இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Monday, May 27, 2013

அலங்காரப் பெட்டிகளில் அசத்தல் லாபம்!

அன்பளிப்பு கொடுப்பது என்பது ஒரு கலை. அன்பளிப்பு கொடுக்கப் போகிற நபர், அவரது வயது, தேவை, விருப்பம் என எல்லாவற்றையும் கவனத்தில்  கொண்டு, அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி தேர்ந்தெடுப்பதில் மெனக்கெடும் பலரும், இன்று அதை பேக் செய்து கொடுக்கிற விதத்துக்கும்  அதிகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.அன்பளிப்பை வாங்கினோமா, அதை அப்படியே கிஃப்ட் ரேப்பர் சுற்றிக் கட்டினோமா, வாழ்த்து அட்டையில் பெயர் எழுதி ஒட்டிக் கொடுத்தோமா என்கிற  மனநிலை மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக எதையும் புதுமையாகச் செய்ய நினைக்கும் இளைய தலைமுறையினர், அன்பளிப்புகளை அலங்காரப்  பெட்டிகளில் வைத்துக் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.விதம்விதமான வடிவங்களில்,...

பீட்சா... பர்கர்... சாண்ட்விச்... ருசியாக ஒரு பிசினஸ்!

‘‘லண்டன்ல எம்.பி.ஏ முடிச்சவன் என் மகன். அங்கே இருந்தபோது கத்துக்கிட்ட இந்த உணவுகளை எனக்கு சொல்லிக் கொடுத்தான். முதல்ல வீட்டுத் தேவைக்காக செய்துகிட்டோம். ருசி பார்த்த அக்கம்பக்கத்து ஆளுங்க, தொடர்ந்து கேட்கவே, சின்ன அளவுல பிசினஸா ஆரம்பிச்சோம். அது வாய்வழி விளம்பரமானதுல, சுற்றுவட்டாரத்துல உள்ள ஸ்கூல், காலேஜ் பிள்ளைங்க எல்லாம் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. முறையான மெஷின்கள் வச்சுப் பண்ற அளவுக்கு இப்போ பிசினஸ் வளர்ந்திருக்கு. பீட்சா, பர்கர் மாதிரியான உணவுகளைக்கூட வீட்டுச்சுவையிலயும், ஆரோக்கியமாகவும் கொடுக்க முடியும்னு நிரூபிச்சதுதான் எங்க வெற்றிப் பின்னணி...’’ - பெருமையாகச் சொல்கிறார் செல்வமணி.இது இப்படித்தான்! மூலப்பொருள்கள் ஓடிஜி எனப்படுகிற...

Wednesday, May 22, 2013

ஏற்றுமதியில் பேக்கிங் மிக முக்கியம்

ஏற்றுமதி வணிகத்தில் எந்த ஒரு பொருளுக்கும் தரம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த பொருளுக்கான பேக்கிங்கும் மிக மிக முக்கியம். இன்றைய உலகில் பேக்கிங் என்பதையே நான் ஒரு கலையகத்தான் கருதுகிறேன். ஆம் ! ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிலும் சேர்க்கப்படாத ஒரு கலை, இந்த பேக்கிங் கலை. உதாரணத்திற்கு, வெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சாதாரண சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் சிப்ஸின் அளவோ வெறும் இருபது கிராமகத்தான் இருக்கும். ஆனால், அதன் பேக்கிங் முறையைப் பாருங்கள். அந்த இருபது கிராம் சிப்ஸினை அடைக்கப் பயன்படுத்தும் பாக்கெட்டில் காற்றை நிரப்பி பேக்கிங் செய்கிறார்கள். இதுதான் பேக்கிங் கலை என்பது. நீங்கள் ஏற்றுமதி...

கெண்டை மீன் வளர்ப்பு

கெண்டை மீன்கள் 1. கெண்டை வளர்ப்பு 2. கெண்டை பொரிப்பக முறை 3. கெண்டைக்கு தீவன ஊட்டம் 4. நோய் மேலாண்மை 5. அறுவடை கெண்டை மீன் வளர்ப்புமீன்கள் தனிச்சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்த சிறந்த மாமிச உணவாகும். மீன்களில்  பொதுவாக 60 – 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 – 24 விழுக்காடு புரதச்சத்தும்,  3 – 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 – 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன.  தாது உப்புக்களைப் பொருத்த அளவில் சோடியம், பொட்டாசியம், கால்சியம்,  மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின், கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ்,  தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்றவை  முக்கியமானவைகள் ஆகும்....

கலெக்டர் ஆபிஸில் முறுக்கு!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் - விழுப்புரம் வாரம்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் எதை எல்லாம் பார்க்க முடியும்? நீண்ட கியூவில் வியர்வையில் புழுங்கும் பொதுமக்கள், வீறிட்டு அழும் கைக் குழந்தைகளைச் சமாதானப்படுத் தும் அம்மாக்கள், மனுக்களோடு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளைத்தான் காண முடியும். ஆனால், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்துக்குக் குறை தீர்க்கும் நாள் அன்று போனால், தவறிப்போய் ஏதாவது பொருட் காட்சிக்கு வந்துவிட்டோமா என்று தோன்றும். முறுக்கு, வடகம், ஊறுகாய், தேன், தேனில் ஊறவைக்கப்பட்ட அத்திப் பழம், உடம்பு வலி போக்கும் தைலம், சந்தனம், வாசனைத் திரவி யம், அவரைக்காய் வத்தல், மோர் வத்தல்,...

பசுமை நாயகன் கணேஷ்!

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அரசு தரும் மானியத்தை விடவும், தொலைத்தொடர்பு துறைக்கு அரசு போடும் திட்டங்களை விடவும்,  விவசாயத் துறைக்கு மானியம் கிடைப்பது மிக மிகக் குறைவு. அப்படி அரசு அரிதாகப்போடும் திட்டங்களும், மானியங்களும் விவசாயிகளுக்கு முழுமையாகப் போய்ச்சேருகிறதா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அப்படித் தப்பித்தவறி அரசியல்வாதிகளின் கவனக்குறைவால் அவர்களின் பாக்கெட்டுக்குப் போகாமல் விவசாயிகளுக்குப் போகிறது என்றாலும் ஊரில் உள்ள அரசியல் செல்வாக்கு மற்றும் பணம் உள்ள விவசாயிகளுக்குத்தான் போய்ச்சேர்கிறது. இப்படி ஏழை விவசாயிகளுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த இடைவெளியைப்...

Thursday, May 16, 2013

சுய தொழில் தொடங்க தனி நபர் கடன் வாங்க ஒரு விழிப்புணர்வு

சுய தொழில் தொடங்க தனி நபர் கடன் வாங்க ஒரு விழிப்புணர்வு     ...

அயராத உழைப்பு அசாத்திய வெற்றி

சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கே அதிகம் உள்ள நிலையில், இந்த துறையில் பெண்களால் பிரகாசிக்க முடியாத அளவிற்கு பல தடைகள் ஏற்படுகின்றன. ஆனால், அதனையும் தாண்டி திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் சுயதொழில் தொடங்கி, பல பெண்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் இன்பவள்ளி. 55 வயதான இன்பவள்ளி என்ற பெண் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக சுய தொழில் ஒன்றினை தொடங்கினார். ஆரம்பத்தில் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வதையே தொழிலாக செய்து வந்தார். பின்னர் பல வகை திண்பண்டங்களை தயாரித்து தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார். ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினரிடமே ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார் இன்பவள்ளி. வங்கிக்...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites