறவங்களுக்கு வழிகாட் டுற வேலை.  திறமையான ஆட்களைத் தேடும் பெரிய நிறுவனங்கள் ஒரு பக்கம். படிப்புக்கு ஏத்த சம்பளம் வேணும்னு வேலை தேடு றவங்க இன்னொரு பக்கம். 


இந்த ரெண்டு தரப்பினரையும் இணைக்கும் வேலை... ஐ.டி. நிறுவனங்கள், பேங்க், தனியார் நிறுவனங்கள்னு எல்லாத் துறைகளிலும்  வேலை  வாய்ப்புகளை உருவாக்கித் தர்றோம். நேஷனல் சேம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் ஆய்வுப்படி 2011ல், ‘இந்திய அளவில்  வேலைக்குச் செல்லும்  பெண்கள் 28 சதவிகிதம் மட்டும்தான்’. 

‘திருமணம், குழந்தைகள்னு செட்டில் ஆன பிறகு 49 சதவிகிதம் பெண்கள் வேலைக்குப் போறதை விட்டுறாங்க’ன்னு சொல்லுது Centre  for  Strategicand International Studies  ஆய்வு. கல்யாணத்துக்குப் பிறகு,  வேலைக்குப் போக முடியாத பெண்களுக்காக ‘விருப்ப நேரத்தில் வேலை  செய்யும் முறை’யை அறிமுகப்படுத்தினேன். இந்தியாவில்  முதல்முறையாக இந்த முறை ஆரம்பிக்கப்பட்டது என்பதால் பெரிய அளவில் வரவேற்பு  கிடைச்சது. 

வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயத்துல இருந்த பெண்கள் வெளிய வர ஆரம்பிச்சாங்க. பெண்கள் வேலைக்கு  போகாம இருந்தா  உளவியல் ரீதியான பிரச்னைகள் வரும். அதிலிருந்து விடுபட பெண்களுக்கு வேலை அவசியம்னு புரிய வச்சோம்.  நான் உருவாக்கின நிறுவனம்  மூலமா 30 ஆயிரம் பேருக்கு மேல வேலை வாங்கிக் கொடுத்தது சந்தோஷமா இருக்கு...’’ - கண்களில்  மின்னல் தெறிக்கச் சொல்கிறார் சௌந்தர்யா  ராஜேஷ். 

பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க வேண்டுமா?


சிகிஜி /  ஙீகிஜி / விகிஜி ஆகிய பொது நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், ரேங்க் அடிப்படையில் உயர்ந்த மேனேஜ்மென்ட்  கல்வி  நிறுவனமான ஐ.ஐ.எம்.மில் (Indian Institute of Management) படிக்க தகுதி பெறுவார்கள். பிசினஸ்  ஸ்கூல்களில் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை  வைத்தும், குழு விவாதம், நேர்காணல் சோதனைகளில் தனித்தன்மைக்கேற்பவும் அனு மதிக்கப்படுகிறார்கள். 

பி.ஜி. டிப்ளமோ கோர்ஸாகவும் மேனேஜ்மென்ட் படிப்பு வழங்கப்படுகிறது. நிர்வாகம், மனித வளம் என சிறப்புப் படிப்புகளை தேர்ந் தெடுக்கலாம். 2  வருடப் படிப்பு. பல்கலைக்கழக கல்லூரிகளில் 2 வருட எம்.பி.ஏ. படிப்பை வழங்குகிறார்கள். ஏதேனும் ஒரு பாடப்பி ரிவில் இளங்கலை பட்டம்  அவசியம். குறிப்பாக, கணிதத்தில் தேவையான அறிவு இருக்க வேண்டும். 

சென்னையில் ‘லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’, ‘ஐ.ஐ.டி.’, ‘ஐ.எஃப்.எம்.ஆர்.’, ‘கிரேட் லேக்ஸ்’, திருச்சி யில்  ‘பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’, கோவையில் ‘பி.எஸ்.ஜி.’, ‘அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிஸினஸ்’, மதுரையில்  தியாகராஜர் ஸ்கூல்  ஆஃப் மேனேஜ்மென்ட்’ ஆகிய பிசினஸ் ஸ்கூல்கள் இருக்கின்றன. சில பல்கலைக்கழகங்களில் இளங்கலையில்  பி.பி.ஏ. (பேச்சிலர் ஆஃப் பிஸினஸ்  அட்மினிஸ்ட்ரேஷன்) கோர்ஸ் கிடைக்கிறது. 

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. டூரிஸம் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. பேங்கிங் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட சிறப்புப் படிப்புகள்  உள்ளன.  ஹைதராபாத் ‘மேனேஜ்’ நிறுவனத்தில் விவசாய நிர்வாகம் படிப்பு இருக்கிறது. அரசுக் கலைக் கல்லூரிகளில் (வருடத்திற்கு)  ரூ.40 ஆயிரம், அரசு  பொறியியல் கல்லூரிகளில் ரூ. 60 முதல் 70 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறார்கள். 

தனியார் கல்லூரிகளில் கட்டணம் 2 மடங்கு அதிகம். தமிழகத்தில் உள்ள பிஸினஸ் ஸ்கூல்களில் வருடத்திற்கு ரூ. 3 லட்சம் வரை  கட்டணம்.  மிமிவி போன்ற பெரிய நிறுவனங்களில் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் முதல் கட்டணம்  கிமிசிஜிணி அங்கீகாரம் பெற்ற  நிறுவனமா,  வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தருகிறார்களா என்பதை விசாரித்துச் சேர்வது நல்லது.

No. 10, Raja Nagar, ECR Road, Neelangarai, Chennai - 600041. Ph: 044-42941100/1200
Chennai - Head Office
'Udyog Gruhaa'
No. 10, Raja Nagar, EC Road,
Neelangarai,
Chennai - 600041.
Phone: 044-42941100 / 1200
email: info@avtarcc.com
Bangalore 
9/A, 13th Cross Street,
Jayamahal Extn
Bangalore - 560046
Tel: 080- 64510124 / 25
email: blr@avtarcc.com

 Coimbatore
No.69/143, Ravindranath Layout,
N.V.N Street,
New Sidhapudur,
Coimbatore - 641004
Tel: 0422- 4218640 / 4230800
email: cbe@avtarcc.com

Mumbai
506, Krishna Greenland - Vastu, Bldg,
5, Kasarvadavli,
Ghodbunder Road,
Thane West,
Mumbai - 400607
Phone: 022-65329111 / 65329112
Email: mumbai@avtarcc.com

நம் கனவும் ஒரு நாள் நனவாகும்

One day our dreams will come true!அந்தக் காலத்துக் கூட்டுக் குடும்பத்தினுள் நுழைந்த உணர்வை ஏற்படுத்துகிறது ஷெரில் ஹாஃப்டனின் வீடும், ஃபேக்டரியும். எல்லோரும் ஏதோ ஒரு  வேலையில் ஈடுபட்டிருக்க, அத்தனை பேரும் ஷெரிலிடம் வேலை பார்ப்பவர்கள் என்றால் நம்ப முடியவில்லை.  மருத்துவமனைகள், பியூட்டி பார்லர்  மற்றும் ஸ்பா சென்டர்களில் உபயோகப்படுத்துகிற சுற்றுச்சூழலுக்கு உகந்த படுக்கை விரிப்புகள்,  ஏப்ரன், பிரா, பேன்ட்டீஸ், ஃபேஷியல் கவுன், ஹெட்  பேன்ட் உள்ளிட்ட அனைத்தையும் தயாரிக்கிறது ஷெரிலின் ‘ட்ரீம் வீவர்ஸ்‘ நிறு வனம். மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மற்ற  வேலைகளுக்குச் செல்ல இயலாதவர்கள், ஆதரவில்லாத பெண்கள்  என இவரது நிறுவனத்தில் பணிபுரிகிற ஒவ்வொருவரின் பின்னணியிலும் ஒரு  சோகக் கதை உண்டு. அத்தனை பேரின் வாழ்க்கையி லும் அடுப்பெரிய காரணமான ஷெரில், அமைதியாக, அடக்கமாகப் பேசுகிறார்.

“நானும் கணவரும் ஆசிரியர்களா வேலை பார்த்திட்டிருந்தோம். எங்களோட மகள் டெனிஸ், பிபிஏ முடிச்சிட்டு, ஒரு நிறுவனத்துல  வேலை  பார்த்திட்டிருந்தா. திடீர்னு ஒருநாள், அவ என்கிட்ட வந்து, ‘நீங்க வேலையை விட்ருங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து   டிஸ்போசபிள் மெட்டீரியல்  தயாரிக்கிற ஒரு பிசினஸ் தொடங்கலாம்’னு சொன்னப்ப, எனக்கு பயங்கர அதிர்ச்சி. 16 வருஷமா பார்த் திட்டிருக்கிற வேலையை விடறதாவதுன்னு  நான் மறுத்தேன். 

கிட்டத்தட்ட மூணு மாசம் எங்க வீட்ல இந்தப் பிரச்னையைப் பத்தின வாக்குவாதம் தொடர்ந்தது. ஒருவழியா என்னை சம்மதிக்க  வச்சிட்டா. வேலை  பார்த்த ஸ்கூல்ல போய் ராஜினாமா கடிதம் கொடுத்தப்ப, ‘உனக்கென்ன பைத்தியமா? நல்ல, கவுரவமான  வேலையை விட்டுட்டு, ஜட்டி, பிரா பிசினஸ்  பண்ணப் போறியா’ன்னு கிண்டல் பண்ணினாங்க. என் மகளோட பிடிவாதமும் நம் பிக்கையும் என்னை மாத்திட்டதால என்னால ஒண்ணும் பண்ண  முடியலை. வெறும் 500 ரூபாய்தான் முதலீடா கொடுத்தேன்.

அதை வச்சு என் மகள், ராத்திரி, பகலா கண் விழிச்சு, ஏகப்பட்ட டிசைன்களை உருவாக்கினதைப் பார்த்தப்ப, எனக்குள்ளயும் நம் பிக்கை துளிர்க்க  ஆரம்பிச்சது. எங்க வீட்ல பிரேமான்னு ஒரு அம்மா வேலை பார்த்தாங்க. என் மகளை வளர்த்ததுல அவங்களுக் குப் பெரிய பங்குண்டு. டயப்பட்டீஸ்  அதிகமானதுல அவங்களுக்கு ஒரு காலை எடுக்க வேண்டிய நிலைமை. இனிமே எங்களுக்கு  உங்களால எந்த உதவியும் இல்லைன்னு அவங்க  மருமகன், அவங்களை வீட்டை விட்டுத் துரத்திட்டான். 

‘என்னை ஏதாவது ஒரு ஹோம்ல சேர்த்து விடுங்க’ன்னு வந்து நின்னப்ப என் மகளுக்கு மனசு தாங்கலை. ‘நாம பிசினஸ் ஆரம்பிச்சா,  இவங்களை  மாதிரிப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து உதவின மாதிரியும் இருக்குமே...’ன்னு சொல்ல, பிரேமாவையே முதல்  ஊழியரா வச்சு, ‘ட்ரீம்  வீவர்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினோம். இப்பவும் அவங்க எங்ககூட இருக்காங்க...’’ - நெகிழ்ச்சியான அறி முகத்துடன் பேசுகிறார் ஷெரில்.

‘‘பிசினஸ் தொடங்கறதுன்னு முடிவெடுத்தாலும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் ரொம்பவே சவாலா இருந்தது. மிடில் கிளாஸ் குடும்பத் தைச் சேர்ந்த  எங்களால எடுத்த உடனேயே பெரிய முதலீடு போட முடியலை. ஒரே ஒரு தையல் மெஷின், சில மீட்டர் துணியோட தான் துணிஞ்சு இறங்கினோம்.  ஒரு விபத்துல கணவரைப் பறிகொடுத்துட்டு, விவரம் தெரியாத வயசுல ரெண்டு சின்னக் குழந்தைங் களை வச்சுக்கிட்டுத் தவிச்ச ஒரு பெண்  அறிமுகமானாங்க. 

அவங்களுக்கு என் மகள் தையலும் டிசைனிங்கும் கத்துக்கொடுத்து, வேலையும் கொடுத்தா. டிஸ்போசபிள் உடைகளுக்கான சாம் பிளை எடுத்துக்கிட்டு,  நானும் மகளும் சென்னையில உள்ள அத்தனை பியூட்டி பார்லர்களுக்கும் ஏறி இறங்கினோம். பல பேர் எங்க ளையோ, எங்க சாம்பிளையோ  பார்க்கக்கூட தயாரா இல்லை. வேலையை விடறேன்னு சொன்னப்ப, எங்க பள்ளிக்கூடத்துல  சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வரும். மனசு  வலிக்கும். ‘தப்பு பண்ணிட்டோமோ’ன்னு மனசுக்குள்ள அழுதிருக்கேன். 

‘பயப்படாதேம்மா... நிச்சயம் ஜெயிச்சிடுவோம்’னு தைரியம் சொன்னது என் மகள். ரெண்டு வருஷப் போராட்டத்துக்குப் பிறகு முதல்  ஆர்டர்  கிடைச்சது. மறுபடி நம்பிக்கை எட்டிப் பார்த்தது. முதல் ஆர்டர்ல வந்த லாபத்துல இன்னொரு மெஷின் வாங்கினோம்.  மெல்ல மெல்ல பரவலா ஆர்டர்  வர ஆரம்பிச்சது. பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் அமைப்போட வழிகாட்டுதல் மூலமா, பேங்க் லோன்  கிடைச்சது. பிசினஸை இன்னும் விரிவாக்கினோம். 

இன்னிக்கு சென்னையில உள்ள பெரும்பாலான ஆஸ்பத்திரிகளுக்கும், பியூட்டி பார்லர்களுக்கும், ஸ்பா சென்டர்களுக்கும் நாங்கதான்  டிஸ்போசபிள்  அயிட்டங்களை சப்ளை பண்றோம். ஹிந்துஸ்தான் லீவரோட ஆயுஷ், சஞ்சீவனம், ஆரோக்யா உள்ளிட்ட பெரிய நிறு வனங்களும் அதுல அடக்கம்.  வேற எங்கேயும் வேலை பார்க்க முடியாதவங்களுக்கு எங்க கம்பெனியில வேலை கொடுத்திருக்கோம்.  கை, கால் நல்லா இருக்கிறவங்க, எங்க  வேணா பொழைச்சுக்குவாங்க. 

முடியாதவங்களைத்தான் நாம கைதூக்கி விடணுங்கிறதை ஒரு கொள்கையாவே வச்சிருக்கோம். சென்னையில பிசினஸ் ஓரளவு வள ர்ந்ததும், என்  மகள் துபாய்க்கு போயிட்டா. அங்கேயும் எங்க தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு. சர்வதேச மார்க்கெட்டை  பிடிக்கணுங்கிற அவளோட ஆசையும்  நிறைவேறிடுச்சு. ‘நம்ம கனவு ஒருநாள் நனவாகும்... பாருங்க’ன்னு சொல்லித்தான், எங்க நிறுவ னத்துக்கு ‘ட்ரீம் வீவர்ஸ்’னே பேர் வச்சா என் மகள்.  அது இப்ப நிறைவேறிடுச்சு...’’ - ஷெரிலின் வார்த்தைகளில் அத்தனை பூரிப்பு!

Address:

Bharatiya Yuva Shakti Trust
C/o, Confederation of Indian Industry (CII)
98/1, Velachery Main Road
Guindy
Chennai - 600042
Tel : 044-42444521 (AVK) , 044-42444505 (telefax), 044-42444555 (CII Board Line)
e-mail: byst.chennai@cii.in
Contact Person: Mr. Baskaran

- ஆர்.வைதேகி
நன்றி குங்குமம்தோழி

அடுத்த தலைமுறை அவஸ்தைப்படலாமா

இந்தியா ஆசீர்வதிக்கப்பட்ட நாடு. நமக்குத் தேவையான உணவுப் பொருட்களை வருஷத்தின் எல்லா நாட்கள்லயும் கொடுக்கிறது நம்ம பூமி.  தானியம், காய்கறி, பழங்கள், எண்ணெய் வித்துக்கள்னு கொடுத்து நம்மை வாழ வைக்குது. ஆனா, நமக்குதான் உணவின் மகத்துவம் தெரியறதில்லை.  உணவுப் பொருட்களை வீணடிக்கறதும்கூட ஒரு வகையில் உணவுப் பஞ்சத்துக்குக் காரணம்’’. அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பிக்கிறார் கவிதா  அபிராமி. தஞ்சாவூர், ‘இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவன’த்தின் (Indian Institute of Crop Processing Technology)  துறைத் தலைவர்.  உணவுகளைப் பதனிட்டு, பாதுகாத்து, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும்  கற்றுத்தரும் பணியில் இருப்பவர். 

‘‘திருச்சிக்கு அருகே இருக்கும் குமுளூர்ல ‘பி.இ. அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங்’ படிச்சேன். விவசாயம் படிக்கறவங்க மண்ணின் தன்மையில ஆரம்பிச்சு  விதை, நடவு, அறுவடை செய்யும் முறைகளை எல்லாம் படிப்பாங்க. ‘விவசாய பொறியியல்’ படிப்போ, விவசாயத்துக்குத் தேவையான மெஷின்களைப்  பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பானது. உழவுக்கு எந்த இயந்திரத்தைப் பயன்படுத்தலாம், விதை தூவுவதற்கு எந்த மெஷின் சிறந்தது,  அறுவடைக்கு எந்த இயந்திரத்தைப் பயன்படுத்தினால் சீக்கிரமே வேலைகள் முடியும் என்பதையெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். 

இறுதியாண்டு படிச்சப்போதான் ‘உணவுப் பதனிடுதல்’ முறைகளுக்காகவே தனி கோர்ஸ் இருப்பது தெரிஞ்சுது. கோயம்புத்தூர், ‘தமிழ்நாடு விவசாய  பல்கலைக்கழக’த்தில் ‘எம்.இ. ஃபுட் ப்ராசஸிங் இன்ஜினியரிங்’ சேர்ந்தேன். 2 வருஷப் படிப்பு. பருவ காலங்களில் தேவைக்கு அதிகமாக உணவுப்  பொருள்கள் உற்பத்தியானால் வீணாகும். அதை எப்படிப் பாதுகாத்து மற்ற நாட்களில் பயன்படுத்தலாம் என்பதைக் கத்துக் கொடுத்தாங்க. உணவுப்  பொருள்களை பதப்படுத்தி சாப்பிடுவது பற்றிய போதிய அறிவு நம்மிடம் இல்லை. 

‘இந்திய அளவில் வெறும் 3 சதவிகிதம் உணவுப் பொருள்கள் மட்டுமே பதப்படுத்தப்படுகின்றன. சுமார் 30 சதவிகிதம் காய்கறிகள், பழங்கள்  வீணாகின்றன’ என்பதை எங்கள் ஆய்வில் கண்டுபிடித்தோம். உலக அளவில் பால் உற்பத்தி யில் முதலிடம், இறைச்சி, வாசனைப் பொருட்கள்,  பயிர்கள் உற்பத்தியில் இரண்டாம் இடம் என பல பெருமைகள் நம்ப நாட்டுக்கு இருக்கு. ஆனா, அவற்றை வீணடிக்காமல் சரியான முறையில்  பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. இதை எப்படிச் சரி செய்யலாம்கறதை கத்துக் கொடுக்குறதுதான் ‘பதனிடுதல்’ படிப்பு. 

அறுவடையாகும் தானியங்கள், காய், கனிகளை பத்திரமா ‘பேக்’ பண்ணி குடோனுக்கு கொண்டு போறது கூட முக்கியமானது. ஏன்னா அதுல பாதி,  வழியிலேயே வீணாகலாம். பதனிடுதல் படிக்கிறவங்க முதல்ல காய்கறி, பழங்களை உயிருள்ள பொருளா நினைக்கணும். அப்போதான் அதைப்  பாதுகாக்க முடியும். பயிர்களும் செடிகளும் மரங்களும் நம்மைப் போலத்தான் சுவாசிக்குது. காற்று அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் நமக்கு  என்ன பிரச்னை வருமோ அது அவற்றுக்கும் வரும். சரியான டெம்பரேச்சர்ல இல்லைன்னா காய்கறிகள், பழங்கள் கெட்டுப் போகும்... சரியாக பழுக்காம  வெம்பிப் போகும்.  

முனைவர் பட்டத்துக்கு ‘மாற்றியமைக்கப்பட்ட சூழலில் தக்காளியை இருப்பு வைத்தல்’ என்ற ஆய்வை செய்தேன். உயர் ஆராய்ச்சிக்காக கனடா  போனேன். பிறகு, இந்தப் பதனிடுதல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். தஞ்சாவூரை சுற்றி இருக்கும் இடமெல்லாம் விவசாய பூமி. தேவைக்கு  அதிகமாகவே பொருள்கள் விளையும்... நம் கண் முன்னாடியே வீணாகும். இங்கே இருக்கும் விவசாயிகளுக்கு ‘பதனிடு தல்’பற்றிய விழிப்புணர்வு  தேவைப் படுது. அவங்க உற்பத்தி செய்வதைப் பதனிட்டு, பாதுகாத்து வைத்து, தேவையான போது கொடுக்கிறோம். 

உதாரணமா, சீசனில் தேவைக்கு அதிகமாக விளையும் மாம்பழங்களிலிருந்து மில்க்ஷேக், ஜூஸ்னு செய்யறோம். இதனால உணவுப் பொருள்கள்  வீணாவது குறையுது. உணவுப் பொருட்களில் என்னென்ன தயாரிக்கலாம் என்பதற்கான பயிற்சிகளையும் தர்றோம். இந்திய அளவில் பதனிடுதல்  தொழில்நுட்பத்துக்கான உயர்ரக இயந்திரங்களை நாங்க மட்டும்தான் வச்சிருக்கோம். அதை இங்கே இருக்கும் விவசாயிகள் பயன் படுத்திக்கிறாங்க. 

இன்னும் சில வருடங்களில் தண்ணீர், மண்வளம் குறையும். அப்போ உணவுக்கான தேவை அதிகமாகும். இப்போ நாம பதப்படுத்தி, சேமிச்சு  வைக்கலைன்னா ரொம்பக் கொடூரமான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உணவுக்காக அடுத்த தலைமுறை அவஸ்தைப்படக்  கூடாது என்பதுதான் எங்களோட நோக்கம்’’- ஆதங்கத்துடன் சொல்கிறார் கவிதா அபிராமி.         
                                            
உணவுத் தொடர்பான படிப்புகளில் சேர வேண்டுமா? 


ஆலோசனை சொல்கிறார் ‘சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ துறைத் தலைவர் திரிலோகசந்தர்... உணவு சார்ந்த படிப்புகளில் பல துறைகள் இருக்கின்றன. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராஃப்ட் படிப்பாகவும், பிளஸ் டூவில் தேறியவர்களுக்கு  டிப்ளமோ கோர்ஸாகவும் கிடைக்கிறது. பேக்கிங் ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பு. முதல் வருடம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வேண்டும். அடுத்த 6  மாதங்கள் இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங். வருடத்துக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகும். ‘ஃபுட் புரொடக்ஷன்’ என்ற ஒரு வருட படிப்புக்கு ரூ.25  ஆயிரம் செலவாகும். 

‘பி.ஜி. டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் ஃபுட் சர்வீசஸ்’ படித்தால் டயட்டீஷியனாகலாம். வருடத்துக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும்.  இந்தக் கட்டணங்கள் அரசு கேட்டரிங் கல்லூரிகளுக்கானவை. தனியார் கல்லூரிகளில் இதைப் போல இரு மடங்கு செலவாகும். சென்னை தரமணியில்  இருக்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’, திருச்சி துவாக்குடியில் அமைந்திருக்கும் ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல்  மேனேஜ்மென்ட்’ - இரண்டும் அரசு கேட்டரிங் கல்லூரிகள். இங்கே வருடத்தின் எல்லா நாட்களிலும் இலவச கேட்டரிங் பயிற்சியை வழங்குகிறார்கள். 

48 நாட்கள் பயிற்சி வகுப்பு. 18 முதல் 28 வயது வரை உள்ள ஆண், பெண்கள் பங்கேற்கலாம். எட்டாம் வகுப்பு தேறியிருந்தால் போதும். தஞ்சாவூரில்  இருக்கும் ‘பயிர் பதன தொழில் நுட்ப நிறுவனம்’, ‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்’, ‘கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்’ ஆகியவற்றில்  ‘பி.டெக்., ஃபுட் ப்ராசஸிங் இன்ஜினியரிங்’ கற்றுக் கொடுக்கப்படுகிறது. 4 வருடப் படிப்பு. எம்.டெக். படிப்பும் உண்டு. வேளாண் பல்கலையில்  முதுகலைப் படிப்பாக ‘அக்ரிகல்ச்சர் பிராசஸிங்’ வழங்கப்படுகிறது. இதற்கு வருடத்துக்கு ரூ.80 ஆயிரம் செலவாகும். சென்னை, பெசன்ட் நகர், ராஜாஜி  பவனில் உணவு பதப்படுத்துதலுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.depression the next generation?

The Director
Indian Institute of Crop Processing Technology
Ministry of Food Processing Industries, Government of India
Pudukkottai Road, Thanjavur - 613 005
Tamil Nadu
India

 
(: 91 4362 228155
Fax : 91 4362 227971
* director@iicpt.edu.in,

SOUTHERN REGION

CFNEU, A-1-A, Rajaji Bhawan, Besant Nagar, Chennai-600 090
4916004
CFNEU, Block No.1, Ground Floor Kendriya Sadan, Sultan bazar Hyderabad - 500195
4658085
CFNEU, Ground Floor, 'A' Wing, Kendriya Sadan 100 ft. Road Koramangala, Bangalore - 560034
5536270
CFNEU, No.1, Ramamurthy Road, Madurai-625002
530838
CFNEU, Andhra University Campus Waltair, Visakhapatnam - 530003
555835
CFNEU, "Peace Home", T.C.No. 26/930 Panavila Junction, Thiruvananthapuram - 695001
331239
CFNEU, 28/217-1/Tripunithura Road Manorama Junction, Cochin - 682036
311267
CFNEU, 48-12-1, Ringh Road, Gunadala Vijayawada - 520005
541662
CFNEU, 3rd Floor, Manipady Complex Old Kent Road, Pandeswar Mangalore - 575001
420692
CFNEU, No.30, Suryagandhinagar 11 Cross, Near Ambika Theatre Pondicherry - 605003
39007

ஸ்டைலு ஸ்டைலுதான்...ஃபுட்டு ஸ்டைலுதான்!'

சஞ்ஜீதா ஃபுட் ஸ்டைலிஸ்ட்

பஞ்சே தோற்றுப் போகும். அத்தனை வெண்மையான, மென்மையான இட்லி...
தலையால் தண்ணீர் குடித்தாலும், வீட்டில் சாத்தியமே படாத மொறு மொறு தோசை...
பார்த்தாலே பசி தீர்க்கச் செய்கிற புசுபுசு பூரி...
இன்னும் இப்படி எத்தனையோ...
ஹோட்டல் மற்றும் உணவுப்பொருள்
விளம்பரங்களில் வருகிற பல படங்கள்
அதிலிருந்து எடுத்து ‘அப்படியே சாப்பிடலாமா’ என நினைக்க வைக்கும்!
‘அவங்களுக்கு மட்டும் எப்படித்தான் அவ்ளோ அழகா வருதோ... வீட்ல செய்தா அப்படி வர்றதில்லை’ என்கிற பொறாமையும் புலம்பலும் வீட்டுக்கு வீடு நிச்சயம் இருக்கும். உங்களை பிரமிக்க வைக்கிற உணவு விளம்பரங்கள் அத்தனையின் பின்னணியிலும், ‘ஃபுட் ஸ்டைலிஸ்ட்’ என்கிற உணவு அலங்கார நிபுணர்களின் கைவண்ணம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?


சென்னையின் பிரபல பெண் ஃபுட் ஸ்டைலிஸ்ட்டுகளில் ஒருவர் சஞ்ஜீதா. அவரது அனுபவங்களும், ஃபுட் ஸ்டைலிங் பற்றி அவர் சொல்கிற தகவல்களும் சுவையோ சுவை!

‘‘பூர்வீகம் உதய்பூர். எம்.ஏ. எகனாமிக்ஸும், எம்.பி.ஏ-வும் முடிச்சிட்டு ஒரு கம்பெனியில வேலை பார்த்திட்டிருந்தேன். அங்கே என் கணவர் கிருஷ்ணகுமாரை சந்திச்சேன். அவர் தமிழர். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சென்னை வந்தோம். குழந்தைகள் பிறந்ததும், அவங்க ஓரளவு வளர்ற வரைக்கும் வேலைக்குப் போக முடியலை. இயல்புலேயே எனக்கு சமையல் ரொம்பப் பிடிக்கும். ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். அப்பல்லாம் எங்கம்மாவுக்கு போன் பண்ணி, சமையல் குறிப்பு கேட்டு, ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து சமைப்பேன். 

ஜெயின் சாப்பாடு பிரமாதமா பண்ணுவேன். கல்யாணத்துக்குப் பிறகு கணவர் வீட்டு தமிழ் சாப்பாட்லயும் விதம் விதமா கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். வெறுமனே வீட்ல சமைக்கிறதோட நிறுத்திக்காம, ஒரு வெப்சைட் தொடங்கி, அதுலயும் பகிர்ந்துக்க நினைச்சேன். அப்படித்தான் sanjeetakk.blogspot.in உதயமாச்சு. நான் டிராவல் பண்ற இடங்களோட ஸ்பெஷல் ரெசிபி, எல்லாருக்கும் பிடிச்ச அயிட்டங்கள்னு இதுல எல்லாத்துக்கும் இடமுண்டு. இன்னொரு பக்கம் www.litebite.in ன்னு இன்னொரு வெப்சைட் ஆரம்பிச்சு, அதுல வெறும் டயட் சமையல் மட்டும் எழுதறேன். 

மைதா, எண்ணெய், நெய், கொழுப்புன்னு எதுவுமே இல்லாத 100 பர்சென்ட் டயட் சாப்பாட்டுக்கான இடம் அது. ரெசிபிகளை மட்டும் பகிர்ந்துக்கிறதுக்குப் பதில், அதோட படங்களையும் சேர்த்துப் போட்டா நல்லாருக்குமேன்னு தோணவே, முதல்ல சாதாரண கேமராவுல நான் சமைக்கிறதை எல்லாம் படம் எடுத்துப் போட்டுக்கிட்டிருந்தேன். அப்புறம் புரொஃபஷனல் கேமரா வாங்கி, நானாவே போட்டோகிராபி கத்துக்கிட்டு, எடுக்க ஆரம்பிச்சேன். சமைச்ச உணவை அழகா ப்ரெசென்ட் பண்றதுங்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம். அதுக்காக ரொம்ப மெனக்கெடுவேன். 

என் குழந்தைங்களுக்கு லன்ச் பாக்ஸ்ல இட்லியோ, தோசையோ கொடுத்தனுப்பினாகூட, அதையுமே வித்தியாசமா டெகரேட் பண்ணி,  டப்பாவை திறந்ததுமே சாப்பிடத் தூண்டற அளவுக்கு அழகுப்படுத்திக் கொடுப்பேன். என்னோட அந்த இயல்புதான் இன்னிக்கு என்னை ஒரு ஃபுட் ஸ்டைலிஸ்ட்டா அடையாளப்படுத்தியிருக்கு. என்னோட பிளாக்ல நான் போட்டிருந்த படங்களையும் அலங்காரங்களையும் பார்த்துட்டு, தீபா வாஸ்வானி-ன்னு ஒரு போட்டோகிராஃபர் கூப்பிட்டாங்க. அவங்க பண்ணப் போற ஃபுட் போட்டோகிராபிக்கு என்னை ஃபுட் ஸ்டைலிஸ்ட்டா ஒர்க் பண்ணக் கேட்டாங்க. 

பிரவுன் ட்ரீ-ன்னு ஒரு கம்பெனிக்கு அவங்க போட்டோகிராபி பண்ண, நான் ஃபுட் ஸ்டைலிங் பண்ணிக் கொடுத்தேன். அதுதான் ஆரம்பம். அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள்... அதுல டூ ஸ்கொயர்னு ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கும், பப்பட் ஜமால் கம்பெனிக்கும் ஒர்க் பண்ணின அனுபவம் மறக்க முடியாதது...’’ என்கிற சஞ்ஜீதா, ஃபுட் ஸ்டைலிங் பற்றிக் கொஞ்சம் விளக்குகிறார்.‘‘சாப்பிடற சாப்பாடு டேஸ்ட்டியா இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதோட அழகும் பிரசன்ட்டேஷனும். பார்த்ததும் சாப்பிடத் தூண்டணும். 

பொதுவா ரெஸ்டாரன்ட்டுல உணவு சமைக்கிற செஃப்தான் அதை டெகரேட் பண்ணுவாங்க. அவங்களோட கவனம் முழுக்க அந்த உணவு மேல மட்டும்தான் இருக்கும். ஆனா, ஒரு ஃபுட் ஸ்டைலிஸ்ட் வெறுமனே உணவை மட்டும் பார்க்காம, அதோட பின்னணி, கலர், அதோட தன்மை, லைட்டிங்னு சகலத்தையும் பார்த்து, அதுக்கேத்தபடி அழகுப்படுத்துவாங்க. ‘டெகரேஷன்தானே... யார் வேணா பண்ணிட முடியாதா’ன்னு நினைக்கலாம். அப்படியில்லை... அதீத கற்பனையும் புதுமையான முயற்சிகளும் வேணும். 

அரேபியன் ரெஸ்டாரன்ட்டுன்னா, உணவை வைக்கிற தட்டு, பாத்திரம், சுத்தியுள்ள அழகுப் பொருள்கள்னு எல்லாமே அதே ஸ்டைல்ல இருந்தாகணும். செட்டிநாடுன்னா, சாப்பாட்டைப் பார்த்ததுமே அந்த ஃபீலை கொண்டு வரணும்’’ என்கிறவர், தன் வீட்டின் ஒரு அறை முழுக்க ஃபுட் ஸ்டைலிங் செய்யத் தேவையான பொருள்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். உணவலங்காரம் செய்கிற ஃபுட் ஸ்டைலிஸ்ட்டுகளுக்கு தேவை அதிகமிருப்பதைத் தெரிவிக்கிற சஞ்ஜீதா, இந்த வேலைக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை என்றும், தெரிந்து வைத்திருப்பது ஒரு கூடுதல் தகுதி என்றும் 
சொல்கிறார்.
style style It is ... food style! '

‘‘வீட்ல சமைக்கிறதும், சமைச்சதை அழகா பிரசென்ட் பண்றதும் தனி விஷயம். ஆனா, அதுவே ஒரு போட்டோ ஷூட்டுக்காக ஸ்டைலிங் பண்ற போது, அதுல ருசியை விட அழகு முக்கியம். அதுக்கு நாங்க சில கண்கட்டு வித்தைகளைச் செய்யறதுண்டு’’ என்றபடியே தொழில் ரகசியங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார். ‘‘ஐஸ் கட்டிகள் மிதக்கற மாதிரியான இடங்கள்ல நிஜமான ஐஸ்கட்டிகளை உபயோகப்படுத்தினா, போட்டோ செஷன் முடியறதுக்குள்ள கரைஞ்சிடும். அதனால அக்ரிலிக் ஐஸ் கட்டிகளை உபயோகிப்போம். ஸ்ட்ராபெர்ரி மேல லிப்ஸ்டிக் தடவி, அதோட கலரை இன்னும் அதிகப்படுத்துவோம்.

அரை வேக்காடு சமைச்ச காய்கறிகள்தான் போட்டோவுல பசுமையா தெரியும். பழங்கள், அப்போ பறிச்ச மாதிரி ஃப்ரெஷ்ஷா தெரிய ஏரோசால் டியோடரன்ட் யூஸ் பண்ணுவோம். பஞ்சு உருண்டைகளை தண்ணியில நனைச்சு, மைக்ரோவேவ் செய்து வச்சா, ஆவி பறக்கற அயிட்டங்களுக்கு ஆவியைத் தரும். சமைக்காத அசைவ உணவுகள் மேல பிரவுன் கலர் ஷூ பாலீஷ் தடவினா, பொரிச்ச லுக் கிடைக்கும். வேக வச்ச உருளைக்கிழங்குல கலர் சேர்த்து, ஐஸ்கிரீமுக்கு பதிலா யூஸ் பண்ணுவோம். இதெல்லாம் ஜஸ்ட் ஃபார் போட்டோஸ். சாப்பிட முடியாது...’’ எனச் சிரிக்கிறவருக்கு, ஃபுட் ஸ்டைலிங் செய்யவென பிரத்யேக ஸ்டூடியோ ஆரம்பிப்பதே அடுத்தகட்ட ஆசை!

வித்தியாசம் வெற்றி தருமே!

மிகவும் சவாலான தொழில்களில் ஒன்று ஹோட்டல் நடத்துவது.  போட்டிகள் நிறைந்த அந்தத் துறையில் தாக்குப்பிடிக்கிற ரகசியம் எல்லோருக்கும் கைவராத ஒன்று. அதிலும் பெண்களுக்கும் ஹோட்டல் பிசினஸுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். வீட்டுக்குள் பெண்களின்  பிடிக்குள் இருக்கிற உணவுத் துறை, வெளியில் ஏனோ அப்படி இருப்பதில்லை. சென்னை வடபழனியில், ‘டயட் இன்’ என்கிற பெயரில் வித்தியாச உணவகம் நடத்தும் காந்திமதியையும் ஆரம்பத்தில் நிறைய கேள்விகளும் பயங்களும் துரத்தியிருக்கின்றன. விமர்சனங்களையும் வேண்டா கேள்வி  களையும் புறந்தள்ளிய காந்திமதியின் எதிர்நீச்சல், இன்று வெற்றிகளை அவரது வசமாக்கியிருக்கிறது.Difference to success!


‘‘நியூட்ரீஷியன் ஸ்டூடன்ட் நான். படிச்சதோட, அந்த விஷயங்களை மறந்துடாம, வாழ்க்கையில ஏதோ ஒரு விஷயத்துல அதை அப்ளை  பண்ணணும்னு யோசிச்சப்பதான் ஹோட்டல் ஆரம்பிக்கிற ஐடியா வந்தது. ஹோட்டல் ஆரம்பிக்கப் போறேன்னு நான் சொன்னதும், ‘உனக்கு  இதெல்லாம் தேவையா... எதுக்கு ரிஸ்க்?’ன்னு நம்பிக்கையை சிதைச்சவங்கதான் அதிகம். அவங்களைச் சொல்லித் தப்பில்லை. இன்னிக்கு தெருவுக்கு  ரெண்டு ஹோட்டல் இருக்கு. 

புதுசா ரெண்டு ஹோட்டல் ஆரம்பிச்சா, அதுக்கு முன்னாடி தொடங்கின வேற ரெண்டு ஹோட்டலை பிசினஸ் இல்லைன்னு மூடிட்டுப் போற  காலமிது. அதுவும் இல்லாம பெரும்பாலான ஹோட்டல்கள்ல ஒரே மாதிரியான டேஸ்ட்... முன்னல்லாம் வீட்டுச் சாப்பாடு போரடிச்சா, ஹோட்டல்ல  போய் சாப்பிடுவாங்க. இன்னிக்கு ஹோட்டல் சாப்பாடே பலருக்கு அலுத்துப் போயிட்டிருக்கு. அதுவுமில்லாம, கொடுக்கிற பணத்துக்கு ஆரோக்கியமான  சாப்பாடு கிடைக்குதான்னு பார்த்தா, அதுக்கும் உத்தரவாதம் இல்லை. எல்லாத்தையும் யோசிச்சு, ஹோட்டல் இன்டஸ்ட்ரியை பத்தி நல்லா ஆய்வு  பண்ணின பிறகுதான், டயட் உணவகம் தொடங்கறதுங்கிற முடிவுக்கு வந்தேன். 

எங்கப்பாவுக்கு ஹோட்டல் துறையில அனுபவம் உண்டுங்கிறதால, முதல் சப்போர்ட் அவர்கிட்டருந்து கிடைச்சது. அடுத்து என் கணவர் கொடுத்த  ஊக்கம். துணிஞ்சு இறங்கிட்டேன். என்னோட ரெஸ்டாரன்ட் பத்தோட ஒண்ணா இருக்கக்கூடாதுங்கிறதுல ரொம்பத் தெளிவா இருந்தேன். இட்லி,  தோசை, பரோட்டான்னு வழக்கமான உணவுகளை எந்த ஹோட்டல்ல வேணா சாப்பிடலாம். நம்ம பாரம்பரியத்துல காலங்காலமா இருந்த சிறுதானிய  உணவுகளை சாப்பிட சரியான இடமில்லை. 

முழுக்க முழுக்க சிறுதானிய உணவுகளுக்கான உணவகமா நாலு வருஷங்களுக்கு முன்னாடி டயட் இன்னை தொடங்கினேன். கவர்ச்சியான  விளம்பரம், ஆடம்பரமான இன்டீரியர்னு எதுலயும் எனக்கு நம்பிக்கையில்லை. தரமான உணவு நிச்சயமா மக்களை ஈர்க்கும்னு நம்பிக்கையோட காத்திருந்தேன். ஹோட்டலை பத்தின எந்த ஐடியாவும் இல்லாம வாடிக்கையாளர்கள் உள்ளே வருவாங்க. சாதாரண இட்லி, தோசை கிடைக்காதான்னு  கேட்பாங்க. முளைகட்டின வெந்தய தோசை, நவதானிய அடை, முந்திரிப்பழ ஜூஸ்னு புதுமையான அயிட்டங்களை பத்தி சொன்னதும், ‘பத்திய  சாப்பாடா... மருந்து மாதிரி இருக்குமா’ன்னு கேட்பாங்க. 

சாம்பிள் கொடுத்து, ‘பிடிச்சா ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க’ன்னு சொல்வேன். இந்த நாலு வருஷத்துல பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஒருத்தர்கூட  திரும்பிப் போனதில்லை. வேற என்ன இருக்குன்னு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அயிட்டத்தை டேஸ்ட் பண்ணிப் பார்க்க, மறுபடி மறுபடி  வர்றவங்கதான் அதிகம்...’’ என்றபடியே மெனு கார்டு காட்டுகிறார் காந்திமதி. கொள்ளு சூப், முடக்கத்தான் கீரை சூப், கம்பங்களி, வரகரிசி தயிர்சாதம்,  கோதுமை பிசிபேளாபாத், கோதுமை பரோட்டா, நூல்கோல் துவையல், நுங்கு ஜூஸ் என மெனு முழுக்க வித்தியாசம்... ஊறுகாய்க்குத் தடா. 

குழந்தைகளை ஈர்க்க சாட் அயிட்டங்களும் உண்டு. ஆனால், அவற்றிலும் பலதானிய பிரெட்டில் செய்த சான்ட்விட்ச், பர்கர், பீட்சா என  ஆரோக்கியமானவற்றுக்கு மட்டுமே அனுமதி. மாதம் ஒரு முறை ‘நிலாச்சோறு’ என்கிற பெயரில், முழு நிலவில் மொட்டை மாடியில் விருந்து  உபசாரம்! ‘‘ஹோட்டல் பிசினஸ் ரிஸ்க் நிறைஞ்சதுன்னு எனக்கும் தெரியும். எந்த விஷயங்கள்ல பிரச்னைகள் வரும்னு முன்கூட்டியே  யோசிச்சுக்கிட்டேன். வேலைக்கு ஆள் கிடைக்கிறதுதான் இன்னிக்கு எல்லா பிசினஸ்லயுமே பிரதான பிரச்னை.

அமெரிக்காவில எல்லாம் ரெண்டே பேர் ஒரு ரெஸ்டாரன்ட்டை வெற்றிகரமா நடத்தறாங்க. இது என் வேலையில்லைன்னு அவங்க எதையும்  ஒதுக்கிறதில்லை. ஆனா, நம்மூர்ல டேபிள் துடைக்கிறது கவுரவக் குறைச்சல். தட்டு கழுவறது கேவலமான வேலைங்கிற மனப்பான்மைக்குக்  குறைச்சலே இல்லை. இந்த விஷயங்கள்ல நான் தெளிவா இருக்கேன். சமையலறையில கட்டாயம் நான் இருப்பேன். செஃப் வரலையே... என்ன  செய்யறதுன்னு கையைப் பிசைஞ்சுக்கிட்டு நின்னதில்லை. ஒவ்வொரு செய்முறையும் நான் உருவாக்கினது. 

அதனால அதை எப்படிப் பண்ணணும்னு எனக்குத் தெரியும். ஆள் இல்லையா... ஆர்டர் எடுக்கிறதுலேருந்து, டேபிள் கிளீன் பண்றது வரைக்கும்  எல்லாத்தையும் நானே செய்வேன். ‘ஆள் கிடைக்கலை, கிடைச்சாலும் வேலை தெரியலைன்னு எல்லாம் புலம்பிக்கிட்டு, பிசினஸ்ல கோட்டை  விடறதுக்குப் பதில், எல்லா வேலைகளையும் நாமளே கத்துக்கறதும், கவுரவம் பார்க்காம அதைச் செய்யறதும், பிசினஸ்ல நமக்கான இடத்தைத் தக்க  வைக்கும்கிறது அனுபவத்துல நான் கத்துக்கிட்ட உண்மை...’’ - வெற்றியின் பின்னணி சொல்லிச் சிரிக்கிறார் காந்திமதி.

குறைந்த கலோரியில் நிறைந்த உணவு...சமையல் குறிப்புகள்,



50-100 கலோரி டயட் ஃபுட்
''ஜங்க் ஃபுட்ஸ்க்கு இணையாகவும் சுவையாகவும் நொறுக்ஸ் கிடைச்சா, நாங்க ஏன் ஜங்க் ஃபுட்ஸ் பக்கம் 'ஜம்ப்’ பண்றோம்?'' என்பதே இன்றைய இளைஞர்களின் 'டேஸ்ட்’ டாக்!

''எதிலுமே புதுமை தேவையாக இருக்கிறது. அதிலும், உணவு விஷயத்தில் எல்லா வயதினரையும் சுண்டியிழுப்பது என்பது சற்று கடினம்தான். அதான், சுவையாக மட்டும் அல்லாமல், சத்தான நம் பாரம்பரிய உணவுகளைத் தேர்ந்தெடுத்து, அதில் வெரைட்டியான டிஷ்களைத் தருகிறேன். பசியும் அடங்கும்.  உடலுக்கு தேவையான எனர்ஜியும் கிடைக்கும்'' என்கிறார் சென்னை, வடபழனியில் 'டயட் இன்’ என்ற உணவு விடுதியை நடத்திவரும் ஊட்டச்சத்து நிபுணர் காந்திமதி.  

முளைக்கட்டிய வெந்தய தோசை
செய்முறை: கால் கப் வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைத்து, முளைக்கட்டியதும், தோசை மாவுடன் சேர்த்து அரைத்து வார்க்கலாம்.  
பலன்கள்: உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வயிற்றுக்கடுப்பு, வயிற்று வலி குணமாகும். மாதவிடாய்க் கோளாறைச் சரிசெய்யும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் தடுக்கும்.  

ராகி பக்கோடா
செய்முறை: கடலை மாவுக்குப் பதிலாகக் கேழ்வரகு மாவைப் பயன்படுத்தியும் செய்யலாம். வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து  எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவேண்டும்.  
பலன்கள்: கேழ்வரகில் இரும்புச் சத்து, புரதச் சத்து, நார்ச் சத்துகள் இருக்கின்றன. மலச்சிக்கல் வராது. உடல் இளைக்கும்.

வாழைப் பூ வடை
செய்முறை: வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டுக் கொதித்ததும், வடிகட்டி, பிழிந்து தனியாக வைக்கவும். ஊறவைத்த கடலைப்பருப்புடன், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, வேகவைத்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக்கொள்ளவும். அத்துடன் நறுக்கிவைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வேகவைத்து வடித்த வாழைப்பூவைச் சேர்த்துப் பிசைந்து காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.  
பலன்கள்: உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுக்கடுப்பு, அஜீரணக் கோளாறு மற்றும் வறட்டு இருமலைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.  

தண்டை
செய்முறை:  பால், கசகசா, மிளகு, சோம்பு, குங்குமப்பூ, பாதாம் மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.  
பலன்கள்: இந்த ஊட்டச்சத்து பானம் வட நாட்டில் மிகப் பிரபலம். வளரும் குழந்தைகளுக்கு நல்ல எனர்ஜியைக் கொடுக்கும். எடை குறைந்த குழந்தைகளுக்கு தினமும் இரண்டு வேளை இந்த பானத்தைக் கொடுக்கலாம்.  
நவதானிய அடை
செய்முறை: அரிசி, பருப்பு வகைகள், எள், கொள்ளு, கொண்டைக்கடலை, காராமணி, நிலக்கடை, மசூர் தால் என விரும்பிய தானிய வகைகளை தண்ணீரில் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அடை பதத்தில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தோசைக்கல்லில் அடையாக வார்க்கலாம்.
பலன்கள்: புரதச் சத்து அதிகம் இருக்கிறது.  உடலை நல்ல திடமாக வைத்திருக்கும். வளரும் பிள்ளைகளுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். 
- வி.லஷ்மி 
நன்றி குங்குமம்தோழி

கலைநயம்...ரசனை... எதிர்காலம்




பேக்கரி தொழிலில் கிட்டத்தட்ட 25 வருட அனுபவம்... புதுப்புது கேக் வகைகளை நொடியில் செய்து அசத்தும் திறமை... தோற்றத்தில் அத்தனை  எளிமை. சென்னை அண்ணாநகரில் ஆர்டிசன்ஸ் பேக்கிங் இன்ஸ்டிடியூட்டை நடத்தி வருகிறார்  லிசா ஐசக். 

‘‘சொந்த ஊர் கேரளா. அம்மாவுக்கு சமையல்னா உயிர். வீட்டுல எந்த ஃபங்ஷன்னாலும் கேக் செஞ்சிடுவாங்க. அந்த வாசனையே எனக்கு ரொம்பப்  பிடிக்கும். ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் பி.எஸ்சி. ஹோம் சயின்ஸ் படிச்சேன். சமையல் பத்தி நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசை. பெண்கள்னா ‘வீட்டில்  சமைப்பவர்கள்’ங்கிற அடையாளம் இருந்த காலம் அது. கேட்டரிங் கோர்ஸ்ல பெண்கள் சேர்ந்தா விநோதமா பார்க்கிற நிலைமை. நான் தைரியமா  கேட்டரிங் காலேஜ்ல சேர முடிவு செஞ்சேன். ‘பொண்ணு நீ... ஹோட்டல்ல போய் வேலை பார்க்கப் போறியா?’ன்னு எதிர்ப்புகள். 

அப்பா, அம்மா கூட அனுமதிக்கலை. ரொம்பப் போராடினதுக்கு அப்புறம்தான் பச்சைக்கொடி காட்டினாங்க. மும்பை ஐ.ஹெச்.எம்.ல (Institute of Hotel  Management) ‘பி.ஜி. டிப்ளமோ இன் ஃபுட் மேனேஜ்மென்ட்’ சேர்ந்தேன். உணவு பற்றிய அடிப்படைகளைக் கத்துக் கொடுத்தாங்க. ‘நாலு பேருக்குத்  தேவையான அளவு சமைப்பது எப்படி?’, ‘சமைச்ச உணவை அழகா டெக்கரேட் பண்ணி மேஜையில் வைப்பது எப்படி?’ -இப்படி  எல்லாத்தையும்  கத்துக்கிட்டேன். படிப்பு முடிஞ்சதும் திருவனந்தபுரத்துல ‘யுஎஸ் வீட் அசோஸியேட்ஸ்’ல சேர்ந்தேன். அங்கேதான் ‘பேக்கரி’ என்கிற தனி உலகம்  புரிபட ஆரம்பிச்சுது. 

அங்கேயே பேக்கிங் ஸ்கூலும் இருந்தது. வேலை பார்த்துக்கிட்டே படிச்சேன். ‘சாண்ட்விட்ச்’ல இருந்து ‘ரிச் க்ரீமி கேக்’ வரைக்கும் செய்யக்  கத்துக்கிட்டேன். மூணே மாசத்துல கோர்ஸை முடிச்சேன். அப்புறம் சென்னை, ‘ஆசான் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ல 10  வருஷம் வேலை. பேக்கிங், சாக்லெட், வெரைட்டி உணவு தயாரிப்பு முறைகளை மாணவர்களுக்குக் கத்துக் கொடுக்கும் வேலை. அதுக்கப்புறம் ‘ஹாட்  பிரெட்ஸ்’ல ‘ஸ்கூல் ஆஃப் பேக்கிங்’கின் முதல்வர் ஆகும் வாய்ப்பு வந்தது. ஹாட் பிரெட்ஸ்ல கேக், பிரெட் வகைகள் பிரபலம். அதனால ரொம்ப  கவனமா கத்துக்கொடுக்க வேண்டியிருந்தது. 

கத்துக்க வந்தவங்களுக்கு கேக்கின் அடிப்படையைப் புரிய வச்சு வேலை வாங்குவது ஒரு கலை. 10 வருஷம் இப்படியே போச்சு. அப்புறம்தான் ஒரு  பேக்கிங் இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சு நடத்தலாமேன்னு தோணிச்சு. ‘ஆர்டிசன்ஸ் பேக்கிங் இன்ஸ்டிடியூட்’ உருவானது. பேக்கரியில ஆர்வமா இருக்கும்  பெண்களும் ஆண்களும் கத்துக்க வர்றாங்க. கோடை விடுமுறையில ஸ்டூடண்ட்ஸும், வேலை பார்க்கும் பெண்கள் பார்ட் டைமாவும் கத்துக்கலாம்.  இதுவரை ஆயிரம் பேருக்கு மேல கத்துக் கொடுத்திருக்கேன். 

உருளைக்கிழங்கு கேக், பூசணிக்காய் கேக்னு இயற்கையான ஃப்ளேவர்கள்லயும் கேக் செய்யலாம். வீட்டுக்கு கெஸ்ட் வர்றப்போ இருக்கறதை வச்சு  சின்ன கேக், பிரெட், பிஸ்கெட் செஞ்சு கொடுக்கலாம். சர்க்கரைக்கும் மைதாவுக்கும் வித்தியாசம் தெரியாதவங்களைக்கூட பேக்கரி நடத்துற அளவு  தயார்படுத்தறோம். கேக் தயாரிச்சா மட்டும் போதாது. சரியான டெக்கரேஷன் செஞ்சாதான் முழு அழகு கிடைக்கும். ‘ஐஸிங்’னு சொல்லப்படும்  டெக்கரேஷனை பெண்களால் ரசனையோட செய்ய முடியும். 

சுயமா தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு இந்தத் தொழில் கைகொடுக்கும். கைவசம் ஒரு தொழில் இருப்பது பெண்களுக்குத் தன்னம்பிக்கையைக்  கொடுக்கும். பெரிய ஹோட்டல்களில் பேக்கிங் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. கலைநயத்தோடு கத்துக்கறவங்களுக்கு நல்ல எதிர்காலம்  இருக்கு’’ - நம்பிக்கையோடு சொல்கிறார் லிசா ஐசக். 

உணவுத் தொடர்பான படிப்புகளில் சேர வேண்டுமா? 


ஆலோசனை சொல்கிறார் ‘சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ துறைத் தலைவர் திரிலோகசந்தர்... 

உணவு சார்ந்த படிப்புகளில் பல துறைகள் இருக்கின்றன. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு கிராஃப்ட் படிப்பாகவும், பிளஸ் டூவில் தேறியவர்களுக்கு  டிப்ளமோ கோர்ஸாகவும் கிடைக்கிறது. பேக்கிங் ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பு. முதல் வருடம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வேண்டும். அடுத்த 6  மாதங்கள் இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங். வருடத்துக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவாகும். ‘ஃபுட் புரொடக்ஷன்’ என்ற ஒரு வருட படிப்புக்கு ரூ.25  ஆயிரம் செலவாகும். ‘பி.ஜி. டிப்ளமோ இன் டயட்டிக்ஸ் அண்ட் ஹாஸ்பிட்டல் ஃபுட் சர்வீசஸ்’ படித்தால் டயட்டீஷியனாகலாம். 

வருடத்துக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும். இந்தக் கட்டணங்கள் அரசு கேட்டரிங் கல்லூரிகளுக்கானவை. தனியார் கல்லூரிகளில் இதைப் போல இரு  மடங்கு செலவாகும். சென்னை தரமணியில் இருக்கும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’, திருச்சி துவாக்குடியில் அமைந்திருக்கும்  ‘ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ - இரண்டும் அரசு கேட்டரிங் கல்லூரிகள். இங்கே வருடத்தின் எல்லா நாட்களிலும் இலவச  கேட்டரிங் பயிற்சியை வழங்குகிறார்கள். 48 நாட்கள் பயிற்சி வகுப்பு. 18 முதல் 28 வயது வரை உள்ள ஆண், பெண்கள் பங்கேற்கலாம். Aesthetic taste ... ... The future!

எட்டாம் வகுப்பு தேறியிருந்தால் போதும். தஞ்சாவூரில் இருக்கும் ‘பயிர் பதன தொழில் நுட்ப நிறுவனம்’, ‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்’,  ‘கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்’ ஆகியவற்றில் ‘பி.டெக்., ஃபுட் ப்ராசஸிங் இன்ஜினியரிங்’ கற்றுக் கொடுக்கப்படுகிறது. 4 வருடப் படிப்பு.  எம்.டெக். படிப்பும் உண்டு. வேளாண் பல்கலையில் முதுகலைப் படிப்பாக ‘அக்ரிகல்ச்சர் பிராசஸிங்’ வழங்கப்படுகிறது. இதற்கு வருடத்துக்கு ரூ.80  ஆயிரம் செலவாகும். சென்னை, பெசன்ட் நகர், ராஜாஜி பவனில் உணவு பதப்படுத்துதலுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் மகளிர் சுய உதவிக்குழு  பெண்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.
மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளவும் 
Artisans Baking Institute
Z- 292, 2nd Avenue, Annanagar
[ behind St. Luke's Church] 
ChennaiTamil Nadu 600040
India

ph: 9841057422

artisansbaking@yahoo.co.in

- எஸ்.பி.வளர்மதி

Sunday, October 20, 2013

ஆரத்தி தட்டில் லாபமும் கொட்டும்

சடங்குகளும், சம்பிரதாயங்களும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட இன மக்களின் திருமணம் மற்றும் விசேஷங்களில் மட்டுமே  வைக்கப்பட்டு வந்த ஆரத்தி தட்டு கலாசாரத்தை இன்று பலரும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். திருஷ்டி கழிக்க, வரிசை வைக்க, அழகுக்காக  என ஆரத்தி தட்டுகளின் பயன்பாட்டில் மட்டுமே வித்தியாசம்.
Offerings in the and loss profit prevention
சென்னையைச் சேர்ந்த பாவனா பிரசாத் செய்கிற ஆரத்தி தட்டுகளில் அழகு அள்ளுகிறது. ஆரத்தி தட்டு அவசியம் வைக்க வேண்டும்... ஆனால்  பட்ஜெட்டும் கையைக் கடிக்கக் கூடாது என நினைக்கிற மக்களுக்கு பாவனாவிடம் இருக்கிறது தீர்வு.

‘‘செலவு அதிகமாகக் கூடாதுன்னு நினைக்கிறவங்க தெர்மகோல்ல பண்ணலாம். ரொம்பவும் கம்மியாவும் வேண்டாம், ரொம்ப காஸ்ட்லியாவும்  வேணாம்னு நினைக்கிறவங்க எவர்சில்வர்ல பண்ணலாம். எவ்வளவு வேணா செலவழிக்கத் தயார்னு நினைக்கிறவங்களுக்கு பிளைவுட் தட்டு சரியான  சாய்ஸ்.

தட்டுகளை முதல்ல பெயின்ட் அடிச்சு, டிசைன் பண்ணிட்டு, அதுக்கு மேல நம்ம விருப்பப்படி அலங்காரம் பண்ண வேண்டியதுதான் வேலை. ரெண்டு  கொப்பரைத் தேங்காயை வச்சு, அது மேல மாப்பிள்ளை, பெண்ணோட பேரை பெயின்ட் அல்லது ஸ்டிக்கர்ல எழுதலாம். குட்டிக்குட்டி பொம்மைகளை  ஒட்டி டிசைன் பண்ணலாம். உபயோகமில்லாத பழைய சிடியை உபயோகிக்கலாம். அகல் விளக்குகளை ஒட்டி, மெழுகுவர்த்தியோ, கற்பூரமோ ஏத்தி  வைக்கிற மாதிரி செய்யலாம். இது தவிர மணி, முத்து, குந்தன் ஸ்டோன், ஹேண்ட்மேட் பேப்பர், லேஸ், ஜரிகை, ஸ்டிக்கர் பொட்டு, நவதானியம்,  கலர், கலர் மிட்டாய்.... இப்படி எதை வேணாலும் உபயோகிச்சு கற்பனைக்கேத்தபடி டிசைன் பண்ணலாம். தெர்மகோல் தட்டுன்னா, நம்ம  விருப்பத்துக்கேத்தபடி வெட்டிக்கலாம். எவர்சில்வர் தட்டு ரெடிமேடா கிடைக்கிறதால பிரச்னை இல்லை. பிளைவுட்னா, கார்பென்டர்கிட்ட வெட்டி  வாங்கணும்.

நிறைய மாடல்கள்ல, வேற வேற பட்ஜெட்ல தட்டுகளை தயார் பண்ணி வச்சுக்கிட்டா, வாடகைக்கும் கொடுக்கலாம். சொந்தமா கேட்கறவங்களுக்கு  விலைக்கும் தரலாம். தெர்மகோலா, எவர்சில்வரா, பிளைவுட்டாங்கிறதைப் பொறுத்து ஒரு நாளைக்கு 15 தட்டு வரை ரெடி பண்ணலாம். கல்யாண  கான்டிராக்டர்கள், மண்டப உரிமையாளர்கள், கேட்டரிங் பண்றவங்ககிட்ட சொல்லி வச்சு ஆர்டர் பிடிக்கலாம்’’
என்கிறார் பாவனா.

முதலீடு: 5 தெர்மகோல் தட்டுகளுக்கு 300 ரூபாய், 5 எவர்சில்வர் தட்டுகளுக்கு 800 ரூபாய், 5 பிளைவுட் தட்டுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய்.

லாபம்: 50 சதவீதம்

பயிற்சிக்கு: தெர்மகோலில் ஒன்று, எவர்சில்வரில் ஒன்று, பிளைவுட்டில் ஒன்று என 3 மாடல்களை ஒரே நாளில் கற்றுக் கொள்ள ஆயிரம் ரூபாய்  கட்டணம். தேவையான பொருள்களும் தரப்படும்.

தொடர்புக்கு: 81448 37663
thnxs:http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2028&Cat=501

அன்புக்கும் உண்டு அழகான பெட்டி!

அன்பளிப்பை அசத்தலாகக் கொடுப்பவர்கள் ஒரு ரகம் என்றால், அன்பளிப்பு வைத்துக் கொடுக்கும் அட்டைப்பெட்டியையே அழகாகக் கொடுப்பவர்கள்  இன்னொரு ரகம். உள்ளே இருப்பது 2 ரூபாய் சாக்லெட்டாக கூட இருக்கலாம். அதை வைத்துக் கொடுத்த பெட்டியின் மதிப்போ, பரிசுப் பொருளைவிட  அதிகமாக இருக்கும். சென்னையைச் சேர்ந்த மணிமேகலை டிசைன் செய்கிற அன்பளிப்புப் பெட்டிகள் ஒவ்வொன்றையுமே அன்பளிப்பாகக்  கொடுக்கலாம். அத்தனை அழகு!
It has a beautiful box!
‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர்ல நிறைய கைவினைப் பொருள்கள் செய்யத் தெரியும். அதுல ஒண்ணுதான் இந்த கிஃப்ட் பாக்ஸ். சாக்லெட்டோ,  குட்டிக்குட்டி நகைகளோ எதை அன்பளிப்பா கொடுக்கிறதா இருந்தாலும், அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள்ளதான் வச்சுக் கொடுப்போம். பிளாஸ்டிக்  சுற்றுச்சூழலுக்குக் கெடுதலானதுன்னு சொல்லிக்கிட்டே, இன்னொரு பக்கம் ஏதோ ஒரு ரூபத்துல அதை உபயோகப்படுத்தறது எந்த வகையில  நியாயம்? 

என்னோட ஃப்ரெண்ட்ஸ், குடும்ப நபர்களுக்கெல்லாம் அன்பளிப்பு கொடுக்கும்போது, என் கைப்பட செய்த பேப்பர் கிஃப்ட் பாக்ஸுக்குள்ளதான் வச்சுக்  கொடுப்பேன். உள்ளே இருக்கிற அன்பளிப்பைவிட, கிஃப்ட் பாக்ஸுக்கு அதிகமான பாராட்டு கிடைக்கும். ரீசைக்கிள்டு பேப்பர், கன்ஸ்ட்ரக்ஷன் பேப்பர்,  சார்ட் பேப்பர், ஹேண்ட்மேடு பேப்பர்னு பலவிதமான பேப்பர்ல இதைச் செய்யலாம். தரத்தைப் பொறுத்து ஒரு ஷீட் 30 ரூபாய்லேருந்து கிடைக்கும். 

ஏ3, ஏ4 சைஸ் பேப்பராகவும் வாங்கலாம். வட்டம், சதுரம், செவ்வகம்னு சாதாரண வடிவங்கள் தவிர, ஸ்ட்ராபெர்ரி, திறந்து மூடும் அலமாரி டிசைன்,  பென்சில், பேனா வடிவம், இதய வடிவம்னு கற்பனைக்கேத்தபடி 25க்கும் அதிகமான மாடல்கள் பண்ணலாம். பெட்டிகளைச் செய்து முடிச்சதும், அதுல  குந்தன் ஸ்டோன், முத்து, சமிக்கி ஒட்டறது, சாட்டின் ரிப்பன் கட்டறதுன்னு இன்னும் அழகுப்படுத்தலாம். நமக்குத் தேவையான எந்த சைஸ்லயும்  பண்ண முடியும். அன்பளிப்பு வந்த பெட்டியை, அப்புறமா வேற விதமாவும் பயன்படுத்திக்கலாம்.

ஒரு நாளைக்கு 12 முதல் 15 பெட்டிகள் வரைக்கும் செய்ய முடியும். 30 முதல் 100 ரூபாய் வரை விற்கலாம். கண்காட்சிகள், நகைக் கடைகள்,  அன்பளிப்புப் பொருள்கள் விற்கற கடைகள்ல விற்பனைக்கு வைக்கலாம். உட்கார்ந்த இடத்துலயே கை நிறைய சம்பாதிக்க இதுதான் சரியான சாய்ஸ்’’  என்கிற மணிமேகலையிடம் ஒரே நாளில் 5 மாடல் அன்பளிப்புப் பெட்டிகளை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.  (98846 12156)

Monday, October 7, 2013

பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்!



 
''மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம். இன்றைய சூழ்நிலையில் நெல், தென்னை விவசாயத்தைவிட மரம் வளர்ப்புலதான் கணிசமான லாபம். அதற்கு நானே சாட்சி'' என தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் பூரிப்போடு சொல்கிறார் ராமநாதன்.
பேராவூரணியில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்று இருந்தேன். அங்கே  பலவிதமான மரக் கன்றுகளை இலவசமாகக்  கொடுத்துக்கொண்டு இருந்த ராமநாதனை நண்பர்கள் சிலர்  அறிமுகப்படுத்தினர்.
பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, பசுமையாகப் பேசத் தொடங்கினார். ''வானம் பார்த்த பூமியில் மரத்தை வளர்த்து, மழையை எதிர்பார்க்கிறேன். நான் மண்ணுக்குச் செய்றேன். மண் எனக்கு செய்யுது. பொது நலத்திலும் நான் நிறைவான வருமானத்தோடதான் வாழறேன், நீங்க நிச்சயம் என்னோட பசுமைத் தோட்டத்துக்கு வரணும்''  அன்புடன் அழைப்புவிடுத்தார்.
மறுநாள் மாலை நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஆஜரானேன். என்னை பார்த்ததும் முகமலர்ச்சியோடு வரவேற்றார்.  வீட்டின் முகப்பில் பசுமைத் தோட்டம் எனப் பெயரிடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றதும் ஏதோ காட்டுக்குள் நுழைந்த உணர்வு. பலவிதமான மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கலப்படம் இல்லாத காற்றை வீசிக்கொண்டு இருந்தன.
''இந்த மரங்களாலதான் பிள்ளைகளோட திருமணத்தையே செஞ்சு முடிச்சேன். ஒரு ரூபாய் கடன் வாங்கலை. சொத்தில் ஒரு பிடி மண்ணை நான் விற்கலை. எல்லாம் மரம்தந்த வரம். மரம் வளர்ப்புல பலருக்கு விருப்பம் இல்லாம இருக்கக் காரணமே, உடனடியான பலன் எதுவும் கிடையாது என்கிற எண்ணம்தான். மற்ற விவசாயத்துல செலவுகள்போக கிடைக்கிற லாபத்தைவிட மரங்களால பலமடங்கு அதிகம். என்னை பார்த்து நிறையப்பேர் மரம் வளர்ப்புல இறங்கி இருக்காங்க. நானும் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகள் செய்றேன்'' என்றார்.
தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன். ஆங்காங்கே பறவைகளுக்காக சிறிய தண்ணீ ர் தொட்டிகள் உள்ளன. அவைகள் மூலமாக, பல்வேறு மர விதைகள் கிடைத்தனவாம். '' இங்கே 120 வகையான மரங்கள் இருக்கின்றன. நம் மண்ணுக்கான மரங்கள் பலவற்றை நாம் புறக்கணிச்சுட்டோம். அதனால், நம் பழமையான மரங்களையும் தேடிக்கிட்டு இருக்கேன்'' என்றவர் ஒவ்வொரு மரத்தைப்பற்றியும் சொல்லி சிலிர்க்க ஆரம்பித்தார்.
''இந்த மரத்தின் பெயர் கருங்காலி. பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இதோ... இந்த ஈர பலாமரக் காய்களைச் சமைச்சா, அசைவ கறிபோலவே இருக்கும். இதன் பெயர் பாம்பு கொல்லி. இந்த மரம் இங்கே கிடைக்காது. மலைப் பிரதேசங்கள்லதான் கிடைக்கும். இது இருக்கும் இடத்தைச்சுத்தி 100 அடி சுற்றளவில் எந்தப் பாம்புகளும் வராது. இரவு நேரத்துலகூட நான் பயம் இல்லாம தோட்டத்தைச் சுத்திவர இந்த மரம்தான் காரணம்.
குமிழ் மரம் ஆஸ்திரேலிய மரம். ஏழு ஆண்டுகள்ல வளர்ச்சி அடைஞ்சுடும். செயற்கை கை, கால்களை இதுலதான் செய்வாங்க. எடை குறைவானது. செஞ்சந்தன மரம் ஜப்பான் நாட்டுல பாதுகாப்புக்காகப் பயன்படுத்துறாங்க. இந்த மரத்தை ஊடுருவி அலைகற்றைகள் வர முடியாது. மகோகனி மரத்துலதான் வெள்ளை மாளிகை கட்டப்பட்டது. கொக்கு மந்தாரையும் அந்தி மந்தாரையும் பில்லி சூன்யம் நெருங்கவிடாம செய்யும்'' என விவரித்துக்கொண்டே சுற்றிக்காட்டினார். இங்கே வருடந்தோறும் வனத் துறையில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக வருவார்களாம்.
''எனக்கு பணத் தேவைகள் வரும்போது மரத்தை விற்றுவிடுவேன். அந்த இடத்தில் மரக் கன்று ஒன்றை உடனே நட்டுவைத்து விடுவேன். யாராவது மரம் வளர்க்க ஆசைப்பட்டால் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்'' என்ற ராமநாதன், கிளம்பும்போது சர்வ சுகந்தி மரத்தின் இலையைக் கொடுத்தார். '' நுகர்ந்து பாருங்கள்... தெய்வீக மணம்வரும். இரண்டு நாட்களுக்கு உடல் சுகந்தமாக இருக்கும்'' என வழி அனுப்பிவைத்தார்.
சட்டைப் பையில் இருந்த சர்வ சுகந்தி வாசனையில் மெய் மறந்தபடியே கிளம்பினேன்!
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்

தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தகுதிகள்:
1. வயது 18லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.
2. ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
3. கை, கால் மற்றும் காது குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்கள்.
பயிற்சிக்காலம் : மூன்று மாதங்கள்.
பயிற்சி நடைபெறும் இடம் : அரசு தொழில் பயிற்சி மையம், புதுக்கோட்டை.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவைகள் :
1. கல்வித்தகுதி சான்று நகல்.
2. ஜாதிச் சான்று நகல்,
3. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்.
4. குடும்ப அட்டை நகல்.
5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 1.
குறிப்பு: “பயிற்சி காலத்தின் போது இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் செய்து தரப்படும். விடுதியில் தங்காத தினசரி பயிற்சிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை பெற்றுத் தரப்படும்.
மேலும் பயிற்சி பற்றிய விபரங்களுக்கும் மற்றும் விண்ணப்பங்களை பெற அணுக வேண்டிய முகவரி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
புதிய பேருந்து நிலையம் அருகில் – புதுக்கோட்டை, தொலைபேசி எண்:04322-223 678.
தகவல்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், புதுக்கோட்டை
தகவல் சேகரிப்பு: எஸ். முருகேசன், கிராம வள மையம், புதுக்கோட்டை.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites