இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, February 12, 2014

ஆபத்தில்லாத தொழில்னு எதுவுமே இல்லீங்க..

சிவகாசி என்றாலே மனதில் கந்தகம் தகிக்கும். மற்றவர்களின் மன பிரகாசத்துக்காக தன்னைத்தானே கருக்கிக்கொள்கிற பூமி. நகரின் எந்த திசையில் திரும்பி னாலும் வெடிமருந்து வாடை. பரபரத்துத் திரிகிறார்கள் தொழிலாளர்கள். ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களால் நிறைந்திருந்த பட்டாசுத் தொழிற்சாலைகளில் இன்று பெண்கள். ஆபத்தான சில வேலைகள் தவிர அனைத்துப் பணிகளையும் சர்வசாதாரணமாக கைபோன போக்கில் செய்து வீசுகிறார்கள் இந்தத் தோழிகள்!Nothing is safe from the industry  ...

சிவகாசியைச் சுற்றி வெம்பக்கோட்டை, வில்வநத்தம், ஆலமரத்துப்பட்டி, திருத்தங்கல் உள்ளிட்ட பல கிராமங்களில் பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மொத்தம் 786 ‘ஃபேக்டரி’கள். இவை தவிர, உரிய அங்கீகாரத்தோடு சிறிய அளவில் 300 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பெண்கள்!

‘‘பட்டாசுத் தொழிலுங்கிறது ஒரு கூட்டுத்தொழிலு. பேப்பர் கட்டிங் பண்றது, லோடு ஏத்துறதுன்னு பல தொழில்கள் இதைச் சார்ந்து இருக்கு. எல்லாத்தையும் சேத்து 5 லட்சம் குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பியிருக்கு. வெளியில இருந்து பாக்குறவங்களுக்கு இது ஆபத்தான தொழிலாத் தெரியும். எங்களுக்கு எல்லாம் பழகிடுச்சு. தொழிலை சரியா பழகாதவங்களால அல்லது கவனக்குறைவா வேலை பாக்குறவங்களால எங்காவது ஒருசில விபத்துகள் நடக்கலாம். 

அதுக்காக பட்டாசுத் தொழிலையே ஆபத்தான தொழிலா நினைக்கிறாங்க. அப்படிப் பாத்தா ஆபத்து இல்லாத தொழிலே இல்லை. சரியான பாதுகாப்போட பொறுப்பாவும் கவனமாவும் செஞ்சா எல்லாத் தொழிலுமே பாதுகாப்பானதுதான்... - சதுரமாக இயந்திரம் வெட்டிக்கொட்டும் காகிதங்களை சுருட்டிக்கொண்டே பேசுகிறார் குமாரலிங்கபுரம்  சங்கரேஸ்வரி.  சங்கரேஸ்வரியின் கணவர் ராமரும் பட்டாசு ஆலையில்தான் பணிபுரிகிறார். 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை.

‘‘தலைமுறை தலைமுறையா இந்தத் தொழில்தான் எங்களை வாழ வைக்குது. காலையில இருந்து சாயங்காலம் வரையும் வெடிமருந்து வாடையோட கிடந்தாலும் ரெண்டு வேளையாவது நல்ல சாப்பாடு சாப்பிட முடியுதே... பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கிறோம். மூத்த பொண்ணு என்ஜினியரிங் முடிச்சிருக்கா. ரெண்டாவது மக டிகிரி முடிச்சிருக்கா. கடைசிப்பொண்ணு பிளஸ் 1 படிக்கிறா. பையன் 8வது படிக்கிறான். ஓரளவுக்கு நல்ல பள்ளிகள்ல படிக்க வைக்க முடிஞ்சதுக்கு இந்த தொழில்தான் காரணம்... என்கிறார் சங்கரேஸ்வரி.

2-3 மணி நேரம் பயணம் செய்தெல்லாம் பெண்கள் வேலைக்கு வருகிறார்கள். மதியச் சாப்பாடு கொண்டு வருகிறார்கள். டீ, ஸ்நாக்ஸ் ஃபேக்டரியிலேயே பாதி விலைக்குக் கிடைக்கிறது. ‘‘சாதாரணமா ஒரு பட்டாசுல பலரோட உழைப்பு இருக்கு. உதிரிவெடியில இருந்து வாணவெடி வரைக்கும் எல்லாமே கூட்டு உழைப்புதான். இப்போ சரவெடி, வாணவெடி, மத்தாப்பூ, பூச்சட்டிக்குத்தான் தேவை அதிகம். இதுதவிர புதுசு புதுசா வெடிகள் தயாரிச்சு பரிசோதனை பண்ணிக்கிட்டே இருப்பாங்க. 

ஒரு சரவெடி தயாரிக்க 15 விதமான வேலைகள் இருக்கு. முதல் வேலை நியூஸ்பேப்பரை சைஸ் வாரியா கட் பண்றது. யானை வெடிக்கு ஒரு அளவு, பெரிய வெடிக்கு ஒரு அளவு, உதிரி வெடிக்கு ஒரு அளவு, சரவெடிக்கு ஒரு அளவு இருக்கு. பெரும்பாலும் எல்லா வேலைக்குமே மெஷின் வந்திருச்சு. சில கம்பெனிகள்ல மட்டும் ஆட்கள் வச்சு செய்றாங்க. வெட்டின பேப்பரை பசை தடவி சுருட்டணும்... இது ரெண்டாவது வேலை. உருட்டின பேப்பரை சாயத்துல முக்கி உலர வைக்கணும். பெரும்பாலும் சிவப்பு சாயம்தான் பயன்படுத்துவாங்க. சாயம் உலர்ந்த பிற்பாடு, நீளமான வளையங்கள்ல ஒவ்வொண்ணா அடுக்கி வைக்கணும். 

அடுத்து, சுருட்டின பேப்பருக்கு அடிப்பகுதியில மண் வச்சு மூடணும். இதுவரைக்குமான வேலைகள் ஃபேக்டரிக்கு வெளியிலதான் நடக்கும். இந்த நிலைக்குப் பிறகுதான் ஃபேக்டரிக்குள்ள போகும். இடையில இன்னும் ஒரு வேலை இருக்கு. மருந்துக்கலவை போடணும். இது ஆண்களோட வேலை. அலுமினிய பவுடர், சல்பர், வெடி உப்பு மூன்றையும் சரியான விகிதத்துல சேத்து கலவை போடணும். இதுதான் பட்டாசு தொழில்லயே ஆபத்தான வேலை. ரொம்பக் கவனமா செய்யணும்... என்கிறார் கமலாம்பாள்.

இலங்கையைச் சேர்ந்த கமலாம்பாள் 1974ம் ஆண்டு போர்ச்சூழல் காரணமாக தமிழகம் வந்தவர். தொடக்கத்தில் தையல் தொழில் செய்துவந்தார். காலில் ஏற்பட்ட வலியால் அத்தொழில் பாதிக்கப்பட, பட்டாசு வாழ்க்கை அளித்தது. ‘‘அந்தக் காலத்துல தீபாவளியோட ஃபேக்டரியை மூடிடுவாங்க. அடுத்த ரெண்டு மாதத்துக்கு மானாவாரி நிலங்கள்ல விவசாயம் நடக்கும். ஃபேக்டரியில மராமத்து வேலைகள் செய்வாங்க. பொங்கல் முடிஞ்ச பிறகு திரும்பவும் வேலை ஆரம்பமாகும். இப்போ நிலைமை மாறிப்போச்சு. ஒரு வாரம்தான் லீவ்... என்கிற டி.கல்லுப்பட்டி ஞானவேல், பட்டாசு தொழில்நுட்பத்தை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்.
  
‘‘டியூப்ல மருந்து செலுத்துறதோட வேலை முடியிறதில்லை. அதுக்குப் பிறகுதான் முக்கியமான வேலைகள் இருக்கு. திரி வைக்கணும். லேசா பசை வச்சு மருந்துக்குள்ள செருகி ஒட்டுவாங்க. அதுக்குப் பிறகு கூடையில அள்ளியாந்து கொட்டிடுவாங்க. பூ கட்டுறது மாதிரி நீளமான திரியையும் நூலையும் வச்சு சரமா கட்டுவோம். கட்டி முடிச்சதும் பேக் பண்ணிட வேண்டியது தான். வாணவெடி தயாரிக்கிறது வேறு மாதிரி. முதல்ல அட்டைகளை வச்சு குழாய் மாதிரி கண்டெய்னர் ரெடி பண்ணணும். 

அடுத்து அதுக்குக் கீழே செம்மண்ணும் மணலும் கலந்து பூசணும். அதுக்குப்பிறகு டிஸ்பிளேவுக்கு தகுந்தமாதிரி மணிமருந்து வைக்கணும். மேல போய், நட்சத்திரம் மாதிரி, பூ மாதிரி, மழை மாதிரி பொரிப்பொரியா கொட்டுதுல்ல... அதுக்குப் பேருதான் மணிமருந்து. சூரிய உதயத்துக்குள்ள இந்தக் கலவையை ரெடி பண்ணிடணும். நிழலும் இல்லாம, வெயிலும் இல்லாம ஒரு அறையில காயவச்சு டேங்கர்ல வச்சு லேபிள் ஒட்டிடணும்... என்கிறார் ஞானவேல்.

‘‘மூணுபோகம் விவசாயம் செஞ்ச குடும்பம்தான் எங்களோடது. என்னதான் காலம் நேரம் பாக்காம உழைப்பைக் கொட்டுனாலும் மண்ணுல போட்டதுல பாதிகூட தேறலே. தண்ணி பிரச்னை, மண்ணுப் பிரச்னைன்னு ஏகப்பட்ட பிரச்னைங்க. பல குடும்பங்கள் வேலை தேடி வேற ஊர்களுக்குப் போயிட்டாங்க. எங்க உறவுக்காரர் ஒருத்தர் சிவகாசியில வெடி ஃபேக்டரியில வேலை கிடைக்கும்னு சொன்னாரு. வெடி கம்பெனின்னு சொன்ன உடனே பயமா இருந்துச்சு. ‘விபத்து கிபத்துன்னு அடிக்கடி செய்திகள் வருதே.. சரியா வருமா’ன்னு யோசிச்சு பயந்துக்கிட்டேதான் வந்தோம். 

முதல்ல சின்னச் சின்ன வேலைகள்தான் கொடுத்தாங்க. அப்படியே படிப்படியா வேலையைக் கத்துக்கிடடேன். பயமும் போயிடுச்சு. வருஷம் முச்சூடும் வேலையிருக்கதால இப்போ எந்த பிரச்னையும் இல்லை.. என்கிறார் ஞானவேல். பட்டாசுத் தொழிலை மேம்படுத்த ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் சிவகாசியில் நடக்கின்றன. புதிய பட்டாசு ரகங்களை கண்டறியும் வேலையில் நூற்றுக்கணக்கான போர்மேன்கள் ஈடுபட்டுள்ளார்கள். மருந்துக் கலவைகளை மாற்றியும், வண்ணங்களை சேர்த்தும், வடிவங்களை மாற்றியும் நடக்கும் ஆய்வுகளில் பத்தில் ஒன்று வெற்றி பெறும். பட்டாசு தொழில்நுட்பத்தை கல்லூரிகளில் பாடமாகக்கூட வைத்திருக்கிறார்கள். 

குறுகிய கால பயிற்சி வகுப்புகளும் உண்டு. ஒரு காலத்தில் எழுதப் படிக்க தெரியாதவர்களே பட்டாசுத் தொழிலுக்கு வந்தார்கள். இன்று பட்டம் பெற்ற பெண்கள் கூட வேலைக்கு வருகிறார்கள்.வெங்கடாசலபுரம் முருகேஸ்வரி பிளஸ்டூ படித்திருக்கிறார். ‘‘எங்க ஊருல பொம்பளைப்புள்ளைக பத்தாப்பு தாண்டுறதே பெரிய விஷயம். நான் பன்னென்டாப்பு முடிச்சேன். நர்ஸுக்கு படிக்கணும்னு ஆசை. சூழ்நிலை சரியில்லை. பட்டாசு ஆலையில வேலைக்கு ஆள் எடுக்கிறதா சொன்னாங்க. வந்துட்டேன். நான் பன்னென்டாப்புல வேதியியல் படிச்சிருந்ததால, எனக்கு சூப்பர்வைசர் வேல கொடுத்தாங்க. 

வேல செய்றவங்ககிட்ட மூலப்பொருட்களோட அபாயத்தை எடுத்துச் சொல்லணும். தப்பா வேலை செஞ்சா அவங்களுக்கு கத்துக்கொடுக்கணும். அதுதான் என்னோட வேலை.. என்கிறார் முருகேஸ்வரி.‘‘மதுரை பக்கத்துல இருக்கிற வையூர்ல இருந்து நான் கம்பெனிக்கு வாரேன். முன்னால எக்காலமும் விவசாய வேலை நடந்துக்கிட்டே இருக்கும். இப்போ பெரும்பகுதி வயக்காடுகளை வீட்டுமனைகளா மாத்திட்டாங்க. வேற எந்த வேலைக்குப் போனாலும் ரெண்டு நாளு வேலை இருக்கும். நாலு நாளைக்கு இருக்காது. அரை வயிறும் கால் வயிறுமா சாப்பிட்டுக்கிட்டுக் கிடக்கிறதை விட பட்டாசு சுத்த போகலாம்னுதான் இங்கே வந்தோம். 

ஆரம்பத்துல எல்லாரும் வெடிக்கும், சிதறும்னு பயமுறுத்துனாக.. பழக, பழகத்தான் அதெல்லாம் பொய்யின்னு தெரிஞ்சுச்சு. வீட்டை விட்டு கிளம்புனா வேலை கண்டிப்பாக் கிடைக்குங்கிற உறுதி இருக்கு... வாழ்க்கை ஓடுது.. என்று சிரிக்கிறார் தனலெட்சுமி.‘‘நான் பட்டாசு வேலைக்குப் போறேன்னு சொன்னப்பவும் வீட்டில எல்லாரும் பயந்தாங்க. இன்னைக்கு ஆபத்து இல்லாத தொழில்னு எதுங்க இருக்கு? விவசாய வேலை செய்யும்போது பாம்பு கடிச்சு சாகலையா..? ரோட்டுல தம்பாட்டுக்கு நடந்து போறவரை ஏதோ ஒரு வாகனம் இடிச்சுத் தள்ளி உயிர் போகலியா? என் வீட்டுக்காரரை கூட ஒரு சாலை விபத்துலதான் பறி கொடுத்தேன். 

பட்டாசு விபத்து எங்கேயாவது எப்போவாது ஒன்னோ, ரெண்டோ நடக்குது. அதை வச்சுக்கிட்டு ஒட்டுமொத்தமா பட்டாசு ஃபேக்டரின்னாவே விபத்துதான்னு எல்லாரும் நினைக்கிறாங்க. அந்த மனநிலை மாறனுங்க... என்கிறார் ஆமத்தூர் ரெங்கநாயகி.சிவகாசியில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமாக பட்டாசு பரிவர்த்தனை நடக்கிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வரியாகவே கிடைக்கிறது. இந்தியாவின் 80 சதவிகித பட்டாசுத் தேவையை சிவகாசிதான் தீர்த்து வைக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் இங்கிருந்து பட்டாசுகள் அனுப்பப்பட்டன. இன்றோ சர்வதேச சந்தையை சீனா கைப்பற்றி விட்டது. 

நமக்குக் கொண்டாட்டமாக இருக்கிற பட்டாசு லட்சக்கணக்கான பெண்களுக்கு வாழ்க்கை. விவசாயம் நலிந்து, கிராமிய தொழில்கள் அழிந்து தவித்து நின்ற பெண்களுக்கு பட்டாசுதான் வாழ்க்கை அளித்திருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மிர சியளிக்கிற வேலையை சர்வசாதாரணமாக கையாள்கிறார்கள் சிவகாசி பெண்கள். வெடித்துச் சிதறும் வெடியின் சத்தமே அவர்களுக்கான கைதட்டல்களாக ஒலிக்கிறது!

செண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்



நல்ல வடிகால் வசதியுடன் கூடிய எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல. சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப்பிரதேசங்களில் பயிரிடலாம். ஆண்டு முழுவதும் அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம்.

பிரத்யேக ரகம் - மேக்ஸிமா யெல்லோ. நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம் இடவேண்டும். பின் 15 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். விதையளவு: எக்டருக்கு 15 கிலோ.நடும் பருவம்: ஆண்டு முழுவதும். இருந்தாலும் ஜூன் - ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றது.

நாற்றங்கால்: நிலத்தை 2-3 முறை நன்கு உழுது கடைசி உழவின்போது மக்கிய தொழு உரம் இட்டு நன்கு கலக்கிவிட வேண்டும். விதைகளை 200 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு நேர்த்தி செய்து பின் 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை வரிசையில் பாத்திகளில் விதைக்க வேண்டும். மண் கொண்டு மூடி உடன் நீர் பாய்ச்ச வேண்டும். 7 நாட்களில் முளைத்துவிடும். 30 நாட்கள் ஆனவுடன் நாற்றுக்களை பிடுங்கி நடவேண்டும்.

நடவு: வரிசைக்கு வரிசை 45 செ.மீ. செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு எக்டக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். நட்ட 45 நாட்கள் கழித்து எக்டருக்கு 45 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தினை இட்டு மண் அணைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்: நட்டவுடன் ஒரு தண்ணீர் பின்னர் 3ம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.நுனி கிள்ளுதல்: நட்ட 30 நாட்களில் செடியின் நுனிப்பகுதி அல்லது முதல் பூ மொட்டுக்களை கிள்ளி எடுக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
சிவப்பு சிலந்தி: செடிகளில் இலைகள் மற்றும் பூக்களிலிருந்து சத்தினை உறிஞ்சும். சேதம் அதிகமாகும்போது பூக்கள் காய்ந்துவிடும். கெல்தேன் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மிலி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.

இலைப்புள்ளி நோய்: முதலில் இலைகளில் வட்டமான சிவப்புநிற புள்ளிகள் தோன்றும். பின்னர் புள்ளிகள் பெருகி இலைகள் கருகிவிடும். பெவிஸ்டின் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

வேர் அழுகல்: வளர்ந்த செடிகளையும் நாற்றுக்களையும் தாக்கும். இந்நோய் பாதித்தால் வேர் அழுகிவிடும். பெவிஸ்டின் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து செடியைச் சுற்றி ஊற்றிவிட வேண்டும்.

அறுவடை: நட்ட 60ம் நாளில் இருந்து பூக்க ஆரம்பித்துவிடும். 80-90 சதவீதம் வரை மலர்ந்த பூக்கள் 3 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
மகசூல்: ஒரு எக்டருக்கு 18 டன் பூக்கள் கிடைக்கும்.

அனுபவ விவசாயி: அமுதா, த/பெ.மெய்யர், பேத்தாம்பட்டி, திருவரங்குளம் போஸ்ட், ஆலங்குடி தாலுகா, புதுக்கோட்டை மாவட்டம். 91592 34283. இவர் 10 சென்ட் நிலத்தில் ஈஸ்ட்வெஸ்ட் நிறுவனத்தின் செண்டுமல்லி ரகத்தினை பயிரிட்டு ரூ.70,000 வரை நிகரலாபம் பெற்றுள்ளார்.

மேலும் விபரங்களுக்கு: உடுமலை, பொள்ளாச்சி, கோவை-99656 23265; புதுக்கோட்டை-81220 71332; மதுரை-73737 35484.

சம்பங்கி மலர் சாகுபடி


பெங்களூரு அசர்கட்டா தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தின் ரகங்கள் ஸ்ரீகாசி, சுகாஷினி, பிராஜ்வால், வைபோவ். பட்டம்- மே, ஜூன், ஜூலை மாதங் கள்.
 ஒரு ஏக்கருக்கு 300 கிலோ விதை தேவைப் படும். எல்லா வகை மண் ணிலும் பொதுவாக வடிகால் வசதி உள்ள மண் ணில் வளரக் கூடியது. தொழு உரம்ஏக்கருக்கு20 டிப்பர் இட்டால் போதும். மேல் உரமாக 20,20:0:13 அல்லது இயற்கை வழி உரமானதழை, மணி சத்துக்கள் கொண்ட உர வகைகளை இடவேண்டும். நிலத் தின் தன்மைக்கு ஏற்பவும், நல்ல வடிகால் வசதி உள்ள வாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக சம்பங்கி ஒரு கிழங்கு வகை பயிராக இருப்பதால் மழைக் காலங்களில் கிழங்கு அழுகல் வரும். இதற்குசூடோமோனாஸ், டிரைகோ டெர்மா விரிடி ஆகிய உயிர் உரங்களை இட்டு பாதுகாக்க வேண்டும். நட்ட 3 மாதங்களில் ஒரு சில இடங் களில் அங்கொன்றும் இங் கொன்றும் வரும். 9 மாதத் தில் மகசூல் குறையும். ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் பூ மகசூல் வரும்.

வீரிய சம்பங்கி:

விதை கிழங்கு பெரியது. பூக்கள் பெரியது. பூ எடை அதி கம். பூ மொட்டு பெரியது. கிளைக்கும் தன்மை அதிகம். நீண்டநாள் சாகுபடி. மகசூல் அதிகம்.
நாட்டு சம்பங்கி: விதை கிழங்கு சிறியது. பூக்கள் சிறியது. எடை குறைவு. பூ மொட்டு சிறியது. கிளைக்கும் தன்மை குறைவு. குறைவு நாட்கள். மகசூல் சுமார். பூக்களின் எண்ணிக்கை குறைவு. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. மேலும் விபரங்களுக்கு: எஸ்.பரசுராமன், த/பெ.மதுரை, களியபேட்டை கிராமம், ஓரக்காட்டுபேட்டை போஸ்ட், உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம். 97874 77958.
பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு: மீன்வளர்ப்பு மேம்பட தமிழக அரசும் மைய அரசும் செயல்படுத்தும் திட்டங்கள்:
திட்டங்கள் - மானியம் 
மீன் குஞ்சு நிலையங்கள் அமைக்க - ரூ.60,000 வரை
கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க - ரூ.5,000 வரை
மீன்குஞ்சுகள் மற்றும் தீவனத்திற்காக - ரூ.6,000 வரை
மாநில அரசு திட்டம்:
* புதிய குளம், குட்டைகளை அமைக்க ரூ.60,000 வரை. * குளங்கள், தொட்டிகளை சீரமைக்க ரூ.15,000 வரை. * கெண்டை மீன் வளர்க்க உள்ளீட்டு செலவு(குஞ்சுகளுக்கும் உணவிற்கும்) ரூ.10,000 வரை. * நன்னீர் மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.1,20,000. * மீன் தீவன நிலையம் அமைக்க - ரூ.1,50,000 * அலங்கார மீன் வளர்ப்புக்கு ரூ.1,50,000.
இத்திட்டங்களுக்கான மானியம் 20 சதவீதம் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் 5 சதவீதம் அதிகம்(25 சதம்) உவர் நீர் மேம்பாட்டு முகமை மூலம் வழங்கப்படும்
உதவிகள் (மத்திய, மாநில அரசுகளின் திட்டம்): இறால் பண்ணை நிறுவவும் புதுப்பிக்கவும் ரூ.60,000.
தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம்:
நுண்மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைக்க ரூ.5,00,000.
தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்:
நோய் தடுப்பு வசதிகளுடன் இறால் வளர்க்க ரூ.3,75,000. நீர்நிலைகளை புதுப்பித்து மீன் வளர்க்க ரூ.15,000. புதிய குளங்களை அமைத்து மீன் வளர்க்க ரூ.60,000. நுண்மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைக்க ரூ.2,40,000.
தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் (சம்பந்தப்பட்ட உபவடி நிலப்பகுதிகளுக்கு மட்டும்):
பண்ணைக் குட்டைகள் அமைத்து மீன் வளர்க்க ரூ.50,000. (தகவல்: டாக்டர் வி.சுந்தரராஜன், அக்வா கல்சர் பவுண்டேஷன், சென்னை-600 073. போன்: 90030 13634).

உலர்மலர் தொழில்நுட்பம்


உலர் மலர்கள்:


       பலவகை வண்ணங்களையும் நறுமணங்களையும் கொண்ட உலர் மலர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தாவர பாகங்கள் வீட்டுக்கு அழகும் புத்துணர்ச்சியும் தருகின்றன. வருடங்கள் வரை பல மதிப்புகூட்டும் தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
உலர் மலர் தொழிற்சாலைகள் இந்தியா முழுவதும் தமிழகத்தில் பரவலாகவும் காணப்படுகின்றன. தமிழகத்தில் முக்கிய தொழிற்சாலைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, சென்னையில் இயங்கிவருகின்றன.
உலர்மலர் தொழில்நுட்பம்:


         தனித்தன்மையும் வடிவமும் அழகும் கொண்ட காய்ந்த தாவர பாகங்களான இலைகள், பூக்கள், விதைகள், மரப்பட்டைகள், பூஞ்சாணங்கள் பல வகை தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட காய்ந்த தாவர பாகங்கள் பல வகை உலர் மலர் தொழில்நுட்பங்கள் (உலரவைத்தல், நிறம் நீக்குதல் மற்றும் சாயம் ஏற்றுதல்) மூலம் பதப்படுத்தப்படுகின்றன.
வகைகள்:


வீட்டு அலங்காரப் பொருட்கள்: மேஜை, ஜாடி அலங்காரங்கள், மலர் வளையங்கள், மாலைகள், தோரணங்கள், சுவர் அலங்காரங்கள், சிறு மரங்கள், வாழ்த்து அட்டைகள்.

வீட்டு நறுமணப் பொருட்கள்:


              உலர் மலர்கள் கொண்ட நறுமணக்கலவைகள் (பாட்புரி) நறுமணப்பைகள், வாசனைத் திரவியங்களை வெளியிடும் கருவிகள், தைலங்கள். உலர் மலர்களை கடல்வழிப்பயணம் மூலம் போக்குவரத்து செய்யலாம். ஆனால் கொய்மலர்களை துரிதப் போக்குவரத்து மூலமாக மட்டுமே அனுப்பலாம். இத்தொழிலை சிறு தொழிலாக சுயஉதவி குழு பெண்கள் செய்யலாம்.


               மூலப்பொருட்கள் சேமிப்பின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.70-80 வருவாய் ஈட்டலாம். மதிப்புக் கூட்டு தொழில்நுட்பங்கள் மூலம் சுமார் ரூ.100-150 வரை நாள் ஒன்றுக்கு பெறலாம். அலங்காரப் பொருட்களைச் செய்ய தேவையான அங்கங்களின் மற்றும் துணைப் பொருட்களைத் தயாரித்தல் மூலம் சுமார் 180-200 ரூபாய் வரை நாள் ஒன்றுக்கு பெறலாம். முழு அலங்கார பொருட்களைச் செய்து தருவதன் மூலம் அல்லது நேரடியாக கொள்முதல் செய்வதன்மூலம் ரூ.300 முதல் 500 வரை ஈட்டலாம். 

Sunday, February 9, 2014

பாறையிலும் பயிர் வளரும்... நிரூபித்துக் காட்டிய விவசாயி


மனசு வெச்சா... பாறையிலயும் பயிர் பண்ணலாம்' என்பார்கள். இதையே மந்திரமாக எடுத்துக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைப்பட்டியில், கருங்கல் பாறையாக இருந்த நிலத்தை, கடின முயற்சியால், விளைநிலமாக மாற்றியிருக்கிறார், கணபதி.
''இந்த நிலத்தை விவசாய நிலமா மாத்த முயற்சி எடுத்துக்கிட்டிருந்தப்ப, பார்த்தவங்க எல்லாம், 'கட்டாந்தரையில ஏம்ப்பா விவசாயம் பண்றே’னு கிண்டல் செஞ்சாங்க. அவங்க சொன்னதுலயும் ஒரு நியாயம் இருந்துச்சு. ஏன்னா, இது கருங்கல் பாறைதான். ஆனா, பத்து வருஷ போராட்டத்துக்குப் பிறகு, இப்ப பயிர் விளைஞ்சு நிக்கிறதைப் பார்க்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஊரே மலைச்சு நிக்குது'' என்று சொல்லி ஆச்சர்யம் கூட்டும் கணபதி, ஒரு வழக்கறிஞர்.
''பி.ஏ, பி.எல். படிச்சு முடிச்ச நான், சென்னை, தலைமைச் செயலகத்துல மொழிபெயர்ப்பாளர் வேலையில சேர்ந்தேன். எங்க குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அதனால, எனக்கும் விவசாயத்து மேல ஆர்வம். 84-ம் வருஷம் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, கையில இருந்த காசை வெச்சு... கொஞ்சம் தரிசு நிலங்களை விலைக்கு வாங்கியும், கொஞ்ச நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் விவசாயத்தை ஆரம்பிச்சேன். அப்படித்தான் இந்த நிலமும் கைக்கு வந்துச்சு. ரெண்டு ஏக்கர் முழுசும் புதர்காடு மாதிரி இருந்துச்சு. 'இந்த நிலத்துல ஒண்μம் செய்ய முடியாது’னு ஊரே சொன்னாலும், 'விவசாய நிலமா மாத்தமுடியும்’னு நம்பிக்கை இருந்துச்சு'' என்று சொல்லும் கணபதி, அதை கொஞ்சம் கொஞ்சமாக சாதித்தும் இருக்கிறார்.
''2004-ம் வருஷம், கொஞ்ச பேரை சேர்த்துக்கிட்டு பாறையை உடைக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக பாறைகளை உடைச்சு, ஆறு அடி வரைக்கும் எடுத்தோம். அப்பறம், கண்மாய் மண், என்னோட வயல்ல இருந்த மேல் மண் எல்லாத்தையும் கொண்டு வந்து... மூன்றரை அடி உயரத்துக்கு கொட்டி நிலத்தை சமப்படுத்தினோம். டிராக்டர் வெச்சு உழுது சின்னச் சின்ன கற்களையெல்லாம் எடுத்தோம். பாறைங்கிறதால 'போர்’ போட முடியல. அதனால, 14 கிணறுகளை வெட்டியிருக்கேன். ஒவ்வொண்μம் 70 அடி ஆழம். சில கிணறுகளுக்கு கரன்ட் கனெக்ஷன் இருக்கு. கனெக்ஷன் இல்லாத கிணறுகள்ல ஜெனரேட்டர் வெச்சு தண்ணி இறைச்சுதான் விவசாயம் பண்றேன்.
எனக்கு சொந்தமா 150 மாடுகளும், 400 ஆடுகளும் இருக்கு. ஒவ்வொரு ஏக்கர்லயும் நாலு நாளைக்கு மாட்டையும் ஆட்டையும் கட்டி வெச்சுடுவேன். வடக்கயிறால மூμ வரிசையா பிரிச்சு, ஒவ்வொரு வரிசையிலும் 15 மாடுகளை எதிர் எதிரா கட்டிடுவேன். ஆடுகளை மொத்தமாகக் கட்டிடுவேன். இதனால, அதுகளோட சாணம், மூத்திரம் ரெண்டும் நிலத்திலேயே விழுந்துடும். அஞ்சு நாள் கழிச்சு சாணம் காயுறதுக்குள்ள உழுது விட்டுட்டதால... அவ்வளவு சத்தும் மண்ணுல சேர்ந்து நிலம் வளமாகிடுச்சு. 15 ஏக்கர்ல மக்காச்சோளம், 5 ஏக்கர்ல சின்ன வெங்காயம் போட்டிருந்தேன். மக்காச்சோளத்துல 30 டன், சின்ன வெங்காயத்துல 7 டன் மகசூல் கிடைச்சுது.
மாசத்துக்கு ஒரு தடவை வேப்பம் பிண்ணாக்குக் கரைசலை அடிச்சதை தவிர, உரம்னு எதையுமே தனியா வாங்கி கொட்டல. 'மாட்டுச்சாணத்தையும், மூத்திரத்தையும் மட்டுந்தான் அடியுரமா போட்டேன்’னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க. அந்தளவுக்கு விளைஞ்சு நின்னதுதான் காரணம். இயற்கை உரத்தோட அருமை இப்பதான் இந்தப் பக்கம் இருக்கறவங்களுக்கு புரியுது'' என்று சொன்ன கணபதி,
''மக்காச்சோளம் ஒரு டன் சராசரியா 15,000 ரூபாய் விலை போனதுல... 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. சின்ன வெங்காயத்துக்கும் நல்ல விலை கிடைச்சுது. சராசரியா கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. இதுல செலவு ஒண்ணரை லட்ச ரூபாய் போனா, 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபா லாபம். மக்காச்சோளத் தட்டையை அப்படியே மடக்கி உழுது, கேழ்வரகு நடலாம்னு இருக்கேன்'' என்ற கணபதி,
'மொத்தமா கணக்குப் பார்த்தா... கொஞ்சம் கூடுதலாத்தான் செலவழிச்சுருக் கேன். ஆனா, ஒண்μக்கும் உதவாத பாறை நிலம் விளைஞ்சு நிக்கறதைப் பாக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷத்துக்கு ஈடு, இணை கிடையாது. அதனால தான், என்னை 'அட்வகேட்’னு சொல்லிக்கிறதைவிட 'விவசாயி’னு தான் சொல்லிக்கிறேன்'' என்று சொல்லி பெருமிதப் பார்வையை வீசினார்!

ரியல் எஸ்டேட்டுக்கு தடா!
அரண்மனைப்பட்டி, குருந்தம்பாறை ஆகிய பகுதிகள், திருச்சி நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளன. அந்தப் பகுதிகளை ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலர் வளைக்க முயல... அதைத் தடுத்து நிறுத்தியிருகிறார், கணபதி. இதைப் பற்றி பேசியவர், ''மழை இல்லாததால, வறட்சியோட பிடியில சிக்கின விவசாயிங்க, திக்குத் தெரியாம நின்னாங்க. இதைப் பயன்படுத்திக்கிட்ட சிலர், விவசாயிங்ககிட்ட பணவலையை வீசினாங்க. அது தெரிஞ்சதுமே, ஊர்க் கூட்டத்தைக் கூட்டி, 'மழையில்லாத காரணத்துக்காக யாரும் நிலத்தை விக்காதீங்க. விவசாயம் செய்யறதுக்கு தண்ணியும், விதைநெல்லும் நான் கொடுக்குறேன்’னு சொன்னேன். அதனால, நிறைய பேர் ரியல் எஸ்டேட்காரங்ககிட்ட வாங்கின அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துட்டாங்க'' என்று சொன்னார்.
இதை ஆமோதித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமையா, ''அஞ்சு வருஷத்துக்கு முன்ன சரியா மழையில்லாததால, 'நிலத்தை வித்துடலாம்’னு முடிவு பண்ணினேன். அதைத் தெரிஞ்சுகிட்டு கணபதி ஐயாதான் அவர் கிணத்துல இருந்து, மூμ கிலோ மீட்டர் தூரம் இருக்கற என் நிலத்துக்கு பைப் மூலமா தண்ணியும் கொடுத்து... விதைநெல்லும் கொடுத்தாரு. அவராலதான் இப்போ தொடர்ந்து விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இல்லேனா, இன்னிக்கு என் நிலத்துலயும் ரியல் எஸ்டேட் கொடி பறக்க ஆரம்பிச்சுருக்கும்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு,
கணபதி,
செல்போன்: 98400-98480.

கைவண்ணமாகுது காந்தம்!

வெளிநாடு சென்று வருவோர் மறக்காமல் வாங்கி வரும் அன்பளிப்புப் பொருட்களில் முக்கியமானது மேக்னட் வைத்த போட்டோ ஃப்ரேம்ஸ்.  பாஸ்போர்ட் சைஸ் அல்லது ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்களை அதனுள் பொருத்தி, ஃப்ரிட்ஜில் ஒட்ட வைத்துவிடலாம். வீட்டுக்கு வருவோரின்  கவனம் ஈர்க்கும் இது.
Kaivannamakutu magnet!

சென்னையைச் சேர்ந்த ஜனனியின் கைவண்ணத்தில் உருவாகும் ஃப்ரிட்ஜ் மேக்னட்டுகள், நவராத்திரி மற்றும் இதர விசேஷங்களுக்கும் அன்பளிப்பாகக்  கொடுக்கப் பொருத்தமானவை.‘‘நம்மூர்ல விதம் விதமான ஃப்ரிட்ஜ் மேக்னட்ஸ் கிடைக்குது. அதை அப்படியே ஃப்ரிட்ஜ்ல ஒட்டி வைக்கலாம்.  அவ்வளவுதான். அதுவே போட்டோ ஃப்ரேம் மாடல் ஃப்ரிட்ஜ் மேக்னட்னா, குழந்தைங்க படங்களையும் வீட்ல உள்ளவங்க படங்களையும் பொருத்தி  ஒட்டலாம். 

ஒவ்வொரு முறை அந்தப் படங்களைப் பார்க்கிற போதும் மனசுக்கு சந்தோஷமா இருக்கும். மனுஷங்க படம் வேண்டாம்னு நினைக்கிறவங்க, சாமி  படங்களையோ, கார்ட்டூன் படங்களையோகூட பொருத்தி வைக்கலாம்’’ என்கிற ஜனனி, வெறும் 500 ரூபாய் முதலீட்டில் இதைச் செய்யத்  தொடங்கலாம் என நம்பிக்கைத் தருகிறார்.‘‘வுட், மணிகள், ஸ்டோன்ஸ், மேக்னட், க்ளே, பசை, வார்னிஷ், பிரஷ், ஃபேப்ரிக் கலர்ஸ்னு இதுக்குத்  தேவையான பொருட்கள் எளிமையா கிடைக்கக் கூடியவை.                        

மரத்தை நமக்கு விருப்பமான ஷேப்ல வெட்டிக்கிட்டு, அதுக்குள்ள போட்டோ வைக்க இடம் விட்டுட்டு, டிசைன் பண்ணணும். மேக்னட் பொருத்தினா  ஃப்ரிட்ஜ்லயோ, பீரோவுலயோ ஒட்ட வைக்கலாம். அது வேண்டாம்னு விரும்பறவங்க, டபுள் சைட் டேப் வச்சு, எந்த இடத்துல வேணாலும்  ஒட்டிக்கலாம். அதுவும் பிடிக்கலையா, அதோட பின் பக்கம் குட்டி ஸ்டாண்டு பொருத்தி ஷோ கேஸ்ல சாதாரண போட்டோ ஃப்ரேமாகவும்  உபயோகிக்கலாம். 

விநாயகர், பறவை, செல்போன் ஸ்டாண்டு, கலசம், துளசி மாடம், கார்ட்டூன் கேரக்டர்னு கற்பனைக்கேத்தபடி எந்த உருவத்தை வேணாலும் இதுல  கொண்டு வரலாம். அளவையும், வேலைப்பாட்டையும் பொறுத்து 50 ரூபாய்லேருந்து 100 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகித லாபம்  நிச்சயம்’’ என்கிற ஜனனி ஒரே நாள் பயிற்சியில் 5 மாடல் மேக்னட் போட்டோ ஃப்ரேம்களை தேவையான பொருட்கள் உள்பட 500 ரூபாய்  கட்டணத்தில் கற்றுத் தரக் காத்திருக்கிறார். 

98410 19293

பொம்மையாகுது உல்லன்!

உல்லன் நூல் என்றதும் நமக்கெல்லாம் குல்லாவும், ஸ்வெட்டரும்தான் நினைவுக்கு வரும். கன்னியாகுமரியைச் சேர்ந்த செண்பகவள்ளியின்  கைவண்ணத்தில் ஒவ்வொரு கண்டு உல்லன் நூலும் அழகிய கைவினைக் கலைப்பொருளாக உருவெடுக்கிறது.Getting a wool doll!


‘‘பிளஸ் டூதான் படிச்சிருக்கேன். சமுதாய மேம்பாட்டுத் திட்டத்துல நிறைய கைவினைக் கலைகள் கத்துக்கிட்டேன். அப்படிக் கத்துக்கிட்டதுதான்  உல்லன் நூல் வேலைப்பாடும், குரோஷா வேலைப்பாடும். உல்லன்ல மாலை, திரைச்சீலை, குட்டிக் குட்டி கூடைகள், பொம்மைகள், கோழிக்குஞ்சு,  டெலிபோன் மேட், டேபிள் மேட், குடைன்னு ஏகப்பட்டது செய்யலாம். 

சாதாரணமா ஃபர் கிளாத்ல பொம்மைகள் பண்றதுன்னா, அதுக்கான செலவு ரொம்ப அதிகம். ஆனா, அதே பொம்மைகளை உல்லன்ல செய்தா அழகும்  கூடும்... செலவும் குறைவு’’ என்கிறவர் குரோஷா முறையிலும் பலவித கைவினைப் பொருட்களைச் செய்கிறார்.‘‘குரோஷா பின்னத்  தெரிஞ்சவங்களுக்கு ஹேண்ட்பேக், பர்ஸ், சின்னச் சின்ன பொம்மைகள்னு அதுக்கேத்த பொருட்கள் இருக்கு. பின்னத் தெரியாதவங்க உல்லன்ல  செய்யலாம். ரெண்டுக்குமே தனித்தனியா 500 ரூபாய் முதலீடு போதுமானது. உல்லன் நூல், குரோஷா ஊசி, ஃப்ரேம், பூம்பாம் செட்... இது மட்டும்தான்  தேவையான பொருட்கள். 

ஒரு பொருள் செய்ய அரை மணி நேரம் போதும். குறைஞ்சபட்சம் 15 ரூபாய்லேருந்தே விற்கலாம். டெடிபியர் மாதிரியான பொம்மைகளை அளவைப்  பொறுத்து 25 முதல் 75 ரூபாய் வரைக்கும் கொடுக்கலாம். 50 சதவிகித லாபம் நிற்கும். ஃபேன்சி ஸ்டோர், கண்காட்சிகள்ல விற்கலாம். நவராத்திரிக்கு  ஒரே மாதிரியான அன்பளிப்பு கொடுக்க நினைக்கிறவங்களுக்கு சரியான சாய்ஸ் என்கிற செண்பகவள்ளி, குரோஷா பின்னல் தேவைப்படாத 5  பொருட்களை 250 ரூபாய் கட்டணத்தில் ஒரே நாளிலும், குரோஷாவுக்கான அடிப்படைப் பயிற்சியுடன் சேர்த்து, 10 பொருட்களை 2 நாட்கள்  பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்திலும் கற்றுத் தருகிறார். பத்து, பதினைந்து பேர் கொண்ட குழுவாகக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு, அவரவர்  ஊரிலேயே சென்று வகுப்புகள் எடுக் கவும் தயாராம். 

99446 73363

அழகுப் பொருளாகுது மூங்கில்!

மூங்கில் என்றால் புல்லாங்குழலைத் தவிர நமக்கெல்லாம் வேறு ஒன்றும் நினைவுக்கு வராது. சென்னை, ஆவடியைச் சேர்ந்த பவானியின் கைகளில்  மூங்கில் சொன்னபடியெல்லாம் கேட்டு, அழகழகான கலைப் பொருட்களாக வடிவம் பெறுகிறது!

‘‘மாஸ்டர் ஆஃப்  ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சிருக்கேன். படிக்கும் போது டெக்ஸ்டைல் டிசைனிங்தான் என்னோட பிரதான பாடம். என்னோட படிப்பு  சம்பந்தப்பட்ட பிரஷ், டூல்ஸை எல்லாம் வச்சுக்க, சும்மா நானாகவே மூங்கில்ல ஒரு பாக்ஸ் டிசைன் பண்ணினேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர்  கேட்க ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் விசாரிக்கவே, எனக்கும் அதுல ஆர்வம் அதிகமானது.

அப்படியே மூங்கில்ல ஒவ்வொரு பொருளா பண்ண ஆரம்பிச்சேன். இன்னிக்கு அதுதான் என்னோட முதல் விருப்பம்னு சொல்ற அளவுக்கு  வளர்ந்திருக்கு...’’ என்கிற பவானி, மூங்கிலில் பேனா ஸ்டாண்டு, மொபைல் ஸ்டான்டு, வால் ஹேங்கிங், கொட்டாங்குச்சி ஸ்டாண்டு,  லேம்ப் ஷேடு,  நகைப்பெட்டி, பிளவர் வேஸ் என விதம்விதமான பொருட்களைச் செய்கிறார்.
Beauty porulakutu bamboo!

‘‘மரச்சாமான்கள் விற்கற கடைகள்ல மூங்கில் குச்சிகள் கிடைக்கும். அடிக் கணக்குல வாங்கணும். அது தவிர, கட்டிங் டூல்ஸ், பிரம்பு, கலர், ஸ்க்ரூ,  அலங்காரப் பொருட்கள்னு 1,000 ரூபாய் முதலீடு போதும். ஒரு அடி மூங்கில் குச்சியோட விலை 50 ரூபாய். ஒரு பொருள் பண்ண குறைஞ்ச பட்சம்  ஒரு அடி தேவை. 50 சதவிகித லாபம் உறுதி.

கட்டிங் டூல்ஸ் வச்சு நாமளே மூங்கிலைக் குடைஞ்சு, வெட்டி, நமக்கேத்த டிசைனை கொண்டு வரலாம். ஒரு பொருள் பண்ண வெறும் 45 நிமிடங்கள்  போதும். ஆடம்பரமான அன்பளிப்புகள் கொடுக்கணும், அதே நேரம் பட்ஜெட்டும் இடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க, மூங்கில் பொருட்களைத்  தேர்ந்தெடுக்கலாம். 

இன்னும் சொல்லப் போனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி, டிசைனர் பீஸாகவும் செய்து தரலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எத்தனை  காலத்துக்கும் அப்படியே இருக்கும்’’ என்கிறவரிடம், 2 நாள் பயிற்சியில் 5 விதமான மூங்கில் கலைப் பொருட்களை தேவையான பொருட்களுக்கான  செலவுடன் சேர்த்து 1,000 ரூபாயில் கற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு 97892 99716

அழகு நுணுக்கம் கலாசாரம்!

மேற்கத்திய நாகரீகத்தின் தாக்கத்தில் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பார்பி பொம்மைகளையும் செயற்கை இழைகளால் செய்யப்படுகிற புசுபுசு  பொம்மைகளையும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோருக்கு நம்மூரில் பஞ்சமே இல்லை. ஆயிரங்களைக் கொட்டிக் கொடுத்து வாங்கினாலும், இந்த  பொம்மைகளில் ஆரோக்கியத்துக்கோ, தரத்துக்கோ துளியும் உத்தரவாதமில்லை. பொம்மையின் இழைத்துகளோ, சாயமோ குழந்தைகளின் வயிற்றுக்குள்  போனால் நிச்சயம் கேடுதான். ஆனாலும், பெற்றோருக்கு வேறு வழியில்லை. 
Beauty resolution culture!
“ஏன் இல்லை... பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிற கொண்டபள்ளி பொம்மைகளை வாங்கிக் கொடுத்துப் பழக்குங்க. காணாமப் போயிட்டிருக்கிற  கலாசாரத்தையும் கட்டிக் காப்பாத்தலாம். உங்க பிள்ளைங்களும் ஆரோக்கியமா இருப்பாங்க. இந்த வருஷ நவராத்திரிக்கு உங்க வீட்டு கொலுவை  அலங்கரிக்கிற கொண்டபள்ளி பொம்மைகள், தொடர்ந்து உங்க குழந்தைங்க விளையாடப் பயன்படட்டுமே...’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாதவி. 

பொம்மைகளுக்கு, குறிப்பாக கொலு பொம்மைகளுக்குப் பெயர் போன கொண்டபள்ளி கிராமத்திலிருந்து விதம் விதமான பொம்மைகளை வரவழைத்து,  காட்சிக்கும் விற்பனைக்கும் வைப்பதுடன், அந்த பொம்மைகளின் பாரம்பரியத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் பரப்பி வருகிறார் மாதவி.  (www.kondapallihandicrafts.blogspot.com)‘‘ஆந்திராவுல உள்ள ஒரு கிராமத்தோட பெயர்தான் கொண்டபள்ளி. அங்கே வாழற மக்களோட பிரதான  தொழில், பொம்மைகள் பண்றது. பொல்கின்னு சொல்லப்படற ஒரு வகையான மரத்தை வச்சு, முழுக்க, முழுக்க கைகளாலயே செய்யப்படற  பொம்மைகள். 

எடை குறைவா, கையாள சுலபமா இருக்கும். கொண்டபள்ளியில உள்ள ஒவ்வொரு குடும்பமுமே இந்த பொம்மைகள் செய்யற தொழில்  தெரிஞ்சவங்களா இருப்பாங்க. ஆண்கள் வெட்டி, செதுக்கிக் கொடுக்க, பெண்கள் சாயம் ஏத்தி அழகுப்படுத்துவாங்க.பொம்மையோட ஒவ்வொரு  பகுதியையும் தனித்தனியே, ஒவ்வொரு கலைஞரும் கைகளாலேயே செய்து, பிறகு இணைப்பாங்க. அப்படி இணைக்க  புளியங்கொட்டையில இருந்து  செய்யற ஒருவிதமான இயற்கையான பசையை வச்சுத்தான் இணைப்பாங்க. பொம்மைகளை ஒட்டி, இணைச்சு முடிச்சதும், அடுத்து சாயம் பூசுவாங்க. 

அந்தச் சாயம் கூட இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதுதான். அதனால குழந்தைங்க விளையாடவும் பாதுகாப்பானது.ஒவ்வொரு பொம்மையும்  யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற கேரக்டர்களாக இருக்கும். இதிகாசங்கள்லேருந்தும், நாட்டுப்புறக் கலைகள்லேருந்தும் கூட உருவங்கள்  செய்வாங்க. மனித முகங்கள், கடவுள் உருவங்கள், விலங்குகள், கொண்டபள்ளி வீரர்கள் போன்றவையும் அடக்கம்.  உதாரணத்துக்கு பூம்பூம் மாடு,  அரிசி வியாபாரி, காய்கறிச் சந்தை, சலவைத் தொழிலாளி, உழவர்கள், பால் கறக்கும் பெண்கள், மரம் ஏறும் ஆண்கள், தண்ணீர் இறைக்கிற பெண்கள்...  இப்படி! இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமப் போன பல தொழில் களையும் அதோட பின்னணியில உள்ள மக்களையும் அவங்க  வாழ்க்கையையும் அந்த பொம்மைகள்ல பார்க்கலாம். பக்தி சார்ந்த விஷயங்களையும் விட்டு வைக்கறதில்லை கொண்டபள்ளி கைவினைக்  கலைஞர்கள். 

தசாவதாரம், கீதோபதேசம், ராமாயணம், முருகனும் மயிலும், அனுமனும் ராமனும், நாட்டிய கணேசர்னு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொம்மைகளையும்  இத்தனை அழகா, நுணுக்கமான வேலைப்பாடுகளோட வேற எங்கேயும் பார்க்க முடியாது’’ என்கிறார் மாதவி. கைகளால் செய்யப்படுகிற கொண்டபள்ளி  பொம்மைகளுக்கு நிகராக கவனம் ஈர்க்கின்றன ஏட்டிகோப்பக்கா பொம்மைகள். கிராமத்துக் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், பொம்மை  ஸ்கூட்டர், கார், ரயில்வண்டி, மாட்டுவண்டி, சொப்புச் சாமான்கள் என அவற்றைப் பார்க்கும்போது, மீண்டும் குழந்தைப் பருவத்துக்குத் திரும்ப  ஏங்குகிறது மனது. இத்தனை பாரம்பரியம் மிக்க கொண்டபள்ளி பொம்மைகளுக்கு புவியியல்சார் குறியீடு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  நல்லதொரு ஆரம்பத்துக்குக் காரணமாகட்டும் நவராத்திரி!   

Thursday, February 6, 2014

காவல் ஆய்வாளரின் மாதிரிப் பண்ணை!


விவசாயம்' என்றதுமே... 'அதுக்கெல்லாம் ஏக்கர் கணக்குல நிலம், ஆள் பலம், பணம் எல்லாம் இருந்தாத்தான் சாத்தியம்’ என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கும். ஆனால், ஏக்கர் கணக்கில் நிலமோ, பணமோ தேவையில்லை. மனதில் ஆர்வமும், அர்ப்பணிப்பும் இருந்தால்... கையகல நிலத்திலும், கலக்கலாக விவசாயம் செய்ய முடியும் என்பதை ஆங்காங்கே நிரூபித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கை விவசாயிகளில் ஒருவர், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம், காவல் ஆய்வாளர் இளங்கோவன்.
மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் முப்பதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, முகையூர். பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி, கடற்கரை செல்லும் வழியில் சிறிது தூரம் சென்றால், பனை ஓலையால் வேலியமைக்கப்பட்ட இளங்கோவனின் பண்ணை வரவேற்கிறது.
''எனக்கு பூர்விகம், கடலூர் மாவட்டம், புதுப்பாளையம். எங்கப்பா வேளாண்மை துறையில அதிகாரியா இருந்தவரு. வீட்லயும் விவசாயம் செஞ்சுட்டு இருந்ததால... சின்ன வயசிலிருந்தே விவசாயத்து மேல அதிக ஆர்வம். காவல் துறையில வேல கிடைச்சாலும், விவசாய ஆர்வம்  குறையல. அந்த ஆர்வத்துக்கு, நண்பர் ராஜாமணியோட தொடர்பால, சமீபத்துல விடிவு பொறந்திருக்கு. முதல்ல சின்ன அளவுல செஞ்சு பார்க்கலாம். பிறகு, பெரிய அளவுல இறங்கலாம்னுதான் இந்த 25 சென்ட்ல விவசாயத்தை ஆரம்பிச்சுருக்கோம்'' என்று முன்னுரை கொடுத்த இளங்கோவன், தொடர்ந்தார்.
பலவிதப் பயிர்கள்!
''படிப்பு முடிச்சதும், உரக்கடையில கொஞ்ச நாள் வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான், ரசாயன உரங்களால வர்ற தீமைகளையும் தெரிஞ்சுகிட்டேன். அதனால ஆரம்பத்துல இருந்தே, இயற்கை விவசாயம் பத்தின தேடல் இருந்துச்சு. ராஜாமணி மூலமாதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு, விவசாயத்து மேல ஆர்வம் அதிகமாயிடுச்சு. இனியும் தயங்கிகிட்டே இருக்கக்கூடாதுனு சோதனை முயற்சியில இறங்கியாச்சு. இந்த 25 சென்ட்ல சவுக்கு, குமிழ், மா, வாழை, காய்கறிகள், தர்பூசணினு விதவிதமான செடிகளைப் பாக்கும்போது சந்தோஷமா இருக்கு. இது மணற்பாங்கான இடம்கிறதால கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. ஆனா, இந்த மூணு மாசத்துலயே செடிகள்ல நல்லா வேர் புடிச்சிருச்சு. இதுவே பாதி வெற்றிதான். இன்னும் கொஞ்ச நாள்லயே பசுமைக் கட்டிடும்'' என்ற இளங்கோவன், பண்ணையைப் பராமரித்து வரும் ராஜாமணியை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
நான்கு வரிசையில் பயிர்கள்!
''மரப்பயிர்கள், பழப்பயிர்கள், காய்கறிகள்னு அடுக்கு வரிசையில போட்டிருக்கோம். நடுவுல தர்பூசணி இருக்கு. மதுராந்தகம் பக்கத்துல இருக்குற பொலம்பாக்கத்தைச் சேர்ந்த பெரியவர் முத்துமல்லா ரெட்டியாரிடம் இருந்துதான் இந்த தொழில்நுட்பத்தைக் கத்துகிட்டோம். ஒரு சென்ட்ல ரோஜா, முல்லை, திசுவாழைனு இருக்கு. இங்கயே ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கிறோம். நாங்க தங்குறதுக்கான ஒரு ஷெட்டும் இருக்கு. தோட்டத்தை சுத்தி பனை ஓலைகளை வெச்சு வேலி அமைச்சு... பக்கத்துல உயிர்வேலியாக நெய்வேலி காட்டாமணக்கை நட்டுட்டோம்.
முதல் வரிசையில ஓரடி அடி இடைவெளியில 150 சவுக்கு இருக்கு. அதுக்கு இடையில பாவக்காய், சுரைக்காய், மிளகாய், கத்திரி, தக்காளி இருக்கு. எதிர் பக்கத்துல 150 சவுக்கும், பத்தடி இடைவெளியில 15 சந்தன கன்னுகளும் நட்டிருக்கோம். சவுக்கு வளந்த பிறகு, நிலத்த சுத்தி வேலி மாதிரி ஆகிடும். ரெண்டாவது வரிசையில மூணடி இடைவெளியில 32 குமிழ் கன்னுகள் இருக்கு. அதுக்கு எதிர் பக்கத்துல பத்து அடி இடைவெளியில நாலு செஞ்சந்தனம் இருக்கு. இதுக்கான இடைவெளியில நாலு தென்னை, வாழை இருக்கு. மூணாவது வரிசையில பத்து அடி இடைவெளியில நாலு மாங்கன்னுகளும், 25 அடி இடைவெளியில 5 தென்னையும்,
5 வாழையும் கலந்து நட்டிருக்கோம். அதுக்கு எதிர்பக்கத்துல 5 அடி இடைவெளியில 22 சந்தனமும், ஒட்டுண்ணிச் செடியா மாதுளையும் நட்டிருக்கோம். நாலாவது வரிசையில 15 அடி இடைவெளியில பலாவும், அதுக்கு இடையில கொய்யாவும் நட்டிருக்கோம். எதிர் பக்கத்துல 8 அடி இடைவெளியில் 15 ரோஸ்வுட்டும், 15 சந்தனம் என 300 மரக்கன்றுகள் இருக்கு. சுத்தியும் மரப்பயிர்கள் போட்டதுக்கு பிறகு, ஒரு அடி இடைவெளியில 260 குழிகள் எடுத்து தர்பூசணி போட்டிருக்கோம்'' என்ற ராஜாமணி பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே தொடர்ந்தார்.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் எறும்புகள்!
''ஓரடி ஆழத்துக்கு குழி எடுத்து... வேப்ப மரத்தூள் (மரம் அறுக்கும் ஆலைகளில் கிடைக்கும்), குப்பை உரம் (திடக் கழிவு), எரு இது மூணையும் சம அளவில் கலந்த கலவையில் ஒரு கைப்பிடி அளவு, ஒவ்வொரு குழியிலயும் போட்டு கன்னுகளை நட்டிருக்கோம். சரியா வேர் பிடிக்காத செடிகளைப் பக்கவாட்டுல தோண்டி, வேரோடு எடுத்து வேறொரு இடத்துல வெச்சுடுவோம். அஞ்சு நாளைக்கு ஒரு தடவை, அமுதக் கரைசலையும், 11 நாட்களுக்கு ஒரு தடவை ஜீவாமிர்தத்தையும் கொடுக்கிறோம். அமுதக் கரைசலை செடிகள்ல தெளிக்கிறப்போ, இனிப்புச் சுவைக்கு எறும்புகள் வருது. அந்த எறும்புகள் இலைகளைத் தாக்குற பூச்சிகளோட முட்டைகளை சாப்பிட்டுடுது. தவிர, 15 நாளைக்கு ஒரு தடவை வேப்பங் கொட்டைக் கரைசலையும் தெளிக்கிறோம்'' என்றார்.
பணம் தேவையில்லை...மனம் இருந்தால் போதும்!
மீண்டும் நம் முன் வந்த இளங்கோவன், ''சலுகை விலையிலதான் கன்னுகளை வாங்கினோம். தேங்காய் ஓலையிலயே ஷெட் போட்டுட்டோம். இப்படி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுட்டோம். 2 மாசத்துல தர்பூசணி மூலமாவும், 3 மாசத்துல பூக்கள் மூலமாவும் வருமானம் கிடைக்கலாம். வருமானத்தைவிட, மனசுல ஆர்வம் இருந்தா... சின்ன இடத்துலகூட விவசாயம் செய்ய முடியுங்கிறதுக்கு உதாரணமா ஒரு மாதிரிப் பண்ணையா ஆக்கணும்ங்கிறதுதான் எங்களோட முக்கிய நோக்கம். இதன் மூலமா சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையை விதைக்க முடியும்... சுற்றுச்சூழலையும் காப் பாத்த முடியும்'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!
 தொடர்புக்கு,
வேணு. ராஜாமணி,
செல்போன்: 97904-25912.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites