கண்ணாடிப்பொருள் ஏதாவது உடைந்து விட்டால் என்ன செய்வோம்? ஈரத்துணியை வைத்து ஒற்றியெடுப்போம். இல்லையென்றால், 'கண்ணாடி உடைந்துவிட்டால் கைகளில் படாமல் எடுக்க வேண்டுமா? கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அதை கண்ணாடி துண்டுகளின் மேல் ஒற்றியெடுத்தால் கைகளில் காயம் ஏற்படாது' என்று டிப்ஸ் தரலாம். ஆனால் சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த வைதேகி, உடைந்த கண்ணாடி துண்டுகளை அற்புதமான கலைப்படைப்பாக்கிவிடுகிறார். அந்தக் கலையை நம் தோழிகளுக்கும் கற்றுத் தருகிறார்.தேவையான பொருட்கள்:
டிரேசிங் பேப்பர், 2 மி.மீ 10ஜ்10 கண்ணாடி, கிளாஸ் கலர் அவுட் லைனர், கிளாஸ் கலர், ஃபேப்ரிக் க்ளோ, பிரஷ், வட்ட வடிவ கண்ணாடி துண்டுகள், வெள்ளைப்பசை, உடைந்த கண்ணாடி துண்டுகள்.
...