
பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும் !!!!படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும்....