இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Saturday, March 7, 2015

புதுமையான கஸ்டமைஸ்டு தோரணம்

ஏழாவது படிக்கிறதுலேருந்து கைவினைப் பொருட்கள் பண்றேன். இப்ப எனக்குக் கிட்டத்தட்ட 500 வகை கைவினைக் கலைகள் தெரியும். புதுசா எதைக் கத்துக்கிட்டாலும், அதுல என்னோட கிரியேட்டிவிட்டியை கலந்து, சின்னதா ஒரு வித்தியாசம் காட்டுவேன். அதுதான் என் ஸ்பெஷல்’’ என்கிறார் பாலக்காட்டைச் சேர்ந்த ஜோதிலட்சுமி. கேரளாவில் பரபரப்பான கைவினைக் கலைப் பயிற்சியாளராக இருக்கும் ஜோதிலட்சுமியின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு கஸ்டமைஸ்டு தோரணம்!அதென்ன கஸ்டமைஸ்டு தோரணம்?‘‘மணி, முத்து, பேப்பர், உட்... இப்படி எதை வேணாலும் வச்சு தோரணம் பண்ணலாம். நான் பண்றதுல கிரிஸ்டல் உருவங்கள் மட்டுமே இருக்கும். கேரளாவுல இந்த கிரிஸ்டல் உருவங்கள் எனக்குக் கிடைச்சது. கிரிஸ்டல் என்பதால ரெண்டு பக்கமும் டிரான்ஸ்பரன்ட்டா இருக்கும். எந்தப் பக்கத்துலேருந்து பார்த்தாலும் பளபளக்கும். அதை வச்சு தோரணம் பண்ணினப்ப பயங்கர வரவேற்பு. கணபதி, குபேரன்னு சாமி உருவங்கள்லயும்...

அழகான கார் டேங்ளர்ஸ்

திங்க் பிக்’ என்பார்கள். சென்னையைச் சேர்ந்த ராணியோ, அதையே உல்டாவாக சிந்தித்திருக்கிறார். ‘திங்க் ஸ்மால்’ என்கிற அவரது ஐடியாதான் இன்று அவரை பரபரப்பான தொழில் முனைவோராக வைத்திருக்கிறது. பெரிய பெரிய பொம்மைகள் செய்யத் தெரிந்தாலும், குட்டிபொம்மை களுக்கான வரவேற்பை அறிந்து, அதிலேயே கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டவர் இவர்!‘‘பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எல்லாரையும் போலத்தான் நானும் பொழுதுபோக்கா நிறைய கைவேலைகளைக் கத்துக்கிட்டேன். ஹேண்ட் எம்பிராய்டரி, மியூரல், ரங்கோலி, பொம்மை பண்றதுனு நிறைய தெரியும். ஒரு ஸ்கூல்ல கிராஃப்ட் கிளாஸ் எடுக்கறேன். குழந்தைங்களுக்காக குட்டிக்குட்டி பொம்மைகள் பண்ணிக் காட்டுவேன். அப்படி நான் பண்ற பொம்மைகளை நிறைய பேர் கார்ல தொங்கவிட வாங்கிட்டுப் போயிருக்காங்க. தொடர்ந்து அந்த பொம்மைகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது தெரிஞ்சதும், கார் டேங்ளர்ஸ் பண்றதுலயே ஸ்பெஷலைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். கார்ல...

விதம் விதமான பிரியாணி

எதற்கெடுத்தாலும் ட்ரீட் கேட்கிற மக்களின் முதல் சாய்ஸ் பிரியாணி. தினமுமே பிரியாணி சாப்பிட்டாலும் அலுக்காது சிலருக்கு. எங்கே, என்ன பிரியாணி பிரபலம் எனத் தேடித் தேடி ருசி பார்க்கிற கூட்டமும் உண்டு. பிரியாணி விஷயத்தில் மட்டும் மக்கள் அத்தனை சீக்கிரத்தில் திருப்தி அடைவதில்லை. எங்கே சாப்பிட்டாலும், எப்போதும் ஏதோ ஒன்று குறைவதாகவே உணர்வார்கள். குறிப்பாக வீட்டுச் சுவை எந்த பிரியாணியிலும் இருக்காது. சென்னை திருமழிசையைச் சேர்ந்த விஜயலட்சுமியின் கைவண்ணத்தில் தயாராகிற விதம் விதமான பிரியாணிகளில் சுவை, மணம், வீட்டில் தயாரித்தது போன்ற உணர்வு என எல்லாம் உண்டு!‘பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிருக்கேன். பத்து வருஷமா பியூட்டிஷியனா இருக்கேன். அதுதான் என்னோட முழு நேரத் தொழில். வீட்ல வெரைட்டியா சமைச்சு எல்லாருக்கும் பரிமாறுவேன். குறிப்பா பிரியாணி செய்யறதுல நான் எக்ஸ்பர்ட். வாரம் ஒரு வெரைட்டியில பிரியாணி பண்ணுவேன்....

செல்லப் பிராணிகள்

PrevNext PrevNext PrevNext PrevNext PrevNext PrevNext PrevNext PrevNext PrevNext சென்னை, கே.கே.நகரில் உள்ள பாக்யலட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்தால் முதலில் நம்மை வரவேற்பவர்கள் அவர் வீட்டுச் செல்லப் பிராணிகள். குட்டியும், பெரிசுமாக வீடு கொள்ளாத செல்ல நாய்களின் கூட்டம்... நாய்க்குட்டிகளை வளர்த்து விற்பனை செய்கிற வேலையை அத்தனை அன்பாகச் செய்கிறார் பாக்யலட்சுமி!‘‘என் பொண்ணுக்கு பக் இன நாய்க்குட்டி ஒண்ணு கிஃப்ட்டா வந்தது. அதை ஆசையா வளர்த்திட்டிருந்தோம். அதை வளர்க்கிற அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது. எங்க வீட்ல ஒரு நபரா நேசிச்சோம். நாய்கள் மேல எங்க பிரியம் அதிகமானதால, செயின்ட் பெர்னார்டு இன...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites