இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Tuesday, October 14, 2014

பலன் தரும் பப்பாளி சாகுபடி

பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன். திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார். பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது: “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம். எனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல்...

பணம் காய்க்கும் பந்தல்

12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்... ...! ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய் புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு... விவசாயம், பொன்முட்டையிடும் வாத்துதான்’ என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி. கேத்தனூர், ஆறு, குளம், வாய்க்கால்... என இயற்கை நீராதாரத்துக்கு வாய்ப்பில்லாத ஊர். ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம். வறண்டு கிடக்கும் பாசனக் கிணறுகள்... இப்படியான சூழலிலும் 'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம்...

வனம் தரும் பணம்

தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டம் .... பளிச்... பளிச்...ஏக்கருக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை.வேலையாட்கள் பிரச்னைக்குத் தீர்வு.4-ம் ஆண்டு முதல் வருமானம். வானம் பாத்த பூமி, போக்குக் காட்டும் மழை, சரியில்லாத மண்கண்டம், பற்றாக்குறைத் தண்ணீர், வேலையாட்கள் பிரச்னை என்று பல பிரச்னைகளைப் பார்த்து, பயந்து போய் நிலங்களைத் தரிசாகப் போட்டு வைத்திருக்கும் அப்பாவி விவசாயியா நீங்கள்...? அல்லது 'இனிமே வெள்ளாமை செஞ்சி ஜெயிக்க முடியாது.. பேசாம நிலத்தை வந்த விலைக்கு வித்துட்டு வேற பொழப்பைப் பாக்கலாம்" என யோசிப்பவரா...? எப்படி இருந்தாலும் அவசரப்படாதீர்கள்... உங்களைப் போன்றவர்களுக்காகவே தமிழ்நாடு வனத்துறையின் வன விரிவாக்கப் பிரிவு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி...

ஸ்க்ரீன் பிரின்ட்டிங்

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி. ராமசாமி தேசாய்பதில் அளிக்கிறார். ''நானும் கணவரும் கல்லூரி அருகில் புத்தகம் மற்றும் ஸ்டேஷனரி கடை வைத்துள்ளோம். கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யும் சிந்தனையில் இருக்கிறோம். பேனா, ஃபைல், தாம்பூல துணிப்பை போன்றவற்றில் பிரின்ட்டிங் செய்யும் ஸ்க்ரீன் பிரின்ட்டிங் பயிற்சி மற்றும் நேம் கீ செயின் (பிளாஸ்டிக் மாடல்) போடும் முறை, அதற்கான இயந்திரங்கள் கிடைக்கும் இடம் பற்றி கூறமுடியுமா?'' -...

Thursday, October 2, 2014

பிஸ்கட் தயாரிப்பு,ஏற்றுமதியும் செய்யலாம்

நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. தவிர, சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் கெடாது என்பது இதிலுள்ள இன்னொரு பெரிய பிளஸ் பாயின்ட். விதவிதமான சுவையோடு, தரமாகவும் பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு நம்மூர் பேக்கரிகள் நல்ல உதாரணம். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு...

சிறுதானிய பிஸ்கெட்

சிறுதானியங்களின் மீதான மக்களின் அக்கறையும் ஆர்வமும் அதிசயிக்க வைக்கின்றன. நீரிழிவு, பருமனால் பாதிக்கப்பட்டோர் மட்டுமே சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டது போக, இன்று ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிற அத்தனை பேரின் மெனுவிலும் அவை இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. இட்லி, தோசை, உப்புமா, அடை உள்ளிட்ட அத்தனை உணவுகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். சென்னையைச் சேர்ந்த அக்சீலியா அஷோக், சிறுதானியங்களில் சுவையான பிஸ்கெட் மற்றும் குக்கீஸ் செய்து அசத்துகிறார்!‘‘பிளஸ் டூ படிச்சிருக்கேன். பியூட்டிஷியன் கோர்ஸ், டெய்லரிங்னு பொழுதுபோக்கா கத்துக்கிட்ட பல விஷயங்கள்ல பேக்கரியும் ஒண்ணு. ஆரம்ப காலத்துல எல்லாரும் செய்யற மாதிரி மைதா...

பேப்பர் நகைகள்

பொற்செல்வியின் நகை கலெக்ஷனில் தோடு, ஜிமிக்கி, வளையல், செயின், பிரேஸ்லெட், மோதிரம், கொலுசு என எல்லாம் இருக்கின்றன. பார்ப்பதற்கு  ஆடம்பரமாகக் காட்சியளிக்கிற அவற்றைக் கையில் எடுத்துப் பார்த்தால், கனமின்றி இருக்கின்றன. ‘‘அத்தனையும் பேப்பர் ஜுவல்லரி’’ என அசத்தல்  பதில் தருகிறார் பொற்செல்வி. நம்ப முடியவில்லை. அத்தனை நேர்த்தி... அத்தனை கலர்ஃபுல்!‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். குடும்பச் சூழல் காரணமா வேலைக்குப் போக முடியலை. எம்பிராய்டரி, ஃபேஷன் ஜுவல்லரினு நிறைய கத்துக்கிட்டேன்.  அதுல பேப்பர் ஜுவல்லரியும் ஒண்ணு. அதிக முதலீடு தேவைப்படாத தொழிலா இருந்ததால அதையே இப்ப முழுநேர பிசினஸா பண்ணிட்டிருக்கேன்’’  என்கிற பொற்செல்வி, கற்பனையும் கலர்களோடு விளையாடும் திறனும் இருப்பவர்களுக்கு இந்தத் துறையில் பெரிய லாபம் காத்திருப்பதைக்  குறிப்பிடுகிறார்.‘‘தங்கம், வெள்ளியை விரும்பாத காலேஜ் பொண்ணுங்களுக்கும்...

காய்கறி ஜூஸ்

பழங்களில் ஜூஸ் தயாரிப்பதைப் போலவே காய்கறிகளிலும் தயாரிக்கலாம் என்கிற விவரம் பலருக்கும் தெரியாது. கேரட், நெல்லிக்காய் போன்ற ஒரு  சிலதில் மட்டுமே ஜூஸ் தயாரிக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுக்கு பலவிதமான காய்களில் பலவிதமான ஜூஸ் தயாரிக்க  முடியும் எனப் புதிய தகவல் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஜெகதா!‘‘நான் குழந்தையா இருந்தப்ப, வீட்ல யாருக்காவது வயிற்றுவலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம்னா எங்கம்மா, பாட்டியெல்லாம் உடனடியா காய்கறி  ஜூஸ் பண்ணித் தருவாங்க. உதாரணத்துக்கு தலைசுற்றல், வாந்திக்கு இஞ்சியும் எலுமிச்சையும் சேர்த்த ஜூஸ், வெயிலுக்கு வெள்ளரிக்காய் ஜூஸ்னு  எல்லா காய்கள்லயும் ஜூஸ் பண்ணித் தருவாங்க. அப்படித்தான் எனக்கும்...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites