இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, January 29, 2013

பப்பாளி சாகுபடி!


வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.
இத்தகைய சூழலுக்கு நடுவே… சிவகங்கை சூரக்குளம் கிராமத்தில், ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பப்பாளி சாகுபடி!
புதுச்சேரி மாநிலத்தில் கூரியர் நிறுவன முகவராக இருக்கும் சிவா என்பவருக்குச் சொந்தமான பண்ணைதான் இது.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தற்போது தன் தொழிலைப் பார்த்துக் கொண்டே… விவசாயத்தையும் கையில் எடுத்திருக்கிறார். தோட்டத்தை முழுக்க கவனித்துக் கொள்வதற்காக செல்வம் என்பவரை பண்ணை மேலாளராக நியமித்திருக்கிறார் சிவா. இங்கே… பண்ணையை நமக்குச் சுற்றிக. காட்டியபடியே விஷயங்களைப் பகிர்கிறார் மேலாளர் செல்வம்.

“உரிமையாளர், வாரம் ஒரு முறை தோட்டத்துக்கு வந்து செல்கிறார். தினமும் செல்போன் மூலமாக அவர் சொல்கிற ஆலோசனைப்படி விவசாயம் நடக்கிறது. இங்க 5 ஏக்கரில் ‘ரெட்லேடி’ ரக பப்பாளியைக் கூட்டுப்பயி்ரோடு சோர்த்து ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி செய்கிறோம். இந்த பப்பாளியோட வயது இரண்டு வருடம் தான். இப்ப மகசூல் முடிகிற நேரம்” என்றவர், ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி சாகுபடி செய்யும் முறைகளைப்பற்றி சொல்லத் தொடங்கினார்.
‘செம்மண் மற்றும் செஞ்சரளை பூமியில் பப்பாளி ந்னறாக வளரும். முதல் கடவை பப்பாளி விதையை கடையில் வாங்கலாம். அடுத்த தடவைகளில் இருந்து நதமே நாற்று தயாரித்துக் கொள்ளலாம். 4X7 இஞ்ச் அளவுள்ள பிளாஸ்டிக் பையில், பப்பாளி விதைகளை நட்டு, நிழலில் வைத்து தினமும் இரண்டு வேளை பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு ஒரு தடவை தண்ணீரில் ஜீவாமிர்தத்தையும் கலந்து தெளித்தால்… நோய் எதிர்ப்புச் சக்தியோடு நாற்று வளரும். விதைத்த 10-ம் நாளில் முளைக்கத் தொடங்கும். அரையடி உயரத்துக்கு மேல் செடிகள் வளர்ந்ததும், நடவு செய்யலாம். அதிகபட்சம் 40-ம் நாளுக்குள் நடவு செய்து விடவேண்டும். நாற்றுத் தயாராகும் நேரத்தில் நடவுக்கான நிலம் தயாரிக்கும் வேலைகளை முடித்துவிட வேண்டும்.

நிலத்தை நன்றாக உழது கொள்ள வேண்டும். பின்பு, ஒரு ஓரத்திலிருந்து வயல் தயாரிப்புப் பணிகளை செய்ய வேண்டும். வரப்பிலிருந்து ஒரு அடி தள்ளி, இரண்டு அடி அகலம் மற்றும் ஆழத்தில் நீளமாக கால்வாய் வெட்ட வேண்டும். அந்தக் கால்வாய்களிலிருந்து 24 அடி தள்ளி அதே போல மற்றொரு கால்வாய் எடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு 24 அடிக்கும், வயலின் அளவைப் பொறுத்து கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டும். பிறகு, அவற்றில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மழைக் காலங்களில் மேல்மண் அரித்துச் செல்வதைத் தடுப்பதோடு, மழை நீர் நிலத்திலேயே சேகரமாவதற்கும் இந்தக் கால்வாய்கள் உதவும். இரண்டு கால்வாய்களுக்கும் இடையில் இரண்டு அல்லது மூன்று அடி அகலத்தில், வசதிக்கு ஏற்ப மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதே போல வயல் முழுவதும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

வயலில் உள்ள காய்ந்த புற்களைக் கொண்டு மேட்டுப் பாத்திகளில் மூடாக்கு போட வேண்டும். பின்பு, சணப்புச் செடிகளைப் பாத்திகளில் பரவளாக நடவு செய்ய வேண்டும். செடிக்கு செடி 9 அடி இடைவெளியும் வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளியும் வருவது போல பப்பாளிச் செடிகளை நட வேண்டும். (முதல் வரிசையில் பாத்தியின் ஆரம்பத்தில் ஒரு பப்பாளிச் செடியும், அடுத்த வரிசையில் 9 அடி தள்ளி ஒரு பப்பாளியும், நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் 9 அடிக்கு 6 அடி இடைவெளியில் முக்கோண முறையில் செடிகள் இருக்கும்.) இந்த முறையில் ஏக்கருக்கு 600 செடிகள் வரை நடலாம்.
பப்பாளிக்கு இடையில் ஊடுபயிராக முருங்கை அல்லது வழையை நடவு செய்யலாம். பாத்தியில் இரண்டு பப்பாளிச் செடிகளுக்கு மத்தியில் ஒன்று என் முருங்கை அல்லது வாழையை நட வேண்டும். மீதமுள்ள இடங்களில் செண்டுமல்லி, மக்காச்சோளம், சணப்பு, தட்டைப் பயறு, அகத்தி, காய்கறிகள் போன்றவற்றை பயிர் செய்து கொள்ளலாம். செண்டுமல்லி நடுவதால், மாவுப் பூச்சித் தாக்குதலில் இருந்து பப்பாளியைக் காப்பாற்றலாம். காற்றிலுள்ள நைட்ரஜன் சத்துக்களை மண்ணில் பிடித்து வைக்கும் வேலையை தட்டைப் பயறு போன்ற வேர்முடிச்சுப் பயிர்கள் செய்துவிடும். சணப்பு, வேகமாக வளர்ந்து, வயலில் ஒரு நிழல்வலையைப் போல் செயல்படுவதால் பப்பாளிச் செடிகள் பாதுகாப்பாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
பப்பாளி சாகுபடி
பப்பாளி மரம்
வழக்கமாக பாத்திகளின் மேல் சொட்டுநீர்க் குழாய்களை அமைப்பது போல் இல்லாமல், ஒவ்வொரு பப்பாளிச் செடிக்கும் அருகில் குழாய்கள் வருமாறு குறுக்குவசத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு புறமும் வாய்காலில் உள்ள தண்ணீர், சொட்டுநீர் மூலம் கசியும் தண்ணீர் மற்றும் பாத்திகளில் உள்ள மூடாக்கு ஆகிய காரணங்களால் பாத்திகள் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும். எனவே, ஊடுபயிர்களுக்கு என்று தனியாக நீர்ப்பாசனம் செய்யத் தேவையில்லை.
வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். ஏக்கருக்கு 100 விட்டர் ஜீவாமிர்தத்தை ஒரு வாரம் பாசனத்தின் மூலமாகவும், மறுவாரத்தில் தெளிப்பு முறையிலும் மாற்றி மாற்றி செடிகளுக்கு கொடுக்க வேண்டும். இலை வழியாக தெளிக்க பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டாட ஜீவாமிர்தம் வீதம் கரந்து தெளிக்க வேண்டும். பயரின் தேவைக்கு ஏற்ப எத்தனை டேங்க் என்று முடிவு செய்து கொள்ளலாம். 20 நாட்களுக்கு ஒரு தடவை 200 லிட்டர் தண்ணீரில், 5 லிட்டர் மோரைக் கலந்து செடிகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். பூச்சித் தாக்குதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நடவு செய்த முதல் 5 மாதம் வரை அக்னி அஸ்திரத்தைத் தெளிக்க வேண்டும். நடவு செய்த 6-ம் மாதம் பப்பாளி பூக்கும். பொதுவாக, பூக்கும் தருணத்தில்தான் பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். தொடர்ந்து மோர்க்கரைசலை தெளித்தால் பூச்சித் தாக்குதல் சுத்தமாக இருக்காது.

நடவு செய்த 8-ம் மாதத்திலிருந்து வாரம் ஒரு முறை வீதம் காய்களை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 16 மாத காலம் வரை மகசூல் கிடைக்கும். நன்கு பெருத்த, முனையில் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்களை மட்டுமே பறிக்க வேண்டும். ஒரு மரம் 50 கிலோ முதல் 150 கிலோ வரை மகசூல் கொடுக்கும். 16 மாத காலத்தில் ஒர மரம் குறைந்தபட்சம் 50 கிலோ மகசூல் கொடுப்பதாக வைத்துக் கொண்டால், ஒரு ஏக்கரில் உள்ள 600 மரங்களில் இருந்து 30 டன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ பப்பாளி 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகிறது. குறைந்தபட்சம் 7 ரூபாய்க்கு விற்பனை செய்தால்… 2 இலட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். இதில் செலவு போக ஏக்கருக்கு ஒரு செலவு போக ஏக்கருக்கு ஒர லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும்.
ஊடுபயிராக சாகுபடி செய்யும் முருங்கை அல்லது வாழைக்குத் தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. வாழையைத் தாக்கும் நூற்புழுவை செண்டுமல்லி கட்டுப்படுத்திவிடும். வாழையைத் தாக்கும் வைரஸ் நோயை, வயலில் ஆங்காங்கே உள்ள அகத்தி விரட்டிவிடும். மோர்க் கரைசலும், அக்னி அஸ்திரமும் முருங்கையில் புழு தாக்காமல் செய்கிறது.

ஒரு ஏக்கர் பப்பாளிக்கு நடுவே ஊடுபயிராக 600 வாழை அல்லது 600 முருங்கையை நடலாம். ஒரு முருங்கைச் செடியிலிருந்து குறைந்தபட்சம்15 கிலோ காய் கிடைக்கும். ஆக, 600 முருங்கைச் செடிகளில் இருந்து, 9,000 கிலோ மகசூல் கிடைக்கும். செலவு போக 30 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.
மற்றொரு ஊடுபியிரான செண்டுமல்லி, குறைந்தபட்சம் 1,600 கிலோ என்கிற அளவில் கிடைக்கும். கிலோ 15 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். காய்கறிகள் மூலமாக 10 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும். தட்டைப்பயறு மகசூலை ஜீவாமிர்தம் தயாரிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
“பப்பாளி, தட்டைப்பயறு, செண்டுமல்லி, முருங்கை என்று சொல்லும் போது மலைப்பாக இருந்தாலும் ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது விவசாயம் என்பது எளிமையான இலாபகரமான விவசாயம். பப்பாளி மற்றும் ஊடுபயிரின் மூலமாக ஒரு ஏக்கரில், 24 மாதத்தில் குறைந்தபட்சம் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபமாக கிடைக்கும்.

பண்ணை உரிமையாளர் சிவா கூறியது: சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி பக்கத்திலிருக்கிற முத்தூர் இவரது பூர்வீகம். விவசாயம் தான் பரம்பரைத் தொழில். இடையில் எல்லோரும் படிப்பிற்காக குடிபெயர்ந்துவிட்டனர். ஆனாலும் விவசாயத்தின் மீது தனி ஈடுபாடு.
இவரது நிலம் செம்மண் சரளை பூமி. மழை வந்தால் தண்ணீர் தேங்காது. மண்ணை அரித்துக் கொண்டு ஓடிவிடும். இப்படி பல பிரச்சனைகளால், ஆரம்பத்திலிருந்தே பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்தாலும் பெரிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இதற்கு தீர்வாக தனக்கு கிடைத்தது ஜீரோ பட்ஜெட்.
அவர் அறிவுரைப்படி 5 ஏக்கரில் ரெட்லேடி பப்பாளியையும், இடையில் முருங்கை, செண்டுமல்லி, சணப்பு, தட்டைப் பயறு என பல பயிர்களைக் கலந்து பயிர் செய்தார். கூட்டுப்பயிரா செய்வதால் நோய் தாக்குதல் இல்லை. மேட்டுப்பாத்தி அமைத்ததால் களை எடுக்கும் செலவு இல்லை. ஜீரா பட்அஜட்டில் விளையும் காயின் தோல் கெட்டியாக இருப்பதால் அதிக நாள் கெடாமல் இருக்கும்.

வழக்கமாக பப்பாளி இலை சுருங்கி, காய் சின்னதாக இருக்கும். செண்டுமல்லி நட்டதால் அந்தப் பிரச்சனையும் இல்லை. கால்வாய் வெட்டி, நிலத்தைத் தயாரிக்கிற தொழில்நுட்பம் அவருக்கு மிகசும் உதவியாக இருக்கிறது. இவரது செஞசரளை பூமியில் மழை பெய்தால் தண்ணீர் வயலையே அரித்துவிடும். இப்போது எல்லாத் தண்ணீரும் சத்தும் நிலத்திற்குள்ளேயே சேகரமாகிறது என்கிறார்.
இவர் பண்ணையில் விளைகிற பப்பாளியை சென்னையில் இருக்கும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு கொடுக்கிறார். இயற்கை முறையில் பப்பாளிக் கூழையும் தயாரிக்கிறார். பப்பாளியைப் பொருத்தவரைக்கும் விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உள்ளூர் பழமுதிர்சோலையிலேயே விற்றிடலாம். இயற்கை முறையில் பப்பாளியை விளைவிக்கும் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாத நிலையிருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் தான் விற்பனைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார்.

தொடர்புக்கு: சிவா, 98942-40000

நன்றி: பசுமை விகடன்(25.3.11)
தகவல்: மருதன்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites