இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Saturday, October 22, 2016

வெந்தயக்கீரை

குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் வெந்தயக்கீரை சாகுபடி குறித்து விளக்கும், புதுவையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் கூறுகிறார்: நிலத்தை நன்றாக உழுது, தொழு உரமிட்டு, மீண்டும் ஒருமுறை உழுது கொள்ள வேண்டும்.பின், சீரான இடைவெளியில் மேட்டுப் பாத்தி அமைத்து, அதன்மீது விதைகளை விதைக்க வேண்டும். விதைப்பதற்கு முன் வெந்தய விதைகளை, அசொஸ்பைரில்லம் மற்றும் ட்ரைகோடர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு, 4 முதல், 5 கிலோ வெந்தய விதைகள் தேவைப்படும். வடிகால் வசதியுடைய கரிசல் அல்லது அங்ககச்சத்து நிறைந்த, மணற்பாங்கான நிலத்தில் வெந்தயம் பயிரிடலாம். அக்., முதல், டிச., மாதங்களில்...

பொன்னாங்கண்ணிக் கீரை வளர்ப்பது எப்படி?

பொன்னாங்கண்ணிக் கீரையில் “தங்கசத்து’ உண்டு என்றும் இதனை முறைப்படி உண்டு வருபவரது உடல் தங்கம் போன்று உறுதியடையும் உண்மை என்றும் கூறுவர். இதனை “பொன் ஆம் காண் நீ’ “இதனை உண்ண உன் உடல் பொன்னாக காண்பாய்’ என்ற வழக்கிற்கேற்ப இந்த மூலிகையின் பெயர் அமைந்துள்ளது எனக்கூறுவர். இதனாலேயே இது கற்பக மூலிகை வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையைச் செம்மையாய் நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு கூட்டி, புளியை நீக்கி கற்ப முறைப்படி ஒரு மண்டலம் உட்கொள்ள, உடல் அழகுபெறும். பொன்னிறமடையும், கண் குளிர்ச்சி உண்டாகும். மேலும் நோயற்ற நீண்ட ஆயுளும் பெறலாம். தொட்டிகளில் பராமரிப்பு: பொன்னாங்கண்ணி மற்றும் கரிசலாங்கண்ணி கீரைகளை வேர்ச்செடி மற்றும்...

கீரை சாகுபடி

கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும். நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம். பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம். கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும். இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது. எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும். எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது. மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது...

எலுமிச்சை சாகுபடி

ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டப் பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன் கூடிய சாகுபடியை விவசாயிகள் பெறலாம் எலுமிச்சை, மக்களின் அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். எலுமிச்சையில் 2 ரகங்கள் உள்ளன. ஒன்று சாதாரண எலுமிச்சை, மற்றொன்று கொடி எலுமிச்சை. கொடி எலுமிச்சை மலைப் பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படுகிறது. மண், தட்பவெப்ப நிலை சுமார் 2 மீட்டர் ஆழத்துக்கு மண் கண்டம் இருக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள தோட்டக்கால் நிலங்களிலும், களிமண் இல்லாத மணல் பாங்கான தோட்டக்கால் நிலங்களிலும் எலுமிச்சை செழிப்பாக வளரும். எலுமிச்சையை ஜூலை முதல் டிசம்பர் வரை நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்றுக்கு 5 மீட்டர் சுற்றளவில்...

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்... கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்!  தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு... என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய தொழில்நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும் மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும், பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்பு நீர்ப் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி...

இயற்கைக் கீரை... ஒரு ஏக்கர்... மாதம் ரூ75,000

‘நீங்க கட்டாயம் கீரை சாப்பிடணும்...’’ “தினமும் உணவுல கீரையைச் சேர்த்துக்குங்க” -இன்றைய மருத்துவர்களின் பொதுவான ஆலோசனை இதுவாகத்தான் இருக்கிறது. வந்த நோய்களைக் குணப்படுத்தவும், வரும்முன் காக்கவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாட உணவில் கீரை ஒரு அத்தியாவசியத் தேவையாகி நிற்கிறது. இதனால் சமீபகாலமாக கீரைக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் கீரைக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட இயற்கை விவசாயிகள் பலரும் கீரை சாகுபடியில் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் இருக்கும் தேவாங்கபுரம் பகுதியைச் சேர்ந்த...

Sunday, October 2, 2016

கல்செக்கு எண்ணெய் உற்பத்தி.

பேட்டையில் கல்செக்கு எண்ணெய் உற்பத்தி - பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் குடும்பம். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது மாடுகள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது. தற்போது...

Thursday, August 11, 2016

இளம் தொழிலதிபர்

கனவுகள் சுமக்கும் கண்களும் லட்சியங்கள் சுமக்கும் மனதுமாக துடிப்புடன் இருக்கிறார் கிருத்திகா. இளம் தொழிலதிபர் என்கிற அடையாளத்துடன் வலம் வருகிற இன்ஜினியர். ப்ரின்ட் லே’ என்கிற பெயரில் இவர் நடத்துகிற நிறுவனம் நம்மூருக்குப் புதிதான 3டி பிரின்ட்டிங் சம்பந்தப்பட்டது. பெண்களுக்குப் பொருந்தா துறையாகப் பார்க்கப்படுகிற டெக்னாலஜியில் அசத்திக் கொண்டிருக்கிறார் கிருத்திகா!2015லதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வெளியில வந்தேன். படிப்பை முடிக்கிறதுக்கு முன்னாடியே கேம்பஸ் இன்டர்வியூவுல செலக்ட் ஆகி, ஒரு பெரிய கம்பெனியில நல்ல வேலை கிடைச்சது. ஆனாலும், ‘வேணாம்’னு சொல்லிட்டேன். காரணம் என் கனவு... யெஸ்... எனக்கு ரொம்ப சின்ன வயசுலேருந்தே தொழிலதிபராகணும்கிறது ஆசை. வேலை கிடைச்சப்ப, `இது மாதிரி யாராவது பைத்தியக்காரத்தனம் பண்ணுவாங்களா? கிடைச்ச வேலையை விட்டுடாதே... இந்த வயசுல பிசினஸ் எல்லாம்...

பூந்தொட்டிகள் மற்றும் தொங்கும் பூந்தொட்டிகள்

பூக்கள் மலரும் இடங்களில் நம்பிக்கையும் மலரும்...’ என்கிறதொரு பொன்மொழி. பூக்கள் சூழ்ந்த வாழ்க்கை ரசனையானது. அழகானது. ஆரோக்கியமானது. பூக்கள் பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா? அதேபோலத்தான் பூந்தோட்டம் பிடிக்காதவர்களையும் பார்க்க முடியாது. மனிதர்கள் வாழும் இடங்களே சுருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், பூக்கள் வளர்ப்பதும், பூந்தோட்டம் அமைப்பதும் எப்படி சாத்தியம் என்கிறீர்களா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!இருக்கும் இடத்துக்குள் பூக்கள் வளர்க்கும் தொழில்நுட்பங்களைப் பார்ப்பதற்கு முன், பூந்தொட்டிகள் அமைக்கிற கலாசாரம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று தெரிந்து கொள்வோமா? வாடகை வீட்டில் வசிக்கிறோம்... அங்கேயே நிரந்தரமாகத் தங்கும் பகுதி என்பது சாத்தியமில்லை....

பூ தலையணை

நீங்கதான் முதலாளியம்மா!  வீ ட்டு அலங்காரப் பொருட்களிலும் அவ்வப்போது சீசன் மாறும். அந்த வகையில் வட்டமாக, சதுரமாக, நீள் வட்டமாக வீட்டின் மூலைகளை அலங்கரித்த குஷன் தலையணைகளுக்கான மவுசு சற்றே மாறி, இப்போது பூ டிசைன்களில் வருகிற தலையணைகள்தான் ஃபேஷன். சூரியகாந்தி டிசைனில், ரோஜா டிசைனில்... இன்னும் விரும்பிய டிசைன்களில் எல்லாம் இதை உருவாக்கலாம் என்கிறார் சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ராணி.    ``கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை குஷன் தலையணைகள் ரொம்பப் பிரபலமா இருந்தது. சாட்டின் துணிகள்ல கலர் கலரா, எல்லா வடிவங்கள்லயும் பண்ற அந்தத் தலையணைகளை வீட்ல சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியெல்லாம் உபயோகிக்கலாம்....

Wednesday, March 30, 2016

விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன் வாழை...

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது. *பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.*தரகர் இல்லாத விற்பனையில் அதிக லாபம்.*ஒரு தாரில் 100 பழங்கள்.*ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்.*மாசிப்பட்டம் ஏற்றது.*செம்மண்ணில் நன்றாக வளரும்.அரசு கொள்முதல் செய்யாத அல்லது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காத எந்தவிளைபொருளுக்கும் விலை உத்தரவாதம் கிடையாது. அதற்கு வாழையும் விதிவிலக்கல்ல. மாதப் பயிர்களில் வெள்ளாமை செய்யும் பயிர்களுக்கு விலை கிடைக்காமல் போனாலே, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். இந்த நிலையில் வாழை போன்ற ஆண்டுப் பயிர்களுக்கு விலை இல்லாமல் போனால், என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால், ‘வாழை சாகுபடியில் அப்படிப்பட்ட சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து நஷ்டமில்லாமல்...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites