இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Sunday, September 22, 2024

கேன் வாட்டர் தொழில்

 சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் தொழிலும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கை கொடுப்பது கேன் வாட்டர் என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர் தான்.சந்தை வாய்ப்புநகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத் தான் பயன்படுத்துகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்றவற்றிலும் கேன் வாட்டர் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.முதலீடுஇந்தத்...

செயற்கை ரோஸ் பொக்கே தயாரிப்பு

 செயற்கை ரோஸ் பொக்கேஇயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக்கேக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேக்களை தயாரித்து விற்பது லாபகரமானது.செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயாரிக்கலாம். காதலர் தினம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நல்ல கிராக்கி உள்ளது. காதல் ஜோடிகள் சிவப்பு ரோஜா, நெருங்கிய நண்பர்கள் பிங்க் ரோஜா பொக்கேக்களை அதிகம் வாங்குகின்றனர்.அந்த தினங்களுக்கு ஏற்ப தயாரித்து விற்கலாம். பெண்கள் வீட்டில் இருந்தவாறே ஓய்வு நேரங்களில் செய்வதற்கு ஏற்ற தொழில் இது. வீட்டிலுள்ள பெண்கள் கூட்டாக சேர்ந்து ஒருவர் பூ தயாரித்து, மற்றொருவர் கோன் தயாரித்து, இன்னொருவர் பொக்கேவை முழுமைப்படுத்தினால் குறைந்த...

தக்காளி சூப் மிக்ஸ் தயாரிப்பு

 தக்காளிப் பொடிமுழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். பின் இதனை சிறு துண்டுகளாக வெட்டி தனி அறையில் உலர்த்தியில் 80 டிகிரி செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்.வெங்காயப் பொடிபெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இதனை தனி அறையில் உலர்த்தியில் 60 டிகிரி செல்சியஸில் 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் நிரப்பி மூடவும்.தேவையான பொருட்கள்தேவையான பொருட்கள்அளவுதக்காளிப் பொடி5.0 கிராம்வெங்காயப் பொடி0.5 கிராம்சோள மாவு2.0 கிராம்சீரகத் தூள்0.5 கிராம்மிளகுத் தூள்0.3 கிராம்உப்பு1.5 கிராம்அஜினமோட்டோ0.5 கிராம்தக்காளி...

இறைச்சிப் பொருள்கள் தொழில்

 இறைச்சிப் பொருள்கள் தொழிலுக்கான மாதிரித் திட்டம்கோழி இறைச்சி உருண்டைகள் மற்றும் சமோசா விற்பனை மூலம் கிடைக்கும் இலாபத்தைப் பற்றி தற்போது பார்ப்போம். இறைச்சி உற்பத்தி பொருள்களில் அனுமானங்கள், முதலீடு, நிரந்தரச் செலவுகள், மாறுபடும் செலவீனங்கள், வரவு, பணத்தின் கால மதிப்பு, இலாபச் செலவு விகிதம் போன்றவை முக்கியப் பங்காற்றுகின்றன.அனுமானங்கள்கால்நடை பொருளாதாரமானது சில அனுமானங்களின்படி கணக்கிடப்படுகிறது. கால்நடைகளின் வகை, தரம், அவற்றின் விலை, உற்பத்தித் திறன், சந்தை விற்பனை வழி முறைகள், தேவைப்படும் வேலையாட்கள், அவர்களின் கூலி, தீவன அளவு, அவற்றின் விலை, காப்பீடு போன்ற விவரங்கள் அனுமானங்களில் குறிப்பிடப்படும்.நிரந்தர முதலீடுகோழி இறைச்சி உருண்டைகள் மற்றும் சமோசா உற்பத்தியில், கட்டிடங்கள், உபகரணங்கள் போன்றவை நிரந்தர முதலீடாகும். இவை ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குப் பலன் தரும். அத்தகைய செலவுகள் நிரந்தர...

ஆயில் மில் – சுயதொழில்

 அறிமுகம்நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக்கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.சந்தை வாய்ப்புஉணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், அசைவ உணவுகள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites