இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Monday, January 13, 2014

லாபம் அள்ளும் கிரிஸ்டல் கொலுசு!

மாதம், 10 ஆயிரம் லாபமீட்டும், 'கிரிஸ்டல்' கொலுசு தயாரிக்கும் தொழில் பற்றி கூறும், காமாட்சி: நான், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆனதும், சென்னை, வேளச்சேரியில் செட்டில் ஆனேன். பட்டதாரியான  என்னால், வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.கணவரும், 'ஓய்வு நேரத்தில் ஏதேனும் கற்றுக்கொள்' என, ஊக்கமளித்தார். அதனால், எனக்கு விருப்பமான ஆர்ட் அண்ட் கிராப்ட் கற்றேன். மேலும், வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கைவினை பொருட்களை செய்து வந்தேன்.பெண்கள் விரும்பி அணியும் நகைகளில், கொலுசும் ஒன்று. ஆனால், அவைகள் பெரும்பாலும் வௌ்ளி கொலுசாகவே கிடைக்கின்றன. குறைந்த விலையில், பல வித வண்ண ஆடைகளுக்கு ஏற்ப, கிரிஸ்டல் கொலுசுகளாக செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற...

Wednesday, January 1, 2014

விபத்துக்குப் பின்னே விஸ்வரூப வெற்றி...நம்பிக்கையின் நிஜ உருவம் நிவேதா!

''இன்டர்னல் எக்ஸாம் வருது. ரெண்டு அசைன்மென்ட் வேற இன்னும் சப்மிட் பண்ணல. புராஜெக்ட் வொர்க்கும் பெண்டிங்ல இருக்கு. டைமே பத்தலப்பா...'' என்று புலம்பல்ஸில் இருக்கும் காலேஜ் கேர்ள்ஸ்... ப்ளீஸ் மீட் மிஸ் நிவேதா! சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ., சோஷியாலஜி படிக்கும் மாணவி, நிவேதா. படிப்பு தவிரவும், இவரின் செயல்பாடுகள் படர்ந்திருக்கும் தளங்கள் பல. பரபரப்பான எழுத்தாளர், பேச்சாளர், 'எக்ஸ்னோரா’வில் பொறுப்பான பணி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்’களுக்குச் செல்பவர், வெப் டிசைனர் என நீளுகிறது பட்டியல். இந்த 'பார்ட் டைம்' பணிகளால் மாதத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் நிவேதா!''வாவ்!''...

வியக்க வைக்கும் விவேகானந்தா வித்யா வனம்!

''வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, பாடப் புத்தகத்தை மட்டும் உருவேற்றும் கல்வி முறை, கல்வியில் சிறந்த மாணவர்களை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால், சிறந்த மனிதர்களை உருவாக்குவதில்லை. எங்கள் பள்ளி அப்படியல்ல, வாழ்க்கைக்குத் தேவையான விவசாயம், மூலிகைகள், இயற்கை... அத்தனை விஷயங்களையும் செய்முறையோடு கற்றுக் கொடுக்கிறது'' என பெருமையோடு சொல்கிறார்கள், திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ள ஸ்ரீவிவேகானந்தா வித்யா வனம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்.நெடுக வளர்ந்த வாழைகளும், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களும் வரவேற்க... பள்ளியில் நுழைந்தோம். முதலில், பள்ளிக்கு சுற்றுச்சுவரே இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. பின்னே, ஒரு தோட்டத்துக்குள்தானே...

பாடம் படிக்கும் மாடிச் செடிகள்!

விளைநிலங்கள் வீடுகளாக மாறும் காலம் இது. பசுமையின் அவசியத்தையும், இயற்கை உரங்களின் நன்மையையும் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்குப் போதிக்கிறது, சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி. ''எங்கள் பள்ளி மாடியில் ஒரு நந்தவனமே இருக்கு'' என்று அழைத்துச் சென்றார், பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு. அங்கே மொட்டை மாடியில், மதிய வெயிலின் வெப்பம் துளிகூடத் தெரியாத அளவுக்கு குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருந்தது. நிலத்தில் வளரும் செடிகளையே மிஞ்சும் வகையில் வெண்டை, கொத்தவரை, சோளம், காராமணிப் பயறு, முள்ளங்கி எனச் செடிகளின் அணிவகுப்பு.அங்கே வந்த சில மாணவிகள்... தேவையற்ற செடிகளை அகற்றுவது, பூச்சி உள்ள இலைகளைக் கிள்ளிப் போடுவது,...

வாழையில் புதிய தொழில்நுட்பங்கள்

பழைய முறையில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள வாழைத் தார்கள். (வலது)  புதிய தொழில் நுட்ப முறையில் சீப்புகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள  வாழைப் பழங்கள். வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக 25 முதல் 40 சதவீதம் வருவாய் பெறலாம் என்று வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் பழங்களில் வாழை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. நமது நாட்டில் கணிசமான அளவு வாழைப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்ட வாழைப் பழத்தை நீண்ட நாள் சேமித்து வைக்க அதன்...

கொசு வத்தி்(Coil))சுருள் தயாரிப்பு

சுய தொழில்கள் வரிசையில் கொசு விரட்டி தயாரிப்பது பற்றி பதிவு போட்ட நாளிலிருந்து இன்று வரை நிறைய பேர் மிக்க ஆர்வத்துடன் தொலை பேசி, மெயில்கள் மூலமாக மேலதிக விவரங்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். அவர்களுக்காக இத் தொழில் பற்றி மேலும் சில விவரங்கள் திரட்டிக் கொடுக்கலாம் என எண்ணி, மீண்டும் இத் தொழில் செய்து வரும் நண்பர், ராம நாதன்(குனியமுத்தூர்) அவர்களை சந்திக்க கோவை சென்றேன். அவரிடமிருந்து பெற்ற விளக்கங்களையும், கொசு வத்திச் சுருள் தயாரிப்பு முறை பற்றியும் இங்கு தருகிறேன். இவர் ஏற்கனவே...

பேப்பர் கவர் தயாரிப்பில் அசத்தும் தோழிகள்

வீட்டில் காகிதம் கிடந்தால் குப்பை தொட்டியில் போடுவதற்கு பதில் கொஞ்சம் யோசித்தால் போதும்; சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு. பணமாக்கவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் ஊட்டி தோழிகள் காஞ்சனா, ஜெனீபர் ஆகியோர். மிக குறைந்த வருமானம் கொடுத்த தொப்பி தைக்கும் தொழிலை விட்டு பழைய பேப்பரை வாங்கி காகித பை தயாரிக்க ஆரம்பித்தவர்களுக்கு தற்போது மாதம் தோறும் நிலையமான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. ஊட்டி ஹில்பங்க் அருள் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெனிபர், ராஜா என்பவரின் மனைவி காஞ்சனா. இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தொப்பி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது ஒரு தொப்பி தயாரித்து கொடுத்தால் (தைப்பது) ரூ.1...

அதிக லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்!

ஏ.கருணாகரன் : சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன். பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது....

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites