இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Saturday, January 31, 2015

சம்பங்கி... சாமானியனின் வங்கி

'பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடு’ என்பது புகழ்பெற்ற பொன்மொழி. 'பசுமை விகடன்’, கடந்த எட்டு ஆண்டு காலமாக இதைத்தான் செய்து வருகிறது! பசுமை விகடன் மூலமாக சம்பங்கி விவசாயத்தில் கால்பதித்த ஒரு விவசாயி, 'மீன்பிடிக்கக் கற்றுக்கொடு’ எனும் ஒப்பற்ற கோட்பாட்டை தானும் கையில் எடுக்க, சக விவசாயிகள் சிலரும் தற்போது சம்பங்கி விவசாயிகளாக தெம்போடு நடைபோடுகின்றனர்! மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் வருமானம் தரும் சம்பங்கியையும் சிறிது இடத்தில் நடவு செய்வார்கள். பெரும்பாலும் ரசாயன முறையில் சாகுபடி செய்யப்பட்டு வந்த சம்பங்கியை, இயற்கை முறையில் விளைவித்து அதிக வருமானம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்தவர், திண்டுக்கல்...

பூஜைக்கு ஏற்ற பூவன்...மகசூல்

பழத்தில்  1 லட்சத்து 12 ஆயிரம்...  இலையில்  1 லட்சத்து 98 ஆயிரம்! வாழைப்பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆண்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும்... பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை. இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் இல்லாமல், திரட்சியாக இருப்பதுடன் கூடுதல் சுவையும் கொண்டிருப்பதுதான் கிராக்கிக்குக் காரணம். பொங்கல் சமயத்தில் திருவையாறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான வாழைத்தார்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கின்றன....

ஆர்டர்கள் வந்துட்டே இருக்கும்

கிராஃப்ட் பொருட்கள் செய்யறதுக்கான மெட்டீரியல்களை வாங்கக்கூட கணவர் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கு” - எங்கிட்ட கிராஃப்ட் வகுப்புகளுக்கு வரும் பெண்கள் பலரும் இப்படி சொல்லக் கேட்டிருக்கேன். ஒரு காலத்துல இந்த நிலையில் இருந்தவதான் நானும். இன்னிக்கு மாசம் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். அதனால, நம்பி கத்துக்கோங்க, நம்பிக்கையோட களத்துல இறங்குங்க, நாளைக்கு நம் தேவைகளை மட்டும் இல்ல… குழந்தைகள், வீட்டுச் செலவுனு எல்லாத்தையும் நாமே பார்த்துக்கலாம்னு கிராஃப்ட் வகுப்புகளுக்கு வர்ற பெண்களுக்கெல்லாம் சொல்வேன். இதுதான் உண்மை!” - சிரித்த முகத்தோடு ஆரம்பித்தார் சென்னை, பெரம்பூர் அருகேயுள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரன். ”சின்ன வயசுல என்னோட...

பிஸ்தா ஓட்டில் கலைப்பொருட்கள்

உபயோகமில்லை எனத் தூக்கி எரிகிற பொருட்களில் கூட கண்களைக் கவரும் கலைநயமிக்க பொருட்களை உருவாக்கலாம் என்கிறார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கல்பனாஸ்ரீ. பிஸ்தா பருப்பின் ஓடுகளை வைத்து இவர் உருவாக்கும் ஒவ்வொரு கை வினைப் பொருளும் கொள்ளை அழகு!‘‘சின்ன வயசுல ஸ்கூல்ல கைவினைக்கலை கிளாஸ்ல நிறைய கத்துக்கிட்டேன். கல்யாணமாகி, குழந்தைங்க, குடும்பம்னு வந்ததும் எல்லாத்தையும் தற்காலிகமா மறக்க வேண்டியிருந்தது. குழந்தைங்க பெரிசாகி, பொறுப்புகளை முடிச்சு, நிறைய நேரம் கிடைச்சப்ப, மறுபடி பழைய ஆர்வங்களை தூசி தட்டி செய்ய ஆரம்பிச்சேன். அதுக்குப் பிறகு கைவினைக் கலைஞர்களை அடிக்கடி சந்திச்சேன். புதுசு புதுசா நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஒவ்வொருத்தரோட கற்பனையும் கைத்திறனும் பிரமிக்க வச்சது. ஒருமுறை தீபாவளிக்கு நிறைய பிஸ்தா பருப்பு அன்பளிப்பா வந்தது. பருப்பை சாப்பிட்டு, அதோட ஓட்டை தூக்கி எறிவோம். அப்படி இறைஞ்சு...

குட்டீஸ் குல்லா பூட்டிஸ்!

குட்டீஸ் குல்லா பூட்டிஸ்!பனிக்காலம் பக்கத்தில் இருக்கிறது. சென்ற வருடம் வாங்கிய குழந்தைகளின் குல்லாவும் பூட்டிஸும் சிறியதாகிப் போயிருக்கும். ‘‘அதனால என்ன? நீங்களே உங்க கைப்பட புதுசா பின்னிட்டா போச்சு...’’ என்கிறார் சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜலஜா. ‘குல்லாவும் சாக்ஸும் பின்றதென்ன அவ்ளோ ஈஸியான விஷயமா?’ எனக் கேட்பவர்களுக்கு ஜலஜாவின் பதில் ஆச்சரியம் தரலாம்!‘‘நிட்டிங்னு சொல்ற அடிப்படை பின்னல் வேலை தெரிஞ்சா போதும். குல்லாவும் பூட்டிஸும் பின்றது ரொம்பவே ஈஸி. நிட்டிங் தெரியணும்னு சொன்னதும் பயப்பட வேண்டியதில்லை. வெறும் அரை மணி நேரத்துலயே அதையும் கத்துக்கலாம்...’’ என்கிறவர், நிட்டிங் தெரிந்தால், உல்லன் நூல் கொண்டு குல்லா, குழந்தைகளுக்கான பூட்டிஸ், ஸ்கார்ப், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான தொப்பி உள்ளிட்ட எல்லாம் பின்னி விடலாம் என உத்தரவாதம் தருகிறார்.‘‘உல்லன் நூல், நிட்டிங் ஊசினு ரெண்டு...

ஜடை மாலை கொண்டை

சீவி முடிச்சு சிங்காரிச்சு.... சிவந்த நெற்றியிலே பொட்டும் வச்சு...’ என்றெல்லாம் இந்தக் காலத்து மணப்பெண்களைப் பார்த்துப் பாட முடியாது.  பின்னலை மறந்து, தலைவிரி கோலமாகத் திரிகிற அவர்கள், திருமண நாளன்றும் அப்படியே இருக்க விரும்புகிறார்கள். எத்தனை குட்டி கூந்தலையும்  பின்னி, ஜடை வைத்துத் தைத்து அலங்காரம் செய்த அந்த நாட்கள் மறைந்து கொண்டிருக்க முக்கிய காரணம் நேரமின்மை... பொறுமையின்மை...‘உண்மைதான்... ஆசை இருந்தாலும் இன்னிக்கு ஜடை தைக்கவோ, கொண்டை அலங்காரம் பண்ணவோ யாருக்குமே நேரமும் பொறுமையும்  இருக்கிறதில்லை. பியூட்டி பார்லருக்கு போய் ஹேர் ஸ்டைல் பண்ணிட்டு வந்துடறாங்க. இதே நிலைமை தொடர்ந்தா, ஜடை தைக்கிற கலாசாரமே  நம்மை விட்டு மறைஞ்சாலும் ஆச்சரியமில்லை’’ என்கிறார் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த நளினி.‘‘முன்னல்லாம் ரிசப்ஷனுக்கு மட்டும்தான் மாடர்ன் ஹேர் ஸ்டைல் பண்ணிட்டிருந்தாங்க. இப்ப...

பட்டு நூல் நகைகள்

திருமணம் என்றாலே பட்டுக்குத்தான் முதலிடம். புடவையும் ஜாக்கெட்டும் மட்டும்தான் பட்டாக இருக்க வேண்டுமா என்ன? அணிகிற நகைகளிலும் அதன் பிரதிபலிப்பு தெரிய வேண்டாமா? பகட்டாகவும் பாந்தமாகவும் காட்டக் கூடிய பட்டுநூல் நகைகள் பற்றிச் சொல்கிற ஷர்மிளா, அவற்றை உருவாக்குவதில் நிபுணி!‘‘ஐம்பதாயிரம் கலர்ல பட்டுப்புடவை வாங்கி உடுத்தணும்னு ஆசைப்பட்டீங்கன்னாலும், அத்தனை கலர்களுக்கும் மேட்ச்சா நகை வேணும்னா, பட்டுநூல் ஜுவல்லரியில மட்டும்தான் சாத்தியம். பட்டுநூலை வச்சு, வளையல், தோடு, ஜிமிக்கி, ஆரம், பிரேஸ்லெட், நெக்லஸ்னு எது வேணாலும் பண்ணலாம். வேற எந்த கவரிங் நகைகள்லயும் புடவையோட உடல் மற்றும் பார்டர் கலரோட அச்சு அசலா மேட்ச்சாகிற மாதிரி கிடைக்காது. பட்டுநூல் நகைகள்ல...

நைஸ்... நல்ல நைட்டி

வசதியான உடையாக மட்டுமின்றி, அவசிய உடையாகவும் மாறிவிட்டது நைட்டி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அணிகிற உடையாகவும் மாறிவிட்ட நைட்டியின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. சல்வாரோ, சேலையோ வாங்கிவிடலாம் என்கிற அளவுக்கு நைட்டியின் விலை அதிகரித்திருக்கிறது. ‘‘தையல் மெஷின் மிதிக்கத் தெரிஞ்சா போதும். நைட்டி தைக்கக் கத்துக்கலாம். அதையே ஒரு பிசினஸாகவும் பண்ணலாம்’’ என்கிறார் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா.‘‘பி.காம் முடிச்சிட்டு, எம்.பி.ஏ. பண்ணியிருக்கேன். வேலைக்குப் போயிட்டிருந்தேன். வீட்ல வயசானவங்களைப் பார்த்துக்கறதுக்காக வேலையை விட வேண்டி வந்தது. டெய்லரிங் தெரியும். எனக்கான பிளவுஸ், சுடிதார், நைட்டியெல்லாம் பல வருஷமா நானாதான் தச்சுப் போடறேன். வேலையை...

கடவுள் உடை கச்சித மாலை

அம்மனுக்கு சிவப்புல ஜரிகை வச்ச புடவையும், அன்னப்பூரணிக்கு தங்க நிறத்துல தகதகனு மின்னும் சேலையும், பாபாவுக்கு ஆரஞ்சு கலர் அங்கியும், கிருஷ்ணருக்கு வெண்பட்டுல பஞ்சகச்சமும் எவ்வளவு அழகு தெரியுமா? உங்க வீட்டு பூஜை ரூம் எவ்வளவு சின்னதா வேணா இருக்கட்டும். காஸ்ட்லியான சாமி சிலைகள் இல்லாம இருக்கட்டும். அதனால என்ன? இருக்கிற சாமி உருவங்களுக்கு நீங்க விதம் விதமா தச்சு அணிவிக்கிற உடையும் மாலைகளும் உங்க பூஜை ரூமையே அட்டகாசமாக்கிடும்’’ என்கிறார் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த திலகவதி. சாமி உருவங்களுக்கான உடைகள் மற்றும் மாலைகள் தயாரிப்பதில் நிபுணி இவர்! ‘‘பிளஸ் டூ படிச்சிருக்கேன். கல்யாணத்துக்குப் பிறகு கணவர், பிள்ளைகள், வீட்டு வேலை, சமையல்னு காலம் போச்சு....

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites