இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, May 20, 2012

ஜப்பானியக் காடை வளர்ப்பு


ஜப்பானியக் காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழகத்தில் பிரபலமாகிவரும் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். காடைகள் பொதுவாக முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் காடைகள் இறைச்சிக்காகவே அதிகம் வளர்க்கப்படுகின்றது. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்பு தொழிலானது பெரிய பண்ணைத் தொழிலாகவே வளர்ந்துள்ளது.



இறைச்சிக்காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடைகளை பொறுத்தவரையில் அவற்றை மிகக்குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். கோழி வளர்ப்பினைப் போன்று அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானியக் காடைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும். கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகிவிடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக்காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் தீவனச்செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகிறது. இறைச்சிக்காக வளர்க்கும்பொழுது, காடைகளைத் தரையிலோ (ஆழ்கூளக் குப்பை முறை) அல்லது கூண்டு முறையிலோ வளர்க்கலாம்.

ஆழ்கூள முறை: இறைச்சிக்காக ஜப்பானியக் காடையை ஆழ்கூள முறையில் வளர்க்கும்பொழுது ஒரு சதுர அடிக்கு 6 காடைகள் வரை வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்து பின்னர் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேம்பட்டு காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச்செலவும் ஏற்படுத்தும். எனவே, காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுகளுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.

கூண்டுமுறை வளர்ப்பு: இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும்பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம், இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 100 காடைக்குஞ்சுகள் வரை வளர்க்கலாம். அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம், இரண்டரை அடி அகலம், 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.

தீவனம் அளித்தல்: ஜப்பானியக் காடைகளுக்கும், கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தலாம். காடைகளுக்கு குஞ்சு பருவத்தில் அளிக்கும் தீவனம் 26 முதல் 28 சதவீதம் புரதமும், 270 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீனிகளை மாற்றிப் பயன்படுத்த திட்டமிடும்பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதவீத புரதமும், 2800 கி.கலோரி எரிசக்தியும் உள்ள தீனியை உபயோகிக்கலாம்.

ஜப்பானியக் காடை வளர்ச்சி: சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடையுள்ள காடையை சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கிறது. காடை இறைச்சியில் அதிக புரதமும் (20.5 சதவீதம்), குறைந்த அளவு கொழுப்பும் (5 சதவீதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. (தகவல்: ரா.தங்கத்துரை, பிஎச்.டி., வெ.பழனிச்சாமி, பிஎச்.டி., வீ.தவசியப்பன், எம்.வி.எஸ்சி., வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288)

ஜப்பானியக் காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடை வளர்ப்பு தமிழகத்தில் பிரபலமாகிவரும் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். காடைகள் பொதுவாக முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் காடைகள் இறைச்சிக்காகவே அதிகம் வளர்க்கப்படுகின்றது. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்பு தொழிலானது பெரிய பண்ணைத் தொழிலாகவே வளர்ந்துள்ளது.

இறைச்சிக்காடை வளர்ப்பு: ஜப்பானியக் காடைகளை பொறுத்தவரையில் அவற்றை மிகக்குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். கோழி வளர்ப்பினைப் போன்று அதிக அளவில் முதலீடு தேவையில்லை. இத்தொழிலில் குறைந்த மூலதனத்துடன் சிறிது பயிற்சி பெற்ற யாரேனும் ஈடுபடலாம். ஜப்பானியக் காடைகளுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகம். இதனால் எந்த ஒரு தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரும். கோழிகளைப் போல் பல தடுப்பூசிகள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜப்பானியக் காடைகள் முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்குத் தயாராகிவிடுகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே லாபத்தைப் பெற முடியும். ஜப்பானியக்காடை ஆறுவார காலத்தில் அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்வதால் தீவனச்செலவு அதிகமின்றி குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பை மேற்கொள்ள முடிகிறது. இறைச்சிக்காக வளர்க்கும்பொழுது, காடைகளைத் தரையிலோ (ஆழ்கூளக் குப்பை முறை) அல்லது கூண்டு முறையிலோ வளர்க்கலாம்.

ஆழ்கூள முறை: இறைச்சிக்காக ஜப்பானியக் காடையை ஆழ்கூள முறையில் வளர்க்கும்பொழுது ஒரு சதுர அடிக்கு 6 காடைகள் வரை வளர்க்கலாம். காடைகளை முதல் இரண்டு வாரம் வரை ஆழ்கூள முறையில் வளர்த்து பின்னர் கூண்டுகளுக்கு மாற்றி ஆறு வாரம் வரை வளர்க்கலாம். ஆழ்கூள முறையில் இரண்டு வாரத்திற்கு மேம்பட்டு காடைகளை வளர்த்தால் அவை அதிகம் அலைந்து திரிந்து, உட்கொண்ட தீனியின் எரிசக்தியை வீணாக்கி, குறைந்த எடையுடன் அதிகத் தீனிச்செலவும் ஏற்படுத்தும். எனவே, காடைகளை ஆழ்கூள முறையில் இருவாரங்களுக்கு வளர்த்து, பிறகு கூண்டுகளுக்குள் மாற்றி வளர்ப்பதே சிறந்த பராமரிப்பு முறையாகும்.

கூண்டுமுறை வளர்ப்பு: இறைச்சிக்காகக் காடைகளை வளர்க்கும்பொழுது முதல் இரண்டு வாரம் வரை 3 அடி நீளம், இரண்டரை அடி அகலம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 100 காடைக்குஞ்சுகள் வரை வளர்க்கலாம். அவற்றை 3 முதல் 6 வாரம் வரை 4 அடி நீளம், இரண்டரை அடி அகலம், 18 அங்குல உயரம் உள்ள கூண்டுகளில் கூண்டு ஒன்றுக்கு 50 காடைகள் வரை வளர்க்கலாம்.

தீவனம் அளித்தல்: ஜப்பானியக் காடைகளுக்கும், கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களே உபயோகப்படுத்தலாம். காடைகளுக்கு குஞ்சு பருவத்தில் அளிக்கும் தீவனம் 26 முதல் 28 சதவீதம் புரதமும், 270 கி.கலோரி எரிசக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை உபயோகிக்கலாம். ஆனால் இந்த வயதிற்குள் இருவகைத் தீனிகளை மாற்றிப் பயன்படுத்த திட்டமிடும்பொழுது முதல் மூன்று வாரங்கள் வரை 24 சதவீத புரதமும், 2800 கி.கலோரி எரிசக்தியும் உள்ள தீனியை உபயோகிக்கலாம்.

ஜப்பானியக் காடை வளர்ச்சி: சுத்தம் செய்யப்பட்ட காடை இறைச்சியின் எடை உயிருள்ள காடையின் எடையில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். சுமார் 140 கிராம் எடையுள்ள காடையை சுத்தம் செய்தால் 100 கிராம் எடையுள்ள இறைச்சி கிடைக்கும். காடை இறைச்சி மிகவும் சுவையாக இருப்பதால் நல்ல விற்பனை விலை கிடைக்கிறது. காடை இறைச்சியில் அதிக புரதமும் (20.5 சதவீதம்), குறைந்த அளவு கொழுப்பும் (5 சதவீதம்) இருப்பதால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற உணவாக கருதப்படுகிறது. (தகவல்: ரா.தங்கத்துரை, பிஎச்.டி., வெ.பழனிச்சாமி, பிஎச்.டி., வீ.தவசியப்பன், எம்.வி.எஸ்சி., வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி-630 206. 04577-264 288)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites