விவசாயிகள் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன்கிடைக்காமல், விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல், தற்கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர். சிலர் மட்டுமே, எந்த பருவத்தில் எதைச் செய்தால் லாபம் ஈட்டமுடியும் என அறிந்து, விவசாயத்தில் சாதனை புரிகின்றனர்.அந்தவரிசையில், ஒட்டன்சத்திரம் விராலிக்கோட்டை விவசாயி டி.சின்னச்சாமி மருத்துவ குணமிக்க "கண்வலி' கிழங்கு சாகுபடியில் ஆண்டுதோறும் ரூ.பல லட்சம் வருமானம் பார்க்கிறார்.
எப்படி சாதித்தார் அவர். இதோ கூறுகிறார்: கண்வலி கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற மாதம் ஆடி, ஆவணி, புரட்டாசி தான். அந்த சமயத்தில் கிழங்குகளை நட்டால் தான் அடுத்த அடுத்த ஆண்டுகளில் பலன் நன்றாக கிடைக்கும்....