இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 13, 2015

கண்வலி' கிழங்கு சாகுபடி

விவசாயிகள் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் பலன்கிடைக்காமல், விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல், தற்கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகின்றனர். சிலர் மட்டுமே, எந்த பருவத்தில் எதைச் செய்தால் லாபம் ஈட்டமுடியும் என அறிந்து, விவசாயத்தில் சாதனை புரிகின்றனர்.
அந்தவரிசையில், ஒட்டன்சத்திரம் விராலிக்கோட்டை விவசாயி டி.சின்னச்சாமி மருத்துவ குணமிக்க "கண்வலி' கிழங்கு சாகுபடியில் ஆண்டுதோறும் ரூ.பல லட்சம் வருமானம் பார்க்கிறார்.Image result for கண்வலி' கிழங்கு சாகுபடி

எப்படி சாதித்தார் அவர். இதோ கூறுகிறார்: கண்வலி கிழங்கு சாகுபடிக்கு ஏற்ற மாதம் ஆடி, ஆவணி, புரட்டாசி தான். அந்த சமயத்தில் கிழங்குகளை நட்டால் தான் அடுத்த அடுத்த ஆண்டுகளில் பலன் நன்றாக கிடைக்கும். நான் மூன்று ஏக்கரில் நடவு செய்ய ஆந்திரா மாநிலத்தில் இருந்து ஒரு கிலோ ரூ.250 வீதம் 500 கிலோ "கண்வலி' கிழங்குகள் வாங்கினேன்.
சாகுபடிக்கு, நிலத்தில் சிறிய குழிதோண்டி கிழங்குகளை வரிசையாக புதைக்க வேண்டும். கம்பி, பந்தல் அமைக்க வேண்டும். நிறைய தண்ணீர் தேவை இல்லை. சொட்டுநீர் பாசனமுறை சிறந்தது.
மண்ணில் புதைத்த கிழங்குகள் 20 நாட்களில் துளிர்விட்டு, செடி பந்தலுக்கு வந்துவிடும். நான்கு மாதங்களில் பூத்து, காய்க்க துவங்கும், கோவைப் பழம் போல காய்கள் இருக்கும். அவற்றை பறித்து தட்டி விதைகளை எடுத்து நன்றாக காயவைக்க வேண்டும். 500 கிலோ கிழங்கில் 300 கிலோ விதை கிடைக்கும்.
மருத்துவத்திற்காக கண்வலி கிழங்கு விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் திருப்பூர் மாவட்டம் மூலனூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.1200 முதல் ரூ.2000 வரை விலைகிடைக்கும். தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஆண்டிற்கு 100கிலோ கூடுதல் என மூன்று ஆண்டுகள் கண்வலி கிழங்கு செடி மூலம் ரூ.பல லட்சம் வருமானம் ஈட்டலாம். ஒரு ஏக்கருக்கு கிழங்கு கொள்முதல் செலவு போக மருந்து, உரம், காய்பறிப்பு கூலி என ரூ.50 ஆயிரம் வரை செலவாகும்.
முதல் ஆண்டு ஓர் அளவிற்கு தான் லாபம் கிடைக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மருந்து, உரமிட்டு கண்ணும் கருத்துமாக வளர்த்தால் ரூ.பல லட்சம் லாபம் ஈட்டலாம். கண்வலி கிழங்குக்கு கரிசல் மண் ஆகாது. கச்சமண், செம்மண், மலமண் ஏற்றது. மேற்சொன்ன பருவத்தே கண்வலி கிழங்கு "கரெக்டா' சாகுபடி செய்தால் கைநிறைய பணம் அள்ளலாம், 
என்றார். இவரை தொடர்பு கொள்ள 97867 99763.

மருத்துவ மூலிகை விவசாயம்

புற்றுநோய் எதிர்ப்பு மருந்தாக பயன்படும் கண்வலி கிழங்கு, மானாவாரி நிலங்களில் தானாக முளைத்துள்ளது. இந்த செடிகளை தோண்டி விவசாய தொழிலாளர்கள் தினமும் குறைந்தது 500 ரூபாய் சம்பாதிக்கின்றனர். கண்வலி கிழங்கு என்று அழைக்கப்படும் "செங்காந்தள்" என்னும் செடியில் இருந்து கிடைக்கும் விதை புற்றுநோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. ஒரு கிலோ விதை ரூ.1,700க்கு விற்கப்படுகிறது.




இந்திய தேவை போக ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் விதை ஏற்றுமதியாகிறது. இச் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்தால் ஆண்டுக்கு ரூ.5.10 லட்சத்திற்கு மகசூல் பெறலாம். ஒரு முறை நடவு செய்தால் ஐந்து ஆண்டு வரை பலன் கிடைக்கும். சாகுபடிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள "நேஷனல் மெடிசனல் பிளாண்ட்ஸ் போர்டு' (என்.எம்.பி.பி.) 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. விருதுநகர், திண்டுக்கல், சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் 8,000 ஏக்கர் சாகுபடி செய்துள்ளர்.




கரிசல் மண், மணல் கலந்த செவல் நிலம் சாகுபடிக்கு உகந்ததாகும். வறட்சி பகுதிகளிலும் சிறப்பாக வளரும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண் விதை கிழங்கு சிவகாசி பகுதியில் உள்ள பராமரிப்பு இல்லாத தரிசு நிலங்கள், முள்வேலி காடுகளில் தானாக முளைத்துள்ளது. நவம்பர், டிசம்பர், ஜனவரி வரை கண்வலி கிழங்கு செடிகள் தானாக முளைக்கும். இந்த காலங்களில் விவசாய தொழிலாளர்கள் பலரும் காட்டு பகுதிகளில் கம்பியுடன் சென்று மண்ணில் புதைந்துள்ள கிழங்குகளை தோண்டி எடுக்கின்றனர். தற்போது ஒரு கிலோ விதை ரூ.180 முதல் ரூ.220 வரை விலை போகிறது. ஒரு தொழிலாளி தினமும் 5 முதல் 10 கிலோ வரை தோண்டி எடுக்கின்றனர். இவற்றை வியாபாரிகளிடம் கொடுத்து பணம்
பெறுகின்றனர்.




ஒவ்வொரு தொழிலாளியும் குறைந்த பட்சம் ரூ.500 முதல் ரூ.1800 வரை சம்பாதிக்கின்றனர். மேலாண்மறை நாட்டை சேர்ந்த 20 பேர் தினமும் கண்வலி கிழக்கு தோண்டுவதற்கே கிளம்பி விடுகின்றனர். மூலிகை செடி வியாபாரிகள் தொழிலாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாவட்டங்களுக்கு ஒரு கிலோ கண்வலி கிழங்கு ரூ.400க்கு விற்பனை செய்கின்றனர். கண்வலி கிழங்கு சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் வெளிமாவட்ட விவசாயிகள் பலரும் சிவகாசிக்கு வந்து விதை கிழங்குகளை வாங்கி செல்கின்றனர்.




சிவகாசி ஏற்றுமதியாளர் மனோகரன் கூறியதாவது:


கண்வலி கிழங்கு விதையின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சாகுபடி செய்தாலும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதை கிழங்கு அதிகளவில் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் கண்வலி கிழங்கு விதை 3 டன் ரூ. 51 லட்சத்திற்கு கொள்முதல் செய்தேன். வரும் ஆண்டில் கண்வலி கிழங்கு சாகுபடியாளர்களிடம் ஒப்பந்தம் செய்து ஒரு விதை கிலோ ரூ.1700க்கு குறையாமல் எடுத்துகொள்ள திட்டமிட்டுள்ளேன். வரும் 5 ஆண்டுகளுக்கு கிலோ ரூ.1700க்கு விலை குறையாது. ஐந்து ஆண்டுக்கு முன் ஒரு கிலோ விதை ரூ.350 ஆக இருந்தது. 2 ஆண்டிற்கு முன் ஒரு கிலோ ரூ.800 ஆக உயர்ந்தது. தற்போது கிலோ ரூ.1700க்கு உயர்ந்துள்ளது. இச்சாகுபடி செய்ய விரும்புவோர் தொழில் நுட்ப விபரங்கள் அறிய 94437 36794 தொடர்பு கொள்ளலாம்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites