இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, January 29, 2013

ஊறுகாய் டிப்ஸ்


டிக்கும் வெயிலை வீணாக்காமல், ஊறுகாய் தயாரித்து வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் உபயோகிக்கலாம். சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் அற்புதமாக ஊறுகாய்களை தயாரித்து விடலாம்.


- ஊறுகாய்க்கு முதல் எதிரி ஈரம்தான். எனவே பாட்டில், கத்தி, பாத்திரம், காய்கறி, உங்கள் கைகள் உட்பட எல்லாமே உலர்வாக இருக்க வேண்டும்.

- ஊறுகாய்க்கு கழுவித் துடைத்து உலர்த்த வேண்டிய பொருட்களை கொஞ்சம் தாமதம் ஆனாலும் சரி என்று நிழலில் தான் உலர்த்த வேண்டும்.

- ஊறுகாய் போடுவதற்கு பொடி உப்பை விட, கல் உப்புதான் சிறந்தது. கல் உப்பை மிக்ஸியில் பொடித்து பயன்படுத்தலாம்.

- புளியும், மிளகாயும் புதியதாக பளிச் நிறத்தில் இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். சீக்கிரம் கருத்துப் போகாது.

- ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பையை மட்டும் உபயோகிக்க வேண்டும்.

-தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிப்பது சிறந்தது. ஊறுகாயை பாட்டிலில் ஊற்றிய பின், மேலே ஒரு இஞ்ச் அளவுக்கு எண்ணெய் நின்றால், ஊறுகாய் ஒரு வருடமானாலும் கெடாது.

- பாட்டில் (அ) ஜாடியில் முட்ட முட்ட ஊறுகாயை நிரப்பக் கூடாது. ஒரு இஞ்ச் அளவு வெற்றிடம் இருக்க வேண்டும்.

- எலுமிச்சை ஊறுகாய் போடும்போது, மெல்லிய தோல் உள்ள பழங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதில் தான் சாறு அதிகமாக இருக்கும்.

- பூண்டு ஊறுகாய் தயாரிக்கும்போது, சிறிதளவு பூண்டை விழுதாக அரைத்துக் சேர்த்தால், நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

- ஆவக்காய்க்கு மாங்காய் புதியதாக இருந்தால், நன்றாக வரும்.

- ஜெய்னம்பு, கீழக்கரை

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites