இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Tuesday, December 26, 2017

காய்கறி சாகுபடியில் விவசாயி அனுபவம்

நான் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, பெருமாள் கவுண்டன்பட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து ஆடிப் பெருக்கு அன்று இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன. அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன. அதில் இரண்டு முட்டை களை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன். இப்பொழுதான்...

சம்பங்கி பூ'

வானம் பார்த்த பூமி சிவகங்கை. இம் மாவட்ட நிலத்தில் பூக்கள் விளைவது விவசாயிகளுக்கு அரிய விஷயம். ஆனாலும் சிவகங்கை கவுரிபட்டி விவசாயி எஸ்.மோகன், தனது நிலத்தை பண்படுத்தி நவீன சொட்டுநீர் பாசன கருவி மூலம் நீர் பாய்ச்சி, "சம்பங்கி பூ' சாகுபடி செய்து சாதித்து வருகிறார். விவசாயி மோகன் கூறியதாவது: சேலத்தை சேர்ந்த நாங்கள் குடும்பத்துடன் விவசாயம் செய்ய 23 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தோம். கவுரிபட்டியில் வாங்கிய நிலத்தை பண்படுத்தி, 3 ஏக்கரில் சம்பங்கி பூச்செடி நடவு செய்தோம். சேலம், ஜெயங்கொண்டானில் நாட்டு, ஒட்டு ரக(பிரிஜ்வார்)சம்பங்கி விதைகளை (கிழங்கு வகை) வாங்கி நடவு செய்தேன். 6 மாதங்கள் பராமரித்த பின் பூக்கள் பூக்க துவங்கும்.பூச்செடிகளுக்கு தண்ணீர் சிக்கனத்திற்காக...

வழிகாட்டும் முன்னோடி விவசாயி ராஜா

பாழடைந்த கிணறுகளை மண் கொட்டி மூடிவிடாமல், பாதுகாத்து அதில் முறையாக மழை நீரைச் சேகரித்து வறட்சியிலும் வற்றாத வெள்ளாமைக்கு வழிகாட்ட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி வருகிறார் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த கீழ்பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜா. 44 வயதான அவர், தனது முப்பாட்டனார் விட்டுச் சென்ற 5 ஏக்கர் நிலத்தில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து, எளிய தொழில்நுட்பத்தைக் கையாண்டு முன்னோடி விவசாயி யாகத் திகழ்கிறார். பருவமழை பொய்த்த நிலையில், விவசாயம் செய்யப் போதிய தண்ணீர் இல்லை, வேளாண் பணிக்கு ஆள்கள் கிடைப்பதில்லை, இடுபொருள்களின் விலையேற்றம், விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை போன்ற காரணங்களால் சாகுபடித் தொழிலைக் கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர் விவசாயிகள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ராஜாவை போன்ற விவசாயிகள் சிலர் விவசாயத் தொழிலைக் கைவிடாமல் எளிய தொழில்...

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வருவாய் - சொட்டு நீர் பாசனத்தில் சாதிக்கும் விவசாயி

சிவகாசி அருகே வெம்பக்கோட்டை கங்கர்செவல் பகுதியில் வெண்டை, மிளகாய், புடலங்காய், தக்காளி போன்ற காய்கறி வகைகளை சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி செய்து ஆண்டிற்கு ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார் விவசாயி ராமசாமி.அவர் கூறியதாவது: எங்கள் பகுதி செவல் மண் நிறைந்தது.வெம்பக்கோட்டை வேளாண் தோட்டத் துறை மூலம் கடந்த 5 ஆண்டு முன் 75 சதவீத மானியத்துடன் சொட்டு நீர் பாசன முறையை 12 ஏக்கரில் அமைத்தேன். இந்த பயன்பாட்டு முறையை கையாண்டதன் மூலம் குறைந்த விதை அளவு கொண்டு, களையின்றி விவசாயம் செய்ய ஏதுவாக அமைந்தது. பாத்திபாசனத்தில் 25 சதவீத நிலங்கள் வீணாகிறது. சொட்டு நீர் பாசன முறையில் 1 ஏக்கரில் விதைப்புக்கு ஏற்ற அளவில் மகசூல் எடுக்க முடியும். இதில் வேர் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதோடு, அதிக ஆட்செலவு இல்லாமலும் போகிறது. நீர் செலவும் குறைக்கப்படுவதால் விவசாயம் செய்ய உகந்ததாக சொட்டு நீர் பாசனம்...

Monday, December 25, 2017

நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா! தினமும் ₹ 1,700 /-

இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகர்வோர் தேடி வாங்கத் துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பாக்கெட் பாலைத் தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள். இதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர். திருவள்ளூர்- ஊத்துக்கோட்டைச் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஒதப்பை கிராமம். இங்குதான் இவர்களின் மாட்டுப்பண்ணை இருக்கிறது. பண்ணையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த சங்கர் மற்றும் கதிரவன் ஆகியோரைச்...

இயற்கைப் பீர்க்கன்…

நாலு ஏக்கர் இருந்தாலும் இருக்கிற தண்ணியை வெச்சு இவ்வளவுதான் வெள்ளாமை செய்ய முடியும்னு, ஒரு ஏக்கர்ல மட்டும்தான்  வெள்ளாமை பாத்தோம். ஆனா முறையான வழிகாட்டுதல் கிடைச்ச பிறகு, சொட்டுநீர்ப்பாசனம் அமைச்சு, இயற்கை விவசாயம் செய்யும் போது அதே தண்ணியை வெச்சு இப்ப நாலு ஏக்கர்லயும் வெள்ளாமை வெளுத்து வாங்குது. வெவசாயத்துல ஜெயிக்கிறதும் தோற்கிறதும் நாம கடைபிடிக்கிற வழிமுறைகள்தான். இதை எங்க அனுபவம் மூலமா உணர்ந்திருக்கோம்” என்று நெகிழ்கிறார்கள், கரூர் மாவட்டம் ஈசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்-ரேணுகா தம்பதி. பாதை காட்டிய பசுமை விகடன்! “இது கடுமையான வறட்சிப்பகுதி. ஆறு, குளம், வாய்க்கால்னு பாசன வசதி எதுவும் இல்லாத ஊரு. முழுக்க கிணத்துப்பாசனத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை. இது எங்க தங்கச்சி தோட்டம். அவங்க வெளியூர்ல இருக்கிறதால நாங்கதான் பராமரிச்சுக்கிட்டு இருக்கோம். தினமும் கிடைக்கிற...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites