இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Friday, November 30, 2012

கர்ச்சீஃப் முதல் கல் நகை வரை

ஈரோடு பெரியவலசுப் பகுதியைச் சேர்ந்த சர்மிளாவின் கைவசம் 65 கைவினைத் தொழில்கள் இருக்கின்றன. அதன் மூலம் சம்பாதிப்பதோடு பெண்களுக்குக் கற்றுத்தரவும் செய்கிறார். ''கல்யாணம் ஆன புதுசில் எனக்குச் சம்பாதிக்கிற எண்ணம் எதுவும் இல்லை. ஆனா, ரெண்டு குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டிய கட்டாயம். அதனால், தையல் வகுப்பில் சேர்ந்தேன். முதல்ல கர்ச்சீஃப் தைக்கச் சொல்லித் தந்தாங்க. நான் கர்ச்சீஃப் தைச்சு அதுக்கு நடுவில் பூ டிசைனும் போட்டுக் கொடுத்தேன். கொஞ்ச நாள்ல வீட்டிலேயே தையல் மெஷின் வாங்கிவெச்சு பிளவுஸ் தைக்க ஆரம்பிச்சுட்டேன். ரொம்ப நேர்த்தியா நான் தைக்கிறதைப் பார்த்துட்டு, கணிசமான கஸ்டமர்கள் உருவானாங்க....

Thursday, November 29, 2012

எந்த ஊரில் என்ன வாங்கலாம்

பட்டுப் புடவைகளுக்கு பெயர் போனது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் நம்மூர் பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் ரெண்டே ரெண்டுதான். ஒன்று தங்கம், மற்றொன்று பட்டுப் புடவை. இந்த பட்டுப் புடவைகளுக்கு பெயர் போனது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம். முகூர்த்த நாட்கள் இருக்கும் எல்லா மாதங்களுமே இங்கு பட்டுப் புடவை வாங்கும் 'சீசன்’தான்.'பட்டுநூல்காரர்கள்’ என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்களே திருபுவனத்தில் அதிகம்.தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னருக்கு பல விதமான பட்டுத் துணிகளை வடிவமைத்து தருவதற்காக இந்த ஊரில் குடியேறிய இவர்கள், இன்றைக்கும் பட்டுப் புடவை உற்பத்தியில் தமிழகத்திலேயே தலைசிறந்து...

எந்த ஊரில் என்ன வாங்கலாம்

சிதம்பரம் கவரிங் நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது தங்கம். எனவே, தங்க நகை போலவே டிசைன், அதே ஜொலிப்பு உள்ள விலை குறைவான கவரிங் நகைகளுக்கு மவுசு கூடிக்கொண்டே வருகிறது.கவரிங் நகைகள் எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது என்றாலும், அதற்கு தாய் வீடு என்னவோ சிதம்பரம்தான். பெரும் போட்டி வந்தபிறகும் அந்த பெருமையை இன்றும் தக்க வைத்திருக்கிறது சிதம்பரம். தமிழகத்தின் பல நகரங்களிலிருந்தும் கவரிங் நகைகளை சிதம்பரத்திலிருந்துதான் கொள்முதல் செய்கின்றனர். சிதம்பரத்தில் கவரிங் நகைகளை செய்வதற்கென்றே பல குடும்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அப்பாபிள்ளைத் தெரு, இளமையாக்கினார் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு போன்ற இடங்களில் கவரிங் நகைகள் முழுமூச்சாக...

ஏற்றுமதி செய்வதற்கான தகுதி, முன்னேற்பாடுகளைக் குறித்து விளக்கிச் சொல்லுங்கள்!

ஏற்றுமதி செய்வதற்கான தகுதி, முன்னேற்பாடுகளைக் குறித்து விளக்கிச் சொல்லுங்கள்! மாரிக்கண்ணன், கோவில்பட்டி. ''அப்படி எதுவும் இல்லை..! ஏற்றுமதி பற்றி ஓரளவுக்கு விஷய ஞானம் இருந்தால் போதும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு என பிரத்யேக எண் இருக்கிறது. இதை 'எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் கோட்’ என்பார்கள். அதனை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். இதை வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரக (DGFT - Director General of Foreign Trade)  அலுவலகத்தில் பெற வேண்டும். தமிழ்நாட்டில் இதன் அலுவலகங்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயங்கி வருகின்றன. இந்த ஏற்றுமதி எண்ணை பெற ஏற்றுமதி செய்பவர் அல்லது நிறுவனத்தின் பெயரில் பான் கார்டு இருக்க வேண்டும். மேலும்,...

எந்த ஊரில் என்ன வாங்கலாம்!பிரம்பு பொருட்

வீடு முழுக்க என்னதான் அலங்காரப் பொருட்களை வாங்கி அடுக்கினாலும்,  ஒரு பிரம்பு சோஃபா இருந்தாலேப் போதும், உங்கள் வீடு மாடர்னாக  மாறிவிடும். இன்றைக்கு பிரம்புக்கூடை எல்லா நகரங்களிலும் விற்பனை  ஆகிறது என்றாலும், அதை குறைந்த விலையில் வாங்க வேண்டும்  என்றால் அதற்கு தமிழகத்திலேயே பெஸ்ட் இடம், சீர்காழிதான். பிரம்பு பொருட்கள் செய்வதையே பிரதானத் தொழிலாகக் கொண்டிருக்கும்  தைக்கால் கிராமம் சீர்காழிக்கு அருகில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து  மயிலாடுதுறை வழியில் சீர்காழிக்கு முன்பே கொள்ளிடம் கரையில்  இருக்கிறது இந்த ஊர். இங்கு கடைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்ட  விதவிதமான பிரம்பு பொருட்களை வரிசைக்கட்டி வைத்திருப்பதே  அழகுதான். இந்த...

எந்த ஊரில் என்ன வாங்கலாம்

எந்த கொண்டாட்டமாக இருந்தாலும் அதை மறக்க முடியாத நாளாக மாற்றுவதில் புத்தாடைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. இப்போதெல்லாம் பண்டிகைக் காலங்கள் என்றுதான் இல்லை; கையில் காசு இருந்தால் கலர் கலரா, டிசைன் டிசைனா ஆடைகளை எடுத்துப்போட்டு அழகு பார்க்கும் ஆர்வம் எல்லோருக்குமே வந்துவிட்டது. காலத்துக்கு ஏற்ப புதுசு புதுசா பல மாடல்களில் ஆடைகள் வந்தவண்ணமும் இருக்கின்றன. மனதுக்குப் பிடித்த ஆடைகளை குறைந்த விலையில் எங்கே வாங்கலாம் என்பதுதான் ஆடைப் பிரியர்களின் தேடலாக இருக்கிறது. அத்தகைய தேடலுக்குத் தீர்வு தரும் இடங்களில் முதன்மையாக இருப்பது சென்னை வண்ணாரப்பேட்டை. சின்னக் குழந்தைக்குத் தேவையான ஜட்டியிலிருந்து பெரியவர்களுக்குத் தேவையான ஆடைகள் வரை அனைத்தும் வண்ணாரப்பேட்டை...

எந்த ஊரில் என்ன வாங்கலாம்

திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளப்பட்டி. சின்ன ஊராக இருந்தாலும் சின்னாளப்பட்டி சுங்குடி சேலை என்பது இன்றைக்கு உலகம் முழுக்கப் பிரபலம். ஆரம்பத்தில் இந்த ஊரில் எளிய டிசைனில் காட்டன் சேலைகளைத் தயாரித்து விற்றனர். ஆனால், காலப்போக்கில் விசைத்தறிகளின் ஆதிக்கம் பெருகவே, இன்றைக்கு துணி உற்பத்தி என்பதைவிட, திருப்பூரிலிருந்து துணி வாங்கி, அதை சுங்குடி புடவையாக மாற்றி விற்பதே இப்போது இங்கு பிரதானமான தொழிலாக இருக்கிறது. கடந்த இரு தலைமுறைகளாக சின்னாளப்பட்டியில் சுங்குடி சேலை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ரவியிடம் பேசினோம். ''சுங்குடி புடவையின் பிறப்பிடம் மதுரைதான் என்றாலும்...

எந்த ஊரில் என்ன வாங்கலாம்

இது பண்டிகைக் காலம். வீட்டில் எது இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரையும், வெல்லமும் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த வகையில் இப்போது குறைந்த விலையில் தரமான வெல்லத்தை எங்கு வாங்கலாம்? பழநியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய ஊர் நெய்க்காரப்பட்டி. இவ்வூரைச் சுற்றி ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு வெல்லம் செய்யும் ஆலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதி கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் கரும்பு விவசாயம். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பைக் கொடுப்பதைப் போல, நாட்டு வெல்ல ஆலைகளுக்கும் கரும்பைக் கொடுக்கின்றனர். இதனை பாகு எடுத்து வெல்லமாக்கி ஒவ்வொரு ஆலையும் மாதம் மூன்று லட்சம் ரூபாய் வரை பிஸினஸ் செய்கின்றன.   சில...

Wednesday, November 28, 2012

பார்த்த விளம்பரம்

Newspaper Bags - செய்தித்தாள் பைகள் மிகக் குறைந்த விலையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் செய்தித்தாள் பைகள் விற்பனைக்கு கிடைக்கும்.1. நியூஸ்பேப்பர் பேக் - சிறியதுஅளவு 1 : உயரம் 22 செ.மீ. (9 இஞ்ச்)அகலம் 16 செ.மீ. (6.5 இஞ்ச்)விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.00500 பைகளுக்கு மேல்: ஒரு பை 80 பைசாஅஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப ரூ.120 செலவாகும்.)2. நியூஸ்பேப்பர் பேக் - பெரியதுஅளவு 2 : உயரம் 26 செ.மீ. (10.5 இஞ்ச்)அகலம் 24 செ.மீ. (9.5 இஞ்ச்)விலை: 100 பைகள் முதல் 500 பைகள் வரை: ஒரு பை ரூ.1.50500 பைகளுக்கு மேல்: ஒரு பை ரூ.1.30அஞ்சல் செலவு தனி (ஆம்னி பேருந்து மூலம் அனுப்பப்படும். 250 பைகள் அனுப்ப...

முத்து வளர்ப்பு,

நான் தூத்துக்குடியில் பணிபுரிந்த சமயம், அங்கே எனக்கு முத்துக்குளிப்பவர்கள் சிலர் நண்பர்களாயினர். அவர்கள் மூலம் அறிந்து கொண்டதாவது... முத்துக்குளிப்பவர் முதலில் அதிகநேரம் நீருக்கடியில் மூச்சை தம் கட்ட பழகிக்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடலுடன் ஒரு கயிற்றை கட்டிக்கொண்டு படகிலிருந்து கடலில் குதிக்க வேண்டும். கயிற்றின் மறுமுனை படகில் இருப்பவரின் கையில் இருக்கும். நீரின் அடியில் தரையில் எவ்வளவு விரைவாக முத்துச்சிப்பிகளை சேகரிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைய சேகரிக்க வேண்டும். கடலில் குதித்தவர் எவ்வளவு நேரம் மூச்சை தம் கட்டுவார் என்று கடல் நீர்ப்பரப்பில் படகில் கயிற்றை பிடித்து இருப்பவருக்கு நன்கு தெரியும். அந்த நேரம் வந்தவுடன் மேலே படுவேகமாக...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites