இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Sunday, July 15, 2012

பானை ஓவியம்

தேவையான பொருட்கள்:செராமிக் பவுடர்ஃபெவிக்கால்தண்ணீர்ப்ரஷ்(flat)plywoodஸ்ப்ரே (spray color)தேவையான கலர்பவுடர் (அ) acrylic colorsகார்ன்ஃப்ளோர் க்ளேசெய்முறை:முதலில் செராமிக் பவுடர், ஃபெவிக்கால், தண்ணீர் சேர்த்து 3:2:1 என்ற விகிதத்தில் கலந்து, ப்ளைளைவுட்டின்மேல் ஆள்காட்டி விரலில் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவிக்கொண்டேவரவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் தேவையான அக்ரிலிக் கலரை தடவி காய விடவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் கலர் ஸ்ப்ரே ஆங்காங்கே அடிக்க வேண்டும், இதை 8 மணி நேரம் காயவிடவும்.இப்பொழுது க்ளே பூக்கள் மற்றும் இலைகள் செய்து அழகுபடுத்தவும். படத்தில் பார்த்தால் நன்றாக புரியுமென நினைக்கிறேன். dark and light shade வருவதற்கு கொஞ்சம் க்ளேயில் டார்க்...

பானை ஓவியம்

பானைக்கு முதலில் கறுப்பு ஃபேப்ரிக் கலர் கொடுத்து காயவிடவேண்டும்.காய்ந்ததும் பிங்க் பியர்ல் கலர் கொடுத்து(தேவைப்பட்டால் மீடியம் சேர்த்துக்கொள்ளலாம்) ஜாயிண்ட் இடங்களைதவிர மீதி இடங்களில் அடித்து கொள்ளலாம். காயவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்பொழுது பானை ரெடி.மேலும் இது மினியேச்சர் ரோஸ் என்பதால் சிறு விளக்கத்துடன்....க்ளேவை 5 பாகமாக பிரித்து வைத்துக்கொள்ளவும். மேலும் இந்த 5 பாகத்தை ஒவ்வொரு பாகத்தையும் இரண்டாக பிரித்து சிவப்பு டார்க் மற்றும் லைட் ஷேட் கலர் கொடுத்து பிசைந்து வைத்துக்கொள்ளவும் இவ்வாறு மீதியுள்ள க்ளேவிற்கும் எந்த கலர் தேவையோ இரண்டு ஷேட் கலர் கொடுத்து ஸிப்லாக் கவரில் வைத்துகொள்ள வேண்டும்.தேவைப்படும் போது எடுத்து ரோஜாப்பூக்கள் செய்துக்கொள்ளலாம்.முதலில்...

பானை ஓவியம்

தேவையான பொருட்கள்:பானை உப்பு காகிதத் தாள் பிரஷ் fabric கலர்கள் (சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, மெட்டல்) எம்சீல் பெவிகால் வார்னிஸ் செய்முறை:பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும். பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பானை முழுவதிற்கும் கருப்பு fabric கலரை அடிக்கவும். 1/2மணி நேரம் காயவிடவும். பின்பு பாதியளவு மெட்டல் கலரை அடிக்கவும். 1/2மணி நேரம் காயவிடவும். எம்சீலில் இரண்டு கலர் இருக்கும். அதனை எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி பிசைய வேண்டும்… 5 நிமிடம் ஊறவிடவும். பின்பு பூ இதழ்களுக்கு சிறிது எம்சீல் கலவையை எடுத்து திலகம் shapeல் உருட்டி ஒரு விரல் கொண்டு அழுத்தினால் மேலே மட்டும் விரியும். மேலே மட்டும் இரண்டு...

பானை ஓவியம்

நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பிரபலங்களின் வீடுகளில் வரவேற்பறையை அலங்கரிக்கும் அழகழகான பானைகளைப் பார்த்திருப்பீர்கள். வெறும் பானையாகவோ அல்லது பூங்கொத்து அலங்காரங்களுடனோ அழகு சேர்க்கும் அந்தப் பானைகளுக்கு ‘டெரகோட்டா பாட் பெயின்டிங்’ என்று பெயர்! டேபிளின் மேல் வைக்கிற குட்டி பானை முதல், ஆளுயர பானை வரை விதம்விதமான அளவுகளில் டெரகோட்டா பானை ஓவியங்கள்  என்னென்ன தேவை? முதலீடு?‘‘டெரகோட்டா பானைகள் (சாதாரண பானைகள் விற்பவர்களிடமே கிடைக்கும்), செராமிக் பவுடர், ஃபேப்ரிக் பெயின்ட், ஆயில் பெயின்ட், வார்னிஷ், பிரஷ், பசை.... பானை 30 ரூபாயிலிருந்து கிடைக்கும். செராமிக் பவுடர் 1 கிலோ 40 ரூபாய். பானைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மத்த பொருள்களுக்கும்...

பானை ஓவியம்

பானை அலங்காரம் தேவையான பொருட்கள்:மண்பானை 1ஃபெவிக்கால்டிஷ்யூ பேப்பர்தண்ணீர்கருப்பு(ஃபேப்ரிக் கலர்)கோல்ட் டஸ்ட்ப்ரஷ்செய்முறை:முதலில் ஃபெவிக்கால், தண்ணீர் (1:3) என்ற விகிதத்தில் கலந்து வைத்துகொள்ளவேண்டும்.மண்பானையின் மேல் டிஷ்யூ பேப்பர் வைத்து இந்த ஃபெவிக்கால் கலவையை சிறிது சிறிதாக பூச வேண்டும்.முதலில் பானை முழுவதும் ஒட்டி நன்றாக காய்ந்ததும், அடுத்த லேயரை ஒட்ட வேண்டும்.இப்பொழுது இந்த லேயரும் காயவைக்க வேண்டும்.இந்த லேயர் காய்வதற்குள், நம்க்கு தேவையான டிசைனில் பூக்கள் செய்து வைத்துக்கொள்ளலாம்.எம்சீலை எடுத்து இரண்டு கலவையும் நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை திலகம் போல் உருட்டி கத்தியில் நடுவில் கோடு போட்டால் பூக்களுக்கு இதழ்கள்...

பானை ஓவியம்

இது நானேயல்ல!….(சுயசரிதை)20FEBஒர் ஆங்கில தம்பதியினர் ஒரு முறை பொருட்க்கள் வாங்க கடைக்கு சென்றார்கள். இவர்களுக்கு பழங்காலத்து அழகிய பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே மிக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட ஓர் அழகு தேனீர் குவளை (tea cup) ஒன்றை பார்த்தார்கள்.“ இந்த குவளை மிகவும் அழகாக இருக்கிறதே. இதையே நாம் வாங்கி விடலாமே! இதைப்போன்ற ஓர் அழகான குவளையை நான் இது வரை பார்த்ததில்லை” என்றாள் மனைவி.குவளையை கைகளில் வாங்கிய அந்த மனைவி அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் அந்த குவளை பேசத் துவங்கியது:“நான் எப்படி இவ்வளவு அழகான குவளையாக மாறினேன். தெரியுமா?” என்றது.இப்படி அழகான குவளையாக ஆகும் முன் நான் ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு அழுக்கான சிவப்பு...

Sunday, July 8, 2012

செயற்கை ரப்பர் பயன்பாடு 4.23 லட்சம் டன்னாக உயர்வு

புதுடில்லி: உள்நாட்டில், செயற்கை ரப்பர் பயன்பாடு, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 4.23 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 3 சதவீதம் (4.12 லட்சம் டன்) அதிகம் என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உற்பத்திஅதேசமயம், சென்ற நிதியாண்டில், உள்நாட்டில், இதன் உற்பத்தி, 1.11 லட்சம் டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.10 லட்சம் டன்னாக காணப்பட்டது. உள்நாட்டில், செயற்கை ரப்பர் உற்பத்தி குறைவாக இருப்பதால், நம் நாடு, வெளி நாடுகளிலிருந்து, இதை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.கணக்கீட்டு ஆண்டுகளில், செயற்கை ரப்பர் இறக்குமதி, 8 சதவீதம் அதிகரித்து, 3.02 லட்சம் டன்னிடருந்து,...

பாட்டில் குடிநீர் பயன்பாடு 21 சதவீதம் வளர்ச்சி

ராஜ்கோட்:இந்தியாவில், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் பயன்பாடு, சென்ற, 2011-12ம் நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், உலக சராசரி பயன்பாட்டுடன் ஒப்பிடும் போது, இதில், நம்நாடு மிகவும் பின்தங்கியுள்ளது என, ஐகான் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த, 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தனி நபர், பாட்டில் குடிநீர் பயன்பாடு, 16.20 லிட்டர் என்றளவில் இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 19.60 லிட்டராக அதிகரித்துள்ளது. இருப்பினும், உலக சராசரி பயன்பாட்டுடன் (30 லிட்டர்) ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவான அளவாகும்.நாட்டின் ஒட்டு மொத்த பாட்டில் குடிநீர் விற்பனையில், தென்னிந்தியாவின்...

தேங்காய் விளைச்சல், பயன்பாட்டில் இந்தியா முதலிடம்

தமிழகத்தில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தேங்காய் விளைச்சலில் சர்வதேச அளவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், தேங்காய் உற்பத்தியில் இந்தோனேஷியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இந்தோனேஷியா : இது குறித்து ஆசிய பசிபிக் தேங்காய் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:இந்தோனேஷியா ஆண்டுக்கு 1,650 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,573 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன.அதிக அளவில் தென்னந்தோப்பு களை கொண்ட நாடுகள் வரிசையிலும் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இங்கு 38.50 கோடி ஹெக்டேரில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இலங்கையும்,...

Thursday, July 5, 2012

பணத்தால் வந்த பிரிவோ? பண்பை மறந்த உறவோ?

ஆதி மனிதன் தொட்டுஅண்மைக்காலம்வரைஅன்பெனும் பிணைப்பால்பின்னிப்பிணைந்துவாழ்ந்;த நம் உறவுகள்ஏன்தான் இன்று இப்படி? ஓலை வீட்டிலும்ஒட்டிய வயிற்றுடனும் வாழ்தபோதுஒற்றுமையாய் வாழ்ந்த நம் உறவுகள்காசைப்பார்த்ததும் மாறியதோ?கடல் தாண்டி வந்தபின் மாறியதோ?கருணை மனம் எங்கு ஓடியதோ?தன்வயிற்றை ஒட்டவைத்துதன்னுள்  கருவாக்கிஉன்னை ஊர் போற்ற உருவாக்கியஅன்னைக்கு உதவாமல்?உலகத்தில் நீ எங்கு வாழ்ந்;தாலும்உன்னால் யாருக்கென்ன நன்மை?கண்ணை மறைத்ததோகாசு வந்து உன்னை?பின்னால் ஒருகாலம்உன்னிலை உணரும்போதுமண்ணில் இருக்காளே அன்னை?அப்போது நீ எண்ணித் தவித்தென்ன நன்...

Monday, July 2, 2012

பட்டுப்புழு வளர்ப்பு குடிலுக்கான மானிய தொகை அதிகரிப்பு

சென்னை: "பட்டுப்புழு வளர்ப்புக் குடில் கட்டுவதற்கான மானியத் தொகை உயர்த்தி வழங்கப்படும்' என, ஊரக தொழில் துறை அமைச்சர் சம்பத், சட்டசபையில் அறிவித்தார். இத்துறை மீதான மானியத்தில், அமைச்சர் அறிவித்த புதிய அறிவிப்புகள்: * பட்டுப்புழு வளர்ப்பு, புழு வளர்ப்புக் குடில் மற்றும் தனி நபர் விபத்து காப்பீட்டிற்கான தவணைத் தொகையில், 25 சதவீதத்தை தற்போது பயனாளிகள் செலுத்தி வருகின்றனர். அவர்களின் பங்களிப்பு, 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு, 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக மாற்றப்படும். * சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிறிய அளவிலான இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைத்து, மானிய விலையில் தளவாடங்கள் தரப்படும். இதற்காக, நடப்பு...

சணல் பை

''எந்த பிஸினஸ்னாலும், எல்லாரும் பண்ணுற வேலையை நாமளும் செய்யாம... மாத்தி யோசிச்சா, வெற்றியைக் கொண் டாடலாம். அதேபோல எந்தத் தொழில்லயும் இடையில் குறுக்கிடும் 'கறுப்பு நாட்களை' கடந்தே ஆகணும். கொஞ்சம் நிதானிச்சு, அதுக்கான காரணத்தைக் கண்டு பிடிச்சு சரிபடுத்திட்டா, வெற்றி நம்ம கையைவிட்டு நகராது!'' - சிம்பிள் லாஜிக் சொல்கிறார் சுசிலா. வெல்வெட், சணல் பைகள், பர்ஸ்கள் தயாரிப்பில் மாதம் 25 ஆயிரம் லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் மதுரைப் பெண்! ''எனக்கு ஓரளவு தைக்கத் தெரியும். மகளிர் குழுக்களுக்கு மதுரையில டெய்லரிங் கோச்சிங் கொடுத்தாங்க. அதுல கலந்துகிட்டப்போதான் தைக்கறதுல கிரியேட்டிவிட்டியைப் புகுத்தினா... வளமான வருமானம் பார்க்கலாம்னு புரிஞ்சுது. பயிற்சி...

கைத்தொழிலில் சாதிக்கும் பெண்

பெண்கள்  ஒரு அடி முன்னேறினால்  அந்த நாடு 10 அடிகள்  முன்னேறும்  என்றார்  காந்தியடிகள்.  கைத்தொழில் ஒன்றை  கற்றுக்கொள்; கவலை  உனக்கில்லை  ஒத்துக்கொள்  என்று  பாடினார்  நாமக்கல் வெ.ராமலிங்கம்  பிள்ளை. இந்த 2 தலைவர்களின்  கருத்துக்  களுக்கு  உதாரணமாக விளங்குகிறார்  திருவல்லிக்கேணியைச்  சேர்ந்த  பெண் ரமணி.  பல்வேறு கைத்தொழில்களை   கற்றுக்கொண்டு  தானும்  முன்னேறிய  துடன், மற்ற  பெண்களும்  முன்னேற  பயிற்சி  அளித்து வருகிறார்  ரமணி. . அவரை  சந்தித்த  போது  தன்னுடைய  பின்னணி  பற்றியும், தனக்கு  கைத்தொழில்கள்  மீது  நாட்டம்  ஏற்பட்டது  பற்றியும், எதிர்கால  திட்டங்கள் குறித்தும்  கருத்துக்களை ...

சரஸ்வதியின் சாதனை ரகசியம்

படிப்பு, பணம் மைனஸ்... உறுதி, உழைப்பு ப்ளஸ் ! பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு சாமான்ய பெண்களின் சாதனை கதை புகுந்த வீட்டில் பொருளாதார ரீதியாக பல பிரச்னைகள் உருவாகி, திடீரென கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேற வேண்டிய நெருக்கடி நேர்ந்தது... திருச்சியைச் சேர்ந்த சரஸ்வதிக்கு. 'பொம்பளப் புள்ள வீட்டுலதான் அடைஞ்சு கிடக்கணும்...’ என்ற பழமையை பொய்யாக்கி, சிறு வயது முதலே தந்தையின் சிமென்ட் கட்டுமானப் பொருட்கள் தொழில் பற்றி அறிந்து வைத்திருந்த சரஸ்வதி, நிலைகுலைந்து நின்றிருந்த அந்த வேளையில் சிறுவயது அனுபவம் கை கொடுக்க, கணவரின் கை கோத்து 'நாம பொழச்சுக்கலாம்...’ என்று வறுமையை எதிர்த்து நின்றதையும், வென்றதையும் 'குடிசையிலிருந்து கோபுரத்துக்கு...

திட்டமிடல்

பொதுவாக தொழில்முனைவோருக்கானதிட்டமிடல்என்பது ஒருதொழிலைதொடங்குவதுகுறித்தானதெளிவான அனுகுமுறையைகுறிக்கிறது.அதாவது, * என்னதொழில்செய்யப்போகிறோம். * எப்படியானவழிமுறைகளைகையாளப்போகிறோம். * சூழ்நிலைக்காராணிகள்மற்றும்தேவையான மூலப்பொருள்களைஎவ்வாறு பெறுவது. * பொருளுக்கானசந்தையின்நிலை. * மூலதனத்திற்கானவழிமுறைகள்பற்றிய அனுகுமுறை. * வேலையாட்களின்ஒத்துழைப்பினைபெறுதல். * நிதிநிலையைசரியாகபராமரித்தல்மற்றும் பெறுக்குவதற்கான புதியசிந்தணைகளைபுகுத்தும்முறை போன்ற சிலவறையறைகளைதெளிவாகபுரிந்துகொண்டு செயலாற்றினால்போதும்.திட்டமிடலில்வல்லுனர்ஆகிவிடலாம்.  * என்னதொழில் செய்யப்போகிறோம்.  அனுபவம்என்பதுநம்மால் மட்டுமல்லபிறறிடம்இருந்தும்கற்றுக்கொள்ளமுடியும்.எனவே நாம்என்ன தொழில் செய்யப்போகிறோம்என்பதைதிட்டமிடும்முன்பு அந்ததொழில்பற்றியஅறிவுடையசிலரின் ஆலோசனைகளைகேட்டுதெரிந்துகொள்வதுமிகவும் பயனைஅளிக்கும்.ஏற்கனவேசெய்யப்போகும்...

Sunday, July 1, 2012

பெட்ரூமை ஜில்லுனு டெகரேட் பண்ணுங்க

கோடையில் வீட்டிற்குள் இருக்கவே முடியாது. வியர்வை, கசகசப்பு என வாட்டி எடுக்கும். பகல் முழுவதும் அடித்த வெயில் இரவில் அப்படியே இறங்கும். இதனால் உறங்கவே முடியாமல் அவஸ்தையை ஏற்படுத்திவிடும். படுக்கை அறையை குளுமையாய் அலங்கரித்தால் கோடையிலும் ஆனந்தமாய் உறங்கலாம் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள். பூக்களின் டிசைன்கள் படுக்கை அறையில் பூக்கள் டிசைன் பிரிண்ட் செய்யப்பட்ட பெட்சீட் உபயோகிக்கலாம். அதேபோல் சுவர்களில் மென்மையான நிறங்களை பூசலாம். இதனால் கோடையில் இதமான சூழ்நிலை ஏற்படும். பருத்தி திரை சீலைகள் கோடை காலத்தில் மாலை நேரத்தில் இதமான தென்றல் காற்று வீசும். பருத்தி துணிகளால் ஆன வர்ணமயமான திரைச்சீலைகளை உபயோகிக்கலாம். காலையில் கொஞ்சம் சூரிய ஒளி படுக்கை அறையில் விழவேண்டும். அப்பொழுதுதான் பாக்டீரியாக்கள் அழியும். ஆனால் மாலையில் குளுமை தரும் வகையில் வெப்பத்தை வடிகட்டும் திரைச்சீலைகளை போடவேண்டும்....

வீட்டை அலங்கரிக்க

வீட்டை அலங்கரிப்பது சிறந்த கலை. சிறிய வீடோ, பெரிய வீடோ இருக்கும் இடத்திற்கு ஏற்ப சின்ன, சின்னதாய் அலங்கரித்தால் மனத்திற்கு பிடித்த மாதிரி வீடு அழகாகும். சுத்தமான வீடு வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே அழகுதான். சின்ன குழந்தைகள் இருந்தால் கண்டதையும் எடுத்து கொட்டி கவிழ்த்து விடுவார்கள். அவ்வப்போது அதை ஒதுக்கி சுத்தம் செய்தால் போதும் வீடு பளிச்தான். அந்தந்த அறைக்கு உரிய பொருட்களை மட்டும் வைத்து கசகச என மற்ற பொருட்களை சேர்த்தாமல் இருந்தாலும் அழகாய் இருக்கும். மனம் கவர்ந்த இயற்கை காட்சிகள் சுவற்றில் படம் வரைவது என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை இஷ்டம். அதை துடைத்தாலும் போகாது. மனதைக் கவரும் வர்ணங்களும், இயற்கை காட்சிகளும் நிறைந்த பேப்பர்களை ஒட்டலாம். குரோட்டன்ஸ் செடிகள் வீட்டை அழகு படுத்தும் இன்னொரு பொருள் க்ரோட்டன்ஸ் செடி.. என்னதான் செடியில் பூ இருந்து அழகு கொடுத்தாலும், பூக்காத க்ரோட்டன்ஸ் வாங்கி...

வீட்டை அலங்கரிக்க

இயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக்கேக்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேக்களை தயாரித்து விற்பது லாபகரமானது என்று கூறுகிறார் கோவை இருட்டுபள்ளத்தில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் ஆண்கள் மூளைவளர்ச்சி குன்றியோர் தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகி நசீமா. அவர் கூறியதாவது: மூளை வளர்ச்சி குன்றியோருக்கு தொழிற்பயிற்சி அளித்து வருகிறேன். அவர்களை கொண்டு செயற்கை பொக்கே, பிளவர் வாஷ், பேனா ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை பல்வேறு நிறுவனங்கள் சேவை மனப்பான்மையுடன் வாங்கி செல்கின்றன. செயற்கை சிங்கிள் ரோஸ் பொக்கேயை யார் வேண்டுமானாலும் எளிதாக தயாரிக்கலாம். காதலர் தினம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இவற்றை அதிகம் பயன்படுத்துவதால் நல்ல கிராக்கி...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites