இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 2, 2013

பானைகள்

எளிய மூலப்பொருள்களைக் கொண்டு ஒருவரின் செயற்திறனை ஆதாரமாகக் கொண்டு ஆக்கப்படும் பொருட்களை கைத்தொழில் உற்பத்திகள் எனலாம். கைத்தொழில் கிராமப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இன்று பெரு உற்பத்திப் பொருட்களால் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் சந்தை குறைந்து இருப்பினும், சில துறைகளிலும் சில சூழலும், கைத்தொழில் உற்பத்திகள் தொடர்ந்து பயன்மிக்க பங்காற்றி வருகிறது.
மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர்என்று அழைப்பர்.
பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.
பானை வகைகள்

பானைகள்


நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.
1. அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2. அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3. அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
4. அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5. அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6. அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7. உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
8. உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9. எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10. எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11. எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
12. ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
13. ஓதப் பானை - ஈரப் பானை
14. ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15. ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
16. ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
17. கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
18. கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
19. கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
20. கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
21. கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
22. கரிப்பானை - கரி பிடித்த பானை
23. கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
24. கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
25. கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
26. கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
27. காடிப் பானை - கழுநீர்ப் பானை
28. காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
29. குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
30. குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
31. கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
32. கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
33. கூர்ப் பானை - கூர் முனைப் பானை
34. கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
35. கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
36. சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
37. சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
38. சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
39. சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
40. சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
41. சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
42. சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
43. சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
44. சின்ன பானை - சிறிய பானை
45. தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
46. திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
47. திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
48. துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
49. தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
50. தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
51. தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
52. நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
53. பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
54. படரப்பானை - அகற்ற - பெரிய பானை
55. பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
56. பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
57. பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
58. மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
59. மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
60. மிண்டப் பானை - பெரிய பானை
61. மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
62. முகந்தெழு பானை - ஏற்றப் பானை[1]
63. முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
64. முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
65. மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
66. மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
67. வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
68. வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
69. வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை[2]
காலப்போக்கில் மட்பாண்ட கைத்தொழில் யாழ்ப்பாணத்தில் முற்றாக மறைந்துவிடும் என மட்பாண்ட உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் தற்போது மட்பாண்ட பொருட்களின் விற்பனை வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது.
18.07.2012 செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்த ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, மண்ணாலான சட்டி பானைகள் என்பன திருநெல்வேலிச் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், இதனால் தமக்கு எந்தவித இலாபமும்  கிடைக்கவில்லை என விற்பனையில் ஈடுபட்டிருந்த  வியாபரி ஒருவர் குறிப்பிட்டார்.
கடந்த முறை ஆடி அமாவாசை தினத்தன்று நடைபெற்ற வியாபாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம்  தாம் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மற்றுமொரு வியாபாரி கூறினார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் ஹாஸ் பாவனை மற்றும் அலுமினியப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளமையே, மட்பாண்டபொருட்களின் பாவனை குறைவடைவதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தாம் இரண்டு சுண்டு அரிசி போட்டு சமைக்கக்கூடிய, பானையை 100 ரூபாவிற்கு விற்பனைசெய்யும் அதேவேளை, யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்த மட்பாண்ட வியாபாரிகள்  இதே பானையை  80 ரூபாவிற்கு விற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்பாண்ட பொருட்களை உற்பத்தி  செய்வதற்கு தேவைப்படும் மண்ணை வன்னியிலிருந்து காசு கொடுத்து  வாங்குவதாகவும், ஒரு லோட் மண் 50,000 ரூபா வரை   விற்பனையாவதாகவும் குறிப்பிட்ட குறித்த வியாபாரி, வன்னிப்பகுதியில் மட்பாண்டத் தொழிலில் ஈடுபடுபடுபவர்கள் மண்ணை இலவசாமாக குளங்களிலிருந்தே பெற்று தொழிலில் ஈடுபடுகின்றனர் எனச் சுட்டிக்காட்டினார்.
இதனால், அவர்களைப் போன்று தம்மால் விலை குறைத்து விற்பனை செய்யமுடியாதெனவும் அவர் கூறினார்.
தொடர்ந்தும் தமக்கு நஷ்டம் ஏற்பட்டால், இந்தத் தொழிலை விட்டு விலகி  வேறு தொழிலை செய்யவேண்டிய தேவை ஏற்படும் எனவும், இவ்வாறு மட்பாண்ட கைத்தொழிலாளர்கள் அனைவரும்  வேறு தொழில் ஈடுபட்டால் காலப்போக்கில் மட்பாண்ட கைத்தொழில் யாழ்ப்பாணத்தில் முற்றாக மறைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவும் அவர் தெரிவித்தார். மண்பாண்ட உற்பத்திகளை ஊக்குவிக்க 200 மில்லியன்!
December 7, 2012 | : செய்திகள்,வணிகம் - நிதி |
 சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் கைத்தொழில் உற்பத்திகளில் ஒன்றான மண்பாண்ட கைத்தொழில் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்ற விசேடமான  பொருட்களை தயாரித்து அவற்றை சந்தைப்படுத்துவதற்கான சந்தைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்றும் ஐனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும், பதனிடப்பட்ட வாசனைத் திரவியங்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்திகள், கருவாடு, பதனிடப்பட்ட உணவு மற்றும் குடிபானங்கள், இனிப்பு பண்டங்கள் போன்ற பெறுமதிமிக்க உள்ளூர் உற்பத்திகளில் ஈடுபட்டு  சிறிய  தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கென சுங்க நிலையில் வெளியீடு மற்றும் உள்ளீடுகளுக்கு இடையில் வித்திசாயமான வரியினை விதிப்பதற்கும் வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

 


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites