இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 18, 2013

உணவு தயாரிப்பு குறித்த பயிற்சி முகாம்


தூத்துக்குடியில் மீன் உணவுகள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் மற்றும் செயல்விளக்கம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மீன்வளக் கல்லூரி முதல்வர் சுகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லுரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வளர்ப்பு மீன்களின் உணவு மற்றும் மேலாண்மை பற்றிய பயிற்சி முகாம் ஜனவரி 8-ம் தேதி நடைபெறுகிறது.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கும் மீன் உணவு தரக்கண்காணிப்பு ஆய்வகம் அமைத்தல் என்ற ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்ச்சியில் மீன்களுக்கான செயற்கை உணவு தயாரிப்பது மற்றும் உணவு மேலாண்மை பற்றிய விளக்கவுரைகளும், செயல் முறை விளக்கமும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி முகாமில் கெண்டை மீன் வளர்ப்போர், அலங்கார மீன் வளர்ப்போர், இறால் வளர்ப்போர் மற்றும் மீன்களுக்கான உணவு தயாரிப்பில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
 பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் 9443002467 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுத ங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கூடுதல் விவரங்கள் அறிய
பன்ணை சார்ந்த மீன் உணவு தயாரிப்பு குறித்த விவரங்களை அறிய “பேராசிரியர் மற்றும் தலைவர், கடல் சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத்துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தருவைக்குளம், தூத்துக்குடி என்ற முகவரியிலும், 0461–2910336, 2340554, 94422 88850 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என்று பயிற்சி மைய தலைவர் சா.ஆதித்தன் தெரிவித்தார்.
Thanks:http://www.dailythanthi.com/Tuticorin,%20instead%20of%20marine%20aquatic%2

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites