இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, September 15, 2013

துயரங்களை துச்சமாக்கிய துணிச்சல்காரி

Tuccamakkiya tuniccalkari trouble!

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்’ என்கிற வாசகத்துக்கு மிகப்பொருத்தமான அடையாளம் இந்திரா! சென்னை, சாந்தோம் அருகே சென்று  ‘இந்திரா பஞ்சர் கடை’ என விசாரித்தால், வரைபடம் போட்டு வழிகாட்டுகிறார்கள். புழுதி வாரித் தெறிக்கும் ஒரு தெருவோர நடைபாதையில் பஞ்சர்  ஒட்டும் கடை போட்டிருக்கிறார் இந்திரா. ஆண்களின் உலகில் அரிதாக ஒரு பெண்!

‘‘ஒருவாட்டி எங்கக்கா மண்டையை உடைச்சிட்டாங்க டீச்சர். பள்ளிக்கூடம் பக்கமே போறதில்லைங்கிறதை அப்பவே முடிவு பண்ணிட்டேன்.  மழைக்குக்கூட அங்க ஒதுங்கினதில்லை. எங்கப்பா சைக்கிள் ரிப்பேர் கடை வச்சிருந்தாரு. ஆனாலும், அப்ப  எதையும் தொட்டதுகூட இல்லை! ஒரு  மெஷின் கம்பெனில வேலைக்குப் போயிட்டிருந்தப்ப, எங்க வீட்டுக்காரர் அறிமுகமானாரு. அப்படியே காதலிச்சு, கல்யாணம் கட்டிக்கிட்டோம். 

வீட்டுக்குப் பக்கத்துல சின்னதா ஒரு பஞ்சர் கடை வச்சோம். ரெண்டு ஆம்பிளைப்புள்ளைங்க. ரெண்டாவது குழந்தை, என் வயித்துல இருக்கிறப்பவே,  அவனுக்கு கிட்னி ஃபெயிலியர். சம்பாதிக்கிற காசெல்லாம் அவன் வைத்திய செலவுக்கே சரியா இருந்தது. கடை வேலை போக, காலைலயும்  சாயந்திரமும் ரெண்டு மணி நேரம் பள்ளிக்கூடத்துக்கு ஆட்டோ ஓட்டிக்கிட்டிருந்தாரு என் வீட்டுக்காரர். 

அவர் கடைல இல்லாத நேரம் நான் கவனிச்சுக்க ஆரம்பிச்சேன். நாளாக ஆக என் குழந்தையோட நிலைமை ரொம்ப சீரியசாச்சு. புள்ளை பொழைக்கிறது  கஷ்டம்னு டாக்டருங்க கையை விரிச்சிட்டாங்க. 3 வயசுல இறந்துட்டான். அதுக்கப்புறம் அவன் நினைப்பாவே இருந்ததால, அதை மறக்க, நிறைய  நேரம் கடைல உட்கார ஆரம்பிச்சேன். இப்ப அதுவே பொழப்பாயிருச்சு.

ஆரம்பத்துல கை, காலெல்லாம் வலிக்கும். மூச்சு வாங்கும். பழகப் பழக சரியாயிடுச்சு. இப்ப என்னால பெரிய பெரிய கார் வரைக்கும்கூட பஞ்சர் போட  முடியும்’’ என்கிற இந்திராவுக்கு மிகப்பெரிய பலம் அவரது கணவர் முத்துக்குமார். ‘‘ஒரு பொண்ணு துணிஞ்சு, ரோட்ல வந்து கடை போட்டு பிழைக்க  வழி தேடறான்னா, அவளுக்குள்ள எவ்வளவு சோகம், கஷ்டம் இருக்கும்னு எந்த ஆம்பிளைக்கும் புரியறதில்லீங்க... 

வாய் கூசாம, அவளைப் பத்தி அசிங்கமா பேசறாங்க. ‘உன் பொண்டாட்டி அங்க நிக்கறா... இங்க நிக்கறா’ன்னு ஆரம்பிச்சு, என் வீட்டுக்காரர்கிட்ட  என்னென்னமோ சொல்வாங்க அதையெல்லாம் கேட்டு, நான் அழுதிருக்கேன். ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? நான் இருக்கேன்ல உனக்கு’ன்னு  ஆறுதலும் தைரியமும் சொல்றவரு என் புருஷன்தான். எனக்கு சொந்தம்னு சொல்லிக்க அவரை விட்டா ஆளில்லை. 

எம்புள்ளை செத்ததுக்குக் கூட பிறந்த வீட்லேருந்து யாரும் வரலை. அன்னிக்கு முடிவெடுத்ததுதான்... ‘கடைசி வரைக்கும் எனக்கு நீ, உனக்கு நான்’னு.  இப்ப சந்தோஷமோ, துக்கமோ நான், என் புருஷன், என் மூத்த பையன்னு மூணு பேருக்குள்ள மட்டும்தான்...’’ - வார்த்தைகளைத் தேடித் தேடி, தட்டுத்  தடுமாறித்தான் பேசுகிறார் இந்திரா.

‘‘காலைல 6.30 மணிக்கு கடைக்கு வந்துடுவோம். பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கிறான். மாமியார் அவனுக்கு சாப்பாடு கட்டி, பள்ளிக்கூடம்  அனுப்பிருவாங்க. வேலையைப் பொறுத்து ராத்திரி வீட்டுக்குப் போக 11 மணி கூட ஆயிரும். பையன், பள்ளிக்கூடத்துலேருந்து நேரா கடைக்கு  வருவான். அவனோட ரெண்டு வார்த்தை பேசிட்டு, பக்கத்துல டியூஷனுக்கு அனுப்பிடுவேன். 

படிச்சிட்டு, மறுபடி வீட்டுக்குப் போயிடுவான். வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போய்தான் ராத்திரி சமையல், பாத்திரம் கழுவறது, துணி  துவைக்கிறதுன்னுமத்த வேலைகளை எல்லாம் பார்க்கணும்... கடைல நான் தனியா இருக்கிறது தெரிஞ்சா, வேணும்னே ஏமாத்தறதுக்குன்னு சில பேர்  வருவாங்க. பஞ்சர் ஒட்டிட்டு, காசு கொடுக்காம ஓடிருவாங்க. சில பேர், நிஜமாவே காசில்லாம, வாட்ச், செல்போனை வச்சுக்க சொல்லித் தருவாங்க. 

நான் வாங்க மாட்டேன். நம்பிக்கைதானேங்க வாழ்க்கை... பணம் எங்கப் போயிடப் போகுது?’’ இந்திராவின் வாழ்க்கையைப் போலவே நைந்து  போயிருக்கிறது அவர் அணிந்திருக்கிற உடையும். ஆனாலும் வார்த்தைகளில் வைராக்கியத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் குறைவில்லை.  ‘‘என்னிக்காவது மனசு சரியில்லாட்டி, பக்கத்துல உள்ள கடற்கரைல போய் உட்கார்ந்து மனசு விட்டுப் பேசுவோம். படிச்சிருக்கலாம்.... தப்பு  பண்ணிட்டோமேங்கிற வருத்தம் அப்பப்ப வரும். 

என் பையன் விஷயத்துல அந்தத் தப்பு நடந்துடக் கூடாதுன்னு நினைக்கிறோம். அவனை பெரிய இன்ஜினீயராக்கி பார்க்கணும்.... அதான் என் கனவு...”  கண்களில் தெரிகிற சோகத்தை, சிரிப்பால் மறைத்துப் பேசுகிற இந்திராவுக்கு, வாழ்க்கை எந்தத் துயரத்தையும் மிச்சம் வைக்கவில்லை.  ‘‘எல்லாம் ஒரு  நாள் நிச்சயம் மாறும். 

நல்ல புருஷனும் நல்ல குழந்தையும் அமைஞ்சிருக்காங்க.  பொம்பிளைக் குழந்தை பெத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா புள்ளை இறந்தப்புறம்,  ஆபரேஷன் பண்ணிட்டாங்க. ஒரே ஒரு பொம்பிளைப் புள்ளையை தத்து எடுத்துக்கலாம்னு வீட்டுக்காரர்கிட்ட கேட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் அந்த  ஆசையும் நிறைவேறிடும். வாழ்க்கைல வேற என்ன சந்தோஷம் வேணும் எனக்கு?’’ துயரங்களை துச்சமெனப் பேசுகிறார் இந்தத் துணிச்சல் பெண்!

போராடிப் பார்க்கத்தானே வாழ்க்கை

ஆட்டோ ராணி’ சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் முத்துலட்சுமியை அப்படிச் சொன்னால்தான் அடையாளம்  காட்டுகிறார்கள். அண்ணாநகர், கோயம்பேடு, போரூர், மீனம்பாக்கம், ரெட்டேரி, தி.நகர், கே.கே.நகர் என இவரது ஷேர் ஆட்டோவை சென்னையில்  பரவலாகப் பார்க்கலாம். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைத்தாலும் எப்போதும் உற்சாகமாகவே இருக்கிறார் முத்துலட்சுமி!

‘‘அம்மா-அப்பா வச்ச பேரு முத்துலட்சுமி. வாடிக்கையாளர்கள் எனக்குக் கொடுத்த பட்டம் ‘ஆட்டோ ராணி’. எல்லாரும் அப்படியே கூப்பிட்டு, இப்ப  அதுவே எனக்கான அடையாளமாகிருச்சு... எட்டாவதுக்கு மேல படிக்க வீட்ல வசதியில்லை. வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருத்தங்க வீட்ல வீட்டு  வேலை பார்த்திட்டிருந்தேன். அப்ப அந்த வீட்டு டிரைவர்கிட்ட, எனக்கு கார் ஓட்டக் கத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டேன். அவரும் கத்துக்  கொடுத்தார். அந்த வீட்டு ஆளுங்களுக்கே கார் ஓட்டிக்கிட்டிருந்தேன். அவங்க திடீர்னு ஊரை விட்டு ராஜஸ்தான் போயிட்டாங்க. 

அத்தனை நாளா சோறு போட்டுக்கிட்டிருந்த வீட்டு வேலைக்கும் வழியில்லை. வேலை பார்த்திட்டிருந்தப்ப, அவங்களே திண்டிவனத்தைச் சேர்ந்த  ஒருத்தருக்கு என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு கூலி வேலை. திடீர்னு அவருக்கு ஒரு ஆக்சிடென்ட். இடுப்பெலும்பும்  மூட்டெலும்பும் நழுவி, நடக்க முடியாமப் போச்சு. அவருக்கும் வேலையில்லை. 3 பொம்பிளைப் பிள்ளைங்க... எல்லாரும் சாப்பிட்டாகணுமே... என்ன  செய்றதுங்கிற குழப்பத்துல, ஆட்டோ ஓட்டக் கத்துக்கிட்டு, 98ல லைசென்ஸ் வாங்கினேன். 

ஆட்டோ ஓட்டி சம்பாதிச்ச காசுலதான், எங்க மொத்த குடும்பத்துக்கும் சாப்பாடு. இதுக்கிடையில, தரமணியில உள்ள சாலைப் போக்குவரத்து நிலையம்  சார்பா, சுமார் 40 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டக் கத்துக் கொடுத்தேன். ‘தாட்கோ’ மூலமா லோன் வாங்கி, சொந்தமா ஆட்டோ வாங்கி  ஓட்டிக்கிட்டிருந்தேன். மூத்த பொண்ணுக்குக் கல்யாணம் பண்றதுக்காக ஆட்டோவை வித்துட்டேன். அதுக்கப்புறம் ஷேர் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன்.  வாடகை வண்டிதான். ஆனா, என் சொந்த வண்டியை எப்படிப் பார்த்துப்பேனோ அப்படித்தான் வச்சிருக்கேன். 

20 வருஷமா ஆட்டோ ஓட்டறேன். இதுவரை ஒரு சின்ன விபத்துகூட நடந்ததில்லை. ஒருநாள் கூட போலீஸ்ல மாட்டினதில்லை. ஆர்.சி. புக்,  லைசென்ஸ்னு எல்லாம் பக்காவா வச்சிருப்பேன். சில நேரம் கல்யாணம், விசேஷம்னு ஊரு விட்டு ஊரு போக வேண்டியிருக்கும். என்  ஆட்டோவுலயே போயிடுவேன். அப்படிப் போறதுக்கு முன்னாடி, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், ஆர்.சி புக், லைசென்ஸ் ஜெராக்ஸ் காப்பி கொடுத்து,  நான் இன்ன காரணத்துக்காக, இன்ன இடத்துக்குப் போறேன்னு தகவல் சொல்லி, போலீஸ்கிட்டருந்தே ஒரு லெட்டரும் வாங்கிக்குவேன். 

யாரும், எந்தக் கேள்வியும் கேட்றக்கூடாதுங்கிறதுல ரொம்ப கவனமா இருப்பேன்...’’ - ஆட்டோவை மிஞ்சும் வேகத்தில் பேசுகிற முத்துலட்சுமி, ஷேர்  ஆட்டோ ஓட்டுவதில் வித்தியாசமான கொள்கையை வைத்திருக்கிறார். ‘‘முதல் சவாரி ஆணா, பெண்ணான்னு பார்ப்பேன். ஆணா இருந்தா அடுத்தடுத்து  வண்டியில ஏறுகிறவங்களும் ஆண்களாவே இருக்கிற மாதிரிப் பார்த்துக்குவேன். பெண்ணா இருந்தா, மொத்தமும் பெண்களா இருப்பாங்க.  ஆம்பிளைங்களையும் பொம்பிளைங்களையும் சேர்த்து ஏத்தவே மாட்டேன். தேவையில்லாத பிரச்னை வரக்கூடாது பாருங்க...’’ என்கிறவர், ஆட்டோ  ஓட்ட வந்த புதிதில் நிறைய பிரச்னைகளை சந்தித்திருக்கிறாராம்.

‘‘குடிச்சிட்டு வண்டியில ஏற வர்றவங்கதான் பிரச்னை பண்ணுவாங்க. அவங்கக்கிட்ட சண்டை போட முடியாது. டீசல் தீர்ந்திடுச்சு, பெட்ரோல்  காலியாயிருச்சுன்னு எதையாவது சொல்லி, திருப்பி அனுப்பிடுவேன். அதையும் மீறி வண்டிக்குள்ள ஏறி உட்கார்ந்துக்கிட்டு அராஜகம் பண்றவங்களும்  இருக்காங்க. ‘எங்கே போகணுமோ சொல்லு... நான் ரெடி’ன்னு சொல்லிட்டு, நேரா வண்டியை பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு விட்ருவேன்.  பிரச்னை பண்ணினவங்களே, என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஓடிருவாங்க. இது எல்லாத்தையும் மீறி, நான் அழகா இல்லாததுதான் எனக்கு பெரிய  பிளஸ். 

ஒருவேளை பார்க்க சுமாரா இருந்திருந்தா, ஆட்டோ ஓட்ட வந்த அடுத்த நாளே என் வாழ்க்கை சீரழிஞ்சிருக்கும். அழகுக்குப் பதிலா எனக்கு அந்த  ஆண்டவன் அளவில்லாத தைரியத்தைக் கொடுத்திருக்காரு. அதுதான் என்னோட ஆயுதம். என் பொண்ணுங்களுக்கும் ஆட்டோ ஓட்டணும்னு ரொம்ப  ஆசை. ‘கொஞ்ச காலம் பொறுங்க. வாலிபம் போகட்டும். அப்புறம் வாங்க’ன்னு சொல்லி வச்சிருக்கேன்...’’ முத்துலட்சுமியின் வார்த்தைகளில்  வலிகளைக் கடந்த வேதனை தெரிகிறது.

See life struggling?
‘‘அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி தெரியாத எத்தனையோ பொம்பிளைங்க, தற்கொலைதான் தீர்வுன்னு அந்த முடிவுக்குப் போறாங்க. அப்படி  யோசிச்சிருந்தா, நான் என்னிக்கோ செத்திருக்கணும். போராடிப் பார்க்கத்தானே வாழ்க்கை? தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தா, எவ்வளவு  கஷ்டத்துலேருந்தும் மீண்டு வந்துடலாம். கஷ்டம்னு என்கிட்ட வரும் எல்லாருக்கும் நான் அதைத்தான் சொல்லிட்டிருக்கேன். மறுபடி சொந்தமா ஒரு  ஆட்டோ வாங்கணும். இன்னும் ரெண்டு பொண்ணுங்களையும் நல்லபடியா கட்டிக் கொடுக்கணும். பெண்களுக்கு, பெண்கள் மட்டுமே சொல்லிக்  கொடுக்கிற மாதிரி ஒரு டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கணும்... அது போதும் எனக்கு...’’ - நியாயமான ஆசைகளை நயமாகச் சொல்கிறார் ஆட்டோ ராணி.

படங்கள்: பால்துரை
நன்றி குங்குமம் தோழி

என் வண்டி எனக்கு குழந்தை

My car my baby!
விதம் விதமான பயணிகள், வித்தியாசமான மக்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு மாநகரப் பேருந்து நிலையத்தில், தனித்து நின்று  கவனம் ஈர்க்கிறார் ஒரு பெண். அவர் ஜோதி கமலாபாய். ஆண்களால் நிரம்பி வழிகிற பேருந்து ஓட்டுனர் பணியில் அரிதான ஒரே பெண். கோயம்பேடு  டூ பிராட்வே செல்கிற 15பி பேருந்தின் ஓட்டுனர்!

“மதியம் 1:50க்கு டியூட்டி முடியும். டியூட்டி டைம்ல மொபைல் எடுக்க மாட்டேன். காத்திருங்க...’’ என வரச் சொன்னவர், நொடி பிசகாமல் 1 மணி 50  நிமிடங்களுக்கு நம் முன் ஆஜராகிறார். 8 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்த அலுப்பு அவரது முகத்தில் தெரிந்தாலும், அது வார்த்தைகளில்  வெளிப்பட்டுவிடாமல் ஜாக்கிரதையாக பேசுகிறார்.

‘‘நாகர்கோயில் பக்கம் மார்த்தாண்டம்தான் எனக்கு சொந்த ஊர். எம்.ஏ., கம்ப்யூட்டர் டிப்ளமா படிச்சிருக்கேன். எங்கப்பா ராஜைய்யன், டிரைவிங் ஸ்கூல்  வச்சிருந்தார். அங்கே நானும் கார் ஓட்டக் கத்துக்கிட்டேன். படிப்பு முடிச்சதும் வேலைவாய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணி வச்சிருந்தேன். திடீர்னு  ஒரு நாள் அங்கேருந்து அழைப்பு. பஸ் டிரைவர் வேலைன்னு தெரிஞ்சப்ப முதல்ல கொஞ்சம் பயமாகவும் பதற்றமாகவும்தான் இருந்தது. 

உள் மனசு ‘உன்னால முடியும்’னு சொல்லவே, ஏதோ ஒரு தைரியத்துல அந்த வேலைக்குத் தயாரானேன். சென்னை குரோம்பேட்டையில ரெண்டு  மாசப் பயிற்சி கொடுத்தாங்க. அதுவரைக்கும் அதிகமா பஸ்ல பயணம் பண்ணினதுகூட இல்லை. பஸ் ஓட்டற பயிற்சி ரொம்பப் புது அனுபவமா  இருந்தது. ‘உனக்கு இந்த வேலையெல்லாம் வேணாம்மா... விட்டுட்டு வந்துடு’ன்னு சொன்னாங்க பலரும். முன் வச்ச காலைப் பின்  வைக்கிறதில்லைங்கிற வைராக்கியம் எனக்கு...’’ - விடாமல் வழிகிற வியர்வையைத் துடைத்தபடி பேசுகிற ஜோதி கமலாபாய்க்கு, முதல் நாள் பணி  அனுபவம் பசுமையாகப் பதிந்திருக்கிறது.

‘‘15பி பஸ்... கோயம்பேடுலேருந்து பிராட்வே ரூட். சென்னையும் சென்னையோட பயங்கரமான டிராஃபிக்கும் எனக்குப் புதுசு. ஏரியா தெரியாது. நான்  நம்பற ஜீசஸ்கிட்ட என்னையும், என்னை நம்பி வண்டியில வர்ற மக்களையும் நல்லபடியா காப்பாத்து’ன்னு வேண்டிக்கிட்டு, வண்டியை எடுத்தேன்.  பகல் 1 மணிக்கு முடிய வேண்டிய டியூட்டி, 4 மணிக்குத்தான் முடிஞ்சது. அவ்ளோ மெதுவா ஓட்டிக்கிட்டுப் போனேன். 

வேலையில சேர்ந்து 5 வருஷமாச்சு. இப்பவும் தினமும் காலையில வண்டியை எடுக்கிறதுக்கு முன்னாடி, கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணிட்டுத்தான்  ஸ்டியரிங்கை தொடுவேன். வேகமா வண்டி ஓட்டறதை விட, பாதுகாப்பா ஓட்டறதுதான் எனக்கு முக்கியம்’’ என்கிற ஜோதி, எரிபொருள் சிக்கனம்  செய்ததற்காக விருது வாங்கியவர். ‘‘என் வண்டிங்கிறது என் குழந்தை மாதிரி. வண்டிக்கு வலிக்காம ஓட்டறதுதான் என் கொள்கை. இதுவரை என்  வண்டியில ஒரு சின்ன கீறல்கூட விழுந்ததில்லை. 

விபத்து நடக்கற மாதிரி ஓட்டினதில்லை. ‘எங்களைவிட சூப்பரா ஓட்டறீங்க’ன்னு ஆண் டிரைவர்களே பாராட்டற அளவுக்கு வளர்ந்திருக்கேன்...’’ -  பெருமையுடன் பகிர்ந்து கொண்டாலும் அதன் பின்னணியில் ஏகப்பட்ட வலிகளை சந்தித்திருக்கிறார்.  ‘‘என் வண்டியில முதல்முறை ஏறும்  எல்லாருக்கும், ‘ஒரு பொம்பளை பஸ் ஓட்டறதா’ங்கிற ஆச்சரியம். உடனே பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு, தலையிலேருந்து, கால் வரைக்கும் வச்ச  கண் எடுக்காம பார்த்துக்கிட்டே இருப்பாங்க. 

மொபைல்ல போட்டோ எடுப்பாங்க. டிரைவர் சீட்டுக்கு பின்னாடி உள்ள சீட்ல உட்கார்ந்துக்கிட்டு கத்திக் கத்திப் பேசுவாங்க. அதெல்லாம் டிரைவரோட  கவனத்தைச் சிதறச் செய்யும்னு யாரும் யோசிக்கிறதே இல்லை. பிரேக் போடும்போது, வேணும்னே மேல வந்து விழுவாங்க. கியர்ல கை வச்சிருந்தா,  கையைத் தொட்டுப் பேசுவாங்க. ரன்னிங்ல இருக்கிற வண்டியை, திடீர்னு ஒரு இடத்துல நிறுத்தச் சொல்வாங்க. நிறுத்தலைன்னா, ‘நான் யார்  தெரியுமா’ன்னு மிரட்டுவாங்க. 

‘வீட்டுக்குப் போய் சேர மாட்டே’ன்னு சாபம் விடுவாங்க. இன்னும் ஒருபடி மேல போய், ‘ச்சீய்... இதெல்லாம் ஒரு பொழைப்பா? நாங்க என்ன உன்  சம்பளத்துல பாதியையா கேட்டோம்? வண்டியைத்தானே நிறுத்தச் சொன்னோம்’பாங்க. வெயில், மழைன்னு எல்லா நாள்களும் நாங்க உழைக்கணும்.  பெண்ணுக்குரிய இயல்பான உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலும் வண்டி ஓட்டணும்... உள்ளுக்குள்ள வலிச்சாலும், நான் எதையுமே வெளியே  காட்டிக்க மாட்டேன். 

வண்டிக்குள்ள உள்ள அத்தனை பேரையும் பத்திரமா கொண்டு போய் சேர்க்கறதுலதான் என் கவனமெல்லாம் இருக்கும். அங்கே அடக்கி வச்சிருந்த  அத்தனை கோபமும் அழுகையும் டியூட்டி முடிச்சு வீட்டுக்கு வந்ததும் வெடிக்கும். கணவர்கிட்டயும் குழந்தைகிட்டயும் ஆத்திரத்தைக் காட்டிட்டு, அடுத்த  நாள் அதை நினைச்சு வருத்தப்பட்டதெல்லாம் உண்டு. எனக்கு ஒரே ஒரு பையன் - டோனி. நினைவு தெரிஞ்சு நான் அவன்கூட அதிக நேரம்  செலவழிச்சதே இல்லை. 

உடம்பு சரியில்லாதப்பகூட அவன்கூட இருந்து பார்த்துக்க முடியாது. இத்தனை கஷ்டங்களையும் சகிச்சுக்கிட்டுத்தான் வெளியே வேலைக்கு  வரோம்ங்கிறதைப் புரிஞ்சுக்காம, சில பயணிகள் அத்து மீறி நடந்துக்கிறதும், அசிங்கமா கமென்ட் அடிக்கிறதும்தான் வேதனையான விஷயம். இது  எல்லாத்தையும் மறந்து, நான் என் வேலையைத் தொடர என் சக டிரைவர், கண்டக்டர்களோட சப்போர்ட்தான் காரணம். குறிப்பா கண்டக்டர்கள்...  முடிஞ்ச வரை பயணிகள் பிரச்னை பண்ணாதபடி பார்த்துப்பாங்க...’’ - ஜோதியின் வார்த்தைகள் பயணிகளைக் கட்டாயம் யோசிக்க வைக்கும்.

‘‘படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தமே இல்லையேன்னு எத்தனையோ பேர் கேட்டிருக்காங்க. ஆனா, எனக்கு என் தொழில்தான் தெய்வம்.  வேலைக்குச் சேர்ந்த புதுசுல, ஒரு மழை நாள்ல வண்டி ஓட்டிட்டிருந்தேன். நான் மெதுவா ஓட்டறதைப் பார்த்துட்டு, வண்டியில இருந்த ஒரு அம்மா,  ‘பொம்பளை ஓட்டுது... தெரியாம இந்த வண்டியில ஏறிட்டேன்’னு என் காதுபடவே பேசினாங்க. 

பின்னாள்ல, நான் வண்டி ஓட்டறதைப் பார்த்துட்டு, என் பக்கத்துல வந்து, என் தலையில கை வச்சு, ‘நீ நல்லா இருப்பேம்மா’ன்னு ஆசீர்வாதம்  பண்ணினவங்களும் இருக்காங்க. அந்த மாதிரி நபர்களோட ஆசியும் வாழ்த்தும்தான் என்னை வழி நடத்துது...’’ என்கிறவருக்கு, டிரைவிங்  இன்ஸ்ட்ரக்டர் பணிக்கான பதவி உயர்வே கனவு...கனவு நனவாகட்டும்!

மாற்று எரிபொருள்: GOBAR GAS PLANT CONSTRUCTION.

மாட்டு சாணியிலிருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து பெட்ரோல் தயாரிப்பது எப்படினு ஒரு பதிவு போடலாம்னு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது, அந்த நேரம் பார்த்து "மாடு ஏப்பம்" விடும் போதும், காற்றை ஃப்ரியா விடும் போதும் மீத்தேன் வருது என "மாமிச உணவுக்காக மிருகங்கள் வளர்ப்பதால் புவி வெப்பமாகிறது என சகோ.சார்வாகன் ,
சுட்டி பதிவு போட்டுவிட்டார், இனிமேலும் சும்மா இருந்தால் மாட்டு வாயிலும், பின்னாலும் டியூப் சொறுகி மீத்தேன் தயாரிப்பது எப்படினு பதிவு போட வேண்டியதாயிருக்கும் என்பதால் சாண எரிவாயு தயாரிப்பதை பதிவா போட்டுறலாம்னு களம் இறங்கியாச்சு, அடுத்த பாகத்தில் சாண எரிவாயுவை பெட்ரோல் ஆக்கிடலாம் :-))

சாண எரிவாயுவை பொதுவாக கோபர் கேஸ் என்பார்கள், கோபார்(Gobar) என்றால் இந்தியில் மாட்டுசாணம், மாட்டு உரம்(cow manure), எனப்பொருள், நேபாளியிலும் மாட்டுச்சாணம் என்றே பொருள்.

உலகிலேயே அதிக கால்நடைகள் கொண்ட நாடு இந்தியா, 529 million cattles, and 648.8 millions of poultry உள்ளது. ஒரு மாடு தினசரி சராசரியாக 10 -12 கிலோ சாணியிடும்,இது மாட்டின் அளவு, இனம், உண்ணும் உணவுக்கு ஏற்ப மாறுபடலாம்(சிலப்பேர் எங்க வீட்டு மாடு 100 கிலோ சாணிப்போடும் என முட்ட வரலாம்!)

இந்தியாவில் உற்பத்தியாகும் சாணி முழுவதும் மீத்தேன் ஆக்க முடிந்தால் சுமார் 30% எரி பொருள் தேவையை குறைக்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது.மற்ற பயன்ப்பாடுகளை செய்ய கூடுதல் செலவிட வேண்டும், ஆனால் கோபர் கேசினை அப்படியே வழக்கமான கேஸ் ஸ்டவ் மூலம் எரித்து சமையல் செய்ய பயன்ப்படுத்தலாம்,இந்தியாவில் பெரும்பாலும் சமையல் செய்யவே கோபார் கேஸ் பயன்ப்படுகிறது.மேலும் வளி மண்டலத்தில் கலக்கும் மீத்தேனின் அளவும் குறைந்து சுற்று சூழலும் பாதுகாக்கப்படும்.

சாணத்தின் பண்புகள்:

மாட்டு சாணத்தில்,80% நீரும் 20% மட்டுமே திடப்பொருளும் சராசரியாக இருக்கும்,


20% திட சாணத்தில் உள்ள மூலங்களின் அளவு.

நைட்ரஜன்=1.8-2.4 %
பாஸ்பரஸ்=1-1.2%
பொட்டாசியம்=0.6-0.8%

கரிமக்கழிவு=50-75%,

எனவே ஒரு டன் ஈர சாணம் காய்ந்தால் 200 கிலோ எடை மட்டுமே இருக்கும்.

இச்சாணம் காற்றில்லா நொதித்தல் வினைக்கு உட்படும் போது ஒரு வாயுக்கலவை உருவாகும் அதற்கு பெயரே கோபர் கேஸ், இதில் மீத்தேன் பெரும்பான்மையாக இருக்கு.

மீத்தேன்.-68%

கரியமிலவாயு=31%

நைட்ரஜன்ன் வாயு= 1%

பாஸ்பரஸ் சல்பைடு=1%

மீத்தேன் வாயுவின் எரிதிறன்=678 பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்.

கோபார் கேஸ் பிளாண்ட்:

இடம் தேர்வு செய்தல்:

# சமதளமான , தண்ணீர் தேங்காத மேடான இடம்.

#நெகிழ்வான மண் இல்லாமல்,கடினமான மண் கொண்ட தரையாக இருக்க வேண்டும்.
காரணம்: டைஜெஸ்டரில் வாயு உற்பத்தியாகும் போது ஏற்படும் அழுத்தத்தினால் கட்டுமானம் விரிவடையாமல் தடுக்க சுற்றுப்புற மண் அழுத்தமாக உறுதியாக இருக்க வேண்டும்.

# மாட்டு தொழுவத்திற்கும், சமயலைறைக்கும் பொதுவாக அருகாமையான இடமாக இருக்க வேண்டும்.

#நிலத்தடி நீர் அதிகம் ஊறாத இடமாக இருக்க வேண்டும்.

# கிணறு போன்ற நீர் நிலைகளூக்கு அருகமையில் அமைக்க கூடாது.

# நல்ல திறந்த வெளியாக காற்றோட்டம், சூரிய ஒளி படக்கூடிய இடமாக இருக்க வேண்டும்.

#அருகில் மரங்கள் இருக்க கூடாது,காலப்போக்கில் மரத்தின் வேர் கட்டுமானத்தில் விரிசல் விட வைக்கும்.

# வேறு கட்டுமான அமைப்பு,சுவர்கள் ஆகியவற்றில் இருந்து போதுமான இடைவெளி விட வேண்டும், குறைந்தது 1.5 மீ இடை வெளி இருக்கலாம்.

சுமார் 10 மாடுகள் கொண்ட குடும்பத்திற்கு தேவையான சாண எரிவாயு உற்பத்தி செய்யும் கலன் அமைப்பதைக்காணலாம்.

பெரும்பாலும் கோபார் கேஸ் சமையலுக்கு பயன்ப்படுத்தப்படுவதால், பிளாண்ட் அமைக்கும் போது சமையலறைக்கு பக்கமாக இடம் தேர்வு செய்தல் நல்லது.

சாணஎரிவாயு கலன் இரு வகையில் அமைக்கப்படும் ,

தரை மட்டத்திற்கு கீழ் மற்றும் மேல் என, இதில் நிலையான வாயுக்கலன், மிதக்கும் வாயுக்கலன் என இரண்டு வகை இருக்கு.

சாண எரிவாயு கலனின் பாகங்கள்:

1)உள்ளீடு தொட்டி(inlet chamber)

2)வெளியேற்றும் தொட்டி(out let chamber)

3) நொதிக்கும் அறை(digester)

4) வாயு சேகரிக்கும் கலன்(gas holding dome)

ஆகியவை இருக்கும்.

பொதுவாக அனைத்தின் செயல் முறையும் ஒன்று போலவே, எனவே இப்போது தரைக்கீழ் , நிலையான வாயுகலன் சாண எரிவாயு அமைப்பினை பார்க்கலாம்.

சாண எரிவாயு கலன் திட்ட வரைப்படம்:


10 மாடுகளின் சாணியில் இருந்து சாண எரிவாயு தயாரிக்க சுமார் 100 கன அடிக்கொள்ளவு கொண்ட வாயு சேகரிப்பு கலன் உடைய அமைப்பு தேவைப்படும்.

எனவே சுமார் 5.5 அடி விட்டத்தில் சுமார் 10 அடி ஆழம் உள்ள பள்ளம் வெட்ட வேண்டும்.
அடித்தளம் அமைக்க ஒரு 1 அடி தடிமனில் கான்கிரிட் தளம் அமைக்க வேண்டும், அதில் வட்ட வடிவில் முறுக்கு கம்பிகளை அமைத்து , இணையாக வரிசையாக கம்பி வளையங்களுடன் 10 அடி உயரத்திற்கு ரீ-இன்போர்ஸ்டு கான்கிரிட் சுவர் உருளை வடிவில் அமைக்க வேண்டும்.

செலவினை குறைக்க பொதுவாக செங்கல் கொண்டும் அமைப்பார்கள், மேலே வரும் வாயு சேமிக்கும் டோம் மட்டும் கான்கிரிட்டில் அமைத்துக்கொள்வார்கள்.
நொதிக்கும் தொட்டி/டைஜெஸ்டரின் அளவு வாயு சேகரிக்கும் கலனைப்போல சுமார் 2.75 அளவுக்கு இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு கன மீட்டர் சாண எரிவாயு சேகரிக்கும் கலனுக்கு 2.75 கனமீட்டர் அளவுள்ள டைஜெஸ்டர் அமைக்க வேண்டும்.எனவே நாம் எவ்வளவு சாணியை தினசரி பயன்ப்படுத்தப்போகிறோம் என்பதை பொறுத்து , சாண எரிவாயு கலனை வடிவமைக்க வேண்டும்..
பெரிய சாண எரிவாயு கலன் அமைத்துவிட்டு , குறிப்பிட்ட அளவை விட குறைவான சாணத்தினை பயன்ப்படுத்தினால் உற்பத்தியாகும் வாயு ,கலனில் குறிப்பிட்ட அழுத்தத்தினை உருவாக்காது, எனவே குழாய் வழியே பயன்ப்பாட்டுக்கு வெளியில் வராமல் கலனிலேயே இருக்கும்.

இத்தொட்டி போன்ற அமைப்பின் மையத்தில் ஒரு பிரிப்பு சுவரும் அமைக்கப்படும், இதன் மூலம் உள்ளீடு தொட்டி ,வெளியேற்றும் தொட்டி என இரண்டு பாகமாக தொட்டியமைந்து விடும்.இத்தடுப்பு சுவர் டைஜெஸ்டர் விட்டம் 1.6 மீட்டருக்கு அதிகமான அமைப்பில் மட்டும் தேவைப்படும், சிறிய அமைப்புக்கு தேவை இல்லை.

இப்படி அமைக்கும் போதே , ஒரு பக்கம் சாணம் இட ,மற்றும் பயன்ப்படுத்தி முடித்த சாணக்கரைசல் வெளியேற குழாய்கள் /கட்டுமான அமைப்பு என பொறுத்திவிடவேண்டும்.இக்குழாய்கள் சாய்வாக,தொட்டியின் அடிப்பாகத்தில் ,ஒவ்வொரு அறையின் மையமாக இருக்குமாறு , தாங்கும் அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.

அரை கோள வடிவிலான கம்பிவலையமைப்பு ,உருவாக்கி கான்கிரிட் டோம் அமைத்தல்.இந்த டோம் போன்ற அமைப்பே சாண எரிவாயு சேகரிக்கும் கலனாக செயல்ப்டுகிறது.இந்த டோம்மில் சாண எரிவாயு வெளியேற வால்வுடன் கூடிய வெளியேறும் குழாய் ,மையத்தில் அமைக்கப்படும்.
சாண எரிவாயு கலனை இயக்குதல்:

முதல் முறை சாண எரிவாயு உற்பத்தி செய்ய சுமார் 500 கிலோ சாணத்தினை ,திடப்பொருட்கள்,கல் போன்றவற்றை நீக்கிவிட்டு 500 லிட்டர் நீரில் கரைத்து கரைசலாக உள்ளே இட வேண்டும், இந்த அளவு எப்போதும் உள்ளே இருக்கும், இது ஸ்டார்ட்டர் கரைசல் எனப்படும்.

சுமார் ஒரு வாரம் சென்ற பின் ,முதலில் உற்பத்தியாகும் வாயு பெரும்பாலும் கரியமில வாயுவே எனவே அவற்றை திறந்து வெளியில் விட்டு விட வேண்டும், பின்னர் வரும் வாயுவினை சேகரித்துப்பயன்ப்படுத்தலாம்.

தினசரி வாயு உற்பத்திக்கு கலனின் திறனுக்கு ஏற்ப சாணக்கரைசல் இட வேண்டும், 10 கிலோ சாணி எனில் 10 லிட்டர் நீரில் கரைக்க வேண்டும்,அதாவது 1:1 என்ற விகிதத்தில் கரைசல் தயாரிக்க வேண்டும். கரைசலை உள்ளீடு தொட்டி வழியாக இட்டு மூடிவிட்டால் சுமார் 4 மணி நேரத்தில் முழு அளவில் சாண எரிவாயு உற்பத்தியாகிவிடும், அதனை குழாய்வழியாக கொண்டு சென்று தேவைக்கு ஏற்ப பயன்ப்படுத்தலாம்.

நொதித்தல் வினைக்கு பின் பயன்ப்படுத்தப்பட்ட சாணி( Humus) ,வெளியேற்றும் தொட்டி மூலம் தானாக வந்துவிடும் அதனை சேகரித்து ,உரமாக பயன்ப்படுத்தலாம்.

கோபார் கேஸ் பிளாண்ட் அமைக்க அரசு "MNRE" மூலம் 25-75% மாநியம் அளிக்கிறது, மேலும் தேசிய வங்கிகள் மூலம் கடனுதவியும் பெறலாம்.ஒரு நடுத்தர கோபர் கேஸ் பிளாண்ட் அமைக்க சுமார் ஒரு லட்சம் வரை ஆகலாம், நமது தேவை மற்றும் கட்டுமானத்தின் தரத்தினைப்பொறுத்து செலவு மாறுபடும்.



தற்போது சின்டெக்ஸ் டேங்க் தயாரிப்பாளர்கள், முழுக்க பிளாஸ்டிக்கால் ஆன சாண எரிவாயு அமைப்பினை தயாரித்து விற்கிறார்கள், அப்படியே வாங்கி ,பள்ளம் வெட்டி புதைத்துவிட்டு பயன்ப்படுத்த வேண்டியது தான்.

இந்த சாண எரிவாயு கலனில் மாட்டு சாணம் மட்டும் அல்லாமல் ,ஆடு,கோழி,பன்றி,குதிரை, என அனைத்து வகையான மிருகக்கழிவுகளும் பயன்ப்படுத்தலாம், ஏன் மனித கழிவுகளும் பயன்ப்படுத்தலாம், நாம் தான் பயன்ப்படுத்த யோசிப்போம்,சீனர்கள் மனிதக்கழிவு மற்றும் கால்நடை கழிவு என இரண்டையும் பயன்ப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாண எரிவாயு கலன் வடிவமைத்துப்பயன்ப்படுத்துகிறார்கள்.

திட்ட வரைப்படம்:

சாண எரிவாயு உற்பத்தி திறன்:

ஒரு கிலோ பசும் சாணத்தில் இருந்து ஒரு கன அடி சாண எரிவாயு உற்பத்தி செய்யலாம்.

ஒரு கன அடி= சுமார் 28 லிட்டர்,

ஒரு மாடு தினசரி 10 கிலோ சாணம் இடும் எனில் , 10 மாடுகள் இடும் சாணம்,
=10*10= 100 கிலோ
100*28=2800 லிட்டர் சாண எரிவாயு கிடைக்கும்.

ஒரு கன மீட்டர் சாண எரிவாயு ஒரு கிலோ வாட் பவருக்கு சமம் ஆகும், எனவே,

2800 லிட்டர் =2.8 கிலோ வாட்/மணி.

ஒரு குடும்பம் சமைக்க தேவையான எரிவாயு உற்பத்தி செய்ய சுமார் 4-5 மாடுகள் இருந்தாலே போதும்.

10 மாடுகள் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யும் போது உபரியாக வாயு கிடைக்கும் அதனைக்கொண்டு , எரிவாயு விளக்கு எரிக்கலாம், அல்லது மின்சாரம் உற்பத்தி செய்யலாம். சின்டெக்ஸ் நிறுவனமே ஒரு போர்ட்டபிள் சாண எரிவாயு ஜெனெரேட்டரும் விற்கிறார்கள்.


மேலும் சாண எரிவாயு உற்பத்திக்கு பின் கிடைக்கும் , சாணம் மிகுந்த ஊட்டச்சத்து மிக்க தொழு உரம் ஆகும். மேலும் பல வகையிலும் சாண எரிவாயுவினை பயன்ப்படுத்த முடியும் ,அதனை விளக்கும் படம்.

சாண எரிவாயுவில் மிகுதியாக மீத்தேனும் , குறைந்த அளவில் பிற வாயுக்களும் உள்ளது. பிற வாயுக்களை நீக்கிவிட்டு அழுத்திய மீத்தேனை வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்தலாம்.
225 கன அடி சாண எரிவாயு ஒரு கேலன் பெட்ரோலுக்கு சமம் என்கிறார்கள், ஒரு மாடு மூலம் ஒரு ஆண்டுக்கு 50 கேலன் பெட்ரோலுக்கு இணையான சாண எரிவாயு உற்பத்தி செய்ய முடியும். எனவே ஒரு வாங்கினால் நமக்கு பால் மட்டும் கொடுக்காமல் 50 கேலன் பெட்ரோலும் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம் :-))

சாண எரிவாயுவை சுத்திகரித்து வாகனத்திற்குப்பயன்ப்படுத்துதல்:

சாண எரிவாயு சுத்திகரித்தல்:

# லைம் வாட்டர் வழியாக சாண எரிவாயுவை செலுத்தி கரியமில வாயு நீக்கப்படும்.

#இரும்புதுகள் வடிக்கட்டி வழியாக செலுத்தி ஹைட்ரஜன் சல்பைடு நீக்கப்படும்.

#கால்சியம் குளோரைடு பில்டர் மூலம் நீராவி/நீர் திவளை நீக்கப்படும்.

சுத்திகரிக்கப்பட்ட சாண எரிவாயுவினை மூன்றடுக்கு முறையில் அழுத்தம் செய்ய வேண்டும்,

முதல் கம்பிரஷரில் 10 கி/ச.செமி என அழுத்தப்படும்,

பின்னர் இரண்டாவது நிலையில் 60கி/ச.செமீ என அழுத்தப்படும்,

மூன்றாவது நிலையில் 250 கி/ச.செமி என அழுத்தி கலனில் சேகரித்து வைக்கப்படும்.

இதனை CNG-Compressed Natural Gas இல் இயங்கும் அனைத்து வாகனத்திலும் செலுத்தி இயக்கலாம். ஏனெனில் பெட்ரோலிய எரிவாயுவில் 80% மீததேனும் இதர பெட்ரோலிய வாயுக்களே உள்ளன.

Saturday, September 14, 2013

சலூன் கடை நடத்தும் பட்டதாரிப் பெண்!

‘படிச்ச புள்ளைக்கு புத்தியப்பாரு... கட்டுன புருஷனைத்தவிர எந்த ஆம்பிளையையும் தொட்டுக் கூட பேசாத நம்ம ஊருல பொறந்துட்டு கண்டக் கண்ட ஆம்பிளையைஎல்லாம் தொட்டு முடிவெட்டறதும்... ஷேவிங் பண்றதும்... ஏக்கா, நல்லாவா இருக்கு? பட்டப்படிப்பு படிச்சிட்டு இந்தப் பொண்ணுக்கு வேற வேலை கிடைக்கலையா..?’’  ‘‘அந்த பொம்பளப்புள்ள முடிவெட்டுது, ஷேவிங் பண்ணுதுன்னு அந்தப்பக்கம் போனீங்க... பூரி கட்ட பிஞ்சிறும்...’’ - இப்படி பல பெண்களின் அர்ச்சனைகளுக்கும், மனைவிமார்களின் வசைபாடுகளுக்கும் காரணம் ஒரு பெண் தனியாக சலூன் கடை வைத்திருப்பதுதான். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் தேவி. கடந்த 2004ம் ஆண்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் பிகாம் முடித்ததும் அரசு வேலைக்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால், வேலைதான் கிடைக்கவில்லை. எஸ்.ஐ., ஆக வேண்டும் என்பது தேவியின் கனவு. அதற்காக மூன்று முறை முயற்சி செய்திருக்கிறார். மூன்று முறையும் உடல் தகுதியில் தேர்வு பெற்றிருக்கிறார். ஆனால், எழுத்துத் தேர்வில் தோல்வியடைந்திருக்கிறார்.

‘‘ஏறக்குறைய இந்தக் காலகட்டத்துலதான் அடுத்தடுத்து சோதனைகளை சந்திச்சேன்...’’ என்று ஆரம்பித்த தேவி, அதைக் குறித்து விளக்க ஆரம்பித்தார். ‘‘கூட பொறந்த மூணு சகோதரர்களும் சொல்லிவச்சா மாதிரி அடுத்தடுத்து இறந்துட்டாங்க. இந்த அதிர்ச்சிலேந்து மீள முடியலை. கடைசி தம்பி புவனேஷ்வரன், இப்ப ஒன்பதாவது படிக்கிறான். எங்கப்பா பேரு தங்கவேல். அவர் சலூன் கடைதான் நடத்திட்டு வந்தாரு. ஆனா, அவருக்கு சர்க்கரை வியாதி உண்டு. 

அதனால அவரால நின்னு வேலை பார்க்க முடியாது. இதனால கடையை பல நேரம் மூடியே வைச்சிருப்பாரு. சாப்பாட்டுக்கும், குடும்பத்தை நடத்தவும் ரொம்பவே திண்டாடினோம். வறுமைனா வறுமை அப்படியொரு வறுமை. என்ன செய்யறதுன்னு யோசிச்சப்பதான் நாமளே சலூன் கடையை நடத்தினா என்னன்னு தோணிச்சு. அப்பா கடையை திறக்காதப்ப சில நாள் கத்தி, கத்திரி பிடிச்ச அனுபவம் இருக்கு. அதனால துணிஞ்சு  இறங்கலாம்னு முடிவு பண்ணினேன்.

ஆனா, அப்பா அதுக்கு சம்மதிக்கலை. ‘இது ஆம்பள செய்ய வேண்டிய வேலை. அவங்களே இப்ப சலூன் கடையை வைக்கிறதில்ல. இப்பப் போய் இப்படி சொல்றியே... கல்யாணம் கட்டிகிட்டு பொழப்ப பாரு’னு சொல்லிட்டாரு. நான் விடலை. பேசிப் பேசி அவரை கரைச்சேன். என்னோட தொழில் நேர்த்தி அப்பாவுக்கு தெரியும். அதனால வேற வழியில்லாம சம்மதிச்சாரு. அங்க இங்க கடனை வாங்கி மேற்கு பல்லடத்துல இருக்கிற நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையை வாடகைக்கு எடுத்தேன். எங்கப்பாவுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உண்டு. 

அவங்க எல்லாரையும் சந்திச்சு கடை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் கொடுத்தேன். ஆனா, திறப்பு விழாவுக்கும் சரி, அதுக்குப் பிறகும் சரி ஒருத்தரும் என் கடைக்கு முடி வெட்டிக்கவோ, ஷேவிங் பண்ணிக்கவோ வரலை. பொம்பள கையால செஞ்சுக்கறதான்னு ஈகோ தடுத்திருக்கு. தவிர, நான் எப்படி முடி வெட்டுவனோன்னும் சந்தேகப்பட்டிருக்காங்க...’’ என்று சிரித்த தேவி, பல நாட்கள் கடையை திறந்து வைத்து ஈதான் ஓட்டினாராம். அதன் பிறகு சிறுவர்களையும் முதியவர்களையும் அனுப்பி ஆழம் பார்த்திருக்கிறார்கள். தொழில் சுத்தமாக இருக்கவே மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘‘ஆனாலும் எல்லாம் சரியாகிடுச்சுன்னு சொல்ல முடியாது. தினமும் ஒன்றிரண்டு பேர்தான் வருவாங்க. இதனால வாடகை கட்டவே சிரமப்பட்டேன். அப்பத்தான் ஆட்டோ ஃபைனான்ஸ் கடைல கணக்கு எழுதற வேலை கிடைச்சது. உடனே சலூன் கடையை தினமும் காலை 6 மணிலேந்து 9 மணிவரைக்கும், அப்புறம் மாலை 6 மணிலேந்து இரவு 10 மணிவரைக்கும் நடத்த ஆரம்பிச்சேன். மீதி நேரத்துல அந்த ஆட்டோ ஃபைனான்ஸ் கடைக்கு வேலைக்குப் போறேன். Graduate female shop Saloon run!


எப்படியாவது இந்த சலூன் கடையை பெருசா விரிவுப்படுத்தணும். அதுதான் என் கனவு லட்சியம்...’’ என்று சொல்லும் தேவிக்கு கட்டிட வேலை, ஆட்டுத்தோல் உரிப்பது, குடிசைபோடுதல், இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்தல் ஆகிய வேலைகளும் தெரியுமாம். ‘‘கடைல கத்தி, கத்திரிகோல்... ஃபைனான்ஸ் நிறுவனத்துல பேனா, பென்சில்... இப்படி நாள் முழுக்க என்னோட விரல்கள் இயங்கிகிட்டே இருக்கு. இப்ப என் தொழில் நேர்த்தியை பார்த்துட்டு பலபேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. 

சலூன் கடையை விரும்பித்தான் நடத்தறேன். ஆண்கள் மட்டுமே செய்யற வேலைனு எதுவும் கிடையாது. கட்டிங், ஷேவிங் பண்ணறப்ப நான் தொழிலாளிதான். பெண் கிடையாது. எந்த வேலையா இருந்தாலும் விருப்பத்தோட செய்தா நிச்சயம் ஜெயிக்கலாம்...’’ என்று அழுத்தத்துடன் சொல்லும் தேவி, கடனை அடைக்க வேண்டும். குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும். அதன் பிறகுதான் திருமணத்தை பற்றி யோசிப்பேன்” என்கிறார்.

- என்.சுப்பிரமணியன்

என்னால முடியும்னா பெண்ணால முடியும் தானே?

இரும்பு மனுஷி...

ஜானகி ரவிச்சந்திரனை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ராணிப்பேட்டையில் இயங்கும் பிரமாண்ட வால்வ் தொழிற்சாலையான  ‘குளோப் காஸ்ட்’டின் முதுகெலும்பே இவர்தான். சரியான நேரத்தில் இவர் எடுத்த சரியான முடிவு, இன்று 450 குடும்பங்களின் வயிற்றில் பால்  வார்த்திருக்கிறது. 

சுமார் 450 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிகப்பெரிய தொழிற்சாலை. அந்த 450 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் நபர்களுக்கும், அந்தத்  தொழிற்சாலையே ஆதாரம். திடீரென ஒரு நாள் அந்தத் தொழிற்சாலை இழுத்து மூடப்படுகிறது. அத்தனை குடும்பங்களும் அடுத்த வேளை  சாப்பாட்டுக்கும், இதர தேவைகளுக்கும் வழி தெரியாமல் நிற்கிற அந்தக் காட்சி, கற்பனை செய்யவே நமக்கெல்லாம் பதைபதைக்கிறதில்லையா?

ஜானகி ரவிச்சந்திரனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கிறது. பதற்றத்தையும் பதைபதைப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சரியான நேரத்தில் அவர்  எடுத்த சரியான முடிவால், வாழ்விழந்த அத்தனை குடும்பங்களுக்கும் இன்று வழி பிறந்திருக்கிறது. அந்தக் கதையை ஜானகியின் வார்த்தைகளிலேயே  கேட்போம். ‘‘எங்கப்பா ராம்தாஸ், ஆர்மியில கேப்டனா இருந்தவர். அவர் பார்த்திட்டிருந்த பிசினஸ்ல நான் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கேன்.  அப்பாவோட ஆபீசுக்கு எதிர்லதான் ஸ்கூல். பெல் அடிக்கிற வரை அப்பாகூட இருந்துட்டு, பெல் சத்தம் கேட்டதும், புத்தகப் பையைத் தூக்கிட்டு  ஓடுவேன். 

அந்தளவு சின்ன வயசுலேருந்தே எனக்கு பிசினஸ் பிடிக்கும். இன்டஸ்ட்ரியலிஸ்ட் ஆகணுங்கிறதுதான் என்னோட ஆசை. எம்.காம்., ஐ.சி.டபிள்யூ.ஏ.  படிச்சேன். பிரபல துப்பறியும் நிபுணர் குலோத்துங்க சோழன், என் அக்காவோட கணவர். அவர்கிட்ட துப்பறியும் நிபுணரா கொஞ்ச நாள் வேலை  பார்த்தேன். நேரம் கிடைக்கிற போதெல்லாம் தூர்தர்ஷன்ல தொகுப்பாளராகவும், பகுதிநேர டாகுமென்டரி தயாரிப்பாளராகவும் இருந்திருக்கேன். 

வேலை விஷயமா, சோனி நிறுவனத்துல வேலை பார்த்திட்டிருந்த ரவிச்சந்திரனை சந்திச்சேன். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  தூர்தர்ஷன் உள்ளிட்ட மற்ற சேனல்களோட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கான உபகரணங்களோட தேவை அதிகரிக்க ஆரம்பிச்ச நேரம் அது.  நானும் கணவரும் ஜப்பான்ல உள்ள சோனி நிறுவனத்தோட விநியோகஸ்தர்களா நியமிக்கப்பட்டோம். அப்புறம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்ல தீவிரமா  இறங்கினோம். 

இப்படிப் பல விஷயங்கள்ல பிசியா இருந்த போதும், என் மனசு முழுக்க இன்டஸ்ட்ரியலிஸ்ட் ஆகணுங்கிற கனவு குறையாம அப்படியே இருந்தது.  சேஷசாயி குழுமத்தோட பிரபலமான ‘சீ கால்ட்ஸ்’ நிறுவனம் ராணிப்பேட்டையில இயங்கிட்டிருந்தது. 25 வருஷ தொழிற்சாலை அது. வால்வ்  இன்டஸ்ட்ரி யில, அந்த நிறுவனத்துக்கு முக்கிய இடமிருந்தது. என்ன, ஏதுன்னு தெரியாம திடீர்னு ஒரு நாள் அந்த கம்பெனியை மூடிட்டாங்க. அதை  விற்கறதுக்கான டென்டர்ல நான் கலந்துக்கிட்டு, எடுத்தேன். 

எங்கெல்லாம் அதிக அழுத்தத்துல திரவப்பொருள்கள் பாயுதோ, மனிதர்களால கையாள முடியாதோ, அதைக் கட்டுப்படுத்தற வால்வுகளை ‘அலாய்  கேஸ்டிங்’னு சொல்வோம். அதை உற்பத்தி பண்ற தொழிற்சாலைங்கிற அளவுக்குத்தான் நான் டென்டர்ல எடுத்த கம்பெனியை பத்தி எனக்குத்  தெரியும். மத்தபடி அந்தத் துறையில எனக்கு எந்தவிதமான பின்னணியோ, அனுபவமோ இல்லை. ஃபேக்டரியை பிரிச்சு, பார்ட் பார்ட்டா விலை பேசி  எடுத்துட்டுப் போக ஒரு பெரிய கூட்டமே காத்திட்டிருந்தது. 

என்னோட நோக்கம் அது இல்லை. ஏதோ ஒரு தைரியத்துல எடுத்தாச்சு. என்னன்னு தான் பார்ப்போமேங்கிற ஐடியாவுல ஒருநாள் மூடிக்கிடந்த  தொழிற்சாலைக்குப் போனேன். 25 வருஷப் பாரம்பரியம் உள்ள ஒரு பிரமாண்ட தொழிற்சாலை, கம்பீரமெல்லாம் இழந்து, பாழடைஞ்சு நின்னதைப்  பார்த்தப்ப, வாழ்ந்து கெட்ட மனிதரைப் பார்க்கற மாதிரி மனசுக்கு சங்கடமா இருந்தது. வாட்ச்மேன் மட்டும் என்கூடவே வந்தார். 

அவர்கிட்ட பேச்சு கொடுத்தப்ப, அவர் அதே ஃபேக்டரியில ஒரு பெரிய பதவியில, கை நிறைய சம்பளத்துல வேலை பார்த்தவர்னும், இப்ப பிழைப்புக்கு  வழியில்லாம வாட்ச்மேன் வேலை பார்க்கிறதாகவும் சொன்னப்ப, எனக்குக் கண் கலங்கிடுச்சு. அது மட்டுமில்லை, அவரை மாதிரி நூத்துக்கணக்கான  பேர், வேலையில்லாம வீட்ல சும்மா இருக்கிறதும், அவங்க பிள்ளைங்க படிப்பு கெட்டுப் போய் நிற்கறதையும் கேள்விப்பட்டப்ப, எல்லாருக்கும் ஏதாவது  செய்தாகணுங்கிற உத்வேகம் வந்தது. 

அத்தனை நாள் நான் பார்த்துக்கிட்டிருந்த மத்த எல்லா வேலைகளையும் என் கணவர் பொறுப்புல விட்டுட்டு, முழு நேரமும், அந்த ஃபேக்டரியை சரி  பண்றதுலயே செலவழிச்சேன். முதல் வேலையா, நிறுவனத்தை மூட என்ன காரணம்னு ஆராய்ச்சி பண்ணினேன். ரெண்டு ஊழியர்கள், கொஞ்சம்,  கொஞ்சமா பணத்தைக் கையாடல் பண்ணியிருந்தது தெரிய வந்தது. அதைக் கவனிக்காம விட்டதோட விளைவு, கம்பெனியே நஷ்டமாகிற அளவுக்குப்  போய், அத்தனை பேர் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியிருந்தது. 

யாரோ செய்த தவறால, விசுவாசமா வேலை பார்த்த மத்தவங்க பாதிக்கப்படக்கூடாதுன்னு முதல் கட்டமா சிலரை மறுபடி வேலைக்கு எடுத்தேன்.  ‘குளோப் கேஸ்ட்’டுன்னு பேரை மாத்தினோம். நான் உள்ளே அடியெடுத்து வச்ச நிமிஷத்துலேருந்து, ஒவ்வொரு மெஷினையும் அக்குவேறு,  ஆணிவேறா தெரிஞ்சுக்கிட்டேன். என்ன மூலப்பொருள் தேவை, மார்க்கெட் நிலவரம் என்னங்கிறதையும் கவனிச்சேன்.

என் பார்வைக்குத் தப்பாம எதுவும் நடந்துடாம எச்சரிக்கையா இருந்தேன். ஆறே மாசத்துல புதுசா செட் பண்ணின மாதிரி, மொத்தமா மாத்தி,  வேலையை ஆரம்பிச்சோம். எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்குப் போனாலும், அங்க என் ரூம்ல உட்கார்ந்துக்கிட்டே, ராணிப்பேட்டையில ஃபேக்டரியில  என்ன நடக்குதுன்னு பார்க்கப் பழகினேன். 

ஃபீனிக்ஸ் பறவை மாதிரி ஃபேக்டரி நிமிர்ந்து எழுந்து நின்னது. இன்னிக்கு இந்தியாவுல உள்ள பிரபல நிறுவனங்கள் பலதுக்கும் நாங்கதான் அலாய்  கேஸ்டிங் சப்ளை பண்றோம். பிசினஸ் பிக்கப் ஆக ஆரம்பிச்ச நேரம், மின்சார வெட்டு மூலமா அடுத்த பிரச்னை வந்தது. ஆனாலும் நாங்க  பயப்படலை. சோலார் பவர் மூலமா மின்சார உற்பத்தி பண்ணி, ஃபேக்டரியை இயக்கறதுக்கான எல்லா வேலைகளையும் பண்ணிட்டோம்.able to I can That woman Thane?


இந்த தொழிற்சாலையை நான் கைப்பற்றின போது, ‘உன்னால இதெல்லாம் முடியுமா’ன்னு கேட்காத ஆளே இல்லை. ‘உன்னால முடியுமா’ங்கிற அந்த  வார்த்தைகளோட பின்னணியில ‘பெண்ணால முடியுமா’ங்கிற கேள்விதான் மறைஞ்சிருந்தது. எல்லா நெகட்டிவான விஷயங்களையும் பாசிட்டிவா  எடுத்துக்கக் கத்துக்கிட்டேன். வாழ்க்கையில யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை? 

ஐயோ... எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு உட்காரக்கூடாது. பிரச்னைகளை எதிர்கொண்டு, அதுலேருந்து மீண்டு வர்றவங்கதான் இன்னிக்கு எல்லா  துறைகள்லயும் தலைவர்களா இருக்காங்க. பெண்கள் மனதளவுல ரொம்பவே ஸ்ட்ராங்கானவங்க. அவங்க மனசு வச்சா, முடியாத காரியம் எதுவுமே  இல்லை. என்னால முடியும்னு நிரூபிச்சுக் காட்டிட்டேன். என்னால முடியும்னா, பெண்ணால முடியும்தானே அர்த்தம்?’’ - நியாயமாகக் கேட்கிறார்  இரும்பு மனுஷி!

- ஆர்.வைதேகி 

உழைக்கத் தயாரா? உதவத் தயார்!

எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத்  தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.‘படிச்சிருந்தாலாவது வேலைக்குப் போகலாம்’ எனப் படிக்காத பெண்களும்,  ‘படிச்சிருந்து என்ன செய்ய... வீட்டை விட்டு வேலைக் குப் போக அனுமதியில்லை’ எனப் படித்த பெண்களும், ‘படிப்பும் இருக்கு. ஏதாவது  செய்யணும்கிற துடிப்பும் இருக்கு. வழிதான் தெரியலை’ எனப் புலம்புகிற பெண்களும் நம்மிடையே பரவலாக உண்டு. 

இந்த மூன்று தரப்பினரின் ஏக்கங்களையும் போக்கி, பொருளாதார சுதந்திரத்துக்கு வழி காட்டுகிற அமைப்பு ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர்  சங்கம்’ - Women Entrepreneurs Association of Tamil Nadu [WEAT]. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறைப் பேராசிரியர்  மணிமேகலையின் முயற்சியில் உருவாகியிருக்கும் இந்த அமைப்பு, உழைக்கக் காத்திருக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் உதவக் காத்திருக்கிறது. 

‘‘குறுந்தொழிலில் பெண்கள் பத்தி 99ம் வருஷம் ஒரு பேராய்வு பண்ணினேன். சுயதொழில் செய்கிற பெண்களைப் பத்தின பெரிய புள்ளிவிவரங்கள்  எதுவும் இல்லாதது தெரிய வந்தது. ரொம்பவும் சிரமப்பட்டு, ஒட்டுமொத்த திருச்சியிலயும் 550 பெண் தொழில்முனைவோரைக் கண்டுபிடிச்சோம்.  அந்த  550 பேர்ல, 143 பெண்களை மட்டும் வச்சு நடத்தின ஆய்வுல, சில உண்மைகள் தெரிய வந்தது. அதன்படி பெரும்பாலான பெண்கள், மரபு சார்ந்த  தொழில்களான தையல், ஊறுகாய், அப்பளம் செய்யறது மாதிரியான வேலைகள்லதான் அதிகம் ஈடுபட்டிருக்கிறது தெரிஞ்சது. 

அடுத்து அவங்கள்ல பல பேர் வங்கிக் கடனே வாங்காதவங்க. அப்படியே வாங்கணும்னு நினைச்சு முயற்சி பண்ணினவங்களும் ஏதோ காரணங்களால  கடன் இல்லாம மறுக்கப்பட்டவங்க. 2005ல நான் மகளிர் துறை இயக்குனரா பொறுப்பெடுத்துக்கிட்டதும் இந்த விஷயங்களுக்காக ஏதாவது செய்ய  வேண்டிய அவசரத்தை உணர்ந்தேன். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ரிப்ளை கார்டு அனுப்பி, நேர்ல சந்திக்க விருப்பம் சொன்னோம். வெறும் 35  பேர்கிட்டருந்து தான் பதில் வந்தது. அது கடைசியா 7 பேரா குறைஞ்சது. 2006ல உருவான தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்துக்கு இது  7வது வருடம்...’’ - அமைதியாக அறிமுகம் செய்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் மணிமேகலை.

‘‘பெண்கள்னா பியூட்டி பார்லர் வைக்கவும், வத்தல் வடாம் விற்கவும்தான் லாயக்குங்கிற கருத்தை உடைக்கிறதுதான் எங்க சங்கத்தோட பிரதான  நோக்கம். தொழில்னு வரும்போது, பெரும்பாலான பெண்கள், ஆண்கள் அளவுக்கு அதுல தொடர்ந்து நிற்கறதில்லை. குடும்ப சூழல், கணவரோட  சப்போர்ட் உள்ளிட்ட மற்ற காரணங்களையெல்லாம் பொறுத்ததா இருக்கு அவங்களோட தொழில் ஆர்வமும் ஈடுபாடும். அரிதாக சில பெண்கள்,  கணவரோட ஆதரவோட தொழில் பண்றதும் உண்டு. அந்த மாதிரிப் பெண்கள், தொழில்ல நிலைச்சு நிற்கறதையும் பார்த்தோம். ஆண்களுக்கு தொழிலும்  சம்பாத்தியமும் வாழ்க்கையோட முக்கிய அங்கமா இருக்கு.

அதுவே பெண்கள்ல பலரும் ஏதோ ஒரு காரணத்துக்காக தொழில் முனைவுக்குத் தள்ளப்படறாங்க. அந்த வகையில எங்க சங்கத்துல 75 சதவிகித  உறுப்பினர்கள் ஆண் துணையில்லாத காரணத்தால தொழில்முனைவுக்கு வந்தவங்க. கணவனை இழந்தவங்க, கணவரால கைவிடப்பட்டவங்க, விவாகரத்தானவங்க, கணவர் இருந்தும், அவர் மூலம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவங்கன்னு... பலரும்  இதுல உறுப்பினர்கள். வயது, கல்வித் தகுதின்னு எதையும் கணக்குல எடுத்துக்காம, முதல் கட்டமா அவங்களை தொழில் முனைவுக்குத்  தயார்படுத்தினோம். 

திருச்சியில உள்ள சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தோட இணைஞ்சு, தொழில் பயிற்சி கொடுத்தோம். 15 நாள்களுக்கு ஒரு முறை அவங்களுக்கு  விழிப்புணர்வு முகாம் நடத்தி, கருத்தாளர்களைக் கூப்பிட்டுப் புதுப்புதுத் தொழில்களைப் பத்திப் பேச வைக்கிறோம். கூட்டத்துக்கு வர்ற பல பெண்கள்,  ஏதோ ஒரு தொழில் தொடங்கணுங்கிற எண்ணத்தோட வருவாங்க. ஆனா, என்ன தொழில், எப்படி தொடங்கறதுங்கிற பயமும் கேள்விகளும்  அவங்களுக்கு நிறைய இருக்கும். வெற்றிகரமான சுயதொழில் முனைவோரா இருக்கிற பெண்களைக் கூப்பிட்டு, அனுபவங்களைப் பகிர்ந்துக்க  சொல்வோம். 

அது மற்ற பெண்களுக்கும் ஊக்கமா அமையும். காலங்காலமா பெண்களுக்குப் பழகிப் போன தையல், உணவு சார்ந்த தொழில்களையும் தவிர்க்காம,  அதுக்கான பயிற்சிகளையும் கொடுக்க ஆரம்பிச்சோம். அதோட அடுத்தகட்டமா, பெண்களால இன்ஜினியரிங் துறை சார்ந்த தொழில்களையும் செய்ய  முடியும்னு நிரூபிக்க, வெல்டிங் பயிற்சி கொடுத்து, வேலை வாய்ப்புக்கு வழி செய்தோம். கம்ப்யூட்டர் பயிற்சியிலேருந்து, கால் டாக்சி டிரைவிங்  வரைக்கும் எதையும் விட்டு வைக்கலை. திருச்சியோட முதல் கமர்ஷியல் பெண் கால் டாக்சி டிரைவர் எங்களால உருவாக்கப்பட்டவங்கதான். 

இன்னும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பொருள்கள், பாக்குமட்டை பொருள்கள், பேப்பர் பொருள்கள் தயாரிக்கவும், சிறுதானிய உணவுப் பொருள்கள்  தயாரிக்கவும்கூட பயிற்சிகள் கொடுக்கறோம். வெறுமனே பயிற்சி கொடுக்கிறதோட இல்லாம, பல்வேறு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களோட  இணைஞ்சு அவங்களோட பொருள்களை சந்தைப்படுத்தவும் வழிகளை உருவாக்கித் தரோம். வருடம் ஒரு முறை மாநில அளவிலான கருத்தரங்கு  நடக்கும். அதுல எல்லா மாவட்டங்கள்லேருந்தும் எங்க சங்க உறுப்பினர்கள் கலந்துப்பாங்க. 

புதுசா தன்னோட மாவட்டத்துல கிளை தொடங்க நினைக்கிறவங்களுக்கும் உதவி செய்யறோம். இந்தக் கருத்தரங்குல என்ன தொழில் செய்யலாம்,  எப்படிச் செய்யலாம், அதுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, எப்படி விற்கறதுங்கிற அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். புதுசா பயிற்சி  எடுத்துக்கிட்டு, தொழில் தொடங்கினவங்களுக்கு விருது கொடுத்து ஊக்குவிக்கிறோம். சுருக்கமா சொன்னா, எந்த ஐடியாவும் இல்லாம எங்கக்கிட்ட  வர்றவங்களையும் அவங்களோட தனிப்பட்ட திறமையைக் கண்டு பிடிச்சு, வழிகாட்டி, மூலப்பொருள்கள் முதல் வங்கிக் கடன் வரைக்கும் வாங்க  உதவி செய்து, தொழில் தொடங்கின பிறகு பிரச்னைகள் வந்தா எப்படி சமாளிக்கிறதுன்னு பாடம் எடுத்து, மேலாண்மைத் திறன் வரைக்கும் கத்துக்  கொடுக்கறோம். 
Ready to work? Ready to help!
வீட்டையும் தொழிலையும் பேலன்ஸ் பண்ணவும் பாலின சமத்துவம் பத்தித் தெரிஞ்சுக்கவும்கூட ஆலோசனைகள் உண்டு. ஆணுக்கு இணையா,  பெண்ணாலயும் எந்தத் தொழிலையும் தைரியமாகவும், தடையில்லாமலும் தொடர்ந்து நடத்த முடியும்னு நிரூபிக்கிற அந்தப் பயணத்துல விருப்பமுள்ள  எந்தப் பெண்ணும் இணையலாம்’’ - அன்பும் அக்கறையுமாக அழைக்கிறார் மணிமேகலை. (தொடர்புக்கு: ( 0431-4200040/ 94887 85806/ 96007  79081)

தேங்காய் நார் கழிவில் செழி செடிகள்

ஆண்டுக்கு இரு பருவ மழை, எப்போதும் சூரிய ஒளி, அனைத்து வகை மரம் செடி கொடிகளும் உயிரினங்களும் வளரக்கூடிய சூழல், சுழற்றியும்  தழுவியும் செல்லும் காற்று, உள்ளம் குளிர வைக்கும் பனி என்று இயற்கை நமக்கு அளித்த வரங்கள் ஏராளம். செம்மண், கரிசல், வண்டல் என மண்  வளமும் தாராளம். இவற்றை நாம் முழுதாக பயன் படுத்துவதில்லை என்பதே உண்மை. 
Coconut fiber waste plants flourish!
மண் வளம் குறைந்த, கடுங்குளிர் கொண்ட வெளிநாடுகளில் எப்படி விவசாயம் நடக்கிறது? அதிலும் குறிப்பாக ஹாலந்தில்தான் உலகிலேயே அதிக  அளவு மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எப்படி? அவர்கள் மண்ணுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருள்தான் முக்கிய காரணம். அந்தப் பொருளும்  நம் நாட்டில் இருந்தே அதிக அளவு ஏற்றுமதி ஆகிறது. ஆம்... நாம் தினந்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் தேங்காய்தான் அந்த பொருள்.  தேங்காய் நார் துகள்கள்தான் அங்கு விவசாயத்துக்குப் பயன்படுகின்றன!

தேங்காய், தேங்காய் நார் மற்றும் தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் காயிர் ஃபைபர், காயிர் சிப்ஸ் மற்றும் காயிர் பித். இதில்  காயிர் ஃபைபர் என்பது சோபா, வாகனங்களில் இருக்கைகள் செய்யவும் மெத்தைகள் செய்யவும் பயன்படுகிறது. காயிர் சிப்ஸ் என்பது தேங்காய்  மட்டையை சிறுதுண்டுகளாக வெட்டுவது, காயிர் பித் என்பது நாரிலிருந்து விழும் கழிவு. இவை இரண்டும் விவசாயத்துக்குப் பயன்படுகிறது.
தேங்காய் நார் துகளை உலர வைத்து, செங்கல் போன்று தயாரிக்கப்படுகிறது. 

இந்த செங்கல்லை உதிர்த்து தண்ணீரில் ஊற வைத்தால் 5 மண் தொட்டிகள் அளவு கிடைக்கும். இயற்கையாகவே அதிகம் உரம் தேவைப்படாது.  தண்ணீரின் தேவையும் மிகக்குறைவு.
Coriander up to the strawberries!

காயிர் பித் (மண்ணுக்கு மாற்று) பயன்படுத்துவதால் என்ன பயன்?

1. சத்துகளை செடி உறிஞ்சும் அளவு அதிகரிக்கும்.
2. குறைந்த அளவு உரம் போதுமானது.
3. வறட்சியை தாங்கும் சக்தி அதிகரிக்கும்.
4. குறைந்த அளவு நீர் போதுமானது.
5. மண்ணில் நன்மை தரும் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரிக்கும்.
6. முளைப்புத்திறன் கூடுவதால் அதிக நாற்றுகள் கிடைக்கும்.
7. வேர் வளர்ச்சி அதிகரிக்கும். 
8. செடிகள் ஆரோக்கியமாகவும் பசுமையாகவும் காணப்படும்.

எப்படி?

செங்கல் போல கட்டிகளாக கிடைக்கும் இவற்றை பெரிய பக்கெட்டில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வைத்தால், நன்கு ஊறி உதிராக மண் போல  மாறும். பெரிய தேங்காய் மட்டை சிலவற்றை தொட்டியின் அடியில் போடவும்.அதன் மேல் சிப்ஸ் எனப்படும்  சிறிய துண்டுகளாக வெட்டிய தேங்காய்  மட்டையை பாதி நிரப்பவும். இவை கிடைக்காவிட்டால் பொடி நார் கழிவே போதும்.

இத்துடன் ஈ.எம். கரைசல், ‘வேம்’ பூஞ்சானம், ஹுயுமிக் அமிலம் மற்றும் மண்புழு உரம் சேர்த்து கலந்து தொட்டியின் அளவுக்கு நார்கழிவை நிரப்பவும்.
இனி விதை நட வேண்டியதுதான். மண் போன்று தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை அதிக அளவில் இல்லாததால், குறைந்த அளவு தண்ணீர்  தெளித்தாலே போதும். இருவேளை தண்ணீர் விடவேண்டிய அவசியம் இல்லை.

‘‘ஈ.எம். என்பது ஒருவகை நுண்ணுயிரி. ஈ.எம்., கரும்புச் சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை (1 : 1 : 20 விகிதத்தில்) கலக்க வேண்டும். அதாவது, ஒரு  பங்கு ஈ.எம்., ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை 20 பங்கு தண்ணீர் ஆகியவற்றை 2 லிட்டர் பாட்டிலில் கலந்து ஒரு வாரம் வரை காற்று புகாமல் நொதிக்க  வைக்க வேண்டும். தினம் ஒரு முறை மூடியை திறந்து மூட வேண்டும். ஒரு வாரம் கழித்து பாட்டிலில் வெண்மையாக ஆடை போல படிந்திருக்கும்.  அதன் பின் ஒரு பக்கெட் தண்ணீருக்கு 5 மூடி ஊற்றி செடிகளில் தெளிக்கலாம். 

இவற்றை அதிகபட்சம் 2 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் இதை உபயோகிக்கலாம்.  விரைவாக உலர்ந்து ஈரமின்றி இருப்பதுடன், ஈக்களும் வருவதில்லை. துர்வாசனை இல்லை. வீடு துடைப்பதற்கும், வாகனங்களை கழுவுவதற்கும், சிறு  குழந்தைகளின் உள்ளாடைகளை சுத்தம் செய்யவும்கூட ஈ.எம். ஏற்றது. செலவு மிகமிகக் குறைவு என்பதுடன், இது ஒரு மிகச்சிறந்த  இயற்கைப்பொருள். புனே, கோவை மாநகராட்சிகள் கழிவுகளை ஈ.எம். கொண்டுதான் மக்க வைத்து மறுசுழற்சி செய்கிறார்கள்!’’ என்கிறார்  தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், ‘வேம்’, ஹுயுமிக் அமிலம் பற்றியும் விளக்குகிறார்.

வேம் (VAM )  என்னும் வேர் பூஞ்சானம். Vesicular Arbuscular Mycorrhiza என்பதன் சுருக்கமே வேம். இது தாவரங்களுக்கு பயன் அளிக்கக்கூடிய  வேர் பகுதியில் காணப்படும் ஒரு வகை பூஞ்சானம். தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும் மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள  பாஸ்பரஸை நேரடியாகவும், மற்ற சத்துகளையும் நீரையும்  மறைமுகமாகவும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரும். இது வேர்களை அதிக  அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்கவும் உதவு கிறது. பூஞ்சானம் என்பதால் மண் அல்லது மணலுடன் சேர்ந்து இருக்கும். செடி அல்லது  விதை வைக்கும் போது இவற்றை மணலில் கலந்து வைக்கலாம்.

ஹுயுமிக் அமிலம் என்பது நிலக்கரியில் இருந்து கிடைக்கும் ஒரு வகை உரம். மண்ணோ, தேங்காய் நார் கழிவோ... தொட்டியில் நிரப்பியதும் எப்படி  விதை அல்லது நாற்று தேர்வு செய்வது? எந்தச் செடிக்கு என்ன அளவு தொட்டி அல்லது பிளாஸ்டிக் பை? அடுத்த இதழில் பார்க்கலாம்! 

வாசலில் காய் வண்டிக்காரரும், கூடையில் காய் கொண்டு வரும் பெண்ணும், மூலைக்கடை அண்ணாச்சியும் கொசுறாக தந்த கொத்தமல்லித்தழையை  இப்போது கிராம் கணக்கில் துல்லியமாக எடை போட்டு பன்னாட்டுக் கடைகளில் வாங்குகிறோம். கீரை என்ற பெயரில் வாடி வதங்கிப்போன ஒரு  பச்சைக் கட்டை தலையில் கட்டியதை அறியாமல், வீட்டுக்கு வந்து கழுவியதும் அதுவும் சாயம் போகும் கெமிக்கல் உலகில் வாழ்கிறோம். 

எல்லா விஷயங்களுக்கும் மாற்று இருக்கும் இவ்வுலகில் இதற்கு இல்லாமலா போகும்? அபார்ட்மென்ட்டோ தனிவீடோ - ஒரு கையளவு இடம்  இருந்தால் கூட அதில் அருமையாக அழகுத்தோட்டம் அமைக்கலாம். கொத்தமல்லி முதல் மல்லிகை வரை, தக்காளி முதல்  ஸ்ட்ராபெர்ரி வரை  நாமே வளர்க்கலாம். 

கிச்சன் கார்டன் அமைக்க

இதற்கு முதல் தேவை கொஞ்சம்  ஆர்வம்... கொஞ்சம் முயற்சி... கொஞ்சம்  திட்டமிடல்... அவ்வளவுதான்! என்னதான் சூப்பர் மார்க்கெட்டில் கிலோ  கணக்கில் காய்கள் வாங்கினாலும் நாமே வளர்த்த இரண்டு தக்காளியின் சுவை வேறு எதிலும் வராதே. அது மட்டுமல்ல... தோட்டம் என்பது  மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும் சூப்பர் விஷயம்!  கிச்சன் கார்டன் என்பது பிளாஸ்டிக் கப்புகளிலும் தண்ணீர் பாட்டில்களிலும் ஏதோ  ஒரு செடி வளர்த்து கொசு உற்பத்தியை பெருக்குவதல்ல. 

உண்மையில் பெட் பாட்டில்களை வேறு விதமாக பயன் படுத்த முடியும். பாரம்பரிய முறையில் உரம் முதல் அனைத்தும் நாமே தயாரிக்க முடியும்.  அதிக நேரமோ பணமோ தேவையில்லை. அபார்ட்மென்ட் வாசிகள் மொட்டை மாடியை பயன்படுத்தலாம். குழுவாக இணைந்து தினம் ஒருவர் என்ற  முறையில் கூட பராமரிக்கலாம். குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்.

என்னென்ன தேவை?


கிச்சன் கார்டனில் அடிப்படைத் தேவைகள் மிகக் குறைவே. மண் தொட்டிகள் எப்போதுமே நல்லது. மண்ணுக்கு நீரை உறிஞ்சி குளிர்ச்சியை தக்க  வைக்கும் தன்மை உள்ளதால் செடிகளின் பசுமைக்கு அது கேரண்டி. மண் தொட்டிகளின் கலரில் பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கின்றன. அதன் மேல்  தொட்டி வைத்தால் தரை பாழாகாது. மொட்டை மாடிக்கு ஏற்ற சிமென்ட் தொட்டி, மண் தொட்டி, மற்றும் ‘யுவி ட்ரீட்’ செய்த செடி வளர்க்கும் பைகள்  கிடைக்கின்றன. தேங்காய் மட்டை, மண், மண்புழு உரம், மூடியில் துளை இட்ட சிறிய பெட் பாட்டில், விதை போன்றவற்றை ரெடி செய்த பிறகு,  விதைகளை நர்சரியில் வாங்கலாம். 

மண் மரம்  மழை மனிதன்!


இருக்கிற இத்தினியூண்டு இடத்தில் எப்படி ஏராளமாக வளர்ப்பது, தண்ணீர் சிக்கனம், எந்தச் செடியை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றியெல்லாம்  அடுத்து வரும் இதழ்களில் விளக்க இருக்கிறார் கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கச் செயலர் பா.வின்சென்ட். இவர் 20  ஆண்டு கால இந்தியன் வங்கி பணிக்குப் பின் விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயது முதல் இவரது பொழுதுபோக்கே அலங்காரச் செடிகள்  வளர்ப்பதுதான். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான இவர், இப்போது வெட்டிவேரை பிரபலப்படுத்துவதையும் நாற்றுகள் உற்பத்தி, இயற்கை விவசாயம்,  இயற்கை இடுபொருள்கள், மழைநீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு, மருத்துவச் செடிகள் பற்றி வலைப்பூவில்   (maravalam.blogspot.in) பகிர்வதையும்  ஆர்வமுடன் செய்து வருகிறார்.

(நன்றி குங்குமம் தோழி)

கலைத் தொழிலை காப்பாற்றுங்கள்

73 வயது என்றால் நம்ப முடியவில்லை. கிரேஸ்லின் லியோனின் பேச்சு, பார்வை என எல்லாவற்றிலும் அத்தனை தெளிவு. அதையெல்லாம் தாண்டி  அசத்துகிறது அவரது கைத்திறன். பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் கிரேஸ்லின். சுற்றுச்சூழலுக்கு உகந்த  பனை ஓலையில் தட்டு, கூடை, சைக்கிள் கூடை, கிலுகிலுப்பை, தொப்பி, ஹேண்ட் பேக், பர்ஸ் உள்ளிட்ட பல பொருள்களையும் செய்கிறார்.  கைகளால் பின்னியது என்று நம்ப முடியாத அளவுக்கு ஒவ்வொன்றிலும் அத்தனை நேர்த்தி! 

பனை ஓலைக்குப் பின்னே பல கதைகள்!


பாராட்டுகளைப் பணிவாக ஏற்றுக் கொண்டபடி, அதன் பின்னணியில் உள்ள சோகக் கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கிரேஸ்லின்.  ‘‘ஏழாவதுக்கு மேல படிக்க வீட்ல வசதியில்லை. மணப்பாடுதான் எனக்குப் பூர்வீகம். அங்கே பனையோலையில பொருள்கள் செய்யறதுதான்  பெரும்பாலான மக்களோட வாழ்வாதாரமே. ஒரு ரூபாய் வருமானம் வந்துச்சுன்னா, அதுல பத்து பைசாவை மணப்பாடு பெண் தொழிலாளர்கள் பனை  ஓலை கூட்டுறவு சங்கத்துக்கு கமிஷனா கொடுப்போம். 

அந்தப் பைசா அப்படியே சேர்ந்துக்கிட்டே வரும். கல்யாணத்துக்கோ, வேற அவசரத் தேவைக்கோ பணம் வேணுங்கிறப்ப அதை வாங்கிக்கலாம். அதை  ‘டவுரி பணம்’னு சொல்வோம். என்னோட 14வது வயசுலேருந்து பனை ஓலை பின்றேன். சென்னைக்கு வந்தேன். என் கணவர், என்னோட  கைவேலையைப் பார்த்து, டவுரி பணம் கூட வேண்டாம்னு சொல்லிட்டு, என்னை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ‘சுற்றுச்சூழலைக் காப்பாத்துவோம்’னு உலகம் முழுக்க பிரசாரம் பண்றோம். 

ஆனாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உபயோகிக்கிறதுல நம்ம மக்களுக்கு இன்னும் ஒரு தயக்கம் இருக்கவே செய்யுது. பனை ஓலை  பொருள்களை உபயோகிக்கிறதுல அந்தத் தயக்கம் கொஞ்சம் அதிகமாவே இருக்கிறதைப் பார்க்கறேன். கல்யாணத்துக்குப் பிறகும் நான் பனை ஓலைப்  பொருள்கள் செய்யறதை விடலை. நினைவு தெரிஞ்சு நான் செய்யற எந்தப் பொருளுக்கும்  இதுதான் விலைன்னு நிர்ணயம் பண்ணினதில்லை.  என்னோட வறுமையும் திறமையும் தெரிஞ்சு, என்னைத் தேடி வந்து, விரும்பிக் கேட்கறவங்களுக்குக் கொடுப்பேன். 

அவங்களா அதோட மதிப்பு தெரிஞ்சு கொடுக்கறதை மறுக்காம வாங்கிப்பேன். அன்புக்கு விலை வைக்க முடியுமா சொல்லுங்க...’’ என்கிறவரின்  வார்த்தைகளிலும் அதே அன்பின் பிரதிபலிப்பு.‘‘எங்க ஊரைச் சேர்ந்த பத்து பேர், சென்னையில பனை ஓலைப் பொருள்கள் பண்ணிட்டிருந்தாங்க.  செய்து வச்ச பொருள்களை வாங்க இங்கே ஆளில்லை. கையில உள்ள காசைப் போட்டு, ராத்திரி, பகலா பின்னி வச்ச பொருள்களை, சீண்ட  ஆளில்லாம, எலி கடிச்சுப் பாழானதுதான் மிச்சம். 

அவங்களுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே... விரக்தியில, அந்தப் பெண்கள் எல்லாரும் வீட்டு வேலை செய்யப் போயிட்டாங்க. எனக்கு  இதைவிட்டா வேற எதுவும் தெரியாது. மாற்றுத்திறனாளியான என் கணவருக்கோ, எனக்கோ அரசாங்கத்துலேருந்து வேற எந்தவிதமான சலுகைகளும்  இல்லை. மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவங்களுக்கு இந்தத் தொழிலை நான் கத்துக் கொடுக்க தயாரா இருக்கேன். ஆனா, அதுக்கான  ஆர்வமோ, பொறுமையோ யாருக்கும் இல்லை. 
Save the art business
இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு இன்னிக்கே ஒரு தொழிலைக் கத்துக்கிட்டு, நாளைக்கே பணம் பார்க்கணுங்கிற அவசரம்தான் இருக்கே தவிர, ஒரு  கலையைக் கத்துக்கணும்னோ, அதுல நிபுணத்துவம் பெறணும்னோ எந்த எண்ணமும் இல்லைங்கிறதைப் பார்க்கிறப்ப வருத்தமா இருக்கு. இந்த 73  வயசுலயும் என்னால ஒரு சின்ன பிசிறுகூட இல்லாம பின்ன முடியும்னா, அதன் பின்னணியில இருக்கிறது என் பசியும் வறுமையும்தான். ஓலையை  எண்ணி எண்ணி நான் பின்றதில்லை. பட்டினி கிடந்த வேளைகளையும், எதிர்காலத்தைப் பத்தின பயத்தையும் எண்ணி எண்ணிப் பின்றேன். 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில இந்தப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. நம்மூர் மக்களுக்குத்தான் இதோட மவுசு தெரியலை.  எனக்குப் பிறகு இந்தத் தொழில் காணாமலே போயிடுமோங்கிற கவலைதான் பெரிசா இருக்கு. இத்தனை வயசுக்கு மேல, இந்தத் தொழிலை வச்சு நான்  லட்சங்களை சம்பாதிக்கப் போறதில்லை. என்னோட லட்சியமெல்லாம், இந்தக் கலையை ஆர்வமும் தேவையும் உள்ள அடுத்த தலைமுறைப்  பெண்களுக்குக் கொண்டு போய் சேர்க்கணுங்கிறது தான்...’’ - கண்களில் ஏக்கம் தேக்கிப் பேசுகிற கிரேஸ்லின், ஆர்வமுள்ளோருக்கு மூலப்  பொருள்களுக்கான தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு, இலவசமாக பயிற்சி அளிக்கக் காத்திருக்கிறார். (தொடர்புக்கு: 93809 46043)

-கிருஷ்ணமூர்த்தி
நன்றி குங்குமம்தோழி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites