இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Saturday, December 6, 2014

உழைக்கத் தயாரா? உதவத் தயார்!

எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத்  தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.‘படிச்சிருந்தாலாவது வேலைக்குப் போகலாம்’ எனப் படிக்காத பெண்களும்,  ‘படிச்சிருந்து என்ன செய்ய... வீட்டை விட்டு வேலைக் குப் போக அனுமதியில்லை’ எனப் படித்த பெண்களும், ‘படிப்பும் இருக்கு. ஏதாவது  செய்யணும்கிற துடிப்பும் இருக்கு. வழிதான் தெரியலை’ எனப் புலம்புகிற பெண்களும் நம்மிடையே பரவலாக உண்டு. இந்த மூன்று தரப்பினரின் ஏக்கங்களையும் போக்கி, பொருளாதார சுதந்திரத்துக்கு வழி காட்டுகிற அமைப்பு ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர்  சங்கம்’ - Women Entrepreneurs...

தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சில ஐயப்பாடுகள்...

எழ வேண்டும் என்றுஆசைதான்ஒருவேளைதலை வானத்தில் இடித்து விட்டால்?எதற்கு வம்புபடுத்திருப்பதே பாதுகாப்பு...இது ஒரு புதுக் கவிதை...'-இன்று நம்மவர்களில் சிலரின் மன இயல்பைக் காட்டிடும் ஒரு உரைகல் போல இந்தக் கவிதை உள்ளது. ஒரு செயலைச் செய்யாமல் வீணே இருப்பதற்கு சொல்லக்கூடிய பொய்யான காரணங்கள் பல. அவற்றை சோம்பேறித்தனம், அச்சம், முயற்சியின்மை, தயக்கம், தன்னம்பிக்கையின்மை என்று பெரிய பட்டியலே இடலாம். இது ஒருபுறம் இருக்க... தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சில ஐயப்பாடுகள்... என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்று கூட தெரியாத நிலை... நம்மைச் சுற்றிப் பல தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அதை இனம் காண முடியாத தன்மை...முதலில் நாம் தொழிலினை தேர்ந்தெடுக்கும்...

வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

 அதற்கு நம் திறமை என்ன என்பதையும் அதனை நாம் எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றோம் என்பது தான் முக்கியம்.எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத் தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.பெண்கள் வீட்டு வேலை போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல்.காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்கள் தங்களுக்கு உடுத்த உடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை!அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள்...

Wednesday, December 3, 2014

ஏக்கருக்கு 650 கிலோ... மானாவாரியில் மகிழவைத்த ஜீரோ பட்ஜெட் உளுந்து..!

''இந்தப் பகுதிகள்ல ஏக்கருக்கு 300 கிலோ உளுந்து மகசூல் எடுக்கறதே, பெரிய விஷயம். ஆனா, எனக்கு ஏக்கருக்கு 650 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. ஜீரோ பட்ஜெட் விவசாயம்கிறதால பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லாம திரட்சியா விளைஞ்சுருக்கு'' என சக நண்பர்களிடம் எல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், சுப்ரமணியன். இச்செய்தி நமக்கும் எட்டவே, கோவிந்தபுரம் தேடிச் சென்று, தோட்டத்தில் உளுந்து புடைத்துக் கொண்டிருந்த சுப்ரமணியனைச் சந்தித்தோம். ''15 வயசுலேயே விவசாயத்துல இறங்கிட்டேன். இது செம்மண்ணும் லேசா களியும் கலந்த பூமி. எங்க குடும்பத்துக்கு மொத்தம் 25 ஏக்கர் நிலம் இருக்கு. 20 ஏக்கர்ல நெல்லும், 4 ஏக்கர்ல தென்னையும் சாகுபடி...

தென்னை... பப்பாளி... வாழை...

தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி... காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவது... கூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்... என்று சில தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பது... இந்தக் கால விவசாய பாணியாக இருக்கிறது! அந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், வேலூர் மாவட்டம், பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி. ஆரணியில் இருந்து, செய்யாறு செல்லும் சாலையில் பயணித்தால்... இருபதாவது கிலோ மீட்டரில் வருகிறது,...

பால் தினசரி ரூ. 7,500... மண்புழு தினசரி ரூ.7,000...

“மதிப்பு கூடும் மாட்டுப் பண்ணை..!” 68 வயதிலும் அசத்தும் விவசாயி! ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய் மாத்தி யோசி ‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... சென்றது செலவு’ என்கிற கதையாகத்தான் போய் கொண்டிருக்கிறது, விவசாயிகள் வாழ்க்கை. பெரும்பான்மையான விவசாயிகள் விற்பனை வாய்ப்பு பற்றி யோசிப்பதே இல்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், எல்லப்பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.பி. சுப்பிரமணியன். 68 வயது இளைஞரான இவர், சுறுசுறுப்பாக 35 ஏக்கரில் விவசாயம் செய்வதோடு, பால் பண்ணையையும் நடத்தி...

தகதகக்கும் இயற்கைத் தக்காளி...

நேரடி விற்பனையில், ரூ.1 லட்சம் கூடுதல் லாபம்! ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய் கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்... அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில், என்ன விலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே சரியாகிப்போய், வெறும் கோணிப்பையுடன் வீடு திரும்பும் நிலையும் விவசாயிகளுக்கு ஏற்படுவது உண்டு. ‘இதை மாற்ற வழியே இல்லையா?’ என்ற ஏங்கும் விவசாயிகள் ஒரு பக்கம் இருந்தாலும்... சில விவசாயிகளே வியாபாரிகளாக மாறி, தரகு இல்லாமல் லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில், திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அடுத்துள்ள...

விதவிதமான ரகங்கள், கூடுதல் மகசூல் கொடுக்கும் உதயம் வாழை!

ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடிக்கான பட்டம், மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும், சில வாழை ரகங்களைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் எம்.எம். முஸ்தபா மற்றும் முதன்மை விஞ்ஞானி எஸ். உமா.  களர், உவர் நிலத்துக்கு ஏற்ற கற்பூரவல்லி! களர், உவர் மண் வகைகளிலும், வறட்சியிலும் தாங்கி வளரக்கூடியது, கற்பூரவல்லி ரகம். மரங்கள் தடித்து வளர்வதுடன், உயரமாகவும், பெரிய இலைகளுடனும் காணப்படும். பழங்கள் நடுத்தர அளவுடன், பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக...

இனிப்பான லாபம் கொடுக்கும் 'ஸ்வீட் கார்ன்’

ஒரு ஏக்கர்... 90 நாட்கள்... ரூ.90 ஆயிரம்..! "தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்... தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்'' கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இவை. இது விவசாயத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்கும் விதமாக... புதுப்புது விஷயங்களைத் தேடி அலைந்து தெரிந்துகொண்டு, 'ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்பு மக்காச்சோளத்தை சாகுபடி செய்து, நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், சு. கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர். ஒரு காலைவேளையில் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த சேகரைச் சந்தித்தோம். ''நான் ஒண்ணரை வயசு குழந்தையா இருந்தப்பவே அப்பா இறந்துட்டார். அம்மாதான், வெண்டைக்காய்,...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites