இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Thursday, February 27, 2014

பிளவுஸ் ஸ்பெஷலிஸ்ட்!

சேலைக்கேற்றபடி ஜாக்கெட் அணிந்தது அந்தக் காலம்.  இப்போது ஜாக்கெட்டுக்கேற்றபடி சேலை வாங்குவதே லேட்டஸ்ட். ஆடம்பரமான  வேலைப்பாடு செய்த ஜாக்கெட், சிம்பிளான சேலைதான் இன்றைய பெண்களின் ட்ரெண்ட். அதிலும் குறிப்பாக பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட  ஜாக்கெட்டுகளுக்கு எல்லா வயதுப் பெண்களிடமும் வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த லட்சுமி, பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட  ஜாக்கெட்டுகளை டிசைன் செய்வதில் நிபுணி! ‘‘டென்த் வரைக்கும்தான் படிச்சிருக்கேன். 13 வருஷங்களா டெய்லரிங்தான் சோறு போடுது. ஜாக்கெட் தைக்கிறதுல நான் எக்ஸ்பர்ட். என்கிட்ட  கொடுத்தா ஃபிட்டிங் கச்சிதமா இருக்கும்னு நல்ல பேரை சம்பாதிச்சு வச்சிருக்கேன். டிசைனர் ஜாக்கெட்டும்...

Wednesday, February 26, 2014

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்! காகிதத்தில் காசு; கலக்கும் கல்லூரி மாணவி!

தங்கம் அணிந்தால்தான் மதிப்பு என்ற காலம் போய், உடைக்கு ஏற்ற வண்ணவண்ண நகைகளை அணிவது இன்றைய ஃபேஷனாக மாறிவிட்டது. ஃபேஷன் நகைகள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அழகுக் கொஞ்சும் லோலாக்கு, நெக்லஸ் போன்ற ஃபேன்சி நகைகளைக் காகிதத்தில் செய்து காசு பார்க்கிறார் ப்ரீத்தி. சவீதா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ப்ரீத்தி தன் பிசினஸ் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ''பேப்பர் ஜுவல்லரியில் ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் இறங்கினேன். பிறகு அதுவே விரும்பிச் செய்யும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. எனது சிறுவயது முதலே கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.   பொழுதுபோக்காகக் கலைப் பொருட்கள் தயார் செய்து வீட்டை அலங்கரித்து...

மேடை அலங்காரம்... முன்னேறும் மாணவன்

 திருமணம் சார்ந்த தொழில்கள் எதுவாக இருந்தாலும் அதில் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும் என்பது உறுதி. அந்த வகையில் தன் தொழிலை அமைத்துக்கொண்டு சிறப்பாக முன்னேறி வருகிறார் மதுரை தியாகராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வரும் கிறிஸ்டோபர். திருமணத்தில் மேடை அலங்காரங்களை மேற்கொள்வது மட்டுமே இலக்கு என்று நின்றுவிடாமல் பள்ளி மற்றும் கல்லூரி விழாக்கள், கட்சி விழாக்கள் என எல்லா மேடைகளிலும் தனது கைவண்ணத்தைக் காண்பித்துப் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றுவிடுகிறார் கிறிஸ்டோபர். 'மேடை அலங்காரம் செய்வதில் மாதம் 30,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன்' என்று சொல்பவரிடம், 'எப்படி இந்தத் தொழிலை ஆரம்பித்தீர்கள்?’ என்று...

Saturday, February 22, 2014

காலையில இருந்து மாலை வரை வேலை பார்த்து கூலி கேட்டல்

JHONY JHONY ….YES PAPA! JOB IN COMPANY……..YES PAPA!! LOT OF TENSION….YES PAPA!!! TOO MUCH WORK……YES PAPA!!!! FAMILY LIFE …….NO PAPA!!!!! BP SUGAR…HIGH PAPA!!!! YEARLY BONUS…JOKE PAPA!!!! ANNUAL PAY ……..LOW PAPA!!!! PERSONAL LIFE……..LOST PAPA!!!! PROMOTION INCENTIVE…HA! HA!! HA!!! ...

Thursday, February 20, 2014

திருச்சி பொண்ணுங்க ரொம்ப லக்கி!''

''மாடர்ன் டிரெஸ்ஸா இருந்தாலும் சரி, சேலையாக இருந்தாலும் சரி அதுக்கு உரிய நகைகள் போடும்போதுதான்  மதிப்புகூடும். தங்கம், பேப்பர், குந்தன், கிரிஸ்டல் நகைகளைவிட இந்த ஜங்கிள் நகையைப் போடும்போது எல்லோர் பார்வையும் உங்க மேலதான் இருக்கும். வயசைக் குறைச்சு அழகு கூட்டுற ரகசியம் இதுல இருக்கு'' என்கிறார் திருச்சியில் ஜங்கிள் ஜுவல்ஸ் செய்யும் பாலமுரளி. நெல், கல் வாழை, யானை குண்டுமணி, மயில் கொன்றை போன்ற 15 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு  200-க்கும் மேலான டிசைன்களில் நகை செய்கிறார்கள். '' இந்த ஜங்கிள் நகைகள் மாடல், பாரம்பரியம் என எல்லா ஆடைகளுக்கும் மேட்ச் ஆகிறதால, போற இடத்துல ஒரு கூட்டத்தைக் கூட்டிடலாம்'' என்கிறார் பாலமுரளி. இரண்டு...

Tuesday, February 18, 2014

கோடை விடுமுறையில் ஊதுவத்தி தயாரிக்கும் மாணவர்கள்

திருத்தணியை அடுத்த மேதினிபுரம் கிராமத்தில் கோடை  விடுமுறையில் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள். கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ÷குடும்ப வறுமையின் காரணமாக, பள்ளி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தங்களது பெற்றோர்களுக்கு உறுதுணையாக அவர்களது பணிகளை மாணவர்கள் கவனித்து வருகின்றனர். ÷அந்த வகையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பெற்றோருக்கு ஆதரவாக ஊதுவத்தி தயாரிக்கும் பணியில், திருத்தணியை அடுத்த மேதினிபுரம் கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ÷குடும்ப நிதிநிலையை உயர்த்த,...

ஊதுவத்தி தயாரிப்பு முறை .

ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்.  இதற்கு பெரிய மூலதனம் தெவையில்ல. ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சுறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும். ஊதுவத்தி வகைகள் ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்தி, மட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்தி, தாழம்பூ வத்தி, ரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள்...

Monday, February 17, 2014

பசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம்

அந்தியூர் அசத்தல் காய்கறிச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தைபோல வருஷம் ஒரு முறை ஈரோடு மாவட்டம், அந்தியூரில் களைகட்டுகிறது குதிரைச் சந்தை. பரந்து விரிந்த மைதானம் எங்கும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் கம்பீரமாய் நிற்கின்றன. குதிரைகளின் வாயைப் பிளந்து, அதன் பல்லைப் பார்த்தும் அதன் குளம்புகளைத் தட்டிப் பார்த்தும் விலை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் குதிரை வியாபாரிகள்.     அந்தியூர் குருநாத சுவாமி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் பொங்கல் விழா புகழ்பெற்றது. அந்த விழாவுடன்  சேர்ந்துகொள்கிறது குதிரைச் சந்தையும். கோலாகலமாக நடக்கும் இந்தக் குதிரைச் சந்தைக்கு தமிழகம், ...

எந்த ஊரில் என்ன வாங்கலாம்-கருப்பட்டி

கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம்  அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால்  இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. பனங்கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடுவோர் மிக சிலரே என்பதால், அதை தயாரிக்க கற்றுக்  கொண்டால் லாபத்தை  அள்ளிக்கொடுக்கும் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்தூரில் ‘கவித்தமிழ்Õ என்ற பெயரில் பனங்கருப்பட்டி  தயாரிக்கும் முருகேசன். அவர் கூறியதாவது: 10 ஆண்டுக்கு முன்பு, பாத்திரக்கடையில்...

நாட்டுக்கோழி வளர்ப்பில் 'நச்'லாபம்

பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு. பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து...

நெகிழ வைக்கும் ஒரு  நிஜ  கதை

காதலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஜெயிப்பதுதான் காதலுக்கு மரியாதை! அப்படி தங்கள் காதலுக்கு மரியாதை செய்த பல்லாயிரம் தம்பதிகளில், மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் - ஸ்ரீபிரியா தம்பதிக்கும் இடமுண்டு. காதலித்த நாட்களின் ரொமான்ஸ் நிகழ்வுகள்; திருமணத்தின்போது ஏற்பட்ட பதற்றங்கள்; கணவன் - மனைவியாக அவதாரமெடுத்த பின் பொருளாதார நெருக்கடியால் ஆசைப்பட்ட வாழ்வை வாழ முடியாமல் போன விரக்தி; நம் காதல் ஜெயித்தே தீர வேண்டும் என்று எதிர்நீச்சல் போட்டு இன்று கரை சேர்ந்திருக்கும் வாழ்க்கைப் பயணம் என... ஒரு விறுவிறு காதல் 'கம்’ குடும்பப் படம் பார்த்த உணர்வு அவர்களின் கதை. கேட்போமா..?! ''இப்போ நாங்க வாழுற வாழ்க்கை இவ்வளவு வசதியா, சந்தோஷமா இருக்கக் காரணம்.... எங்களை...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites