இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Tuesday, June 25, 2013

வண்ண பட்டுப்புழு வளர்ப்பு திட்டம் நிறுத்தம் : வரவேற்பு இல்லாததால் தோல்வியில் முடிந்தது

இந்தியாவில், முதல் முறையாக, வண்ணப் பட்டுப் புழுக்களை உற்பத்தி செய்து, அதன் மூலம், 22 வண்ணப் பட்டு நூல் தயாரிக்கும் திட்டம், ஜவுளி நிறுவனங்களிடம், வரவேற்பு இல்லாததால், கைவிடப்பட்டுள்ளது.உலக அளவில், பட்டு உற்பத்தியில், சீனா, முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும் உள்ளன. தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், 25 ஆயிரம் விவசாயிகள், பட்டு நூல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை, பட்டுப் புழுக்கள் மூலம், வெள்ளை மற்றும் மஞ்சள் பட்டுக் கூடுகளை மட்டுமே, விவசாயிகள் உற்பத்தி செய்தனர். இவற்றை, தரம் பிரித்து, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், சாயப் பட்டறைகளுக்கு அனுப்பி, விரும்பும் வண்ணங்களில்,...

Sunday, June 9, 2013

போளி விற்கும் நிஜமனிதர் .

சுட்டெரிக்கும் பகல் 12 மணியின் போது தஞ்சாவூர் கடைத்தெரு வழியாக, ஒரு பெரியவர் வெயிலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தலையில் ஒரு துண்டோ அல்லது தொப்பியோ கூட அணியாமல் சைக்கிளில் போளி வியாபாரம் செய்தபடி சென்று கொண்டிருந்தார். அவரைப்பார்த்த மாத்திரத்திலேயே, அவருக்கு பின்னால் ஒரு சுவராசியமான தகவல் இருக்கும் என்று தஞ்சாவூர் தினமலர் புகைப்படக்காரர் மணிகண்டனின் மனதில் பட, அதற்கான தேடலை தொடங்கினார். 57 வருடங்களாக தெருவில் போளி வியாபாரம் செய்தே பத்து வீடு வாங்கி, தனது ஏழு பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த அந்த பெரியவரைப் பற்றி சுருக்கமான கதை இது. விருதுநகரைச் சேர்ந்த பாண்டிக்கு இப்போது 76 வயதாகிறது. மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை,...

Thursday, June 6, 2013

இந்திய பொருளாதாரம்..

 நம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு சிறு தொழில் செய்பவருடனோ, சேல்ஸ் வேலையில் இருப்பவருடனோ கொஞ்ச நேரம் செலவழித்து பாருங்கள் புரியும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்குள் ஆயிரம் பிரச்சனை. உற்பத்தி முடிந்து அதை விற்பனைக்கு அனுப்பும் போது, வாங்க ஆள் இல்லை. எனக்கு தெரிந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வியாபாரம் கம்மி. அப்படியே நடக்கும் வியாபாரம் கூட கடனுக்கு தான் நடக்கிறது. பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை ஆட்சி செய்யும் பொருளாதார வல்லுனர்களின் சில அரசியல்/ஓட்டு...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites