இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Tuesday, January 29, 2013

ஒரு கலை... ஒரு கண்ணாடி

கண்ணாடிப்பொருள் ஏதாவது உடைந்து விட்டால் என்ன செய்வோம்? ஈரத்துணியை வைத்து ஒற்றியெடுப்போம். இல்லையென்றால், 'கண்ணாடி உடைந்துவிட்டால் கைகளில் படாமல் எடுக்க வேண்டுமா? கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அதை கண்ணாடி துண்டுகளின் மேல் ஒற்றியெடுத்தால் கைகளில் காயம் ஏற்படாது' என்று டிப்ஸ் தரலாம். ஆனால் சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த வைதேகி, உடைந்த கண்ணாடி துண்டுகளை அற்புதமான கலைப்படைப்பாக்கிவிடுகிறார். அந்தக் கலையை நம் தோழிகளுக்கும் கற்றுத் தருகிறார்.தேவையான பொருட்கள்: டிரேசிங் பேப்பர், 2 மி.மீ 10ஜ்10 கண்ணாடி, கிளாஸ் கலர் அவுட் லைனர், கிளாஸ் கலர், ஃபேப்ரிக் க்ளோ, பிரஷ், வட்ட வடிவ கண்ணாடி துண்டுகள், வெள்ளைப்பசை, உடைந்த கண்ணாடி துண்டுகள்.    ...

வாழ்க்கை வண்டியும் சூப்பரா ஓடுது!

பெரிய படிப்பெல்லாம் ஒண்ணும் படிக்கலை. ஆனா, கைத்தொழில் கத்துக்கிட்டேன் இன்னைக்கு என்னை நம்பி நான் நம்பிக்கையுடன் சொல்கிறார் இருபதெட்டு வயதாகும் கலா. என்ன தொழில் கத்துக்கிட்டீங்க என்று கேட்டால், " அவரின் பேச்சு வேகத்தோடு ஓட ஆரம்பிக்கிறது தான் கற்றுக்கொண்ட டிரைவிங் தொழிலை நோக்கி... வெறும் ஒன்பதாவது வகுப்பு வரைதாங்க படிச்சேன். அதுக்குபிறகு, வீட்ல படிக்க வைக்க வசதியில்லை. அதன்பின் ஐந்து வருடமா வீட்லதான் இருந்தேன் வீட்டு வேலைகளை மட்டும் செய்துக்கொண்டு, எங்க படிப்பு இல்லாம போச்சு, வேற எதுவுமே நமக்கு தெரியாது, எப்படி வாழ போறோம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப, ஏதாவது வேலைக்கு போகலாம்ன்னு தோணிச்சு. படிப்புதான் இல்லை தெரிஞ்ச வீட்டு வேலையை வைத்து முதலில் ஹோம்...

பப்பாளி சாகுபடி!

வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன. இத்தகைய சூழலுக்கு நடுவே… சிவகங்கை சூரக்குளம் கிராமத்தில், ஜீரோ பட்ஜெட் முறையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது பப்பாளி சாகுபடி! புதுச்சேரி மாநிலத்தில் கூரியர் நிறுவன முகவராக இருக்கும் சிவா என்பவருக்குச் சொந்தமான பண்ணைதான் இது.ஒரு காலத்தில் இந்தப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட அவர், தற்போது தன் தொழிலைப் பார்த்துக் கொண்டே… விவசாயத்தையும் கையில் எடுத்திருக்கிறார். தோட்டத்தை முழுக்க கவனித்துக் கொள்வதற்காக செல்வம் என்பவரை பண்ணை மேலாளராக நியமித்திருக்கிறார் சிவா. இங்கே… பண்ணையை நமக்குச்...

கருப்பை பாதித்தால் ஆப்ரேசன் அவசியமா?

1. சிறுவயதிலேயே பருவமடைவது ஏன்? அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் வேதியல் பொருட்கள் நிறைந்த உணவுகளாலும், முறை தவறிய உணவுப் பழக்கங்களாலும் சீக்கிரமே உடல் பருமன் அடைந்துவிடுவார்கள். அதனால் சிறுவயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். பரம்பரை காரணமாகவும், உடல் & மன ரீதியாக எதாவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் சிறுவயதிலேயே பூப்படைந்துவிடுவார்கள். அதுமட்டுமில்லை; இயல்பாகவே பருவம் அடையும் வயது இப்போது குறைந்துவிட்டது. அதனால், இதுபற்றி கவலைப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், மனதளவில் குழந்தைக்கு பயம் ஏற்படாத அளவுக்கு மாதவிடாய் பற்றி தாய் எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளியில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இதுபற்றிய கல்வியை புகட்டவேண்டும்.2. எந்தெந்த உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிறது?பிஸா, பர்க்கர், வறுத்த மற்றும் பொறித்த உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கிறது....

திருமணம் தாண்டிய உறவுகள்

திருமணம் தாண்டிய உறவுகள் - என்ன காரணம்...  எப்படித் தடுப்பது..? ஜெயா என்ற தோழியின் இந்தக் கடிதம் ஒரு சாம்பிள்... தோழமை என்பது தோள்கொடுத்து உதவுவது. ஆனால் நட்பு பாராட்டி நெருங்கிய பெண்ணால் சிதைந்துபோன குடும்பத்து வேதனையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இதை எழுதுகிறேன்... நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் வசித்த அந்தக் குடும்பம், அன்பால் கட்டப்பட்டது! அந்தக் குடும்பத்தலைவனுடன் அலுவலக ரீதியாக தொடர்பு கொண்ட ஒரு பெண், நாளடைவில் அவருக்கு நெருக்கமானவராகவும் ஆகிவிட்டாள். அதுவரை மனைவி, குடும்பம் என்று இருந்தவர், அந்தப் புது வரவால் தலைகீழாக மாறிவிட்டார். அந்தப் பெண் சொல்வதுதான் அவருக்கு வேதவாக்கு. நாளடைவில் கணவன் & மனைவிக்கு இடையே விரிசல்...

இதயம் தொடும் பரிசு!

நேசத்தையும் அன்பையும் உணர்த்த ஆயிரம் வார்த்தைகளை அடுக்குவதைவிட ஒற்றைச் செயலால் வெளிப்படுத்தலாம். சொற்கள் செய்யாத மாயத்தை அந்த அன்புப் பரிசு செய்துவிடும். அப்படியொரு பரிசு செய்யக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த சுபாஷினி. டெக்ஸ்டைல் துறையில் பணிபுரிகிற இவருக்கு ஃபோட்டோகிராபியும் கிராஃப்ட்டும் இரு கண்கள். அதனால்தானோ என்னவோ, ஃபோட்டோ ஃபிரேம் செய்ய கற்றுத் தருகிறார். நண்பர்கள் வட்டத்தில் நடக்கும் சின்ன சின்ன கொண்டாட்டங்களுக்கும் இந்த ஃபோட்டோ ஃபிரேமை பரிசளித்து மகிழலாம்.  தேவையானவை ஃபோம் போர்டு  (foarm board) - 2, சிகப்பு நிற ஸ்டிக்கர் ஷீட், கத்தரிக்கோல், மார்க்கர், ஃபேன்சி ரோப், கெமிக்கல் க்ளே, டபுள் சைடட் ஸ்டிக்கி டேப். ( Double...

உடலின் பாத்ரூம் ஒழுங்கா இருக்கா?

ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்...�� என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன் சிறுநீரகம் தொடர்பான நம் ட்வென்டி 20க்கு பளிச் பதில்கள் அளித்தார். இதோ அந்த டிவென்டி 20.யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்புநீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழப்பு ஏற்படும்.பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள்...

ஊறுகாய் டிப்ஸ்

அடிக்கும் வெயிலை வீணாக்காமல், ஊறுகாய் தயாரித்து வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் உபயோகிக்கலாம். சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் அற்புதமாக ஊறுகாய்களை தயாரித்து விடலாம். - ஊறுகாய்க்கு முதல் எதிரி ஈரம்தான். எனவே பாட்டில், கத்தி, பாத்திரம், காய்கறி, உங்கள் கைகள் உட்பட எல்லாமே உலர்வாக இருக்க வேண்டும்.- ஊறுகாய்க்கு கழுவித் துடைத்து உலர்த்த வேண்டிய பொருட்களை கொஞ்சம் தாமதம் ஆனாலும் சரி என்று நிழலில் தான் உலர்த்த வேண்டும்.- ஊறுகாய் போடுவதற்கு பொடி உப்பை விட, கல் உப்புதான் சிறந்தது. கல் உப்பை மிக்ஸியில் பொடித்து பயன்படுத்தலாம்.- புளியும், மிளகாயும் புதியதாக பளிச் நிறத்தில் இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். சீக்கிரம் கருத்துப் போகாது.- ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பையை மட்டும் உபயோகிக்க வேண்டும்.-தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிப்பது சிறந்தது. ஊறுகாயை பாட்டிலில் ஊற்றிய பின்,...

வெற்றியைத் தந்த கனிவும் பொறுமையும்

வெளிநாட்டில் தங்கிப் படித்த என் மகனைப் பார்க்க ஃபிளைட் டிக்கெட் புக் செய்வதற்குப் போனேன். அதற்காக டிராவல் ஏஜென்ஸியில் அரை மணிநேரம் காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புதான், இன்று என்னை டிராவல் ஏஜென்ட்டாக்கி இருக்கிறது�� என்கிற சரோஜினி நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த இல்லத்தரசி. கணவர், குழந்தைகள் என வீடே உலகமாக இருந்தவர், மாதம் சுமார் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிற பிசினஸ் வுமனாக மாறியது சக்ஸஸ் ஸ்டோரிதானே. அதை அவரே சொல்கிறார்...    சென்னையின் தென்கோடியில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பேர் சொன்னாலே தெரிகிற அளவுக்கு பிரபலமாக இருக்கிறார் சரோஜினி. �வீட்டில் ஒரு கம்ப்யூட்டரை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமா?� என்ற நம் கேள்விக்கு புன்னகையை பதிலாகத் தந்துவிட்டு பேசினார் சரோஜினி.��என் சொந்த ஊர் மதுரை. திருமணத்துக்குப் பின்னாலதான் சென்னை எனக்கு அறிமுகம். என்...

Sunday, January 27, 2013

தள்ளிவைத்தனர்... தலைநிமிர்ந்தோம்!

  கோவை டவுன் ஹாலில் இருக்கும் `தம் பிரியாணி ஸ்டால்` பிரியாணி, கொஞ்சமல்ல ரொம்பவே ஸ்பெஷல். காரணம் அந்தக் கடையின் உரிமையாளர்கள் அனைவரும் திருநங்கைகள்! ஒரு தொழிலை ஆரம்பித்து, வெற்றிபெறுவது ஆண்களுக்கே சவால்நிறைந்ததுதான். ஆனால் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் தன்னம்பிக்கையோடு சாதித்துக்காட்டியிருக்கிறார்கள் இவர்கள். கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்கள் உபசரிக்கிற பாங்குக்கே நூறு மார்க் கொடுக்கலாம். இந்தக் கடை தவிர, வீட்டு விசேஷங்களுக்கும் சமைத்துக் கொடுக்கிறார்கள். ஒரு திருமண வீட்டில் மும்மரமாக சமையல் தயாரிப்பில் இருந்த திருநங்கை கனகாவிடம் பேசினோம்... ``எங்க அம்மாதாங்க ரொம்ப நம்பிக்கையோட இந்த சமையல்...

கிராஃப்ட்

  நமக்கு பச்சைக்கிளிகளைத் தெரிந்திருக்கும்.. பஞ்சவர்ண கிளிகளையும் அறிந்திருப்போம். சிலருக்கு வெள்ளைக்கிளிகள்கூட அறிமுகம் ஆகியிருக்கலாம். ஆனால் நீலம், சிவப்பு என கற்பனைக்கு எட்டாத நிறங்களில்கூட கிளிகள் இருக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த கிராஃப்ட் டீச்சர் இந்திராகாந்தி. ஊசி, நூல், காட்டன் துணியோடு கொஞ்சம் கற்பனை வளமும் இருந்தால் போதும்.. பல வண்ண கிளிகள் நம் தோழிகளின் வீடுகளில் பறக்கும் என்று உத்திரவாதம் தருகிறார் இவர்.தேவையான பொருட்கள் பல வண்ண காட்டன் துணிகள் & அரை மீட்டர், ரெக்ரான் பஞ்சு & தேவைக்கு, ஊசி, நூல், கத்தரிக்கோல், ஃபேப்ரிக் க்ளோ, சமிக்கி, வெள்ளை ஸ்டோன், சில்வர் அல்லது தங்கநிற ரிப்பன், பல வண்ண மணிகள்.   செய்முறை: அலங்காரப்...

Thursday, January 24, 2013

சுருக்கு பை சுருக்கு பை

Hope you enjoyed this tutorial!  Happy Making!...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites