இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, January 1, 2012

மணல் தக்காளி

மணல் தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. 

இதன் பயன்கள்:  
1) தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும்,  தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.

2) சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும். செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும். 

3) மலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. இலைகள் வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது. விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது. 

4) உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம். 

5) நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம். 

6) கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. 

7) இக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

8) மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. 

9) இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் பெரிதும் உதவுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரை உண்டாக்குகிறது.போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”


          மனத்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மனமுள்தால் மனத்தக்காளி என்றும் திருமனத்துக்கு தக்க உடல்லை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மனக்க தக்க யாளி மனத்தக்காளி யாக்கிவிட்டது.
          இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதாத்தகுண சிந்தாகணியில் 
“மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
  விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
  வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
   மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து
 காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
 உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
 மனத்தக் காளிக்குள்ள வாறு”   
 வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.            
 பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மெண்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும். 
     இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூன்னர் வாழ்த சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியர்ப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகம்கில் சித்தர்கள் தொண்மையும் விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.
   1.இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) மஸ்பரலஸ் என்ற ஆய்வியலாளர் மனதக்காளியின் இலைச்சாற்றை ஆய்வு செய்து குடல்புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு என்பதை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து அவைகளுக்கு ஏற்பட்டிருந்த குடல் புண் ஆறக்கண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அத்துடன் வாயுடன் கூடிய அல்சறை குணமாக்கும் ஆற்றலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு உண்டு என்று நிருபித்துள்ளார்.
  2. யதீஸ் என்ற இன்னுமோர் ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்)செய்த ஆய்விலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு வயிற்றில் எற்படும் புண்களை முற்றாக மாற்றும் வல்லமை இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.
   3. இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) ராஐ; என்ற இன்னுமோர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்றில் உள்ள “கப்பட்டோ புரட்டக்டியுல்” என்ற வேதியல் மூலக்கூறு கல்லீரலைப் பாதுகாக்கின்றது. என்ற கருத்தை அவரின் ஆய்வின் மூலம் முன்வைத்து நீருப்பித்துள்ளார்.
   4.இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) பகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான்னலி அஸ்ரப் அலி என்னும் ஓர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்று மஞ்சல் காச்சலில் ஒருவகையான “கப்பட்டைடிஸ் -சீ” என்ற காச்சலை உருவாக்கும் வைரஸ்சை அழிக்கும் வல்லமை உள்ளதுடன் கல்லிரலின் பலவீனத்தால் உண்டாக்கும் நோய்களை குணப்படுத்த வல்லதுடன் கல்லீரலை பலப்படுத்தும் வல்லமையும் இருக்கின்றது என மீண்டும் அக் கருத்துக்கு வலுவுட்டியுள்ளார்;.
   5.செல்வப்பா முத்து என்ற இன்னுமொரு ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) செய்த ஆய்வில் மனதக்காளிக் கீரை மிகவும் சக்தி வாய்தது என்றும் அது ஆண்களின் ஆண்மையை வீரியமாக்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இதன் அளவையும் விந்து சுரப்பையும் அதிகரிக்கின்றது என்று தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதனை சித்தர் “விந்து நோய் பாண்டொதிர்”என முன்னரே அறிந்து அறிவியல் உலகுக்கு தெரிவித்துன்னர் என்பதை அறியும்போது தமிழ் மருத்துவத்தின் அறிவியல் தொன்மையை அறிய முடிகின்றது. 
மனத்தக்காளி காயும் பழமும்
  5. திருமதி. வடிவேல் அருள்மொழி என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தில் (2010 இல்)தாம் செய்த ஆய்வில் மனத்தக்காளிக் சற்றுக்கு இரண்டு பண்புகள் உண்டு என்றும் இவை
        1;.நோய் எதிப்பு சக்தி வீழ்சிக்கு காரணமாக இருக்கின்ற பொருட்கள்         எல்லாவற்றையும் அழிக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். உடலை முதுமையிலிருந்து இளமையாக்கி  காக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். 
       2.உடலில் கொளுப்பு சத்து அதிகரித்து கொலஸ்றோல் அதிகர்த்து அதன் விளைவால் வரக்கூடிய சைக்கிளிசைட், லோடெண்சிட்டி கொலஸ்றோல், லிப்பீட் கொலஸ்றோல் போன்றவை உடலில் கூடுவதை தடுக்கும் ஆற்றல் மனத்தக்காளிக்குண்டு. என்று தனது ஆய்வில் வெளியிட்டுள்ளார்.
6. சீனதேசத்தைக் சேர்ந்த கெஸ்சி முவான் என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) வெளியிட்ட கட்டுரையில் மனத்தக்காளிக் கீரைக்கு இன்னும் இரண்டு பண்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 
            1.அட்டோ பசிஸ்
            2.அப்போட்டசிஸ் என்ற வேதியல் மூலக்கூறுகள் இருப்பதாகவும் அது உடலில் அழிந்த கலங்களை மீண்டும் புதிப்பிக்கின்றதுடன் கலங்கள் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுடன் உற்பத்தியின் போது ஏற்படும் தவறான நகல்களை அழித்து சரியான நகல்களை நிலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்துள்ளார். இதை சித்தர் பாடலில் “முந்து வளருமத்தோச நோய் மாறும் கைப்பான  மினகுத் தக்காளியிலை மெய்” என அப்போதே அழகாகக் கூறியிக்கின்றார்.
7.லைவோசன் என்பவரும் ரீக் என்ற இருவரும் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) இல் ஆய்வு செய்து மனத்தக்காளிக் கீரைகயில் “கிக்கோரோட்டிக்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது என்றும் இது புற்றுநோயை தடுக்க வல்லது என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் கிக்கோ என்பது மாச்சத்து புரோட்டீன் என்பது புரதம் இவை இரண்டும் சேர்ந்த ஓர் புரதப்பொருள் இது புற்றுநோயை தடுக்க வல்லது. இதன் முலம் மீண்டும் ஆதாரப்படுத்தியுள்ளது.
மனத்தக்காளி 
             சீன நாட்டில் இருதய நோய்க்கு பல முகிலிகைகளுடன் சேர்த்துப் மனத்தக்காளியைப் பயன்படுத்து கின்றனர்.அது போன்று கிரேக்க மருத்துவத்தில் வீக்கத்துக்கு பற்றுப்போட பயன்படுத்துகின்றனர். வீக்கம் வருவதையும் காச்சல் வருவதையும் இக்கீரை தர்க்கும் ஆற்றல் உண்டு. பேஸ்சிய நாட்டிலே நீக்கோவைக்கு அருமந்தாக பயன் படுத்து கின்றனர். நீக்கோவை என்பது கால், முகம், கண்ணீத்தாரைப்பை( கண்களின் கீழ்ப்பகுதி),வயிறு போன்ற இடங்களில் நீர் சுரந்திருத்தல் உடலில் தேவையற்ற வகையில் நீர் தோல்லின் அடிப்பகுதியில் நீhதேங்கியிருத்தல்.  
பெண்களின் கற்பப்பையில் ஏற்படும் புற்று நோக்கு அருமருந்தாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
  இந்தக்கீரை உடலிலே நோய் எதிர்ப்புக் சக்தியை ஏற்படுத்தி புற்றுநோயை வராது தடுத்து புற்றுநோய் திசுக்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றது. முத்தோச நோய் என்னும் புற்றுநோய் இது ஒன்றில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவி உடலை அழித்து விடும் ஆனால் அஸ்துமா என்னும் சுவாசகாசம். இருதையநோய், நுரையிரல் நோய் போன்றவை அந்த உறுப்பை மட்டும் பாதிப்பாவை இதனாலே சித்தர்கள் இதனை முத்தோச நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
“காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” காய் குளிர்சியால் வரும் நோயை குணமாக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி குணமாக்கும் காய்க்குக் கபம் தீரும் என்றும் கீரை வெப்பத்தினால் வரும் நோயை குணமாக்கும். உடலில் குளிர்சிசியை ஏற்படுத்தி குணமாக்கும் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் என்று வெண்பாவில் கூறியுள்ளார். நோய்யுற்று உடல் தளர்தவர்களின் தளர்வு நீங்கி வலிமை பெற மனத்தக்காளி வற்றல் புளிக் குழம்பு சிறந்த பலனைத்தரும்,  “தீக்குள் உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும் மனத்தக் காளிக்குள்ள வாறு” என கூறிப்பிடுகின்றார். தளர்வு நீங்கி வலிமை பெறுகின்ற போது உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும் அப்போது மீள்திறனை ஏற்படுத்தும் ஆற்றல்லுடன் நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்தி உடலை வலுவுட்டும் சக்தி மனத்தக்காளிக் குண்டு. 
பயன்படுத்தும் முறைகள்:    
 1;.மனத்தக்காளி சூப்
தயாரிக்கும் முறை: தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  பின் இறக்கி சூப்பாக பருக முடியும். பருகினால் வாய்வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும். 
2.பச்சையாக மென்று சாப்பிடலாம்.
3. கீரையை பருப்பு போட்டு கடைந்து காப்பிடலாம். பாத்திரத்தில் கீரையைப் போட்டு சின்னவெங்காயத்தை நறுகிப்போட்டு அதனுடன் அரைத்பங்கு தக்களிப் பழத்தையும் நறுகிப் போட்டு சிறிதளவு மிளகு சீரகம் பச்சைமிளகாய் இவை போட்டு திடமாக தன்னீவிட்டு காச்ச வேண்டும். கீரையின் பசுமை நிறம் மாறாது இருக்க சக்கரையை சிறிதளவு தூவி விடவேண்டும் பசுமை நிறம் மாறாது இருக்கும் .இதை எடுத்து வைத்து விட்டு இன்னுமோர் பாத்திரத்தில் எண்ணை அல்லது நெய்யில்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் பருப்பு அல்லது துவரம் பருப்பு அவித்த நீரை விட்டு அதில் அவித்துவைத்த இலையை போட்டு அவித்து வதக்கி கடைந்து தேவையான உப்புச்சேர்த்து எடுத்து சாதத்துடன் உண்ணமுடியும்.  பொதுவாக கீரைகளுக்கு புளிசேர்ப்பதை தவிப்பதால் சத்தி இழப்பின்றி முழுமையான பலனைப் பொறமுடியும். நெய் சேர்ப்பது கீரைக்கறிக்கு நல்ல சுவையைத்தருவதுடன் ஊட்டமாகவும் இருக்கும்.    
4. காயை அல்லது வற்றலை புளிக்குழம்பாக செய்து வெந்தையக் சேர்த்து தாயாரித்து உணவுடன் தேர்த்து உண்ண முடியும். கபம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவித்துக் கொள்ளலாம். வேந்தையம் குளிர்த் தன்மையானது.


கோடை காலத்துக்கு மணத்தக்காளி சட்னி


“பச்சை நிறமே…பச்சை நிறமே.. இச்சை கொடுக்கும் பச்சை நிறமே” மனக்கண்ணில் மாதவனும் ஷாலினியும் பறப்பது… தெரிகிறதே.

இலைகள்

நாளாந்தம் உண்ணும் அரிசி, கோதுமை மாப்பொருள் உணவுடன் எமது உடலுக்குத் தேவையான விட்டமின்களையும், கனிப்பொருள்களையும் பெறுவதற்கு இலை வகைகள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து உண்ண வேணடும்.

இரும்பு கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், அயடின் போன்ற கனியங்கள் முக்கியமானவை. இலைவகைகளில் உடல் வளர்ச்சிக்கும் தேவையான விற்றமின் ஏ, பீ சுண்ணாம்பு இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன என்பது அறிந்ததுதான்.

அரிசி உணவோடு கீரை

அரிசி உணவில் விற்றமின் ஏ குறைவாக இருப்பதால் நாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் 50கிராம் ஆவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இலகுவாக மலிவாகக் கிடைக்கும் கீரைகளை வாங்கிச் சமைத்துக் கொள்ளலாம்.

மணத்தக்காளி கீரை


கீரை வகையில் மணத்தக்காளி கீரையும் சிறந்தது. இதன் பொட்டானிக்கல் பெயர் Solnum nigrum ஆகும்.

மணத்தக்காளி என்பது இங்கு மருவி மணித்தக்காளி ஆயிற்று.
மணிமணி போல் பழங்கள் இருப்பதால் அவ்வாறு வந்ததோ?

இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம்.
சிறிய வெள்ளைப் பூக்களுடன் மலரும்.
இதன் காய் மிகவும் சிறிதாக கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். காய் முற்றிவர கத்தரிப்பூ நிறமாக மாற்றமடையும்.


இன்னொரு இன வகையின் பழம் இளம் சிகப்பு நிறமாக இருக்கும். இப் பழங்கள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். நேரடியாகவே உண்ணலாம்.

சிறிய வயதில் விரும்பி உண்டதில்லையா?
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பழம் இது.



மணத்தக்காளி இலையில் சட்னி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம், சொதி செய்யலாம். காய், பழத்தில் புளிக் குழம்பு செய்து கொள்ளலாம்.

வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள்.

கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல் செய்து சாப்பிடுவதும் சிறந்தது.

வீட்டு வைத்தியத்தில்

கிராமங்களில் இதன் நன்மையை அறிந்து அதிகம் பயன்படுத்துவர்.

குடல் புண்ணுக்கும் சுகம் தரும். மூல நோய்க்கும் சிறந்தது என்பர்.

கண் பார்வைக்கும் பல் உறுதிக்கும் வேண்டிய விற்றமின் ஏ, பீ, இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

மணத்தக்காளி சட்னிஇன்று சட்னி செய்து கொள்வோமா?
இரண்டு முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்-
முறை - 1

மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
செத்தல் மிளகாய் - 1
பூண்டு – 2-4
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
பழப்புளி – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ ரீ ஸ்பூன்

தேவையான பொருட்கள்-
முறை - 2
மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
மிளகு - ¼ ரீ ஸ்பூன்
சின்னச் சீரகம் - ¼ ரீ ஸ்பூன்
பச்சை மிளகாய் -1(விரும்பினால்)
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு.
தேசிச் சாறு - 1 ரீ ஸ்ப+ன்

செய்முறை - 1
கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

ஓயிலில் செத்தல் மிளகாய், பூண்டு வதக்கி எடுத்து வையுங்கள்.

மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி, கிர்…கிர் எனத் தட்டி எடுத்திட வேண்டியதுதான்.

செய்முறை – 2
கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

தேசிச்சாறு தவிர்த்து மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி,அரைத்து எடுங்கள்.

பரிமாறும் கோப்பையில் எடுத்து வைத்து விடுங்கள்.

தேசிச்சாறு விட்டுக் கலந்துவி

1 comments:

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
தாங்கள் வருகைக்கு நன்றி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites